இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
206 topics in this forum
-
சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் ஓர் அரசியல் கைதி.! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.அரூரன் எனும் பொறியாளர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் . இவர் 2008 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். பொறியியல் துறையில் சாதிக்க புறப்பட்டு தான் செய்த குற்றம் என்ன வென்று தெரியாது 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எஸ்.அரூரன் போன்ற இளைஞர்களுக்கு நீதி செய்ய இந்த நாட்டின் சட்டங்களும் அரச நிருவாகமும் அனுமதி மறுக்கின்றன. இந்த நிலையில் சிறைக்குள் இருந்து இலக்கியம் படைக்கும் சிறந்த முன் மாதிரி பணியை செய்து வரும் ஆரூரனை விடுவிக்க வேண்டும் என்று கலை இலக்கிய ரசி…
-
- 19 replies
- 2.4k views
-
-
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 802 views
-
-
அரபு ஈச்சை மரங்கள் காத்தான்குடியில் பெரிதாக வளர்ந்துவிட்டன: சக்கரவர்த்தி நேர்கண்டவர்: அனோஜன் பாலகிருஷ்ணன் சக்கரவர்த்தி கிழக்கிலங்கையில் -------த்தீவில் பிறந்தவர். ஆயுதப்போராட்டம் வலுவடைந்த காலத்தில் குழந்தைப் போராளியாக டெலோ இயக்கத்தில் இணைந்து பின்னர் வெளியேறியவர். கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மும்மரமாக எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டார். யுத்தம் மீதான எதிர்ப்பே அவரது கதைகளில் மண்டிக்கிடக்கிறது. யுத்தத்தின் நேரடி சிதைவான மானுட அழிவு கொடுக்கும் வாழ்க்கை மீதான விரக்தி அவரது கவிதைகள் முழுவதும் விரவியிருக்கிறது. சக்கரவர்த்தி முஸ்லீம் தமிழ் சமூக உறவுப் பிளவின் மீது தீராத கவலை கொண்டவர். இவருடைய ‘என்ட அல்லாஹ்’ கதையை ஈழத்தின் தலைசிறந்த அரசியல் கதைகளில் ஒன்றாகத் தயக்கம…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா பதாகைOctober 6, 2020 (புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி) எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரத…
-
- 0 replies
- 874 views
-
-
இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன் உரையாடல் அனோஜன் பாலகிருஷ்ணன் லெயிட்டஸ்டோனில் அமைத்திருக்கும் Alfred Hitchcock பப்பில் என்னை மாலை சந்திப்பதாக சேனன் சொல்லியிருந்தார். போய்ச் சேர்ந்தபோது கறுத்த குளிரங்கியை அணிந்தவாறு கடும் களைப்புடன் அவருடைய வேலைத் தளத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தார். Alfred Hitchcock இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு சென்று திரைப்படங்களை இயக்கியவர். அவர் எடுத்த சைக்கோ திரைப்படம் பெரும் புகழ்பெற்றது. அவர் சிறுவயதில் வளர்ந்த வீட்டைத்தான் விடுதியாக மாற்றியிருந்தார்கள். அந்த விடுதியில் இரண்டு கின்னஸ் ஸ்டவுட் பியரை ஓடர் செய்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தோம். வெளியே குளிர் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ச…
-
- 1 reply
- 828 views
-
-
படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப் – அகழ் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி என்று ‘தெளிவத்தை ஜோசப்பை’ தயக்கமின்றிச் சொல்லலாம். மலையக மக்களின் வாழ்வியலை பிரச்சாரம் இன்றி முற்போக்கு அம்சத்துடன் எழுதியவர் அவர். மலையக சமூகத்தில் ஊடுருவியிருந்த சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவரது புனைவுலகத்தின் அடிநாதமாக ஒலித்தன. அவரது காதாமந்தர்கள் பெரும் தத்தளிப்பு சிக்கல் கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய அன்றாட பிரச்சினைகளில் சிக்கி அழுத்தப்படுபவர்கள். தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம் என்பது எளிய மனிதர்களின் அன்றாடச் சுமையின் துயரம்தான். சிலசமயம் அந்தத் துயரில் ஒளி ஒரு கீற்றாக வெளிப்படுகிறது. எந்தவித கட்சி சார்போ, கோட்பாடு சார்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
நேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) - - ஞானம் சஞ்சிகையின் செப்டெம்பர் 2020 இதழில் வெளியான நேர்காணல். இணைய வாயிலாக நடைபெற்ற நேர்காணலிது. கண்டவர் ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன். - 1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள் அம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் …
-
- 0 replies
- 714 views
-
-
இது இசையைப்பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சம் யோசிக்க செய்யலாம். ஆனால் இசை புரிந்தவர்களுக்கு ரொம்பவும் பிரமிப்பாக இருக்கலாம். குறைந்த பட்சம் 25 ஆவது நிமிடத்திலிருந்து பாருங்கள். நன்றி.
