சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் ஒவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு மைக்கைப் பொருத்தி சோதனை செய்தார். மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொர…
-
- 14 replies
- 928 views
- 1 follower
-
-
தாவரங்கள் சார்ந்த உணவுக்கு மாறும் போது, காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராட முடியும் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பாரிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் அதிக அளவாக இறைச்சி மற்றும் பால்பொருள் உணவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பூகோள வெப்ப அதிகரிப்பு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே தாவர உணவுகளை புசிப்பதன் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் மக்கள் அனைவரும் தவார உண்ணிகளாக மாற வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கவில்லை.107 விஞ்ஞானிகள் இணைந்து, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/221860/தாவரங்கள்-சார்ந்த-உணவுக்கு-மாறும்-போது-…
-
- 0 replies
- 549 views
-
-
திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் …
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
தீவிரப் புயலாக மாறும் "ஃபனி.." சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.ஏப்ரல் 30: அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.புயல் திசை: இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்க…
-
- 1 reply
- 866 views
-
-
தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDRE GUNTHER உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வண்ணப் பூச்சி வகைகள் குறித்த முதல் தொகுப்பு மதிப்பீட்டின் மூலம் இதை கண்டறிந்துள்ளனர். நகரமயமாக்கலும், நிலையில்லாத விவசாயமுமே ச…
-
- 2 replies
- 344 views
- 1 follower
-
-
டிம் ஸ்மெட்லி பிபிசி ஃபியூச்சர் 24 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES 2012ஆம் ஆண்டில் சூ நட்டாலி, சைபீரியாவின் டுவன்னவ் யர் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றார். பருவநிலை மாற்றத்தால் உறைபனி உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக அவர் சென்றார். அந்த இடத்தின் புகைப்படங்களைப் பல முறை அவர் பார்த்திருக்கிறார். டுவன்னவ் யர் பகுதியில் வேகமாக பனி உருகும் காரணத்தால், பெரிய அளவில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. சைபீரியாவில் மரங்கள் இல்லாத பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. ஆனால் நேரடியாக சென்று பார்ப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தவில்லை. ``அது வியப்புக்குரிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
தூர்வாரும் பணியில் உதயநிதியின் திமுக இளைஞரணி! திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களைத் தூர்வாரும் பணியை கையில் எடுத்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குளங்களை தூர் வாரும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, ‘சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் அணி அதிக கவனம் செலுத்தும்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருக்குவளையில் உள்ள கே.கே.நகர் குளத்தைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதுபோன்ற பணிகள் தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் பணிகளைப் பொறுத்தவரையில் ரஜினி மக்கள் மன்ற…
-
- 0 replies
- 510 views
-
-
தென்னப்பிரிக்காவில் தேனீக்கள் கொட்டி இறந்த 63 பென்குவின்கள் - அரிதினும் அரிய நிகழ்வு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஆப்பிரிக்க பென்குவின்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. (கோப்புப்படம்) கேப் டவுன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குவின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குவின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள். சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குவின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை : இத்தாலியின் 16 நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை 16 Jul, 2023 | 09:52 AM பொதுவாக குளிரான காலநிலையைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தில், தற்போது பல நாடுகள் கடும் வெப்பத்தால் தவிக்கின்றன. ஐரோப்பாவை மற்றொரு வெப்பஅலை நெருங்கும் நிலையில், எதிர்வரும் வாரத்தில் ஐரோப்பாவில், குறிப்பாக தெற்கு ஐரோபபாவில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குகூட …
-
- 3 replies
- 379 views
-
-
தொடாவிடினும் சுடும் அமேசன் தீ ! இந்தப் பூமி தனி ஒருவருக்கு சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம் மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட கொடூரமான பெருவிலங்குகள் இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் பெரும் இயற்கை அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஓசோனில் ஓட்டை விழுந்ததற்கும் பல நாடுகள…
-
- 1 reply
- 776 views
-
-
நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன? Anuradhi D. Jayasinghe on June 10, 2021 Photo: Standaard “இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.” இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல் புலணுணர்வே இது. அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பெரும்பான்மையான மக்களுக்கும் அழிவேற்படுத்திய மாசாக்கத்திற்கான நட்டஈடு எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது பற்றித் தெரியாது. சமுத்திரங்களில் பொலித்தீனையும் பிளாஸ்டிக்கினையும் கொட்…
-
- 0 replies
- 498 views
-
-
பட மூலாதாரம்,RAMESHWARAN படக்குறிப்பு, பூனைக்கண் பாம்பு கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், "மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு" என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு. பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப் பார்த்தால் மட்டுமல்ல, காதில் கேட்டாலே மனித மனதில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக பாம்புகள் ப…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
நம்மாழ்வாரும் சித்த மருத்துவமும்: கதிர்நம்பி இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், சித்த மருத்துவம் குறித்துப் பேசவில்லையா ? சித்த மருத்துவத்தை முன்னெடுக்கவில்லையா ? * தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை/சூழலியல் செயல்பாடுகள் அரும்பிய காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர் நம்மாழ்வார். புழுதியில் உழல்கின்ற உழவர்களை ஒரு படி மேல் ஏற்றுவது தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஓடித் திரிந்தவர். வேளாண்மையை முழுமையாகக் (wholistic approach) காண வேண்டும் என்பார். மொத்தம் /எண்ணிக்கை (Total/count) என்பதை விட முழுமை (wholesome) என்பதனைக் கணக்கிட வேண்டும் என்பார். அந்த முழுமை என்பதற்குள் நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடங்கு…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 433 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று! எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை …
-
- 0 replies
- 518 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 05:59 GMT மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம். அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம். பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 289 views
-
-
படத்தின் காப்புரிமை RICHARD BOTTOMLEY நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் பெரிய பனி பாளங்கள் உடைந்துள்ளன. இந்த பனி மலையின் பனி உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது. பனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இது நடைபெறுவதாக கருதப்பட்டது. இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பட…
-
- 0 replies
- 768 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernew…
-
- 4 replies
- 842 views
-
-
நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/BleachedCoral-1-696x418.jpg நாராயணி சுப்ரமணியன் “பவள வாய்ச்சி” என்று கண்ணகியை வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். மருதாணி இட்ட பெண்ணின் விரல் நகங்களில் ஊடுருவும் அழகிய செந்நிறத்தை, “விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பவளம்/பவளப்பாறை என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருகிற அந்தச் சிவப்பு வெறும் நிறமல்ல. ஒரு பவள உயிரி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான குறியீடு. அந்த நிறத்துக்கும் நலத்துக்கும் ஆபத்துகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதுபற்றி பல தசாப்தங்களாகவே அறிவியலாளர்கள் எச்சரித்துக்…
-
- 0 replies
- 544 views
-
-
2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைக்கோளம் வழி எடுக்கப்பட்ட காட்சிகள் ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக பெருங்கடல்களின் நிறம் மாறிவருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகப் பெருங்கடலில் 56 வீதமான பகுதியின் நிறம் மாறியுள்ளதாக நேச்சர் எனும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டிற்கு அருகிலுள்ள பெருங்கடல்களில் பச்சை நிறம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைக்கோளம் வழி எடுக்கப்பட்ட காட்சிகள் ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலின் பல்லுயிர் சமூகத்தில் மா…
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் …
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல் கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். கல்லி ப்ளக் உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் ப…
-
-
- 1 reply
- 359 views
- 1 follower
-
-
நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா? Getty Images உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? இணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும். இதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த …
-
- 0 replies
- 389 views
-
-
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நீரில் தேவையில்லாமல் வீணாகும் நீரின் அளவை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பிபிசி தமிழின் காணொளித் தொடரின் முதல் பாகம் இது. https://www.bbc.com/tamil/india-48732197
-
- 1 reply
- 950 views
-