Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…

  2. 53 பெண்­களை திரு­மணம் செய்­த­தாகக் கூறும் நபரால் பரபரப்பு By VISHNU 15 SEP, 2022 | 04:35 PM சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்­களை தான் திரு­மணம் செய்­துள்­ள­தாக கூறு­கிறார். 63 வய­தான, அபு அப்­துல்லா எனும் இவர், சவூதி அரே­பி­யாவின் எம்­பிசி தொலைக்­காட்­சிக்கு அளித்த செவ்­வியில் தற்­போது தன­துக்கு ஒரு மனை­வியே உள்ளார் என­வும், மீண்டும் திரு­மணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரி­வித்­துள்ளார். 'நான் முதல் தவை­யாக திரு­மணம் செய்­த­போது, ஒன்­றுக்கு மேற்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்ய எண்­ணி­யி­ருக்­க­வில்லை. ஆனால், பின்னர் பிரச்­சினைகள் ஏற்பட்டன. எனக்கு 23 வய­தான போது நான் மீண்டும் த…

  3. உலகிலேயே மிகப் பெரிய வாயை கொண்ட. - 21 வயதானபெண் Vhg செப்டம்பர் 13, 2022 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக கின்னஸ் சாதனைப் புத்த­கத்­திலும் அவர் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல் விளங்­கு­கிறார். 32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்­தொ­டர்­கின்­றனர். அண்­மையில் அவர் பற்­சி­கிச்­சைக்­காக பற்­சி­கிச்சை நிலை­ய­மொன்­றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா தமது பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு வரு­வதை அறிந்த ஊழி­யர்கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். இதனால், அவர…

  4. வட்டுக்கோட்டையில்... அம்பியூலன்ஸ் சாரதியை தாக்கிய, குற்றத்தில்... கைதானவருக்கு விளக்கமறியல் ! அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை…

  5. எலிசபெத் ராணியின் மறைவை முன்பே கூறிய நபர்! 2062 ல் காத்திருக்கும் ஆபத்து! பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் கடந்த 8 ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் அவரின் மறைவை இனந்தெரியாத நபர் ஒருவர் முன்கூட்டியே கணித்து தனது ட்விட்டர் பதிவில் அதனை குறிப்பிட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று இறக்கிறார் என்று கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த நபர் டுவிட் செய்திருந்தார். மேலும் அவர் மே 25 ஆம் திகதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவ…

  6. “அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவதி” சிறுவனின் பிறப்புறுப்பில் சிக்கிய யுஎஸ்பி கேபிள்! இங்கிலாந்து நாட்டின் லண்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தன் பிறப்புறுப்பின் எவ்வளவு நீளம் இருக்கிறது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து தனது அளந்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக்கொண்டது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து, சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, மருத்துவமனையில் அறையில் இருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். ய…

  7. லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்து விதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை தனித்துவமானது. அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சுங்கத்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் கராச்சி நகரின் டி.ஹெச்.ஏ பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர். சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் க…

  8. மானிப்பாயில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்..! யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது . மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி, வீட்டின் முன்புற கதவின் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்…

  9. காத­லி­க­ளுக்கு 25 வய­தா­னபின் அவர்­க­ளி­ட­மி­ருந்து பிரிந்­து­விடும் 'டைட்­டானிக்' நாயகன் By VISHNU 02 SEP, 2022 | 10:41 AM ஹொலிவூட் திரை­யு­லகின் முன்­னிலை நடி­கர்­களில் ஒரு­வ­ரான லிய­னார்டோ டிகெப்­ரி­யோவும் அவரின் காதலி கமிலா மொரோ­னேவும் பிரிந்­து­விட்­டனர் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆர்­ஜென்­டின அமெ­ரிக்க மொட­லான கெமிலா மொரோன், கடந்த ஜூன் மாதம் 25 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டி­யவர். லிய­னார்­டோவும், கமி­லாவும் கடந்த கோடை­யுடன் பிரிந்­து­விட்­டனர், இப்­பி­ரிவு சமூ­க­மா­க­மா­னது. அவர்­க­ளுக்­கி­டையில் மனஸ்­தாபம் எது­வு­மில்லை என ஒரு தகவல் வட்­டாரம் தெரி­வித்­த­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள…

  10. காத்தான்குடியில்... 15 வயதுடைய தனது மகளை, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட... தந்தை கைது ! காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளது இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1297487

  11. வேலி கடந்து சென்ற நபரை தாக்கிக் கொன்ற சிங்கம் By VISHNU 01 SEP, 2022 | 01:48 PM வேலி கடந்து சிங்கக் கூண்­டுக்குள் சென்ற நபர் ஒரு­வரை சிங்­க­மொன்று கடு­மை­யான தாக்கிக் கொன்ற சம்­பவம் கானா­வி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்­றுள்­ளது. ஆபி­ரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி நபரின் சட­லத்தை சிங்­கத்தின் கூண்டுப் பகு­தி­யி­லி­ருந்து ஊழி­யர்கள் கண்­டு­பி­டித்­தனர் என அதிஹ­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். உட்­புற வேலிக்கு உட்­பட்ட பகு­தி­யில சிங்­க­மொன்­றினால் தாக்­கப்­ப…

  12. Editorial / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:47 - 0 - 216 FacebookTwitterWhatsApp தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க) வின் மூத்த தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுப் பெண் பணியாளரான பழங்குடியின பெண், வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீமாவை பொலிஸார் தேடி வந்தனர். அதனை அறிந்துகொண்ட சீமா தப்பிச் செல்வதற்கு முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். தது வீட்டில் உள்ள கழிவறையை சீமா நாக…

