Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு! மே 8, 2021 –மர்லின் மரிக்கார் உயிர் வாழ்வதற்காக கண்டம் விட்டு கண்டம் நோக்கிச் செல்லும் பறவைகள் மனித நடவடிக்கைகளால் இடைவழியில் கொல்லப்படுகின்ற பரிதாபம்! உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன. உகந்த இடத்துக்குச் …

  2. பருவநிலை மாற்றம்: பறவைகளிடம் மணமுறிவு? அண்டரண்டப் பறவைகளின் காதல் உலகத்தில் புதிய சிக்கல் மணீஷ் பாண்டே நியூஸ்பீட் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCESCO VENTURA படக்குறிப்பு, வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் இணை பிரிவது அதிகரிப்பதாக, 15,500 இனப்பெருக்க இணைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. காதலர்களோ, இணையர்களோ பிரிகிறார்கள் என்றால் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டது என்பதோ, ஒருவர் மற்றவருக்கு உரிய நேரம் ஒதுக்கவில்லை என்பதோ காரணமாக இருக்கக்கூடும். ஆனால், பருவநிலை மாற்றத்தால், இணைகள் பிரிவது நடக்க…

  3. மிகவும் வெப்பமான ஆண்டுகளின் பட்டியல் வெளியானது! 19ஆம் நூற்றாண்டிலிருந்து அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருக்கும் ஆண்டுகளின் பட்டியலில் கடந்த 2018ஆம் ஆண்டு நான்காம் இடத்தினை பிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்றச் சேவைப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரியமிலவாயு வெளியேற்றம் காரணமாகவே கடந்த 2018ஆம் ஆண்டு அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 14.7 டிகிரி செல்சியஸ் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படும் 2016ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில் இது 0.2 ட…

  4. மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள் ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES வன உயிர்களின் எண்ணிக்கை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதுவரை பார்த்திராத வகையில், மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. “நாம் காடுகளை எரி…

  5. கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள் கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியா…

    • 0 replies
    • 335 views
  6. பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 29 டிசம்பர் 2020 பட மூலாதாரம், BABU கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த ஆண்டின் 10 பேரிழப்புகளை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளதாக தெரிவித்…

  7. வெனிசுவேலா வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு! மேற்கு வெனிசுவேலா மாநிலமான மெரிடாவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மெரிடாவில் ஆளும் சோஸலிஸ்ட் கட்சி அதிகாரி நேற்று (புதன்கிழமை) அரசாங்க தொலைக்காட்சியில் இதனை உறுதிப்படுத்தினார். அத்துடன் மேலும் சில பகுதிகளில் தொலைபேசி சேவையை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடும் போது 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ளதாகவும 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில…

  8. உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காற்று மாசின் மோசமான தாக்கம் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.…

  9. ஸ்காட்லாந்தில் 1,200 மான்களை கொல்ல வாக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் சுமார் 1200 செந்நிற மான்கள் கொல்லப்பட வேண்டுமா என வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சவுத் உயிஸ்ட் எஸ்டேட்டில் வாழும் சிலர் மான்களில் உன்னிப் பூச்சிகள் கடித்து ஏற்பட்ட காயத்திலிருந்து லைம் என்ற நோய் பருவும் என்பதால் அவற்றை கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த எஸ்டேட்டை சேர்ந்த 200 பேர் அங்குள்ள மான்களை கொல்ல வேண்டும் என்று ஏற்கனவே கையொப்பமிட்ட நிலையில் அடுத்த வாரம் மேலும் 8…

  10. படத்தின் காப்புரிமை COPERNICUS DATA/SENTINEL-1/@STEFLHE அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி' பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 'பிறந்துள்ளது'. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடுவது போல இது கற்பனை அல்ல. இந்த பனியடுக்குப் பாறை குட்டி போட்டிருப்பது உண்மை. ஆங்கிலத்தில் இதனை 'கால்விங்' என்கிறார்கள். பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும்போ…

  11. 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஹெலென் ப்ரிக்ஸ் சுற்றுச்சூழல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூஞ்சை பூஞ்சைகள் நிலத்துக்கு அடியில் தாவரங்களின் வேர்களுடன் வலையமைப்பை உருவாக்குகிறது. அவ்வமைப்பு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வதற்கும், பூமியை வெப்பமாக்கும் கார்பன் டை ஆக்ஸைடை மண்ணில் அடைத்து வைப்பதற்கும் உதவுகிறது. பூஞ்சைகளின் இந்த மாபெரும் வலையமைப்பு குறித்தும், அவ்வமைப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அதன் பங்கு…

  12. பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை! பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பரிஸை பசுமையாக்கும் திட்டமும், மிதிவண்டிகளுக்கு மேலும் முன்னுரிமை கொடுப்பது உள்ளிட்ட 14 வசதிகள் பரிஸில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவற்றில் ஒன்று தான் பிளாஸ்ரிக்கை முற்றாக ஒழிக்கும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுக…

