சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்! கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட பல மரங்களை அலுமினியப் படலத்தால் பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து சீக்வோயா மற்றும் கிங்ஸ் கனியன் தேசிய பூங்கா செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா பேட்டர்சன் கூறுகையில், ‘இது பல, பல மக்களுக்கு மிக முக்கியமான பகுதி, எனவே இந்த தோப்பைப் பாதுகாக்க நிறைய சிறப்பு முயற்சிகள் நடக்கிறது’ என கூறினார். சில மணிநேரங்களுக்குள் உலகின் மிகப் பெரிய மரங்களின் தோப்பாகிய ஜெயன்ட் காட்டை …
-
- 0 replies
- 228 views
-
-
மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி? ஹெலென் ப்ரிக்ஸ் அறிவியல் & சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விண் எரிகல்லின் தாக்கம் பூமியில் பேரழிவை ஏற்படுத்தியது, பெரும்பாலான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இறந்து கொண்டிருந்தன. ஆனால் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு சில பாம்பு இனங்கள் எரிகல் தாக்கிய பிறகான உலகில், நிலத்தடியில் ஒளிந்து கொண்டு, நீண்ட நாட்களுக்கு உணவு இல்லாமல் தழைத்து வளர முடிந்தது. அந்த அளவுக்கு அதிக எதிர்வினை ஆற்றல் கொண்ட ஊர்வன, பின்னர் உலகம் முழுவதும் பரவி, இன்று அறியப்படும் அளவுக்கு 3,0…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
இயற்கையைப் பாதுகாக்கும், முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் உயிரிழப்பு! 2020ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் உயிரிழந்துள்ளனர். காடுகள், இயற்கை வளங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் உயிரிழந்துள்ளதாக ‘கிளோபல் விட்னஸ்’ எனும் மனித உரிமைக் குழு நடத்திய ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. கொலம்பியாவில் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலம், காடுகள் அல்லது கோக்கோ பயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முயன்ற சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்ற காரணத்துக்காக உலகில் மிக அதிகமானோர் கொலம்பியாவில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதற்கு இரண்டாம் நிலையில் மெக்சிகோ உள்ளது.…
-
- 0 replies
- 336 views
-
-
பசுக்களுக்கு அறையில் சிறுநீர் கழிக்க பயிற்சி - பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FBN படக்குறிப்பு, பசுக்கள் சிறுநீர் கழிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி அறை பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, குறிப்பிட்ட சில பசுக்களை அழைத்து வந்து, அவற்றை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேல் நிற்க வைத்து சிறுநீர்…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள் 14 செப்டெம்பர் 2021, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களி…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு 'நோபல்' பரிசு ஏன்? ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN RADCLIFFE காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் நாட்டில் இருக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு, நடைபாதையில் வீசப்பட்ட சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியா மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் ஒவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு மைக்கைப் பொருத்தி சோதனை செய்தார். மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொர…
-
- 14 replies
- 928 views
- 1 follower
-
-
உலகின் மிக 'அழகான கொசு' இதுதானா? இந்த படம் அதிகம் பாராட்டப்படுவது ஏன்? ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GIL WIZEN/WPY இது ஒரு பெண் கொசு. அதன் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. உரோமங்களைக் கொண்ட அவற்றின் கால்கள், அதன் பளபளப்பு ஆகியவற்றைக் கண்டால் திகைப்பூட்டும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சபேதெஸ் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இந்தக் கொசுதான் வெப்பமண்டலப் பிராந்தியத்தின் மிகக் கொடூரமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது அவமானகரமானது. இந்தப் புகைப்ப…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
கும்கி' திரைப்படம் வந்தபோது எழுதிய கட்டுரை இது. உண்மையில் ஒரு கும்கி யானையை எப்படி பயிற்று விக்கிறார்கள் என்பதன் தேடல். அப்போது கும்கி யானைகளைப் பற்றி புகைப்பட ஆவணம் மேற்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். இனி அந்தக் கட்டுரை... * * * * * அவருக்கு போட்டோ எடுக்க யாரும் கற்றுத் தரவில்லை. கல்லூரி ஓவியப்போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்த ரூ.1,500-ல் தான் முதன் முதலாக ஒரு ஸ்டில் கேமராவை விலைக்கு வாங்கினார். ஐந்து வருடங்கள் முடிவதற்குள் கைதேர்ந்த புரொஃபஷனல் போட்டோகிராபராக மாறினார். ஆர். செந்தில்குமரன் இது நடந்தது 2003-ல். அதற்குப் பின் 10 …
