சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
காடழிப்பிற்கும் மழைவீழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு -ஆய்வின்மூலம் நிரூபித்தனர் விஞ்ஞானிகள் Published By: RAJEEBAN 02 MAR, 2023 | 04:02 PM காடழிப்பிற்கும்குறிப்பிட்ட நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். காடழிப்பிற்கும் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில்தெளிவான தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் முதல் தடவையாக நிரூபித்துள்ளனர். தங்களின் இந்த முடிவு அமேசன்;கொங்கோ பேசின் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அரசாங்கங்களும் விவசாயிகளும்அதிக மரங்களை நடுவதற்கு தூண்டுதலாக மாறும்என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். வெப்பமண்டலநாடுகளில் மழை…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை CLAY BOLT Image caption பெண் வாலேஸ் ராட்சத தேனீ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு்ளளது. அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கையின் கட்டைவிரலுக்கு ஒத்த பெரியதொரு ரட்சத தேனீ, இந்தோனீசிய தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் இதுவரை மிக குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், உயிரோடு ஒரு பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்த வனவிலங்கு நிபுணர்கள், அதனை புகைப்படம் எடுத்து…
-
- 0 replies
- 457 views
-
-
22 MAR, 2024 | 10:46 AM இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற பல்வேறு தினங்களில் உலக நீர் தினமும் ஒன்றாக அமைகிறது. ஆண்டுதோறும் மாரச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற இந்த நீர் தினமானது ஏனைய உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற தினங்களில் இருந்து அதிமுக்கியத்துவம் பெற்று சற்று வேறுபடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை யாவரும் அறிந்ததே. அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவா…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
விவசாயம் பாரிய அழிவு: வெட்டுக்கிளிகளுக்கு எதிராக தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தது பாகிஸ்தான் பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பாரியை அழிவைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் ஆபிரிக்க வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது. எத்தியோப்பியாவை பாலைவன வெட்டுக்கிளிகளின் தலைநகரம் எனலாம். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான், சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானின் ப…
-
- 0 replies
- 382 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது. இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது. இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பி…
-
- 0 replies
- 707 views
-
-
பலூன், பாட்டில்மூடி.. கையளவு ஆமைக்குட்டியின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள்.. இப்படியே போனால்..! புளோரிடா: அமெரிக்காவில் இறந்து போன கடல் ஆமைக்குட்டியின் வயிற்றில் இருந்து நூறுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயங்கி வருகிறது கம்போ லிம்போ இயற்கை மையம். இந்த மையம் அமைந்துள்ள இடத்தின் அருகே இருந்து உயிருக்கு போராடும் நிலையில் ஒரு கடல் ஆமை கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளங்கை அளவே இருக்கும் அந்த ஆமையின் உயிரை காப்பாற்ற கம்போ லிம்போ இயற்கை மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த ஆமை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த ஆமையின் வயிற்றை அறுத்து பா…
-
- 0 replies
- 360 views
-
-
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முக கவசம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், விஞ்ஞான முறைப்படி அழிக்கப்படாததால், பிரச்னை மேலும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தமிழகம், கர்நாடகம் உட்பட, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்கள், முக கவசங்களையும், கையுறைகளையும் பயன்படுத்துகின்றனர். கட்டாய காரணங்களால், வெளியே செல்பவர்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்களும் கூட முக கவசம் அணிந்து நடமாடுகின்றனர். இதனால், முக கவசங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கையுறைகளும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கையுறைகள், விஞ்ஞான முறையில் அழிக்கப்படுவ…
-
- 0 replies
- 583 views
-
-
கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்! கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட பல மரங்களை அலுமினியப் படலத்தால் பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து சீக்வோயா மற்றும் கிங்ஸ் கனியன் தேசிய பூங்கா செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா பேட்டர்சன் கூறுகையில், ‘இது பல, பல மக்களுக்கு மிக முக்கியமான பகுதி, எனவே இந்த தோப்பைப் பாதுகாக்க நிறைய சிறப்பு முயற்சிகள் நடக்கிறது’ என கூறினார். சில மணிநேரங்களுக்குள் உலகின் மிகப் பெரிய மரங்களின் தோப்பாகிய ஜெயன்ட் காட்டை …
-
- 0 replies
- 219 views
-
-
கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன் September 30, 2018 1 Min Read உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் க…
-
- 0 replies
- 923 views
-
-
பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும். உங்கள் வீடுகளைச் சுற்றி மரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் நீங்கள் அவர்களின் இசையை நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். அந்த இசை உங்கள் காதுகளை ஊடுருவி மூளைக்குள் நுழைந்து அதிகாலையிலேயே அரை மயக்க நிலைக்குக் கொண்டு போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்தப் பரவசத்தை இதுவரை உணரத் தவறிவிட்டீர்களா? தொடர்ந்து படித்து அந்த இன்னிசைக்குச் சொந்தக்காரர்களான ஆசிய குயில் குறித்த அறிமுகத்தோடு இனி ரசிக்கத் தொடங்குங்கள். பல பறவைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல தோற்றம் கொண்டவையாக இருக்கும். அதில் ஒன்றுதான் ஆசிய குயில். புது…
-
- 0 replies
- 2.5k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990 களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி 26 ஜூலை 2024 ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின. சில சமயங்களில் வி…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன? தனியொரு மனிதன் மூன்று ஆண்டுகளுக்குக் குடிக்கும் சராசரி தண்ணீர் அளவான 3,781 லிட்டர்கள் (வயலில் பருத்தி விளைச்சல் தொடங்கி, தொழிற்சாலையில் தயாராகி, சில்லறைக் கடைக்கு விற்பனைக்குச்செல்லும்வரை) ஒரேயொரு ஜோடி ஜீன்ஸ் மட்டுமே தயாரிக்கச் செலவாகும். புத்துணர்வு தோற்றத்தைத் தரும் என்னும் போலியான தேவையை உருவாக்கும் எண்ணமுடன் பரவுகிறது குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைக் கலாசாரம். இதன் காரணமாக அதிக அளவில் உற்பத்தியாகும் ஆடைகள் காலப்போக்கில் கழிவுகளாக மாறிச், சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. ஒவ்வொரு புடவையும் சராசரி 6 - …
