Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வேலூர் சிறையில் 12 நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் December 6, 2020 முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். 4ஆம் திகதி அவர் சோர்வடைந்ததையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறை விதிகளை மீறி வெளிநாட்டிலுள்ள ஒருவரிடம் முருகன் வீடியோ அழைப்பில் பேசினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். உண்ணாவிரதத்தினால் சோர்வடைந்த முருகனுக்கு…

  2. சென்னையில் தொடரும் கனமழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள் 44 Views சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புரெவி புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்திற்க…

  3. சூரப்பாவை பழி வாங்குவதா: அரசு மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே விசாரித்தீர்களா?- கமல் கேள்வி சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. …

  4. சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிக…

  5. யாருங்க இந்த ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே.! மார்க்கண்டேய கட்ஜு வேதனை.! சென்னை: ரஜினிக்கு மண்டையில் ஒன்னுமே இல்லை என்று அன்று சொல்ல ஆரம்பித்த மார்க்கண்டேய கட்ஜூ இன்றுவரை ரஜினி மீதான தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை... "ரஜினிக்கு ஆன்மீகம் தவிர மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது தெரியுமா?" என்று ட்வீட் போட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார். சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழ்நாடு என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்.. ஒரு இணைப்பு.. ஒரு பிணைப்பு.. இதற்கு காரணம் எல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, இப்படி நம் மாநிலத்தை அசைக்கும…

  6. கோயில் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சூப்பர் தீர்ப்பு.. பெருமகிழ்ச்சியில் சீமான்! Velmurugan PPublished:December 4 2020, 20:35 [IST] இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி கண்டிப்பாகத் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை தீர்ப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அபராதம் அன்று தமிழன்னைக்குச் சாற்றிய மணிமகுடத்தில் மேலும் வைரக்கற்கள் பதித்தது போல, கரூர் ஆநிலையப்பர் கோயிலில் நடைப்பெற்ற குடமுழு…

  7. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குமரி தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எனப் பெரும்படையே சீட் கேட்டுக் காத்து நிற்கிறது. இதேபோல் காங்கிரஸிலும் விஜயதரணி, வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் எனப் பலரும் சீட் கேட்கின்றனர். ஆனாலும் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாததால் பாஜக, காங்கிரஸ் முகாம்களில் இதுவரை தேர்தல் சூடுபிடிக்கவில்லை. அதேநேரம் கடந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 17,015 வாக்குகள் மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சியானது, குமரி இடைத்தேர்தலுக்குப் பிரதான கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளராக வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வினை அறிவித்துள்ளது. அவர் பிரச்ச…

  8. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மதுரை தமிழகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகள், படிமங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்களை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாச்சார சின்னங்கள் …

  9. திருகோணமலை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ள புரவி புயல்! இலங்கையின் திருகோணமலை அருகே நாளை புரவி புயல் கரையை கடக்கும் நிலையில், கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் நான்காம் திகதி புயல் கரை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தப் புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும…

  10. கேட்டது ₹40,000 கோடி; கிடைத்தது ₹9,000 கோடி... பேரிடர் நிவாரணத்தில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! நமது நிருபர் vardah cyclone ( Photo: Vikatan / Nivedhan.M ) 2010-11 முதல் 2019-20 வரை தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்த பேரிடர் நிவாரண நிதி குறித்து விவரங்கள் அளிக்கும்படி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. வெள்ளம், புயல், கனமழை எனத் தமிழகம் தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது. ஜல், தானே, நீலம், நடா, வர்தா, ஒகி, கஜா என புயல்களும் மழையைப் போல இயல்பாக வந்துபோகத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு புயலும் ஏற்படுத்த…

  11. தமிழக முதல்வருக்கு அதிர்ஷ்டம் தான் கை கொடுத்திருக்கிறது ..! - அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்

  12. அதிமுகவின் அடிமடியில் கை வைத்த ஸ்டாலின்.! பெல்ட்டை உருவி சாட்டையை சுழற்றும் திமுக., அதிர்ச்சியில் அதிமுகவினர்.! https://www.seithipunal.com/tamilnadu/stalin-plan-about-kongu-district

  13. ஒரே நாடு - ஒரே தேர்தல்' : அவசியமானதா ? ஆபத்தானதா ?

  14. எஸ்.மகேஷ் செல்போன்கள் சென்னையில் செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய இளைஞர்களை, சினிமா படக் காட்சியைப் போல விரட்டிச் சென்று எஸ்.ஐ பிடித்தார். சென்னை மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். செல்போனைப் பறித்துக் கொண்டு இளைஞர்கள் செல்வதை அதிர்ச்சியோடு பார்த்தபடி, `திருடன்... திருடன்’ என்று ரவி சத்தம் போட்டார். திருட்டு பைக் அதைக் கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ…

  15. தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான் மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செல…

  16. நிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை பட மூலாதாரம், GETTY IMAGES வங்காள விரிகுடாவில், தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும், குறைந்த காற்றழுத்தம் (Low Pressure), அடுத்த 12 மணி நேரத்துக்குள் அழுத்தமாகவும் (depression), அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) உருவாகும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை சொல்லி இருக்கிறது. இது 18 கிலோமீட்டார் வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வுத் துறை. திங்கட்கிழமையே, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிடும். மெல்ல மழை தீவிரமடையும். செவ்வாய்க்கிழம…

  17. EVM குளறுபடிகள்? ஐயநாதன்

  18. பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது கவலையளிக்கிறது – உச்சநீதிமன்றம் 26 Views பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இந்தப் பரிந்துரை (பேரறிவாளனின் கருணை மனு) 2 ஆண்டுகளாக ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது,” என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்…

  19. கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா? -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகள…

  20. நாகை: 5 கோயில் பிரசாதம்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் உதயநிதி ஸ்டாலின் 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசிப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேற்றும் (நவ.21) கைது செய்யப்பட்டார். தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். 'இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி …

  21. அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன? மின்னம்பலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 21) கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழா முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அந்த ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தனர். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க சென்றனர். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து ஜெயக்குமார் வெளியில் வந்துவிட்டார். பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரடியாக அமித்ஷாவுடன் பேசியிருக்கிறார்கள். இருவருமே முதலில் பிகார் தேர்தலில் வெற்றி பெற்…

  22. தீர்வினைக் கோரி பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை மீட்க மத்திய அரசு தவறியமையை கண்டித்தும் படகுகளுக்கு தீர்வினை கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்…

  23. உதயநிதி கைது: தலைவர்கள் கண்டனம்! மின்னம்பலம் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலைமைக் கழக அறிவிப்பின்படி இன்று (நவம்பர் 20) கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்கிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருக்குவளையில் பேசி முடித்து மேடையில் இருந்து கீழே இறங்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர். உதயநிதிகைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் திமுகவினர் சாலைமறியலில் இறங்கினர். இந்நிலையில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை சில மணித்துளிகளில் போலீஸார் விடுவித்தனர். இதற்கிடையில் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள…

  24. பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயம் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்தாண்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீடு காரணமாக, அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயத்தை ரத்து…

  25. சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா? சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு. மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.