Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 23 JAN, 2025 | 02:17 PM சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவி…

  2. கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்! ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் ‘இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்…

  3. பட மூலாதாரம்,MK STALIN / DIPR இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி - கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு இன்று (ஜன. 23) முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'இரும்பின்' தொன்மை என்ற நூலை வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என கூறினார். அவருடைய உர…

  4. Published By: VISHNU 21 JAN, 2025 | 10:42 PM இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. நீண்டகாலமாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக ஓர் ஒற்றைத்தீர்வை யாராலும் முன்வைக்கமுடியாது. மாறாக இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த வாரம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்…

  5. ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசிய சர்ச்சைகளுக்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பசுமைத் தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தமிழிசை செளந்தரராஜன் அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குந…

  6. விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் ச…

  7. நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி Jan 21, 2025 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி இன்று ஜனவரி 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பில் டாக்டர் அன்புமணி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. https://minnambalam.com/uncategorized/anbumani-admitted-in-apollo-hospital-angio-surgery/

  8. <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid02WcwAYA5cBNJWAj4DCFWjxJ5j9aYqNLq8vbzs7a17ihzTiuSZvuc57P78qHUdvAgUl%26id%3D100083192907322&show_text=true&width=500" width="500" height="0" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி சேர்க்கப்படாதது இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களிலும் இந்த நோயின் பரவல் அதிகமாக இருக்கலாம் என்று மூத்த மருத்துவர்களும், துறை சார்ந்த நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். அரசு திட்டத்தில் புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த நோய்ப் பரவலைக் கண்டறிய, இந்த நோயை 'தெரிவிக்கப்பட வேண்டிய நோய…

  10. முதல்முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜய்: எங்கு? எப்போது? ByKavi Jan 18, 2025 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 முதல் இவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பரந்தூர் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவுதெரிவித்து வ…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (18/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.525 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின் கீழ், சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்கள…

  12. எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று January 17, 2025 11:36 am மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று. இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளால…

  13. சென்னை - இறந்த ஆமைகள் Join Our Channel Share சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமைகள் கடலுக்கு மிக முக்கியமான உற்பத்திக்காரணி. கடலில் இருக்கும் பாசைகளை உண்டு, அது அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அதனால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீன் குஞ்சுகள…

  14. Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:39 PM (நமது நிருபர்) இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழ…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 15) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை பெற்றிருப்பதாக தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐபோன் ஏற்றுமதி சுமார் 77.8 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் அது 42 சதவீதம் அதிகரித்து 1.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில், தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்கா - சீனா வர்த்தப்…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8½ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தினத்தந்தி செய்தி கூறுகிறது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 14) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8½ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான 'என்.ஆர்'. மற்றும் 'ஆர்.ச…

  17. உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் காளைகள் பி…

  18. பட மூலாதாரம்,TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத்தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரசின் சார்பில் தி…

  19. “உனக்கு காம இச்சை வந்தால் உன் தாயிடமோ, சகோதரிிடமோ, மகளிடமோ தீர்த்துக்கொள் என்று சொன்ன பெரியார், பெண் விடுதலையைப் பேசியவரா?’’, ’’தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.’’ - இப்படியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து பேசி இருப்பது, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டங்கள், காவல்நிலையங்களில் புகார்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என பரபரப்புக் கிளம்பியுள்ளது. `பெரியார் சொல்லியதாக சீமான் சொல்வது வெறு அவதூறு மட்டுமே' என்று, திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிய கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். ``பெரியார் அப்படிச…

  20. படக்குறிப்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில், 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய 9 படைகள் பணியாற்றி வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அலகுமலை –சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவருடைய மனைவி அலமேலு (வயது 75) ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு செந…

  21. அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்! christopherJan 12, 2025 12:51PM அயலகத் தமிழக தின விழாவில், அயலகத் தமிழர்களுக்காக ரூ. 10 கோடியில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) அறிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் “நான் முதல்வர் ஆன பிறகு , சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றபோது, தாயகத்தில் வாழுகிற உணர்வை அங்குள்ள தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். அமெரிக்க பயணத்தில்…

  22. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று ஆட்சியாளர்கள் மக்களை நம்ப வைத்தனர். ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது மாநில அரசால் அதனை ரத்து ச…

  23. அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி! சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை…

      • Haha
    • 2 replies
    • 461 views
  24. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத…

  25. பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இராமகிருஷ்ணன் கண்டனம்! இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.