-
- 0 replies
- 339 views
-
-
Image caption அழிந்த தேவாலயம். கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே எடுத்துச் சொல்கின்றன. …
-
- 0 replies
- 820 views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவது ஏன்? இந்த ஆண்டு கருப்பொருள் என்ன? Getty Images உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது? 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தினம்: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன? 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கம் …
-
- 0 replies
- 500 views
-
-
பருவநிலை மாநாடு: காடழிப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என விமர்சித்த இந்தோனீசிய அமைச்சர் - கையெழுத்திட்ட அதிபர் விடோடோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காடழிப்பு 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள சட்ட திட்டங்களை இந்தோனீசியா விமர்சித்துள்ளது. மேலும் அச்சட்ட திட்டங்களை கடைபிடிக்க முடியாமல் போகலாம் எனவும் இந்தோனீசியா கூறியுள்ளது. "எங்களால் செய்ய முடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது" என இந்தோனீசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிடி நுர்பயா பாகர் (Siti Nurbaya Bakar) கூறினார். 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
உலக வாழ்விடம் நாள்: பல்லிகள் இல்லையென்றால் மனிதர்களின் நிலை என்னவாகும்? எம்.ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக வாழ்விடம் நாள். நாம் பொதுவாக மற்ற உயிர்களின் வாழ்விடமாக காடுகள், மலைகள் என மக்கள் அதிகம் வசிக்காத இயற்கை சார்ந்த பகுதிகளையே நினைக்கிறோம். ஆனால், நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் அதிகம் சிந்திப்பதில்லை. நம்மை சுற்றியுள்ள சிற்றுயிர்கள் பல்லுயிர்ச் சூழலுக்கும், நமது மனித வாழ்வுக்கும் ஆற்றும் நன்மைகள் குறித்து நமக்கு பெரிதும் கவன…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றம்: அரசாங்கத்தின் நடவடிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வெளிநடப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஜேர்மனில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்த மாணவர்கள் துறைமுக நகரான ஹம்பேர்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ‘காலநிலைக்காக பாடசாலை புறக்கணிப்பு’ அல்லது ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ என்ற தொனிப்பொருளில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு அங்கமாகவே நேற்றைய பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்…
-
- 0 replies
- 298 views
-
-
செயற்கையாக புயலை உருவாக்க முடியும்!
-
- 0 replies
- 621 views
-
-
2 மாதங்களில் 3 ஆயிரம் நிலநடுக்கங்கள்: மெக்சிகோவில் எரிமலை உருவாகும் அபாயம்! மத்திய மெக்சிகோவின் மைக்கோகன் (Michoacan) மாநிலம், கடந்த 2 மாதங்களில் 3 ஆயிரம் சிறிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய எரிமலை ஒன்று உருவாகி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளாக புதிய எரிமலை எதுவும் உருவாகாத போதும் நாட்டில் செயற்பாட்டில் உள்ள எரிமலைகளை அதிகம் கொண்ட இடமாக மைக்கோகன் காணப்படுகிறது. இங்கு, அடிக்கடி ஏற்படும் நில அதிர்வால் குடியிருப்புகளுக்கு அருகே புதிய எரிமலை வளர்ந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புது அச்சுறுத்தலால் சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்துள்ளனர். http://athavannews.com/2-மாதங்களில்-…
-
- 0 replies
- 230 views
-
-
பருவநிலை மாற்றம்: கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள், அதிர வைக்கும் ஆய்வு விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS BRINK புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும். ஆனால், காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
அழிந்து போனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி மீண்டும் கண்டுபிடிப்பு! 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது. தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது. 1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்க…
-
- 0 replies
- 128 views
-
-
வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் மழை பொழியுமா இல்லையா என்று கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான, லண்டனில் உள்ள டீப்மைண்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் எக்செட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் மூலம் அடுத்த ஆறு மணி நேர…
-
- 0 replies
- 503 views
- 1 follower
-
-
மனிதன் இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், அனைத்து தாவரங்கள், விலங்குகளை இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. ஆம், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2,000 புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டனிலுள்ள ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டுள்ளனர். அதிலுள்ள 10 சிறப்பு பண்புகளை கொண்ட தாவரங்களின் அறிமுகத்தை இங்கு காண்போம். மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பூ …
-
- 0 replies
- 450 views
-
-
பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்.. வாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் தற்போது கண்டு பிடித்திருக்கின்றனர். இவை இறைச்சி உண்ணும் டினோசார்களான ஸ்பினோசாரஸ் உலகில் சுற்றித் திரிந்த நாட்களுக்கு முன்பே உருவானவை. இவை கடலுக்கு அடியில் புதையுண்டதற்க்குப்பின் இந்த உலகில் கண்டங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்திருக்கின்றன; கடல் மட்டங்கள் மேலெழும்பி தாழ்ந்திருக்கின்றன; மனிதக் குரங்குகள் தோன்றியிருக்கின்றன; பின்…
-
- 0 replies
- 361 views
-
-
உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம் ஜோனாத்தன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அங்கிலோசர்: கவசம் பூட்டிய காஃபி டேபிள் நகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்குமோ? குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு. இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்…
-
- 0 replies
- 412 views
- 1 follower
-