தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10300 topics in this forum
-
மிஸ்டர் கழுகு : மெடிக்கல் ! நினைப்பதற்கு முன்பே வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘போயஸ் தோட்டத்துப் பக்கம் இருந்து வருகிறேன். ஆனால், வரவில்லை!’’ என்று ஆரம்பித்தார். ‘‘என்னாச்சு?” நாம் கேட்டோம். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் விடுதலை செய்த பிறகு, 23.5.2015 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். மறுநாள் கோட்டைக்கு வந்து சிந்தாமணி அங்காடியில் மலிவு விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். பிறகு மே 29, ஜூன் 2, 8, 12, 16, 18, 25 ஆகிய நாட்களில் கோட்டைக்கு வந்தார். அங்கு இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சில திட்டங்களைத் தொடங்கினார். ஜூன் 29-ம் தேதி மெட்ரோ ரயிலுக்கும் கோட்டையில் இருந்தபடியே கொடியசைத்தார். ஜூ…
-
- 0 replies
- 730 views
-
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக திருவிழாவில் எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு உறவாடும் அல்லது பகையாடும் என்பது இ…
-
- 0 replies
- 526 views
-
-
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியமான சக்தி : சத்யராஜ்
-
- 0 replies
- 637 views
-
-
வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பெருவெள்ளத்தை பொறுத்தவரை சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதி…
-
- 0 replies
- 567 views
-
-
சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் …
-
- 0 replies
- 908 views
-
-
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார். மேலும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுவோர் மக…
-
- 0 replies
- 263 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2025, 02:29 GMT இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அலுவல் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. "இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், செப். 8 தேதியிட்ட அந்த உத்தரவில், திட்ட அளவை பொறுத்து அல்லாமல், அனைத…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
கிராமப்புற மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை வேகமாக கொண்டு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்று பயன்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் நோயின் அச்சமின்றி பேருந்து பயணத்திற்கு முண்டியடிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இத்தாலியின் நிலைமையை பார்த்தும் அஞ்சாத நம்மவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டமாக முண்டியடித்த பயணிகளின் இந்த காட்சிகளே சாட்சி..! பேருந்து பயணத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பேருந்துகளின் எண்ணிக…
-
- 0 replies
- 906 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது…
-
- 0 replies
- 452 views
-
-
இராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு! இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ம…
-
- 0 replies
- 625 views
-
-
ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க…
-
- 0 replies
- 777 views
-
-
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை! நா.முத்துநிலவன் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே, மொழிவழி மாநிலம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் எழுந்தன. இது தொடர்ந்தால், பாகிஸ்தான் பிரிவினையைப் போலப் பல்வேறு சிறுசிறு நாடுகளாக இந்தியா சிதறிவிடும் என்று அஞ்சிய நேரு, நிலவழி மாநிலங்களை உருவாக்க நினைத்தார். இதற்கிடையில், பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தது உள்ளிட்ட பெரும் போராட்டங்களின் காரணமாக, 1953-ல், அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் முதல் மொழிவழித் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், அப்போது மொத்த இந்திய நாட்டையும் கிழக்கு, மேற்கு, மத்திய, உத்தர, தெட்சிணப் பிரதேசங்களாகப் பிரிக்க எண்ணம் கொண்டிருந்தார்…
-
- 0 replies
- 347 views
-
-
அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை. ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையா…
-
- 0 replies
- 607 views
-
-
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழக மீனவர்கள் கைதுகளுக்கு எதிராக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அவசரமாக நடத்திய சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 53 தமிழக மீனவர்களில் 34 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். எனினும் மேலும் 19 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவிருப்பதாக மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/55379
-
- 0 replies
- 548 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவு சார்பில் அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும். கேள்வி: மதுரை மாவட்டத்தில் 6 தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்க…
-
- 0 replies
- 418 views
-
-
சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 447 views
-
-
தமிழக ஆளுநரிடம் திமுக மனு: முதலமைச்சர் உள்பட 8 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் - முழு விவரம் பட மூலாதாரம், DMK TWITTER தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட எட்டு அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களைச் சுமத்தியுள்ள தி.மு.க, இது தொடர்பான ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து அளித்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்தனர். அப்போது, தமிழக அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொ…
-
- 0 replies
- 571 views
-
-
ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசாம் தொண்டர்களை ஏமாற்றுகிறதா தலைமை? 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என, எங்கள் கட்சிப், பொதுக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, எங்களைப் போன்று, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை ஏமாற்றுவ தாக உள்ளது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் குமுறுகின்றனர். ஜெயலலிதா மறைந்ததும், டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், அவருக்கு, 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெ., மீது குற்ற வழக்குகள் இருந்ததால், 'பாரத ரத்னா' கிடைக்குமா என்று அப்போதே விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில், 'அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்…
-
- 0 replies
- 267 views
-
-
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய…
-
- 0 replies
- 318 views
-
-
அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் தினகரனுக்கும், அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையே, அதிகார போட்டி நடக்கிறது. கட்சி,…
-
- 0 replies
- 360 views
-
-
-
ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய ஒரு சிறுதொகுப்பு இதோ... டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க.): இவர், அந்தக் கட்சியில் தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.…
-
- 0 replies
- 584 views
-
-
இந்திய மீனவர்களின் கோரிக்கை: கச்சைதீவை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை..! இந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தின் போது பேசியுள்ள மீனவசங்க தலைவர்கள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை …
-
- 0 replies
- 291 views
-
-
மக்களை மதிக்காத அரசாங்கம் யாருக்கு வேண்டும்? மக்களின் குரலாக! - தங்கர் பச்சான்
-
- 0 replies
- 221 views
-
-
தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டித்து எதிர்வரும் 25ஆம் நாள் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழீழ கோரிக்கையை குழி தோண்டி புதைக்கும் நோக்கோடு இந்திய-இலங்கை மற்றும் சர்வதேசம் ஒன்றிணைந்து 13வது சட்டத்திருத்தத்தின் மூலமாக ஒன்றுபட்ட இலங்கையை திணிப்பதை தமிழகமாணவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் அரசியலைமைப்பு சட்டம் தமிழர்விரோத சட்டமாகும். அதனை ஏற்காத ஈழத்தமிழர்களிடம் தனிதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்காமல் துப்பாக்கி முனையில் மாகாணதேர்தல் என்ற ஒன்றை நடத்தி த…
-
- 0 replies
- 484 views
-