-
- 1 reply
- 734 views
- 1 follower
-
-
வெனிசுவேலா வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு! மேற்கு வெனிசுவேலா மாநிலமான மெரிடாவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மெரிடாவில் ஆளும் சோஸலிஸ்ட் கட்சி அதிகாரி நேற்று (புதன்கிழமை) அரசாங்க தொலைக்காட்சியில் இதனை உறுதிப்படுத்தினார். அத்துடன் மேலும் சில பகுதிகளில் தொலைபேசி சேவையை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடும் போது 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ளதாகவும 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில…
-
- 0 replies
- 305 views
-
-
ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு! ஜப்பானின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஏழு மாகாணங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புகுவோகா மற்றும் ஹிரோஷிமா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாகசாகி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் மீ…
-
- 0 replies
- 246 views
-
-
Woolly Mammoth: 70 ஆயிரம் கி.மீ நடந்த பனி யானைகளின் ராட்சத தந்தங்களின் ஆச்சர்ய வரலாறு பால் ரின்கன் பிபிசி செய்திகள் - அறிவியல் ஆசிரியர் 14 ஆகஸ்ட் 2021, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JAMES HAVENS படக்குறிப்பு, ராட்சத தந்தங்களைக் கொண்ட வூலி மமூத் எனும் உயிரினம் வூலி மமூத் (Woolly Mammoth) என்கிற இன்றைய யானைகளுடன் தொடர்புடைய விலங்கினம், அதன் வாழ்நாளில் எவ்வளவு தூரம் பயணித்தது என்பதை அறிய, அவுயிரினத்தின் மிகப் பெரிய தந்தத்திற்குள் இருக்கும் வேதியியலை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர். பனி யுகத்தில் வா…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை Guest Contributor09 Aug 2021 2 PM Published:09 Aug 2021 2 PM Climate Change (Representational Image) ( AP Photo/Victor Caivano ) ``கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே." - ஐ.பி.சி.சி அறிக்கை ``Heat save spread fire that `erased' Canadian Town" கடந்த ஜூலை மாதம் பிரபலமான அமெரிக்க நாளிதழான `தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியின் தலைப்புதான் இது. இந்தத்…
-
- 4 replies
- 787 views
-
-
இதய நோய்: அதீத ரத்த அழுத்தத்தில் இருந்து ஒட்டகச் சிவிங்கிகள் எப்படித் தப்பிக்கின்றன? பாப் ஹோம்ஸ் அறிவியல் எழுத்தாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகவும் உயரமாக இருந்தாலும் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டாவதில்லை. உயரமாக இருப்பதால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் தேவைப்படும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு வரும் வேறு உடல் உபாதைகளிலிருந்து அவை தப்பித்துவிடுகின்றன. இது எப்படி சாத்தியம்? ஒட்டகச் சிவிங்கி என்றாலே பலருக்கும் அதன் நீண்ட கழுத்துதான் நினைவுக்கு வரும். …
-
- 3 replies
- 513 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை! புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக உள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் கூறுகையில், ‘வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம். ஐ.பி.சி.சி.யின் கணிப்புகள் அழிவின் விளிம்பில் அமைந்துள்ள தங்களது நாட்டுக்கு பேரழிவ…
-
- 1 reply
- 616 views
-
-
உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்பு நூறு காலத்தில் கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்ட உயர்வு, 2050க்குள் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார். இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு இந்திய பெருங்கட…
-
- 0 replies
- 457 views
-
-
ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியில் இறப்பு துருக்கியின் கொன்யா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளன. துருக்கியின் கொன்யா பகுதியில் உள்ள டஸ் ஏரி அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். உவர் நீர் ஏரியான இங்கு ஏராளமான வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். வறண்டு கிடக்கும் இந்த ஏரியில் கடந்த இருவாரகாலமாக ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடக்கின்றன. டஸ் ஏரிக்கு நீர்வரக்கூடிய பகுதிகளை தடுத்து தங்கள் பகுதிக்கு பாசனத்திற்காக சிலர் தண்ணீரை திருப்பிக் கொண்டதால், ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயிருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏரி தண்ணீரிலும் உவர் தன்மை பெரி…
