கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
"நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" "நெருங்கி அருகில் நீ வந்தால் நெடுநாள் கனவு நனவு ஆக நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர நெற்றியில் குங்குமம் நான் இட நெருப்பாய் காதல் பற்றி எரிய நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால் நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல் நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி நெருக்கம் கொண்டு அருகில் வராமல் நெடுநாள் கனவை சிதைப்பது எனோ? நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நெருநல் - நேற்று; சற்றுமுன் நெறியிலாதார் - அசடர், கீழோர் நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]
-
- 0 replies
- 483 views
-
-
"சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி" "சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி கொழுகொழு கன்னத்தில் குழி விழுகுதே! குளுகுளு தென்றலில் பொன்மேனி சிலிர்க்க நொழுநொழு என்று குழைவதைப் பார்க்க தழுதழுக்குதே வார்த்தைகள் என் வாயிலே!! "தளதளவென்று ததும்பும் இளமைப் பருவமே சலசலக்கும் நீரோடையில் உன்னைக் கண்டனே! கலகலக்கும் புன்னகையில் என்னை அழைத்தாய் வளவள பிதற்றலில் நெஞ்சை இழுத்தாய் மலங்கமலங்க விழித்தேன் செய்வது அறியாது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 229 views
-
-
கனவெனப்படுவது நினைவும் நிஜமும் கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் உழத்தலும் ஆழ் மனத்தாழ்ந்த உள்ளுணர்வெழுந்து மீள் நினைவாற்றலை உயிர்ப்பிக்கும் நிகழ்வது!!! ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம் சுற்றியதொன்றின் பான்மையை நிகழ்வுகளால் அழகுறக்காட்டி அணைக்கும் மகிழ்வைப் பழகுநற் கூட்டும் பான்மையுடையது எண்ணமே மலர்ந்தோட உயிர்ப்புற்று வருதலால் வண்ணமாக எழுந்துயிர் பெறும் நிகழ்வது!!! உணர்வினில் உயிரினில் உடலினில் நரம்பினில் புணர்ந்த நிகழ்வுகள் எண்ணரும் வகையால் ஒழுகு மெய்யுணர்வின் ஊற்றொடு கலந்து ஆழ்ந்த நினைவினை முகிழ்த்தும்... இற்றைக்கியலும்.... இயம்பும்..... நிகழ்வது!!! -…
-
- 0 replies
- 701 views
-
-
“முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 617 views
-
-
"முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 306 views
-
-
(உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு” . . மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். . ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கவலை தருகிறது! ********************** பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு பெரும்பான்மை மக்களே! புத்தர் போதித்ததெல்லாம் அறமும்,அகிம்சையும் தானே. அடாவடித்தனமும்,அரசியலுமா? புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில காவியுடையணிந்தவர்களை எப்படி அனுமதிக்கீறீர்கள். ஒற்றுமையான நாட்டில் தான் ஒவ்வொரு மனித இனமும் வாழநினைப்பது தப்பா? இலங்கையென்ற அழகிய நாடை கெடுப்பதற்கென்றே- சில அரசியல் வாதிகளும், அரசடி வாதிகளும் தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே இனங்களை பிரித்து பிணங்களை தின்ன நினைப்பது உங்களுக்கு புரியவில்லையா? மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும். புத்தபெருமானே இன்று பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பார். எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுக்கு அடங்குவதென்றால் ஜனாதிபதி,பிரதமர் என்ற அரசியலமைப்புத்தான் ஏனோ? அற…
-
- 0 replies
- 107 views
-
-
13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றா…
-
- 0 replies
- 2.5k views
-
-
(யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?- சங்கப் பாடல்) * கானல் வரி. - ஜெயபாலன் . கருகும் முது மாலை. பூம்புகாரின் தொல்கரைகள் சிவக்க நுரைக்கும் திராட்சை மதுவாய் நெழிகிறது எழுவான் கடல். இது படுவான் கரையென்றால் மாலை செம்பொன்னாய்ச் சொரியுமே. எனினும் காதலில் சிறகுகள் உரச கூடு ஏகும் பறவைகளின் பாட்டில் கானல் வரி தொனிக்கிறது. . இந்த மதுவார்க்கும் மாலையில் தனித்த முது கவிஞன். நினைவு இடறி நான்கு தசாப்தங்கள் காலச்சரிவில் உருள்கின்றேன். எங்கோ ஒரு யப்பானியப் பாடல் தாபம் வளர்கிறது. . அது ஈழத்தின்கொடும் பகையை எதிர்த்து ஒவ்வொருவராய் நாங்கள் ப…
-
- 0 replies
- 260 views
-
-