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 736 views
-
-
இலக்கிய வாசகனின் பயிற்சி ஜெயமோகன் August 20, 2020 அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்தாதாக ஒரு மாற…
-
- 0 replies
- 577 views
-
-
போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் August 16, 2020 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை முருகபூபதி போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம். இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை போன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன. …
-
- 0 replies
- 623 views
-
-
அ.முத்துலிங்கம் பற்றிய ஜூம் சந்திப்பில், ஒரு வாசகர்.. முந்திரிக்கொட்டைத்தனமாக ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி ஜெ. தளத்தில் அவரது வாசகர்கள் விமர்சித்து வைக்க… இவரோ ‘சார்.. என்னைக் கிள்ளிட்டாங்க சார்” என்று ஜெயமோகனிடம் பிராது எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயமோகனோ.. இரக்கமே இல்லாமல் சுத்தியலை எடுத்து அவரின் நடு மண்டையில் ‘நச்’சென்று இறக்கியிருக்கிறார்- (சு க f-b) ######################################################################################################################## அன்பின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு , ஈழத்து மூத்த எழுத்து ஆளுமைகளில் ஒருவரான அ .முத்துலிங்கம் அவர்களுடனான காணொளி உரையாடல் சனிக்கிழமை ,ஜூல…
-
- 1 reply
- 961 views
-
-
எழுத்தாளர்களை வழிபடுவது - ஜெயமோகன் July 15, 2020 அன்புள்ள ஜெ, நலம்தானே? எனக்கு உண்மையாகவே ஒரு சந்தேகம், இது நீண்டநாட்களாக எனக்கு இருந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இது மீண்டும் பேசுபொருளாகியது. எழுத்தாளர்களை கொண்டாடுவது சரியா? அது சிந்தனையில் அடிமைத்தனத்தை உருவாக்குவது அல்லவா? சமீபத்தில் ஒருவர் இதைப்பற்றி சொன்னதால் விவாதமாகியது. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஆர்.அர்விந்த் *** அன்புள்ள அர்விந்த் இதை சமீபத்தில் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதுடன் சேர்த்துச் சொல்கிறேனே. அவர் என்னிடம் கேட்டது காதல் பற்றி. நான் சொன்னேன். காதல் கொஞ்சம் விலகி நின்றுபார்த்தால் ஒருவகையான அசட்டுத்தனம். அதில் தர்க்கத்துக்கே இடமில்லை. ஒருபெண்ணை தேவதை எ…
-
- 4 replies
- 928 views
-
-
ராஜன் குறை என்பவர் யார்? | ஜெயமோகன் July 4, 2020 உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது. இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை? எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை. 1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குற…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 05 , 2020 06:29:10 IST கொரோனா விளைவாக நிலவும் பொது முடக்க காலத்தில் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் தவித்தது.எதிலும் கவனம் குவியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கு காலத்தை விடுமுறையாக மாற்றிக்கொள்ளும் மனமும் இல்லை. தொலைக்காட்சி ,சினிமா என்று கேளிக்கையில் மூழ்கும் உற்சாக மனநிலையும் இல்லை. தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள் என்று வேடிக்கை பார்த்து பற்றிக்கொள்ளும் பரபரப்புகளில் கவனம் செல்லவும் ஆர்வமில்லை. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைகளைப் பார்த்துவிட்டு நேற்று எத்தனை? இன்று எத்தனை என்று ஒப்பிட்டுப் பார்க்கும் பொறுமையு…
-
- 5 replies
- 2.7k views
-
-
மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன் மின்னம்பலம் மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை எனப் பல தளங்களிலும் தனது எழுத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பவர். கரிசல் இலக்கியத்தின் மரபில் வந்தவரான எஸ்.ராம…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 14 replies
- 2.2k views
-
-
“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ சதானந்தன் முதலிடம்.! தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார். கடந்த 07.06.2020 அன்று நடைபெற்ற “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியின் முடிவுகள். #முதல் இடம் எழு. Jeyasree sathananthan #இரண்டாம் இடம் எழு. Viji mahesh எழு. Raisa farwin #மூன்றாம் இடம் எழு. Ssm Rafeek எழு. Raghunath Krishnaswamy வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். https://www.…
