Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு! அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகம், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறுகையில், “ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்” என கூறினார். அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக புவியின் மேற்பரப…

  2. உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு  இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான  புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில் கிட்ட…

    • 0 replies
    • 324 views
  3. வெறும் 20,000 மக்களைக் கொண்ட குட்டி நாடு கடலைக் காக்க எடுத்திருக்கும் வியக்க வைக்கும் முயற்சி படத்தின் காப்புரிமைBENJAMIN LOWY / GETTY Image captionபலாவு நாட்டின் ஒரு பகுதியான ராக் தீவு. பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு. புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப…

    • 0 replies
    • 548 views
  4. கனடாவில் கடுமையான குளிர் : வெப்பநிலை -21°C ஆக பதிவு! கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய விமான நிலையங்களில் விமான சே…

  5. யார் அதிக கதிர்வீச்சு அளவைப் பெறுகிறார்கள், கிரகத்தில் அதிக கதிரியக்க இடங்கள் எங்கே? எங்கள் கிரகத்தில் மிகவும் கதிரியக்க இடங்கள். (செர்னோபில் மற்றும் புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு) சுமார் 100 டன் கதிரியக்கக் கழிவுகள் சுற்றுச்சூழலில் விழுந்தன. ஒரு வெடிப்பைத் தொடர்ந்து, ஒரு பரந்த நிலப்பரப்பை மாசுபடுத்துகிறது. அப்போதிருந்து, ஆலை பல அவசரகால சூழ்நிலைகளை அனுபவித்தது, உமிழ்வுகளுடன். சைபீரிய இரசாயன ஆலை, செவர்ஸ்க் நகரம், ரஷ்யா atomic-energy.ru சோதனை மைதானம், கஜகஸ்தானின் செமிபாலடின்ஸ்க் (செமி) நகரம் lifeisphoto.ru வெஸ்டர்ன் மைனிங் அண்ட் கெமிக்கல் காம்பைன், மெயிலு-சூ சிட்டி, கிர்கிஸ்தான் facebook.com செர்னோபில் அணுமி…

    • 0 replies
    • 621 views
  6. அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கினத்தை பாதுகாக்க ஒரு நம்பிக்கை கீற்று KFBG ஜிப்பான் குரங்குகள் அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ஹைனன் கிப்பான் இனத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ள ஓர் இணை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது. காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 1950களில் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகில் 2000 கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன. ஆனால் 1970களில் 10க்கும் குறைவான கிப்பான் குரங்குகள் மட்டுமே இருந்தன என்று அப்போதைய கணக்கெடுப்பு காட்டியது…

  7. உயரும் கடல் மட்டம்... இங்கிலாந்தில், 200,000 சொத்துக்கள்... கைவிடப்படும் அபாயம் ! 2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவற்றை சரிசெய்ய சாத்தியமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது. பல தசாப்தங்களாக கடல் மட்ட உயர்வு தவிர்க்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் அதேவேளை சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்று அரசாங்கம் கூறியுள்ளது. இங்கிலாந்தின் கடற்கரையில் மூன்றில் ஒரு பங்கு கடல் மட்ட உயர்வினால் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று அறிக்கை கூறுகிறது. https://athavann…

  8. தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் மரம் வளர்த்து வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நூறு நாள் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்து அந்த இடத்தையே சோலைவனமாக மாற்றி வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாரட்டி வருகின்றனர். தஞ்சாவூர் திருச்சி சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகம். இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் ஐந்து வருடத்திற்கு முன் கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் வளர தொடங்கி இன்றைக்கு சோலைவனமாக மாறி நிற்கிறது. ஏக்கம், எதிர்பார்ப்பு…

    • 0 replies
    • 502 views
  9. படத்தின் காப்புரிமை DAVID SCHNEIDER, HERPETOLOGICAL ASSOCIATES இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன. 'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல…

  10. Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 12:00 PM கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றுப்புற வளி மாசுபாடு ஆண்டுக்கு 4.5 மில்லியன் அகால மரணங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடும் காட்டுத் தீ ஏற்படும் அமேசன் காடுகள், கனடா, சைபீரியா மற்றும் மத்திய ஆபிரிக்கா போன்ற இடங்கள் வளி மாசுபாடு ஏற்படும் இடங்களாக 2024 ஆம் ஆண்டிற்கான உலக வானிலை அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் வானிலை முறைகளை மாற்றுவதால், காட்டுத்தீ உலகம் முழுவதும் அடிக்கடி மற்று…

  11. சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார் BookdayJune 6, 2024 செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. செய்யறிவு என்றால் என்ன? செய்யறிவு என்பது நுண்ணறிவுகளை உருவாக்கச் செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதன் வழியே மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க…

  12. கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று. பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள். பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆ…

