Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன. கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது. கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்…

  2. "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By…

  4. "முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளும…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 503 views
  6. "இன்றே இணைவோம் ஒற்றுமையாய்" "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!" "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!" "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்…

  7. "நீராடும் நிலா" "வானத்து மதியாய் என்னுடைய காதலியாய் கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய் மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே! ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன் அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!" "கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே! நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே நீராடும் நிலா நீதானோ என்னவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …

  9. குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போ…

  10. "மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]

  11. வாழ ஆசை LUST FOR LIFE * பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால் வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அத…

    • 3 replies
    • 491 views
  12. மரண ஓலம் மனதைக் கிழிக்க மனித உடல்கள் சிதறிக் கிடக்க மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு மண்ணில் பெருக்கெடுத்தோட இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? மனித உரிமைகள் தமிழருக்கில்லை தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா? கொட்டும் எறிகணை மழையிலும் கொத்துக் குண்டு வீச்சிலும் கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி உணர்வுகளெல்லாம் மரத்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி ஒற்றை வரிசையில் நின்றபடி ஒரு குவளை கஞ…

  13. "அன்பு செலவானால் ஆதரவு வரவு....!" "அன்பு செலவானால் ஆதரவு வரவு பண்பு திடமானால் மனிதம் உயர்வு துன்பம் இறந்தால் இன்பம் பிறப்பு தென்பு உதித்தால் தோல்வி மறைவு!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பு அல்ல அற்பம் சொற்பம் தேடல் அல்ல அறிவு உணர்ந்த பாசம் அதுவே!" "பருவம் மலர்ந்தால் காதல் நாடும் படுத்து கிடந்தால் பரிவு தேடும் பரிவு காதல் இரண்டும் அன்பே பலபல வடிவில் எல்லாம் பாசமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING] "நல்லது [Fine] என்று 'என்னவள்' நயமாக உரைத்தால் நாகரிகமாக அவள் தானே சரி என்று சொல்வதை விளங்கி 'நானும்' விவாதத்தை நிறுத்தி நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து !" "ஐந்தே நிமிடத்தில் [5 mins] கட்டாயம் வருவேன் என்று கதவை மூடி 'என்னவள்' அலங்காரம் செய்தால் சந்தடி இல்லாமல் 'நானும்' ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்!" "ஒன்றும் இல்லை [Nothing] என்று 'என்னவள்' மழுப்பினால், புயலுக்கு முன் …

  15. 1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்கு…

    • 4 replies
    • 485 views
  16. "கார்த்திகை தீபம்" [கவிதை] "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான்! காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது! காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை! சிதைந்த…

  17. "ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!" "அமைதியாய் இருந்து அவன் படித்தான் அடக்கம் கொண்டு தனிமை கண்டான் அறிவு பகிர்வென துணையாய் வந்தாள் அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !" "ஆசிரியர் போல அவனுக்கு இருந்தாள் ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான் ஆகாரம் தீத்துவது போல அவளோ ஆதரவாய் அன்பாய் காதலும் கொடுத்தாள் !" "இன்பம் என்றால் என்ன என்று இலக்கியம் காட்டிய தனி வழியில் இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !" "ஈசன் இவளே இனி என்று ஈடு இல்லா இச்சை கொண்டு ஈயம் உருகியது போல அவனும் ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !" …

  18. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01] [உயிர் எழுத்துக்கள் வரிசையில் / பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / மெல்பேர்ண், ஆஸ்திரேலியா] "அறிவிற்கு பத்தொன்பதில் ஒன்று கூடினோம், அறுபது ஆயிரம் கனவு கண்டோம், ஆறு பாயும் பேராதனை வளாகத்தில், ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டோம்!" "இறுமாப்பு இல்லை வேற்றுமை இல்லை, இதயங்கள் கலந்து கூடிக் குலாவினோம், ஈரம் சொட்டும் மலை அடிவாரத்தில், ஈசனைக் கண்டு பரவசம் அடைந்தோம்!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தோம், உண்மையை உணர்ந்து நட்பை வளர்த்தோம், ஊருக்கு ஊர் ஊர்வலம் போனோம், ஊசி முனையிலும் நடனம் ஆடினோம்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினோம், எண்ணங்கள் வளர்த்து அறிவை கூட்டினோம், ஏற்றம் இறக்கம் எம்மை …

  19. Started by uthayakumar,

    மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்✍️

  20. "நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" "நெருங்கி அருகில் நீ வந்தால் நெடுநாள் கனவு நனவு ஆக நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர நெற்றியில் குங்குமம் நான் இட நெருப்பாய் காதல் பற்றி எரிய நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால் நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல் நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி நெருக்கம் கொண்டு அருகில் வராமல் நெடுநாள் கனவை சிதைப்பது எனோ? நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நெருநல் - நேற்று; சற்றுமுன் நெறியிலாதார் - அசடர், கீழோர் நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]

  21. "கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [க…

  22. 'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தி…

  23. இருள் மூடிய இலங்கை! ***************** இந்துமா கடலின் முத்து இயற்கையின் அழகின் சொத்து ஆட்சியர் உன்னை வித்து-இப்போ அனைவற்கும் பிடித்தது பித்து. கடல் மீது அழகாய் மிதந்தாய்-இப்போ கடன் மீது மிதக்குகின்றாய். உடல்க்கூறு வெட்டி வித்தார்-உன் உயிருக்கே கொள்ளிவைத்தார். பட்டிணியை சொத்தாய் வாங்கி பாரெல்லாம் நீ கையை ஏந்த நிற்கதியாய் விட்டபின்னும் நிற்கல்லையா? அவர்க்கு கதிரையாசை. -பசுவூர்க்கோபி.

  24. இந்திய குடிஉரிமைச்சட்டம் Indian Citizenship (Amendment) Act இத்தால் அறியத்தருவது என்னவெனில் இந்துத்துவா மண்ணை விட்டு வந்தேறியள் குடியேறிகள் அகதிகள் அனாதைகள் இந்துக்கள் இல்லாதவர்கள் இலங்கைத்தமிழர்கள் வேண்டப்படாதவர் வெளியேறுங்கள் பயமாக இருக்கிறது எம்மை தேடி அவர்கள் வந்தால் எங்கே ஒளிப்பதென்று தெரியவில்லை காந்தியும் இல்லை ஜின்னாவும் இல்லை காப்பாற்ற யாரும் இல்லை. B.Uthayan l believe l have a truth you believe you have a truth I will respect you truth please respect my truth Swami Vivekananda

    • 0 replies
    • 480 views
  25. மரண ஓலம் மனதைக் கிழிக்க மனித உடல்கள் சிதறிக் கிடக்க மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு மண்ணில் பெருக்கெடுத்தோட இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? மனித உரிமைகள் தமிழருக்கில்லை தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா? கொட்டும் எறிகணை மழையிலும் கொத்துக் குண்டு வீச்சிலும் கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி உணர்வுகளெல்லாம் மரத்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி ஒற்றை வரிசையில் நின்றபடி ஒரு குவளை கஞ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.