துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
இத்தாலி பலர்மோ தமிழ் தேசிய மாணவர் கூட்டமைப்பு திருவையாறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உதவி என் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடை பெற்ற நிகழ்வில், இத்தாலி பலர்மோ தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு கிளிநொச்சி திருவையாறு மாணவர்களின் ஒரு பகுதியினருக்கு நேற்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர். கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், சுவிஸ்கரன், ஓய்வுநிலை அதிபரும் சமுக அபிமானியமான ராஜேந்திரம், திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், வடமாராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், எனது செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ…
-
- 0 replies
- 518 views
-
-
யாழ் கட்டப்பிராய் வறிய குடும்பத்திற்கு முதற்கட்டமாக உதவிய ஜப்னா மின்னல்
-
- 0 replies
- 678 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும். ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது ம…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
வாசிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை.
-
- 0 replies
- 860 views
-
-
முன்னாள் போராளிக்கு புலம்பெயர் உறவுகளால் வாழ்வாதார உதவி! வடக்க மாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர்களின் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள், சுய தொழில் உபகரணங்கள் என்பன பொது அமைப்புக்களாலும் புலம்பெயர் உறவுகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் என்பன நேற்று (சனிக்கிழமை) மாலை வழங்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் தமது இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒருவருடன் கூலித் தொழிலாளியாக கடற்தொழிலில் ஈடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தக் குரலுக்குரியவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. ஒருவருடத் திருமண வாழ்வில் கிடைத்த இரண்டரை வயதுப் பெண்குழந்தைதான் இவளது நம்பிக்கை. குழந்தை பிறந்து 31வது நாள் இவனது கணவனைத் துப்பாக்கிகள் வவுனியா நகருக்குள் தின்றுபோட்டது. தொழிலுக்குப் போனவன் பிள்ளையின் 31ம் நாள் கொண்டாட்டத்திற்கு பணத்தோடு வருவானென்று காத்திருந்தவளுக்கு அவளது காதல் கணவன் இறந்து போனானென்ற செய்திதான் வந்தது. 2007.10.03 ம்திகதி பிறந்த தனது குழந்தைக்காக பணத்தோடு வருவேனென்றவன் 2007.11.03 அன்று இறந்து போனானென்றது இதயத்தில் இடியையல்ல இவளது வாழ்வில் மாறாத துயராயே முடிந்து போனது. தன் குழந்தை தனது எதிர்காலம் எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத சூனியத்தில் தொலைந்து போனாள். கிளிநொச்சியிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
நவம்பர் மாதம் கணக்கறிக்கை. நேசக்கரம் நவம்பர் மாதம் உதவிகள் உதவிகள் பெற்ற பயனாளிகளின் பயன்பாடுகள் அடங்கிய முழுமையான அறிக்கையை பாருங்கள். கணக்கறிக்கையை பார்வையிட மேலுள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
-
- 5 replies
- 1.2k views
-
-
நோர்வே மாணவர்களின் கைகொடுப்பில் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டம் விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. 130 மாணவர்களை உள்ளடக்கிய இக்கட்டத்தில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு 11 மாணவர்களுக்கு மிதி வண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டமானது 2015-02-05 அன்று காலை 9 மணியளவில் றெட்பானா பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது. இதுவரை நடைபெற்ற ஏழு கட்டங்கள் ஊடாகவும் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட …
-
- 4 replies
- 615 views
-
-
அண்ணளவாக இற்றைக்கு சரியாக இரண்டுவருடங்களுக்கு முன் புற்றுநோயால் தாயை இழந்த குடிக்கடிமையான ஒரு பொறுப்பற்ற தகப்பனால் குடும்பத்தை சரியாக நடத்திச்செல்ல முடியாததையிட்டு பாதியிலே பட்டப்படிப்பை நிறுத்த முற்பட்ட யாழ் பல்கலையில் வணிகபீடத்தில் இரண்டாமாண்டு கற்றுக்கொண்டிருந்த ஒரு தங்கையின் கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனை ஒரு திரியிலும் குறிப்பிட்டிருந்தேன். அதனை கண்ணுற்ற இரு யாழ்கள உறவுகள் (@வாலி ,@ஏராளன்) அவர்களால் முடிந்த உதவிகளை உடனடியாகவே வழங்கியிருந்தனர். இன்று அந்த தங்கை தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்து மகிழ்வுடன் காத்திருப்பதை பேருவகையுடன் யாழ்கள உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். அடுத்த வருடம் ம…
-
- 5 replies
- 1.6k views
- 2 followers
-
-
யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம் கீதா சுகுமாரன் https://www.facebook.com/palmeraprojects/ https://www.palmera.org/handmade/ அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் 3வது முன்னேற்றம் ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை :- http://hmclk.com/p121.html
-
- 0 replies
- 473 views
-
-
நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம் மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர் உப அமைப்பான ‚'எழுவான்' அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது. மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 'எழுவான்' அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது. மன்னார் தேனுடையான் ஞானவைரவர் கோவில் தலைவர் வீ.தினேஸ்வரன் தலைமையில் 23.03.2013 அன்று முதலாவது ஒன்று கூடல் இடம…
-
- 0 replies
- 623 views
-
-
சர்வதேச சிறுவர்தின நிகழ்வு சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி அவர்களும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வியதிகாரி சுபா சக்கரவர்த்தி , மட்டக்க…
-
- 0 replies
- 621 views
-
-
சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள். எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக…
-
- 8 replies
- 1k views
-
-
எமது யாழ்கள உறவுகளிடம் உதவி கோருகிறேன். இவ்வருடம் ஆனிமாதத்திலிருந்து மட்டக்களப்பு குசேலன்மலை பிரதேசத்தில் வாழும் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 41 பிள்ளைகளுக்கான கற்பித்தல் வகுப்பினை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் நடாத்தி வருகிறோம். இத்திட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் முன்வந்து உதவிக் கொண்டிருந்தார். இது மட்டுமன்றி கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகள் கொள்வனவுக்கான உதவிகளுடன் தொடர்ந்து மாணவர்களின் கல்விக்காக தனது உதவியை வழங்கி வந்த திரு.தவேந்திரராசா ஐயா அவர்களின் தொடர்பு கடந்த 2மாதங்களாக இல்லாதுள்ளது. தவேந்திர…
-
- 21 replies
- 2.8k views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டம். தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டத்தின் கீழ் 23.09.2014 அன்று தன்னாமுனை கிராமத்தில் வாழும் போசாக்கு குறைந்த குழந்தைகளில் 41 குழந்தைகளுக்கான போசாக்குணவு வழங்கலும் கருத்தரங்கும் நடைபெற்றது. வறுமையும் போரின் தாக்கங்களும் ஆரோக்கியம் குறைந்த குழந்தைகளைக் கொண்ட கிராமங்களின் தேன்சிட்டு உளவள அமைப்பின் பணிகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அம்மக்களின் குறைகள் தேவைகளை கேட்டறிந்து செற்படும் திட்டத்தில் தேன்சிட்டு உளவள அமைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். புரட்டாதி மாதம் மாளைய தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலிருந்து கருணையாளர் ஒருவர்…
-
- 0 replies
- 546 views
-
-
தமிழின அழிப்பு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளை வலுப்படுத்த யேர்மனியில் இயங்கும் Help for Smile அமைப்பு பல்வேறான உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்தவகையில், அவசர நிவாரண உதவிகள் , சுயதொழில் செய்வதுக்கான உதவித்திட்டம் , சிறுவர்களுக்கான உதவித்திட்டம் என பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு வரலாறு காணாத இயற்கை வெள்ள அனர்த்தத்தை கண்ட தமிழக மக்களுக்கும் நிவாரண நிதி Help for Smile அமைப்பால் வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தாயக மக்களுக்கான உதவித்திட்டங்கள் விரிவாக்கப்பட்டு மேலும் அதிகரிக்கப்படும் என Help for Smile அமைப்பின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 696 views
-
-
புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும் 01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புகுத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வினை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தனர். பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் திரு.ரு.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், கிராமசேவகர் திரு.சோமபால மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய அதிபர்களுடன் நேச…
-
- 1 reply
- 594 views
-
-
போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…
-
- 3 replies
- 744 views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கிய…
-
- 0 replies
- 561 views
-
-
ஆடி மாதம் நேசக்கரத்திற்கான யாழ் இணைய உறுப்பினர்களின் பங்களிப்பு சுவியண்ணா 20 யுரோக்கள்
-
- 14 replies
- 1.8k views
-
-
https://www.facebook.com/keethan.au/posts/1480661985562022
-
- 1 reply
- 524 views
-
-
மதுரன் (டுபாய்) - 138,50€
-
- 1 reply
- 1.4k views
-
-
சீமெந்துக்கல் விற்பனை ஆரம்பம். July 30, 2013 தொழில்கள் Edit This எமது Hand made creators (pvt)Ltd தொழில் நிறுவனத்தின் முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எமது முதல் முயற்சியில் 377405,00ரூபா முதலிடப்பட்டு 12 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் 15வீடுகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.இனிவரும் நாட்களில் இரவு வேலையும் ஆரம்பமாகவுள்ளது. மேலும் ஒரு தொகுதியினருக்கான வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கி முதலிட்டோர் விபரம் :- 1) கஜீபன் (கனடா) 38.130,…
-
- 0 replies
- 608 views
-
-
நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’உதயம் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான உளவள பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’ அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங்கப்பட்டது. ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் அங்கத்தவர்களான அம்பாறை மாவட்டம் மயூரன் , சங்கீதன் …
-
- 5 replies
- 820 views
-