"மண்ணும் மரமும்" "மண்ணும் மரமும் பண்பு காட்டும் ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும் கண்ணும் இமையும் போல இருந்தே மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!" "வானத்தின் அடியில் மண் இருக்கும் நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்! விதை புதைந்து மரம் உயரும் மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!" "பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும் தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்! காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில் மண் உடலே! மரம் கருணையே!!" . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 584 views
-
-
மனித காட்சிச் சாலை! ****************** சனி,ஞாயிறு நாட்களில் அந்த.. மிருகக் காட்சிச் சாலை பரபரப்பாகவே விடியும். காரணம் பார்வையிடும் மக்கள் வெள்ளம் அலைமோதுமென்பதால். யானைகளின் -சாகச விளையாட்டுக்கள் குரங்கு ககளின் தாவல்கள் சிங்கத்தின் வீர நடை சிறுத்தையின் ஓட்டம் கரடி புலி சிவிங்கி காண்டா மிருகமென.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வீர செயல்களைக்காட்டி மக்களை மகிழ்வித்து வருவது வளக்கம். அதனால் அவர்களுக்கும் நல்ல உணவு கிடைத்தது காட்டை மறக்கடித்து கம்பிக்கூடுகளில் -தம் வாழ்வை மறந்து வாழ்ந்தன அங்கு. இப்போது எல்லாம் சன…
-
- 0 replies
- 969 views
-
-
"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" "ஒவ் வொரு வளைவு நெளிவும் ஒளிவு மறைவற்ற உன் பேச்சும் ஒழுங்கான உடையும் அதன் பளபளப்பும் ஒய்யாரமான நடையும் அழகின் அழகே" "தூங்கையிலே உன் சிந்தனை கொண்டு தூய்மையான காதலை உனக்கு சொல்ல தூரிகை கொண்டு உன்னை வரைந்து தூது அனுப்புகிறேன் கனவில் தினம்" "உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் உகவைதரும் உன் உடல் வனப்பும் உள்ளம் கவரும் உன் புன்னகையும் உரிமை கொண்டு என்னை அழைக்கிறது" "புயலாய் மோகம் மழையாய் காதல் புரண்டு ஓடும் வெள்ளமாய் ஆசை புரியாத உணர்வு கண்களில் ஏக்கம் புதுமை பெண்ணின் புன்னகை காண" …
-
- 0 replies
- 854 views
-
-
"வாழ்ந்து பார்" வாழ்ந்து பார் நீங்க யாழில் தாழ்ந்து போன கதை புரியும்! ஆழ்ந்த சிந்தனை கொண்ட இவன் கீழ் மட்டம் தொட்டது தெரியும்! "வீழ்ந்த வரலாற்றை பாடமாகக் கற்று சூழ்ந்த வஞ்சகத்தை எடுத்து எறிந்து காழ்ப்பு களைந்து உண்மை அறிந்து மூழ்கிய ஒற்றுமையை மீட்டு எடுத்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 269 views
-
-
2016 பனி உறையும் கனடாவின் கூதிர்காலத்தில் டொறன்ரோ நகரில் இருந்தேன். கைகுலுக்கிச் சிரிக்கும் வெண்மணல் பாலைப் பொன் மணல் அல்லது கருங்கற் சிற்பங்களுக்கு மத்தியில் உயிர்த்த சுடுமண் பாவையாக என்னுடைய கவிதையின் சினேகிதியை சந்தித்தேன். மொழிமட்டும் எனது தாய்தந்தது. கவிதையும் விநோதங்களும் அழகும் நம்மைச் சூழ்ந்து நம்மை வாழவைக்கும் இயற்கையும் பெண்களும் தருகிற வரங்கள் தானே. இன்று மீண்டும் அந்தக் கவிதையை நினைத்தேன். . கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன் . வெண்பனிக் கோலமும் இல்லாத புகை வண்ணக் கொடுங்குளிர் நாள். தேனீரால் உயிரை சூடாக்கியபடி கண்ணாடி மாளிகையுள் இருந்தேன் * தூரத்துக் கரும் அணில்கள் கோடையில் புதைத்த கொட்டைகளை மீட்க்க அலைந்தன. நானோ அந்த உறைந்த நெடும் பகல…
-
- 0 replies
- 567 views
-
-
She always reminds me my mum. Thanks you my marumakal Thevaki..மருமகள் தேவகியும் கணவன் றெஜீஸ்சும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். தேவகிக்கு என் அம்மாவின் கண்கள். இருவரும் என் அம்மா/ அவள் அம்மம்மா பற்றி நிறைய பேசினோம். அகதியின் வாழ்வு நினைவும் மொழியும்தானே. .2006ல் போர்க்காலத்தில் நோய்வாய்பட்ட அம்மா தனது இறுதியை உணர்ந்த தருணத்தில் என்னை தம்பி பாரதியின் செல்பேசியில் தொடர்புகொண்டாள். அம்மாவுக்கு நான் எப்போதும் எதற்கும் அஞ்சாத சாகசக்காரன் என்கிற நினைப்பு. அவளது பெருமகிழ்ச்சியும் தீராத கவலையும் அதுவாகத்தான் இருந்தது. அன்று அம்மா பேசிய முதல் வார்த்தையே அவளது இறுதி தீர்க்கதரிசனமாகவும் அமைந்துவிட்டது. அது என்னிடம் மன்றாடுவதாக அமைந்தது. “தம்பி எனக்கு என்ன நடந்தாலும் நீ இலங்கைக்கு வரக…
-
- 0 replies
- 1k views
-
-
"கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது" "கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது மனதில் வலிதரும் நடுகல் பூசையிது! மானத்தை விலைபேசா வீரனின் நாளிது இனத்தின் விடுதலை ஒன்றின் நினைவிது!" "குணத்தில் குன்றான இளைஞர்கள் உறங்கும் உணர்வில் அலையாடும் கல்லறை இது! நாணம் கொண்ட மங்கையரும் துணையாக காணத் துடித்த விடுதலையின் மண்ணிது!" "வானத்தில் வாழும் தெய்வங்கள் தொழ கானம் பாடும் மக்களின் உள்ளமிது! சினம் கொண்ட உரிமை மறுத்த அனல் கக்கும் மனிதனின் களமிது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 340 views
