தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப்பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்திற்கு ரூ.75 கோடி தமிழக பட்ஜெட் 2020-21ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அரசுப்பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தால் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார் பன்னீர்செல்வம். எனினும் போக்குவரத்துக்கு கழகத்தில் அமலாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் தொடர்ந்து நீடிக்காது போல இந்தத் திட்டமும் ஆகிவிடக் கூடாது என்றும், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது மட்டுமே பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் போதும…
-
- 0 replies
- 398 views
-
-
ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.செயற்படுகிறது- ஜி.கே.வாசன் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கும் எதிராக தி.மு.க.செயற்படுகிறது என த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று காவிரிடெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு அ.தி.மு.க.அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்க…
-
- 0 replies
- 287 views
-
-
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, நடிகர் விஜயும், பைனான்சியர் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருமான வரி புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள், நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். மதுரையைச் சேர்ந்தவர் பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மீதான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள, அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத, 77 கோடி ரூபாய் ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் பிகில் பட வசூல் தொடர்பான ஆவணங்கள் சிக்கின. சோதனை: இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம், தலைமை செய…
-
- 0 replies
- 884 views
-
-
கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்துள்ள காட்டம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்களை முறையற்ற வகையில் தொட்டதாக கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் நெகமம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் தலைமை ஆசிரியரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்களது பெற்றோர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் தகாத முறையில் நடந்துகொள்வதாக சென்ற வாரம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை…
-
- 0 replies
- 422 views
-
-
FOLLOW US செய்திப்பிரிவு Published : 11 Feb 2020 18:18 pm Updated : 11 Feb 2020 18:18 pm பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன? என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்…
-
- 3 replies
- 583 views
-
-
ராஜிவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை – தமிழக அரசு by : Dhackshala ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத காவலில் இருப்பதாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மாநில அரசின் பரிந்துரையை பரிசீலித்த பின், 7 பேர் விடுதலையை, மத்திய அரசு நிராகரித்தது. அதேநேரத்தில் விடுதலை கோரி பேரறிவாளன் …
-
- 1 reply
- 784 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார்- அர்ஜூன் சம்பத் ஆன்மீக கொள்கை உடைய நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், “பெரிய கோவில் குடமுழுக்கு பிறகு நல்ல விஷயங்கள் நடந்து வருகிறன. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 13 ஆவது சட்டபிரிவை அமுல்ப…
-
- 2 replies
- 698 views
-
-
காவிரி- டெல்டா பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்- பழனிசாமி காவிரி- டெல்டா பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எடப்பாடி பழனிசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கால்நடை வளர்ப்பது அதிகம் இலாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும். இதற்கான தனிச்ச…
-
- 0 replies
- 341 views
-
-
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது – எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கால் நாட்டியப்பின் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் அ.தி.மு.க அரசு அனுமதியளிக்காது. முக்கியமாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது மத்திய அரசு கைவிரிப்பு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா…
-
- 3 replies
- 841 views
-
-
ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்குன்னு ரஜினிகாந்த்துக்கு தெரியுமா? குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லைன்னு சொல்ல இவர் யாரு? எம்எம்ஏவா? கட்சி தலைவரா? ஒன்னும் இல்லை.. ஒரு நடிகர்.. அந்த நடிப்போடு அவர் நிறுத்தி கொள்வது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக ஆட்சியை சரமாரி தாக்கினார்.. அக்கட்சிக்கு வக்காலத்து வாங்கி வரும் ர…
-
- 1 reply
- 709 views
-
-
திண்டுக்கல்லாரின் காலை கடித்த "செருப்பு".. சொந்த பேரனாவே இருந்தாலும் அப்படி செய்திருக்க கூடாதே! என்னதான் நீண்ட விளக்கத்தினை வழக்கமான யதார்த்த பேச்சுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தந்திருந்தாலும்.. முதுமையை காரணமாக காட்டி சக அமைச்சர் அவருக்கு சப்போர்ட்டுக்கு வந்தாலும்.. எதுவுமே நம் மனசில் ஒட்ட மறுக்கிறது.. அதே நேரம் நடந்த சம்பவம் சட்டென அகலவும் மறுக்கிறது! நீலகிரியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. வரும் வழியில் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட அமைச்சரை அழைத்துள்ளனர்.. செருப்பு காலோடு உள்ளே போக முடியாமல் நின்ற அமைச்சர், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்களில் ஒருவனை அழைத்து, "வாடா.. வாடா.. இங்கே" என்றார். ஏதோ பட…
-
- 2 replies
- 842 views
- 1 follower
-
-
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்குமாறு முதலமைச்சரிடம் சீமான் கோரிக்கை! தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சீமான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மலேசியாவிலேயே தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, நடிகர் விஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது அனைவருக்கும் தெ…
-
- 0 replies
- 359 views
-
-
பிகில் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்த மதுரை அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜயிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான …
-
- 12 replies
- 1.9k views
-
-
ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு Getty Images இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி - ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை அபராதம் நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005 வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03ஆம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04ஆம் நிதியாண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05ஆம் நிதியாண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் (3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 436) நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் – ரஜினி இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன்போது இலங்கை மக்களை எவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றுவார்கள் எனக் கேள்வியெழுப்பிய ரஜினி, அவர்களுக்காக, தான் என்றும் குரல் கொடுப்பேன் என மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஈழ-அகதிகளுக்கு-இரட்டை-கு/
-
- 4 replies
- 622 views
-
-
தூத்துக்குடியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்கும். நகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீல…
-
- 0 replies
- 445 views
-
-
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், ”தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோ…
-
- 16 replies
- 2k views
-
-
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இரத்து- தமிழக அரசு அறிவிப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயற்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …
-
- 0 replies
- 347 views
-
-
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறும் போது:- ‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதுக்கு சமூக விரோ…
-
- 1 reply
- 465 views
-
-
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை- வெளியானது அறிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பயணிகளின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களூடாக தமிழ்நாட்டுக்கு வந்த பயணிகளிடமே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் வருகைதரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறித்…
-
- 0 replies
- 760 views
-
-
பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்! மின்னம்பலம் இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷ…
-
- 13 replies
- 1.6k views
-
-
சுர்ஜித் உயிரிழப்பின் எதிரொலி: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை மரணங்கள் தொடர்பாக ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தையான சுர்ஜித் பராமரிப்பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.…
-
- 0 replies
- 345 views
-
-
பிரசாந்த் கிஷோர் - மு.க.ஸ்டாலின்: ஐ.டி நிறுவனத்தை நம்பி களம் இறங்கும் திமுக, என்ன காரணம்? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமு.க. ஸ்டாலின் தமிழகத்தில் வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பேக் நிறுவனம் திமுகவிற்கு தேர்தல் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலில் வெற்றியை பெற, பிரசாந்த கிஷோரின் ஆலோசனை பெற்று வெற்றிபெற்றுள்ள நி…
-
- 0 replies
- 598 views
-
-
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 542 views
-