-
- 0 replies
- 955 views
-
-
‘மாஸ்டர்’ - ஜெயமோகன் கதைகளை தொடராக வெளியிடத் தொடங்கி அதைப்பற்றி சிலவற்றை பேசியபோது எனக்கு வந்த கடிதங்களில் முக்கால்பங்கு வசைகளும் ஏளனங்களும்தான். பெரும்பாலும் எங்காவது வசைகளை எழுதி அதை எனக்கு நகல் அனுப்புவது. போலி முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மிகுதி. ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் என்றால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்களில் கால்வாசிப்பேர் இளைஞர்கள். ஒரு அவர்களுக்காக மட்டும் சில சொல்ல விரும்புகிறேன். வசையாளர் அல்லது ஏளனம் செய்பவர்களைப்பற்றிய ஆச்சரியம் என்பது பலர் தங்களுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான். எனக்கு வரும் கடிதங்களில் நேர் பாதியின் ஆதாரமனநிலை அதுதான். ‘அதெப்டி, நாங்கள்லாம் அப்டி இல்லியே” என்று. அப்படி ஒப்பிட்டுக்கொள்பவர்களை பார்க்கிறேன், சாதாரணமானவ…
-
- 1 reply
- 926 views
-
-
மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்) June 5, 2020 நேர் கண்டவர் : ஜீவ கரிகாலன் ‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்…
-
- 0 replies
- 654 views
-
-
தனி தேசமே தமிழருக்கு ஒரே வழி.! மறைந்த குமரிக்கண்டத்தின் எச்சமேஇலங்காபுரி,ஈழவர் தம் பெருமைதனை உலகிற்கு பறைசாற்றும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இராவண வம்சத்தவரின் சிவபூமி.இது வால்மீகி இராமயணத்தில் அறியலாம். இதனை கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற வித்துவான்களே ஆதரித்துள்ளனர். இலங்கையின் வரலாறு கிமு ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் கலிங்க தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனினும் இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் ஆட்சி வழித்தோன்றலே என்று மகாவம்சம் கூறுகின்றது. பல்வேறு அரசுகள் ஆட்சி பீடம் ஏறியது, பொலன…
-
- 0 replies
- 544 views
-
-
இதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி May 31, 2020 நேர்கண்டவர் : அகர முதல்வன் அ.இரவி ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.இவருடைய “ஆயுதவரி”, “பாலை நூறு” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாண பாஷையில் அமைந்திருக்கும் இவரின் எழுத்து மொழிக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. இவரின் புகழ்பெற்ற “காலம் ஆகி வந்த கதை” தொகுப்பும், “வீடு நெடும் தூரம்” தொகுப்பும் ஈழர் இலக்கியத்தின் முக்கிய பிரதிகள். “காலம் ஆகி வந்த கதை” – என்ற உங்களின் தன் வரலாற்றுப் புனைவுப் பிரதி சாத்வீக – வன்முறை ஆகிய இரண்டு போராட்ட வரலாற்றுக் காலங்களைப் பேசுகிறது. இந்த நூலிற்கு கிடைத்த வரவேற்பைக் கூற முடியுமா? தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதனை வாசி…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் – ஆர். அபிலாஷ் June 3, 2020 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அண்மையில் வாசிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு போகன் சங்கர் செய்த ஒரு எதிர்வினையில் தொல்படிமங்களுக்கு இலக்கியத்தில் உள்ள முக்கியமான இடத்தைப் பற்றி கீழ்வருமாறு பேசுகிறார். நான் அவருடன் ஓரளவுக்கு உடன்படுகிறேன், ஆனால் நிறையவே முரண்படுகிறேன் என்பதால் அவரது மேற்கோளையே இந்த கட்டுரையின் துவக்கமாகக் கொள்கிறேன்: “நல்ல வாசிப்பு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.அன்னோஜனின் கதைக்கு சர்வோத்தமன் சடகோபன் அன்னோஜன் தனது கதையை ஒரு தொன்மத்துடன் இணைத்து முடிக்கவில்லை என்று கவனித்திருந்தார்.ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்டவர் அன்னோஜன் எனும்போது இது முக்கியமான …
-
- 0 replies
- 488 views
-
-
மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன் கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சனக் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை. ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறா…
-
- 2 replies
- 1.8k views
-