  13. பிலிப்பைன்ஸ்: `புதைக்கப்படாத சவப்பெட்டிகள்’ – 2,000 வருடங்களாகப் பின்பற்றப்படும் விநோத வழக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல்வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெ…

  14. கடந்த மூன்று மாதங்களில்... மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில், 29 பேர் உயிரிழப்பு! நாட்டில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் மாத்திரம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு இடையில் காணப்பட்ட மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அம்பலங்கொடை பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்ப…

  15. தாய்­லாந்தின் யூரியூப் பிர­பலத்திற்கு எதிராக முறைப்­பாடு By VISHNU 31 AUG, 2022 | 03:39 PM தாய்­லாந்தின் யூரியூப் பிர­ப­ல­மான யுவ­தி­யொ­ருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்­லியன் டொலர்) பணத்தை மோசடி செய்­து­விட்டு வெளி­நாட்­டுக்கு தப்­பி­யோ­டி­யுள்ளார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிர­ப­ல­மா­னவர். யூரி­யூப்பில் அவரை 8 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கின்­றனர். இன்ஸ்­டா­கி­ராமில் 300,000 இற்கு அதி­க­மானோர் பின்­தொ­டர்­கின்­றனர். தன்னை பாடகி, நட­னக்­ கலை­ஞ­ரா­கவும் கோங்சக் கூறிக்­கொள்­வ­துடன் நிறு­வ­ன­மொன்றின் பிர­தம …

  16. விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு முற்படும் விக்னேஸ்வரன் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 469 views
  17. யாழில்... போதைப் பொருள் பயன்படுத்திய, இரண்டு பெண்கள் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 2…

  18. சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்; விமர்சித்தவர்களுக்கு பதிலடி! கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன. ‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்ல…

  19. மனைவியின் அடிக்கு பயந்து மரத்தில் குடியேறிய கணவன்! உ.பி., மாநிலத்தில் மனைவியிடம் அடி வாங்கிய கணவன் தொடர் அடிக்கு பயந்து போய் ஒரு மாத காலமாக மரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது நடவடிக்கை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி., மாநிலம் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (42) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். சண்டையில் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். பொறுத்தது பார்த்த ராம் திடீரென முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி 80 அடி உயர மரம் ஒன்றில் ஏறி குடியிருக்க துவங்கினார். உணவு குடிநீர் உள்ளிட்டவை அவரது குடும்பத்தினர் கயிறு கட்டி மேலே அனுப்பி வைப்பார்கள். இதனிடையே ராம் நடவடிக்கை பக்கத்து வீட்டுக்கா…

  20. சட்ட விரோதமான முறையில்... வெளிநாட்டு சிகரெட்டுகளுடன், ஐவர் கைது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு – மாளிகாவத்தை, ஹலவத்தை மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1…

  21. நல்லூர், ஆலய தேர்த் திருவிழாவின் போது... 30 பவுண் நகைகள், கொள்ளை: சிறுவன் உட்பட... ஐவர் கைது. நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நேற்றைய தினம் நடைபெற்ற போது நாடளாவிய ரீதியில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி இரண்டு தாலிக்கொடிகள் உள்ளிட்ட சுமார் 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. அத்தோடு பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ஆலய …

  22. மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்றது. அன்று கோயிலுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது. போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார். கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…

  23. தனி­யாக உலகை சுற்­றி­வந்த 17 வயது விமானி By Vishnu 26 Aug, 2022 | 10:26 AM 17 வய­தான ‍மெக் ரதர்போர்ட், உலகை தனி­யாக விமா­னத்தில் சுற்­றி­வந்த மிக இளம் விமானி எனும் சாத­னையைப் படைத்­துள்ளார். பெல்­ஜிய, பிரித்­தா­னி­ய­ரான மெக் ரதர் போர்ட். சிறிய விமா­ன­மொன்றில் 5 மாதங்­களில் உலகை சுற்­றி­வந்­துள்ளார். இப்­ப­ய­ணத்தை கடந்த மார்ச் 23 ஆம் திகதி பல்­கே­ரி­யா­வி­லி­ருந்து மெக் ரதர்போர்ட் ஆரம்­பித்தார். நேற்­று­முன்­தினம் (24) பல்­கே­ரி­யாவின் சோபியா நகரை அவர் வந்­த­டைதன் மூலம் தனது பய­ணத்தை பூர்த்தி செய்தார். இப்­ப­ய­ணத்­தின்­போது 5 கண்­டங்­களைச் சே…

  24. அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு உதித்த சூரியன்! Aug 24, 2022 21:23PM IST அண்டார்டிகாவில் 4 மாதங்களாக நீடித்த இரவு இன்று (ஆகஸ்ட் 24) சூரிய உதயத்தின் மூலம் விடிந்துள்ளது. உலகத்தில் தென் துருவம், வட துருவம் என இரண்டு துருவ பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேலாக இரவு நீடித்தால் அது துருவ இரவு என்று அழைக்கப்படுகிறது. இதில் தென் துருவ பகுதியான அண்டார்டிகாவில் ஆண்டுதோறும் நீண்ட இரவு 4 மாதங்களுக்குச் சூரிய உதயமே இல்லாமல் தொடர்ந்து நீடிக்கும். நீண்ட இரவு நேரத்தில் வானம் பச்சை நிறங்களில் காட்சி அளிப்பதை பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். பல புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் எட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.