  13. படத்தின் காப்புரிமை Getty Images இயற்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை பாரீஸீல் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது 'அறிக்கை' அல்ல மனித குலத்திற்கான 'எச்சரிக்கை'. அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்களை பிபிசியின் சூழலியல் செய்தியாளர் மேட் மெக்ராத் தொகுத்து தருகிறார். 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் சார் பாப் வாட்சன், 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' என்கிறார். …

  14. தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி! திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்ற…

    • 0 replies
    • 508 views
  15. மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி! மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரண…

  16. பனைமர பாதுகாப்பில், அசத்தும் கம்போடியா! தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான். ‘பனை மரம்’ தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த அளவுக்குப் பனை மரங்கள் தமிழ்நாட்டில் அழிவினை சந்தித்து வருகின்றன. இன்னும் ஒரு பக்கம் அதனை ஈடுகட்டும் விதமாக சில குழுக்களாலும், அமைப்புகளாலும் பனை விதை விதைப்பு நடைபெற்று வருகிறது என்பது இப்போதைக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். தமிழ்நாட்டில் வீணாக நாம் பார்க்கும் பனை மரம்தான் கம்போடியாவின் அட்சய பாத்திரம் என்றால் நம்ப முடிகிறதா? கம்போடியாவில் திரும்பும் இடமெல்லாம் பனை மரமும் ப…

  17. 40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்! பயனற்ற பிளாஸ்டிக் கழிவுகளால் நாளாந்தம் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது. பிளாஸ்டிக்கின் பாதிப்பு பற்றி அறியாத பல உயிரினங்கள அவற்றை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றன. அண்மையில் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்ட வளர்ந்த திமிங்கிலம் ஒன்று உயிரிழந்து விட்டது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பிளாஸ்டிக் பாவனையின் உச்ச கட்ட அழிவு நிலையை உணரக் கூடியதாக இருந்தது. திமிங்கிலத்தின் குடலில் இருந்து கடல்வள பாதுகாப்பு அதிகாரியொருவர் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருட்களையு…

  18. ஃபின்லாந்து கடற்கரையை அலங்கரித்த “பனி முட்டைகள்” அரிய வானிலை நிகழ்வு! ஃபின்லாந்தின் கடற்கரைப் பகுதியில் நிலவிய அரிய வானிலையால் அங்கு, ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் தோன்றியுள்ளன. பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட “பனி முட்டைகளை” அவதானித்தவர்களில் ஔிப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவராவார். காற்றாலும், நீராலும் சிறிய பனிக்கட்டி துண்டுகள் உருண்டு செல்லும் அரியதொரு வழிமுறையின் போது பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற இயற்கை வடிவமைப்பை அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்று ஒலு நகரை சோந்த மாட்டிலா என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “நான்…

  19. http://maridhasanswers.com/wp-content/uploads/2018/12/f-indonesia-forests-a-20160405-870x582.jpg விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு. இரண்டையும் குழப்பும் சமூகத்திற்கு என் இந்தப் பதிவு சமர்ப்பணம்: விவசாயம் – விவசாயி என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் மாணவர்கள் இளையவர்கள் கவனத்திற்காக இந்தப் பதிவை வெளியிடுகிறேன். தவிர நான் விவசாயத்திற்கு எதிரானவனோ விவசாயிகளுக்கு எதிரானவனோ அல்ல. ஆனால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முறைப்படுத்த விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், ப…

    • 0 replies
    • 515 views
  20. 22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமா உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம். கர்ப்பமாக இருந்த மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கடலில் நம்மால் கலக்கப்படுகிற பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் பரிதாபமாக இறந்திருக்கிறது.அப்படி இறந்த திமிங்கலத்தை மீட்டெடுத்து ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கிட்டதட்ட 22 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிந்து வெளியே அகற்றப்பட்டிருக்கிறது. மத்தியத் தரைகடல் மத்திய தரைகடல் பகுதியில் மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதனால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாவதற்கான நமக்கான எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கடல் பகுதியில் கலந்து விட்டது. அது மத்திய தரை…

  21. எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் May 1, 2019 எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது. இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் க…

  22. 04 JUN, 2024 | 05:16 PM உலக சுற்றுச்சூழல் தினமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களையும், நிறுவனங்களையும் ஒன்று திரட்டவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் ஓர் உலகளாவிய தளமாக செயற்படுகின்றது. இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெ…

  23. படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். என்ன பனிப்பாறை காணாமல் போய்விட்டதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது காணாமல் போகவில்லை பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதல் பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிட்ஸர்லாந்தின் க்ளாரஸ் ஆல்ப்ஸ் உள்ளது .இந்த பனிப்பாறையானது, 2006ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 80% காணாமல் போய்விட்டது…

  24. பிரேசிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதிசய வீடு பிரேசிலில் பெண் ஒருவர் ஆயிரக்கணக்கான அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடி போத்தல்களைக் கொண்டு அழகான வீட்டை கட்டி முடித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த ஐவோன் மார்டின்ஸ் என்ற பெண், கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் ஐவோன் மார்டின்ஸ் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார். 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்கள…

  25. திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.