Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முன்னாள் எம்.பி இரா செழியன் காலமானார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா செழியன் (95) உடல்நலக் குறைவால் வேலூரில் காலமானார். அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரம். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். அவரைத் தம் தலைவராகவும் வழிகாட்டியாகவும் கொண்டு அரசியல் வாழ்வை நடத்தினார். 1962, 1967 நாடாள…

  2. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் 14417 உதவி எண் நிலை என்ன? பாலியல் புகார்கள் கையாளப்படுவது எப்படி? பாம்பன் மு.பிரசாந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பள்ளிக் குழந்தைகள் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரசு சார்பில் இயங்கி வரும் புகார் மையத்தில் குழந்தைகளின் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட ஆளில்லாமல் இருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அரசு தரப்பு சொல்வதும், செயல்பாட்டாளர்கள் முன்வைக்கும் தீர்வுகள…

  3. இலங்கை காவலில் உள்ள 128 இயந்திர மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சமும், நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் 17 பேருக்கு தலா 1.5 இலட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூபாய் 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மீன்பிடி மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ண…

  4. 'ஆட்சியை கலையுங்கள்!'- அதிர வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு இணைந்தன. இருப்பினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்' என்று கூறி ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ், 'புடம் போட்டத் தங்கமாக அ.தி.மு.க வரவேண்டும் என்றால் ஆட…

  5. ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி! காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் போராட்டம் என உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’ என முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, பிரமாண்ட யாகசாலை பூஜைகளுடன் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். உலகத் தரத்தில் இதை ஓராண்டுக்குள் கட்டிமுடிப்பதாகத் திட்டம். 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. செலவு, 50 கோடியே 80 லட்சம் ரூபாய். எம்.ஜி.ஆர் நினைவிட…

  6. `போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச் கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார். நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார். பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார். இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். …

  7. தொழில் வளர்ச்சி: பின்தங்கிய மாநிலங்கள் தமிழகத்தை முந்துகின்றனவா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக வங்கி மற்றும் மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion) ஆகியவை இணைந்து, 2018ஆம் ஆண்டுக்கான தொழில் செய்ய உகந்த இந்திய மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம் 15ஆம் இடம் பிடித்துள்ளது. படத்தின் காப்புரிமை…

  8. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இன்று துவக்குகிறார். தமிழகம் முழுவதும் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்டமாக, மதுரை கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க, அவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில அதிகாரிகளை, விசாரணைக் குழுவில் இடம்பெற அனுமதிக்கும்படி, சகாயம் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.எனினும், அதுகுறித்து கவலைப்படாமல், சகாயம் விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளார். நேற்று சென்னையில், சம்பந்தப்பட…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானியாக வேண்டும் எனில் அதற்கு பல்வேறு திறன்களும் தகுதிகளும் தேவை. கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 6 ஜூலை 2023, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் விமானம் என்றாலே நம்மில் பலருக்கும் பிரமிப்புதான். விமானியானால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என கேள்விப்பட்டிருப்போம். குழந்தை பருவத்தில் விமானியாக வேண்டும் என கனவு கண்டிருப்போம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கையின் வேறு திசைகளில் ஓடிக்கொண்டிக்கலாம். தொழில்முறை விமானியாவது என்ன அவ்வளவு கடினமா? எவ்வளவு செலவாகும்? என்ன …

  10. கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி: இந்தியா கடும் அதிருப்தி கொழும்பு துறைமுக நகரத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி. (கோப்புப் படம்) கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல் படுத்த இலங்கை, சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டத்தை தொடங்கிவைத்தார். கடந்த ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா, அவர…

  11. டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொலிஸ் தீவிர சோதனை புதுடெல்லி: டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். அவையெல்லாம் மிகச் சிறிய அளவிலானவை. அவற்றால் கட…

  12. பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை! புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்…

  13. இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நம்புகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்று அம்னெஸ்டி எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி தெரிவித்தார். பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி அலுவலகத்தில் இருந்து ஜி. அனந்த பத்மநாபன் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டி: ‘நோ ஃபயர் ஸோன்: தி கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் ஸ்ரீலங்கா’ படத்தை ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலக அரங்கத்தில் திரையிட விடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறியிருந்தது. அதை மீறி படம் திரையிடப்பட்டுள்ளது. எப்ப…

    • 0 replies
    • 559 views
  14. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்கள் கலெக்டர் க. மகரபூஷணத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது… சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் சமூகவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர், 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வருகிறார். உயரம் குறைந்த மாணவிகளை பின் இருக்கையிலும், உயரம் அதிகம் கொண்ட மாணவிகளை முன் இருக்கையில் அமர வைப்பதும், மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். மிக கொச்சையாக நடந்துகொள்கிறார். சனிக்கிழமை நாள்களில் ப…

    • 0 replies
    • 1.1k views
  15. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD<space><registration>,<DOB in DD/MM/YYYY> என்ற வடிவில் எஸ்எம்…