-
- 0 replies
- 355 views
-
-
மின்னல் தாக்கியபோது செல்பி எடுத்த 11 பேர் பலி: செய்யக் கூடாதவை என்னென்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TOM ROBST ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது. மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில்…
-
- 2 replies
- 985 views
- 1 follower
-
-
பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? – தமிழில்: ஜெயந்திரன் தென் ஆசியாவைப் பொறுத்த வரையில், காடழிக்கும் செயற்பாடு எண்ணெய் தயாரிக்கும் தொழிலுடன் தொடர்பு பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2018 இலிருந்து 2020 வரை அண்ணளவாக 500,000 ஏக்கர் மழைக் காடுகள் (202,000 ஹெக்ரேயர்கள்) இந்தோனேசியா, மலேசியா, பாப்புவா நியூகினி போன்ற மூன்று நாடுகளில் காடழிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகளில் வாழும் பூர்வீக மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை இழந்திருக் கின்றார்கள். வட பூகோளத்தில் உள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் தாம், இந்த பாம் எண்ணெய்ப் (palm oil) பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதாக உறுதி கூறிய…
-
- 0 replies
- 817 views
-
-
ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து மார்க் கின்வெர் சுற்றுச்சூழல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANGELIKA RENNER படக்குறிப்பு, புவிக்கு கவசமாக உள்ள பனி அடுக்குகளில் பிளவு. ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி. ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாம…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
வெள்ளை காண்டாமிருக இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி: இரண்டுமே பெண், எப்படி இனப்பெருக்கம் செய்விக்க முயல்கிறார்கள்? நிக் ஹாலாண்ட் பீபிள் சேவிங் தி வேர்ல்ட், பிபிசி உலக சேவை 3 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த உலகில் மிஞ்சி இருக்கும் கடைசி இரு வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்களான நஜின் மற்றும் ஃபடு நஜின் மற்றும் ஃபடு. இந்த உலகின் கடைசி இரண்டு வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள். இந்த இரண்டுமே பெண் காண்டாமிருகங்கள். தாய் மற்றும் மகள். "ஒவ்வொரு நாளும் அவற்றை பார்க்கும்போது, இதுதான் இந்த உலகம்பார்க்கப் போகும் கடைசி காண்டாமிரு…
-
- 0 replies
- 762 views
- 1 follower
-
-
நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன? Anuradhi D. Jayasinghe on June 10, 2021 Photo: Standaard “இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.” இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல் புலணுணர்வே இது. அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பெரும்பான்மையான மக்களுக்கும் அழிவேற்படுத்திய மாசாக்கத்திற்கான நட்டஈடு எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது பற்றித் தெரியாது. சமுத்திரங்களில் பொலித்தீனையும் பிளாஸ்டிக்கினையும் கொட்…
-
- 0 replies
- 497 views
-
-
விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALVARO DEL CAMPO அமேசான் மழைக்காடு தொடர்பான வரலாற்றைக் குறித்த ஆய்வில், அங்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அப்பகுதிக்கு எந்த வித சேதங்களையோ, அங்கு வாழ்ந்த உயிரினங்களுக்கு எந்த வித இழப்பையோ ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டு இருக்கிறது. பெருவில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மனித தாக்கத்தின் நுணுக்கமான புதைபடிம ஆதாரங்களுக்காக மண்ணின் அடுக்குகளைத் தேடினர். “காடுகள் அழிக்கப்படவில்லை, விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை, அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பெரிதாக காடுகள் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை…
-
- 1 reply
- 325 views
-
-
உலகப்... பெருங்கடல், தினம் இன்றாகும்! கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்வின் பிழைப்புக்கு நேரடியாக பங்களிக்கும் கடல் சுற்றுச்சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பெருங்கடல்களில் மாசுபாடு சேர்க்கப்பட்டால், அதை சரிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை. இதன் தாக்கம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும், முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் நேரடியாக பாதிக்கும். கொழும்புக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் கப்பலால்…
-
- 2 replies
- 1.2k views
-