  13. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ் காலநிலை மாற்றத்தை உடனடியாகச் சமாளிக்கா விட்டால் வளமற்ற மண், பிளாஸ்டிக் நிறைந்த கடல்கள், அசுத்தமான நீர் மற்றும் கடுமையான வானிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுமென சுற்றுசூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரித்துள்ளார். பூமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து வருவதாக எச்சரித்த கோவ் அடுத்த ஆண்டு பல்லுயிர் மற்றும் பெருங்கடல்கள் தொடர்பான சர்வதேச உச்சிமாநாடுகளில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்; பூமிக்கு எம்மால் இழைக்கப்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடி…

  14. வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்று நோய் எது தெரியுமா.? கொரோனோ சமீப காலமாக கொரோனா என்னும் வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உலகின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உலக சுகாதார அமைப்பு, 2020 மார்ச் 11 ஆம் நாள் கொரோனா வைரஸை பெருந்தொற்று நோய் (Pandemic Disease) என்று அறிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றுநோயாகும். பன்றி காய்ச்சல் கடைச…

  15. பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்: விஞ்ஞானிகளுக்குப் பயன்படும் யூட்யூப் காணொளிகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHESTER ZOO படக்குறிப்பு, இணைய காணொளிகள் யானைகளின் அறிவுத் திறனுக்கான கூடுதல் ஆதாரங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றன ஆசிய யானைகள், மயில் சிலந்திகள், ஸ்னோபால் என்றழைக்கப்படும் காக்கடூ பறவை ஆகியவற்றுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவையனைத்துமே இணைய காணொளிகளில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இந்தக் காணொளிக…

  16. “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” என காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கை விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மாநாட்டில் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரிய…

  17. ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டகாசியின் கடைசி தினங்களில் ரேஞ்சர் பவுமாவுடன், டகாசி என்ற மலைவாழ் கொரில்லாவை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆம் ரேஞ்சருடன் இயல்பாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த கொரில்லாவின் பெயர்தான் டகாசி. அப்போது கொரில்லாவின் அந்த செல்ஃபி புகைப்படம் வைரலானது. ஆனால் இப்போது அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவுக்கு பிறகு உயிரிழந்துள்ளது. அதுவும் குழந்தையாக தன்னை மீட்ட அண்ட்ரே பவுமா என்ற அந்த ரேஞ்சரின் மடியில். காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஆப்ரிக்காவின் பழமையான தேசிய பூங்காவான, விருங்கா கொரில்லா காப்பகத்தில்தான் அந்த 14 வயது …

  18. புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா? Getty Images பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் "இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!" இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிடமிருந்து வந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக …

  19. கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ – வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை கலிபோர்னியாவில் காட்டுத் தீ கட்டுங்கடங்காது பரவி வரும் நிலையில், வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அண்மைய மாநில உதவியுடன் 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து வருகிறது. இதன் விளைவாக 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 700 கட்டடங்கள் நெருப்புக்கு இரையாகியுள்ளன. அத்தோடு, குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து சுமார் 2 இலட்சம் பேரை வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நெ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கிய காரணமாக இருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் சிறு வயதில் எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும் புதர்களும் நிறையவே இருந்தன. அன்று ஒருநாள் மாலைநேரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மின்சாரத் தடை நிகழ்ந்தது. இருட்டிலேயே மீதமிருந்த உணவை முடித்துவிட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டின் முன்புறத்தில் சுவர் ஓரமாக இருந்த குழாய் அருகே சென்றேன். …

  21. வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் adminDecember 10, 2023 அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத் தொடங்கி உள்ளார்கள். இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். ஆகாயத் தாமரை வீடுகளில் வளர்க்கப்படுவது தொடர்பாக ஐங்கரநேசனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே…

  22. இப்படியும் ஒரு பயணம். மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழும் சூழலினால் நிர்ணயிக்க படுகிறது அவனும் அதற்கேற்ப இசைவாக்கமடைந்து விடுவான். சிலருக்கு இப்படியும் வாழ்க்கை அமைந்து விடுகிறது .அந்தரத்தில் வாழ்க்கை . சர்க்கஸ் ஆடுவது போன்றது.நெஞ்சத்துணிவு கொண்ட ஒருபெண்ணின் பயணம். சற்று சறுக்கினாலும் மரணம் தான். வேகமாய் ஓடும் நீரோட்ட்துக்கும் சாய்வான கற்ப்பூமிக்குமிடையில் ஒருபயணம்.அவர்களுக்கு அது சாதாரணம் நமக்கு ..?விரும்பினால் பாருங்கள்.

  23. இயற்கையின் ஆக்கமும் , அழித்தலும் - எரிமலைகள்.! இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன. எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநா…

  24. அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு! அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகம், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறுகையில், “ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்” என கூறினார். அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக புவியின் மேற்பரப…

  25. உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு  இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான  புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில் கிட்ட…

    • 0 replies
    • 318 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.