தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10245 topics in this forum
-
திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு! மின்னம்பலம் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீத…
-
- 0 replies
- 655 views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: முதன்முறையாக வெளிவந்த வரலாற்று உண்மைகள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக் கொண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு அமைவாக கடந்த ஓராண்டாக இப்பணி நடந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 661 views
-
-
திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுமதிக்கக் கோரிய இந்திய திரைப்பட இயக்குநர் கௌதமன் கைது தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தற்போது தடை விதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வை நடத்தக் கோரி இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு மனு அளிக்க சென்ற போது இயக்குநரும், நடிகருமான கௌதமன் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 32 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை இந்த ஆண்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான கௌதமன் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மனு கையளிக்கச் சென்றார். பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் சென்ற அவர், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் க…
-
- 0 replies
- 565 views
-
-
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டும் 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணையிலிருந்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்து விட்டதாகத் தமிழக அரசும், சிறைத் துறை…
-
- 0 replies
- 671 views
-
-
தமிழர் பண்பாட்டை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில், இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, உலகின் ஏனைய பண்பாடுகளுடன் அதற்குள்ள தொடர்பு…
-
- 0 replies
- 484 views
-
-
தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்! கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். `முதல்வர்’ சென்டிமென்ட்! தொகுதி மாறும் மு.க.ஸ்டாலின்... `வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார்’ என்பதே தி.மு.க-வில் ஹாட் டாபிக். ``கட்சிக்காரருக்காக விட்டுக்கொடுக்கிறாரா?’’ என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால், `ம்ஹூம்... அவர் புள்ளை உதயநிதி ஈஸியா ஜெயிக்கணும்கிறதுக்காக கொளத்தூர் தொகுதியை அவ…
-
- 0 replies
- 657 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் சமூக ஊடகமான ஃபேஸ்புக் வழியாக காதலிப்பதாக கூறி, ஆண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்கப் படங்களை வெளியிடாமல் இருக்க பணம் பறிக்கும் கும்பலைத் தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர். விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள், கைம்பெண்கள் போன்றவர்களை குறிவைத்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரங்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவேண்டும் என சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். போலி ஃபேஸ்புக் கணக்கு வழியாகத் தொடர்பு கொள்ளும் நபர் படித்த, நல்ல சம்பளத்துடன் இருக்கும் தனி நபர்களை குறிவைப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பிபிசி த…
-
- 0 replies
- 803 views
-
-
சி.ஐ.ஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா? மத்திய பா.ஜ.க அரசின் சட்டத் திருத்தங்களை மக்களவையில் ஆதரிக்கும் அ.தி.மு.க., மாநிலங்களவையில் அதே சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தொடர்கதையாகிவருகிறது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் வியூகத்தை வெளிப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. `மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாயச் சட்டங்களுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறதா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா?' என்ற சிக்கலான கேள்விக்கு விடையைக் கண்டறிவதுதான் தமிழக அரசியலின் ஆகப்பெரும் விவாதமாக மாறிவருகிறது. அண்மையில் மத்திய பா.ஜ.க அரசு, புதிய வேளாண் சட்டங்களை மக்களவையில் நிறைவேற்றியது. `இந்த வேளாண் சட்டங்கள் ஏழை விவசாயிகளி…
-
- 0 replies
- 482 views
-
-
நீட் உண்மைகள் Vs சாணக்கியப் பொய்கள்
-
- 0 replies
- 499 views
-
-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்ட…
-
- 0 replies
- 758 views
-
-
இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், HINDUSTAN TIMES கடந்த 12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. …
-
- 0 replies
- 523 views
-
-
ம் இந்தியா இலங்கை விளையாட்டு அறிவியல் சினிமா வீடியோ மத்திய பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 90% ஒதுக்கீடு கோரிய திமுக எம்.பி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருச்சி சிவா,எம்.பி மத்திய அரசின் பல்வேறு துறை நியமனங்களில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதால், அந்தந்த மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்ட…
-
- 0 replies
- 506 views
-
-
மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம்?! - உறவினர்கள் போராட்டம் நேற்று முந்தினம் இரவு ரமேஷை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் காலை வரை அவர் வீடு வராததால், குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று கேட்டபோது ரமேஷை அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பொதுமக்கள் காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அனைக்கரைப்பட்…
-
- 0 replies
- 717 views
-
-
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்ளூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. எனினும் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பெங்ளூர் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்…
-
- 1 reply
- 511 views
-
-
ஆன்லைன் வகுப்பு புரியாமல் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - நடந்தது என்ன..?
-
- 0 replies
- 490 views
-
-
சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? விரிவான தகவல்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 15 செப்டெம்பர் 2020, 13:30 GMT பட மூலாதாரம், GETTY IMAGES சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர். …
-
- 1 reply
- 520 views
-
-
நீட் தேர்வு: தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – உயர்நீதிமன்றம் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கியது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் 3 பேர் தமிழகத்தில் தற்கொலை செ…
-
- 0 replies
- 327 views
-
-
தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதிஸ்ரீ துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி(நாளை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை ம…
-
- 5 replies
- 1.1k views
-
-
மதுரை அருகே கள்ளிக்குடி பெரிய உலகாணி எனும் கிராமத்தில் குண்டாற்றின் மேற்கரையில் எட்டாம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன், இளம் ஆய்வாளர் உதயகுமார் கூறியதாவது: கப்பலுாரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறைப் பேரராசிரியா் சங்கையா (தமிழ்த்துறை) கொடுத்த தகவலின் படியும் இக்கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுத்த சிலையை ஆய்வு செய்ததில் இந்த சிலை எட்டாம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்க…
-
- 0 replies
- 597 views
-
-
கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். எனினும் குறித்த கைலாசா என்ற தனித்தீவு எந்த இடத்தில் இருக்கின்றது என சரியான தகவல் தெரியாமல் பொலிஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். இதனிடையே கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். பின்னர், தனிக்கொடி, க…
-
- 40 replies
- 3.5k views
-
-
'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்! நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாண…
-
- 0 replies
- 1.3k views
-
-
“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார். இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்த…
-
- 0 replies
- 704 views
-
-
இரண்டாவது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு போராட்டம்
-
- 0 replies
- 397 views
-
-
வைரஸ் தொற்றிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..- செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது! தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை என எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்ற…
-
- 1 reply
- 896 views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜ…
-
- 0 replies
- 628 views
-