    • 0 replies
    • 417 views
  16. தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதாவது செய்வார்களோ என்ற அச்சம் இருப்பதாக அமமுக பொது செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் எதிர்வினை ஆற்றியுள்ளார். '100 பேர் மனித வெடிகுண்டு' கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா வெளியேறினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, த…

  17. காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் இனிமேல் புதிய அணுஉலை திறக்கக்கூடாது என ஏற்படுத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று கையெழுத்திட்டார். சுமார் 30 வருடமாக கல்பாக்கத்தில் அணுஉலை இயங்கி வருகிறது. 2 அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் 'பாவினி' என்ற ஒரு அணுஉலையை கட்டி வருகிறார்கள். இந்த அணுஉலையைத் தொடர்ந்து, மேலும் புதிய அணுஉலைகள் கட்டக்கூடாது எனக்கூறியும், கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், வாயலூர், கொக்கிலமேடு போன்ற சுமார் 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அணுஉலைக்கு சொந்தமான பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் சுற்றுவட்டா…

  18. கோடநாடு எஸ்டேட் 'ஜப்தி'யானால் என்னாகும்? 600 தொழிலாளர்களுக்கு உறக்கம் போச்சு ஊட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி, கோடநாடு எஸ்டேட்டும், ஜப்தி செய்யப்படும் சூழ்நிலை உள்ளதால், அங்கு, 30 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா, சசிகலா வாங்கிய பல்வேறு சொத்துகளில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில், 900 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ் கடந்த, 20 ஆண்டுகளில், மேலும் பல நுாறு ஏக்கர் எஸ்டேட் களும் வந்தன.இந்த தேயிலை தோட்டத்தில், 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப…

  19. சசிகலா அணியில் கருத்து வேறுபாடு : மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக,அ.தி.மு.க., - சசிகலா அணியில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு, சசிகலா அணியில், சிலர் தடையாக உள்ளனர். இதனால், அணி யில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், மூன்று நாட்களாக, மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் நடந்தது. அதில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசும்போது, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்செல்வ…

  20. அதிகாரத்தை கைப்பற்றப் பயன்படுத்திய சினிமா மீது திராவிடக் கட்சிகள் செலுத்தத் தவறிய தாக்கம் - கட்டுரை தியடோர் பாஸ்கரன்திரைத்துறை ஆய்வாளர் தமிழ்நாட்டில் சினிமா-அரசியல் தொடர்பு சுதந்திரப் போராட்டத்தின் போதே ஆரம்பித்து விட்டது. படத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image captionதிரைப்படத்துறையில் திருப்புமுனை - `பராசக்தி` சினிமாவின் சகல பரிமாணங்களையும் அரசியலுக்கு முதலில் பயன்படுத்திய காங்கிரஸ் தொடங்கி வைத்த இந்த ஊடாட்டம் திராவிட இயக்க ஆட்சி காலத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது. கே.பி.சுந்தரம்பாள், நாகையா போன்ற பல சினிமா நடிகர்கள், காங்கிரஸுக்கு தங்களது ஆதரவைத் தந்ததுடன் …

  21. ஜெ., படம் திறப்பதா தலைவர்கள் எதிர்ப்பு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% சென்னை: தமிழக சட்டசபையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க, கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள…

  22. மிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..? “ ‘முதல்வர் மீது கவர்னர் கோபம்?’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே?” என்றபடியே வந்து அமர்ந்தார், கழுகார். “கவர்னர் மாற்றத்தில் என்ன நடந்ததாம்?” “அதுபற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தேனே! முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை. அதுபற்றி, எடப்பாடி டெல்லியில் தொடர்ந்து குறைபட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ‘அவர், லேசாக சசிகலா குடும்பத்துடனும் இணக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்’ எனச் செய்திகள் கிளம்பின. இந்த நேரத்தில், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவால் ஏகப்பட்ட பிரச்னை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான், ‘மகராஷ்ட்ராவை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்’ …

  23. கச்சத்தீவை மீட்க நரேந்திர மோதியிடம் கோரிக்கை: மு.க. ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு: தமிழ்நாடு அரசின் பதில் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, கொழும்பில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MKSTALIN இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26ம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதியிடம…

  24. சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை! சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வருமான வரி புலனாய்வு துறையின் வேலை ரெய்டு நடத்துவது மட்டும் அல்ல. ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதும் அவர்களின் முக்கியமான பணி. நம்பிக்கை என்றால் பூங்குன்றன் 'ஆபரேஷன் க்ளீன் மணி' என்ற பெயரில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய மெகா ரெய்டு அடுத்த கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடத்தியதையும், அவரிடம் விசாரணை நடத்தியதையும்தான் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவ…

  25. தமிழகத்திலிருந்து, இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உளறல். நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு துணைக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசினார். இந்தியாவுக்கு வருகின்ற அகதிகள் பற்றி கிரண் ரிஜிஜு பேசுகையில், தமிழ்நாடு, பங்களாதேஷ், மியான்மரில் இருந்து இந்தியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.