Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கோயிலில் வைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - நாகையில் அதிர்ச்சி சம்பவம் நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பால…

  2. குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம் வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள். குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா பைக்கற்றுக்களை வாங்கி நுகர்கிறோம். தமிழ்நாட்டில் பாலை அரச நிறுவனமான ஆவினும் ஏனைய தனியார் நிறுவனங்களும் காலை 6 மணிக்கு முன்னமே மக்களின் வீட்டு வாசல்களில் சேர்க்கும் வே…

  3. தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் உயிரிழப்பு! ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் இறந்துள்ளார். 41 வயதான சோனியா அசெவெடோ, புத்தாண்டு தினத்தன்று வீட்டில் ‘திடீர் மரணம்’ அடைந்தார். பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை பிற்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்டோவில் உள்ள போர்த்துகீசிய ஆன்காலஜி இன்ஸ்டிடியூட்டில் குழந்தை மருத்துவ துறையில் பணிபுரிந்த இருவரின் தாய், தடுப்பூசி போட்ட பிறகு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்தித்ததாகக் கூறப்படவில்லை. அசெவெடோவின் தந்தை அபிலியோ அசெவெடோ கூறுகையில், ‘அவள் நன்றாக இருந்தாள். அவளுக்கு எந்த உடல்நலப…

  4. 1971 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் ஒரே மாதிரியான நாட்காட்டி.! மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல், போர்கள் என சாமானியர்கள் முதல் செல்வந்தவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரை பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு ‘கலண்டர் அதிசய’ ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971ம் ஆண்டு கலண்டரும்…

  5. ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை! பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாள்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதன் நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகப் பலன் அளிக்கும். அவ்வாறு அன்றி இரண்டாவது ஊசியை ஏற்றவேண்டிய காலத்தை மூன்று வாரங்களுக்கு மேல் இழுத்தடித்தால் முதலாவது தடுப்பூசியின் முழுமையான பலன் கிட்டாது போகலாம். தங்களது தடுப்பூசி இரண்டாவது முறை ஏற்றாமல் ஒரே தடவையில் மட்டும் பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று ‘பைசர் – பயோஎன்ரெக்’ நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றில் த…

  6. தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்திலுள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பல…

  7. ஆன்லைன் லோன் மோசடி; தொடர்ந்து கைதாகும் சீனர்கள்! - பின்னணி என்ன? துரைராஜ் குணசேகரன் ஆன்லைன் மோசடி ( Representational Image ) ஆன்லைன் லோன் ஆப் மூலம் மோசடி செய்ததாக சீனாவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், " `எம் ரூபி’ என்ற ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாகக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த ஆப்பில் எனது ஆதார், பான் கார்ட் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்களைப் பதிவேற்றம் செய்து, 5,000 ரூபாய்க் கடன் பெற்றேன். ஒரு வாரத்துக்குப் பின்னர் 1,500 ரூபாய் வட்டி பிடித்த பி…

  8. பணம் தேவையானவர்கள் என்னிடம் கேட்டுப் பெற்று கொள்ளுக - ரஞ்சன் எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தைப் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளுக்காகத் தனக்குக் கிடைத்த 40 இலட்சம் ரூபா பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குகின்றார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத்தாள்களைப் பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களைத் தனது செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங…

  9. https://www.facebook.com/100012450644841/videos/486592501765767

  10. பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு... பிரதமர் பொரிஸ் ஜோன்சனின், தந்தை விண்ணப்பம்! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டன்லி ஜோன்சன், பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதில் விருப்பம் இல்லாத 80 வயதான ஸ்டன்லி ஜோன்சன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில், இந்த முடிவினை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது பிரான்ஸ் குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை. எனது தாய் பிரான்ஸில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவன் தான்’ என கூறினார். பழமைவாத கட்சியை சேர்ந்த …

    • 11 replies
    • 864 views
  11. புத்தாண்டில்... இந்தியாவில், 60,000 குழந்தைகள் பிறப்பு. புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் திகதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் …

  12. பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

  13. மெக்ஸிகோவில் திருமணமான காதலி வீட்டுக்குச் செல்ல சுரங்கப்பாதை! கணவரிடம் சிக்கிய காதலன் ஹரீஷ் ம மெக்ஸிகோ - சுரங்கம் இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டைவிட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு, அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவிலுள்ள பிரபல பாலத்தை அடைவதற்கான பாதையைக் …

    • 3 replies
    • 480 views
  14. இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம் 29 Dec 2020 20:46 இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர். அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை. அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. த…

  15. யாழ்.அரியாலையில் பிறந்த குழந்தையை புதைத்த பெண்! யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியாலை பூங்கங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத 24 வயதுடைய பெண், நேற்று (வியாழக்கிழமை) அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது, குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு, அது தொடர்பில் ப…

  16. எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021. அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்த…

  17. அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு! இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட குறித்த கடையில் முழுமையான அளவில் பானைகளும், சில உணவுப் பொருட்களின் தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையின் முன்புறம் சேவல் மற்றும் வாத்து உருவங்கள் இடம் பெற்றுள்ளதால் இது இறைச்சிக் கடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் இது ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79ல் எரிமலைச் சீற்றத்தினால் அழிந்து போன பொம்பேயி நகரத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது…

  18. இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம் இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக…

  19. அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம் Rajeevan ArasaratnamDecember 25, 2020 அமெரிக்காவின் நாஸ்விலில் பாரிய வெடிப்புசம்பவம்2020-12-25T20:33:07+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்புசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று வெடித்துச்சிதறியுள்ளது பலகட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/100800

  20. 28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே. கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியா…

    • 8 replies
    • 1.5k views
  21. கொத்தமல்லி எனத் தெரிவித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள்.! உக்ரைனிலிருந்து கொத்தமல்லி எனத் தெரிவித்து குப்பை கொள்கலன்கள் மறுபடியும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ர…

  22. கொரோனா மாறுபட்ட குணங்களுடன் கண்டுபிடிப்பு, மீண்டும் ஊரடங்கா..? எப்படி சமாளிக்க போகிறோம். கவனம் மக்களே

  23. மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம் November 18, 2020 யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாத…

  24. 3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசு…

  25. மட்டக்களப்பில் வௌவாலால் நடந்த விபரீதம் – தாதி மீது துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.