Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெளிநாடு சிகிச்சை.? ஜெயாவுக்கு காத்திருக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம்.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரம் கடந்தும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ…

  2. அப்போலோவில் ரஜினிகாந்த் முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். ரஜினியுடன் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து செல்கின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/69772-rajinikanth-visits-apollo-to-check-regarding-jayalalithaas-health.art

  3. ’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்...! 1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் “ விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது. 44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழு…

  4. அப்போலோ செல்லவிடாமல் விஜயகாந்தை தடுப்பது எது? அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதரவாகக் கரங்கள் நீள்வது அரசியலுக்கு அப்பாற்பட்ட கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது. விருப்ப அறிக்கை முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் …

  5. டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜி.எஸ்.ஜா. தலைமையிலான குழு அண்மையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணக்கு வர உள்ளது. இந்நிலையில் உயர்மட்டக் குழுவின் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பேததிய மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலத்தடி நீர் ஆ…

  6. சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. வழக்கறிஞர் சுகந்தி வீடு சூறையாடப்பட்ட வழக்கிலும் அவர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா புஷ்பா எம்.பி வீட்டில் பணியாற்றிய பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர், இவர்களது மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் அம்மா கௌரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பானு…

  7. பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? - ‘கப்சா’ கவர்னர் “பன்னீர்செல்வம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே ஆஜரானார் கழுகார். ‘‘தமிழகத்தின் அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி என்று ஒரு பட்டத்தை ஓ.பி.எஸ்-க்குக் கொடுக்கலாம். இரண்டுமுறை தமிழகத்துக்கு முதலமைச்சரான அவர், இந்த முறை முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுள்ளார்” என்று தொடங்கினார் கழுகார். ‘‘எப்படி நடந்தது இது?” ‘‘தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எழுந்து வரும் அரசியல் …

  8. அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!? மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் தமிழக நிதியமைச்சர் ஓ.பி.எஸ்! ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21-ம் தேதி, முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம், முதல்வராகப் பொறுப்பேற்றார். அடுத்து, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு பெங்களுரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததையடுத்து மறுபடியும் ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். எனவே மீண்டும் 2015, செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது. பின்னர் சொத்து…

  9. முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் இன்று மீண்டும் சென்னை வருகை முதல்வர் ஜெயலலிதா | கோப்பு படம் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணத் தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக் டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்ட…

    • 8 replies
    • 1.1k views
  10. தி.மு.க-வுக்கு 'தண்ணி' காட்டும் திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து, தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பல கட்சிகளுக்குச் சென்று, கடைசியாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானதாலோ என்னவோ, திராவிடக் கட்சிகளைப் போ…

  11. ஜெயலலிதாவுக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து உணவுப் பொருள் தருவிக்கப்படுகிறதா? முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் (பொறுப்பு), மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அகில இந்திய பிரபலங்கள் தொடர்ந்து அப்போலோ மருத்துவனைக்கு வருகை புரிந்து மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அப்போலோ அறிக்கை மட்டுமே முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் சொல்கிறது. மருத்துவர்களோ, கட்சித் தரப்பினரோ, மருத்துவமனைக்கு வந்து செல்லும் பிரமுகர்களோ ஜெயலலிதா உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகச் சொ…

  12. இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கியதில் உடன்பாடில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தொல்.திருமாவளவன் இன்று பிபிசி தமிழோசைக்கு வந்து பேஸ்புக் நேரலை வாயிலாக பேட்டி அளித்த திருமாவளவன், இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். ''விடுதலை புலிகள் இயக்கத் தல…

  13. முதல்வர் கோப்புகளில் கையெழுத்திடப்போகும் ஓ.பி.எஸ்? தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் தலைமை செயலகத்தில் வழக்கமான அரசுப் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், இனி முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட உள்ளதாக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். http://www.vikatan.com/news/politics/69564-o-panneerselvam-to-sign-on-files-for-chief-minister.art

  14. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 – 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து ‘ராமர் பெட்ரோல்’ என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு …

  15. சசிகலாவிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்க மோடியின் ஸ்கெட்ச்! இத்தனை காலமாக, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் யாரும் நெருங்கமுடியாமல் இரும்புத்திரையை போட்டிருந்தார் அவரது தோழி சசிகலா. இதனால், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் டெல்லியில் இருந்து பி.ஜே.பி. தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை. ராஜதந்திரமாக கையாளவேண்டிய பல விவகாரங்களை முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவிடம் மட்டுமே பேசவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஜெயலலிதாவுடன் நிழலாக சசிகலா இருந்து வந்தது மத்திய அரசுக்கு எரிச்சலைக் கொடுத்தது. மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவராக வர்மா ஐ.பி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார். டெல்லியில் பிரபல அரச…

  16. ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!! காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்கு…

    • 1 reply
    • 805 views
  17. ’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா கடந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி... ‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’ ‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. என…

  18. ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? சென்னை: மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது. இதையடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் …

  19. ஜெயலலிதாவை காதலித்தேன் : முன்னாள் நீதிபதி.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்புவார் என தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜெயலலிதாவை தான் ஒரு தலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவரது பதிவில், ஜெயலலிதா சிங்கம் போன்ற ஒரு பெண். அவரி எதிர்ப்பவர்கள் குரங்குகள். அவர் விரைவில் குணம்பெற்று பணிக்கு திரும்புவார். நான் இ…

  20. முதல்வர் ஜெயலலிதாதான்... பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! - முதல்வர் ஆலோசனைப்படி அறிவிப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே ந…

  21. இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது. உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற …

  22. கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!? அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கடந்துவிட்டன. ' தலைமைச் செயலாளரை மட்டுமே நம்புகிறார் சசிகலா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க வரும் தலைவர்களால், கிரீம்ஸ் சாலை நிரம்பி வழிகிறது. அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் வருகையும் முதல்வர் உடல்நலன் குறித்தான பாசிட்டிவ் பேச்சுக்களும் தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகின்றன. அப்போலோ வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் …

  23. முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்! - அப்போலோ அப்டேட்ஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா 13 நாட்களைக் கடந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டைத் தொடர்ந்து, நேற்று மற்றொரு லண்டன் மருத்துவர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் …

  24. எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் திருநாவுக்கரசர் | கோப்புப் படம் கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை எ…

  25. ' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர் அப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.