Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயற்பட்டமைக்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் January 25, 2019 பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயற்பட்டதற்காக, தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொண்டடப்பட்ட தேசிய பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று மக்கள் மத்தியில் இந்த தி…

  2. தமிழக முதல்வர் பற்றி பேசவும் எழுதவும் தடை January 24, 2019 தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசவும் எழுதவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. குறித்த ஏழு பேர் மீது, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு தமிழக முதலமைச்சர் சார்பில் நேற்றையதினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது. மறைந்த தமிழகை முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு நுழைந்த குழுவொன்று அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட பலர் பின்னர் பிணையில…

  3. குப்பைத்தொட்டியில் ரூபாய் நோட்டுகள் : கண்டெடுத்த தொழிலாளி கைது! சென்னையில், குப்பைத்தொட்டியில் கிடந்த கட்டுக் கட்டான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கண்டெடுத்த தொழிலாளியை பொலிஸார் கைதுசெய்தனர். சென்னை ஓட்டேரி பவானி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனி (48). குப்பை தொட்டியில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று (23ம் திகதி) காலை, சேத்துப்பட்டு பகுதியில் வழக்கம்போல பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சேத்துப்பட்டு நேரு பூங்கா சுரங்கப்பாதை அருகே உள்ள ஒரு தொட்டியில் குப்பையைக் கிளறியபோது அதில், மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூ…

  4. "சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை" சசிகலா விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது, சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் உணவுகளை சமைக்க அனுமதி…

  5. சென்னையில் டிராஃபிக் ரோபோ – குறையுமா போக்குவரத்து நெரிசல் ? சென்னையில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய வகை ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் சாலைகளை விரிவாக்கினாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அதுவும் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8 முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளிக் கல்லூரி செல்வோருக்குப் பெரும் இடைஞ்சலாக போக்குவரத்து நெரிசல்கள் இருந்து வருகின்றன. இதற்காக இப்போது சென்னையில் புதிதாக டிராபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ROADEO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிராஃபிக் ரோபோவை நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தினா…

  6. ஜெயலலிதா மரண விசாரணையில் புதிய திருப்பம்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்போவதில்லையென ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்துள்ளார். சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது வழக்கறிஞர்கள் ஆணையத்துக்கு வழங்கி வருவதால், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளத்தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத…

  7. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம்…. January 23, 2019 அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நேற்று முதல் நடைபெறுகின்றது. முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் நடுநிலைப் பாடசாலை ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அரச…

  8. படத்தின் காப்புரிமை Getty Images மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை மெரீனா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்…

  9. நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே? மர்மம் தொடர்கிறது… January 22, 2019 கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள காவற்துறையினரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதி…

  10. கொடைக்கானல் மலையில் தீ அரியவகை மரங்கள் எரிந்து அழிந்தன… January 22, 2019 கொடைக்கானல் மலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் அரியவகை மரங்கள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீ பரவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் பு கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான காலந்லைய நிலவி வருவதனால்; பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு சென்றவண்ணமுள்ளனர். இந்தநிலையில் தற்போது அங்கு நிலவும் கடும் பனி காரணமாக புல் பூண்டுகள் மற்றும் அரியவகை மரங்கள் கருகி வருகின்ற நிலையில் நேற்று இரவு செண்பகனூர் அருகே வெள்ளப்பாறை என்ற இடத்தில் உள்ள வன…

  11. சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து… January 21, 2019 குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக விடுக்கப்பட்டுள் எச்சரிக்கையினையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆயுதங்கள் ஏந்திய …

  12. தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் : ராம்தாஸ் அத்வாலே தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கிறது. அதனால், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும். ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு…

  13. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், "களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறத…

  14. 3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக். பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் விற்பனை அதிகம் ஆகும். அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் …

  15. சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பில் ரவுடி கொலை: சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (22) . குற்றச்செயலகளில் ஈடுபட்டு வந்தவர் வழிப்பறி வழக்கில் டிபி சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்த இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார். நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சூதாடி…

  16. அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images "சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. இனி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மொட்கில். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி இருவரும் பெங்களூரு சிறையில் சுதந்திரமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

  17. எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ சென்னை: என்னை எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே அங்கு ஒரு பஞ்சாயத்து ரெடியாக இருக்கும். அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மதுரை மாவட்டம் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.அவ்வளவுதான் நெட்டிசன்கள் இரவு பகல் பாராது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ் என அமைச்சரை கலாய்த்து வந்தனர். அமைச்சர்கள் இந்நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா நேற்று நடந்…

  18. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்…

  19. தமிழ்நாட்டில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் January 19, 2019 தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியதில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததுடன் சிலர் உயிரிழந்துமிருந்தனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளதாகவும் தமிழ்நாட்டில் கடந்த முதலாம் முதல் 13ம் திகதி வரையான காலப்பகுதியில் 48 பேர் பன்றிக்காய்ச்சல…

  20. கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம் பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அர…

  21. ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள். ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு …

  22. மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு… January 17, 2019 சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பரமான விழா எதுவும் இல்லாமல் இன்று திறக்கப்பட்டுள்ளது அரச சார்பில் 2.52 கோடி ரூபா செலவில் இதன் பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்து பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.…

  23. எம்.ஜி.ஆரின், உருவம் பொறித்த சிறப்பு நாணயம்... முதல்வர் இன்று வெளியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்துகின்றனர்.மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. முன்னதாக, எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்க…

  24. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஜெயலலிதா. கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. காரணம் என்ன? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த வீடியோவில் பேசியிருந்த கே.வி. சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக காவல்துறையால் தில்லியில் கைதுசெய்யப்பட்டனர். …

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.