-
-
அந்தாதிக் கவிதை / “தன்மானம்” "தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும் ஓங்கிய எண்ணம் மனதில் பதியும் பதிந்த பெருமிதம் துணிவு தரும் தருவது எதையும் தெரிந்து எடுப்போம் எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!" "நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும் இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும் சிறக்கும் கருத்து எதிலும் உதவும் உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும் ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 785 views
-
-
'மனசுக்குள் மத்தாப்பூ' அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே! அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே அன்பு மலர்ந்து காதல் பூத்ததே! உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே! மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ! குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே குறையில்லா அழகை வீசும் வனிதையே குதூகலம் பொழியும் வண்ண மையிலே குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 'மனசுக்குள் மத்தாப்பூ' https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?
-
- 0 replies
- 136 views
-
-
"நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 576 views
-
-
"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....." "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது எனோ? உறவு தந்து உள்ளம் கவர்ந்து உலகம் துறந்து போனது எனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் கலங்கிய ஒளியில் மிதப்பது எனோ? கருத்த வெள்ளை உருவம் தோன்றி கண்ணீர் துடைத்து மறைவது எனோ?" "காற்றில் விண்ணில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காலம் போனாலும் கோலம் மாறினாலும் காமாட்சி நினைவு வருத்துவது எனோ?" "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காந்தமாய் என்னை இழுப்பது எனோ? காமம் துறந்த காதல் அவன் காதில் கீதை ஓதியது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 136 views
-
-
"தளதள ததும்பும் இளமை பருவமே" "தளதள ததும்பும் இளமை பருவமே தகதக மின்னும் அழகிய மேனியே நறநறவென பல்லைக் கடித்து நின்று திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?" "சல்சல் என சலங்கை ஒலிக்க சிலுசிலு எனக் காற்று வீச கமகம என முல்லை மணக்க தடதடவென கதவைத் தட்டுவது ஏனோ ?" "திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க திடுதிடு இன அறையில் நுழைந்து தரதர என்று என்னை இழுத்து விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?" "தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி கிளுகிளுப்பு தந்து மடியில் சா…
-
- 0 replies
- 178 views
-
-
தாத்தாவின் நம்பிக்கை - - - - - - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தாத்தா இந்த முறையும் சொன்னார் பல தையும் போய் பாவம் தாத்தா பார்த்திருந்தார் பல தடவை காணியும் போலீசும் வரும் என்று காத்திருந்தார் சில தடவை திரும்பவும் யாரோ தீர்வு பற்றி கதைத்ததால் தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று காத்திருக்கிறார் இந்தத் தடவையும் தாத்தா.
-
- 0 replies
- 679 views
-
-
“செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 277 views
-
-
மரண ஓலம் மனதைக் கிழிக்க மனித உடல்கள் சிதறிக் கிடக்க மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு மண்ணில் பெருக்கெடுத்தோட இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? மனித உரிமைகள் தமிழருக்கில்லை தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா? கொட்டும் எறிகணை மழையிலும் கொத்துக் குண்டு வீச்சிலும் கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி உணர்வுகளெல்லாம் மரத்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி ஒற்றை வரிசையில் நின்றபடி ஒரு குவளை கஞ…
-
- 0 replies
- 488 views
-
-
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்" "மனதின் மூலையில் ஒரு நினைவு அணையா தீபமாய் இன்றும் எரிகிறது தேநீரின் வாசனை காற்றில் வருகிறது வடையின் மெதுமை வாயில் ஊறுது!" "உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!" "விடைகள் புரியா வாங்கு அரசியல் குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம் கடையின் நினைவு மறையா காலமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 219 views
-