Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டத்தை சேர்ந்தவர் குணசேகர் மகள் தனலட்சுமி (17). இவர், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமிக்கு தோல் பாதிப்பு காரணமாக சமீபநாட்களாக தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வந்தது. தொடர்ச்சியாக அதிகளவில் முடி உதிர்வு ஏற்பட்டதால் கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலைலோயர் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்தார். பாட்டி வீட்டில் தங்கி அருகேயுள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் தலைமுடி உதிர்வது தொடர்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள தனது அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சத்தம் க…

  2. 22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு…

  3. 'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்! சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது…

    • 1 reply
    • 668 views
  4. தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறிய…

  5. காதலை நிராகரித்ததுதான் காரணமா? :- சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும் கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். பொலிஸுக்கு பெரும் சவாலாக மாறிய இந்த வழக்கில், கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். காதலால் அரியர்ஸ்! ராம்குமார் குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் விசாரித்தோம். “ராம்குமாரின் தந்தை பரமசிவன், தென…

    • 3 replies
    • 1.1k views
  6. "அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படு சூடான விவாதம் நடந்தது. விவாதத்தை நடத்தியவர்கள் வக்கீல்கள் அல்ல.. மாறாக நீதிபதிகள். சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான படு சூடாக, கோபமாக தங்களது கருத்துக்களை இன்று வைத்தனர். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்தது. அப்போது நீதிபதிகள் இருவரும் சரமாரியாக அரசுத் தரப்புக்கு கேள்விகளை விடுத்தனர். அதில் ஒரு கேள்விதான்…

  7. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில் முதல் ஐ.ஏ.எஸ்.! துணை ஆட்சியராக நியமனம் இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ்-ஸில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்…

  8. சுவாதி கொலை வழக்கில் தொலைக்காட்சியில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம் கேட்டதாக அவரது தந்தை பொலிஸார் விசாரணையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி, நேற்று சென்னை அழைத்து சென்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்த தனிப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு குழுவினர் தொடர்ந்து நெல்லையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன், தங்கை மதுபாலா …

    • 0 replies
    • 599 views
  9. 570 கோடி கண்டெய்னர் பணம் யாருடையது? சி.பி.ஐ விசாரிக்க உத்தரவு திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம் தேதி திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர…

  10. சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது எப்படி? போலீஸிடம் பிடிபட்ட ராம்குமார் (பழைய படம்) மற்றும் சுவாதி செங்கோட்டை அருகே கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த போலீஸ் படை சுற்றிவளைத்தது சென்னையில் பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தெரியவந் துள்ளது. கொலை செய்த பின்னர் செங்கோட்டை அருகே உள்ள தனது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமத் துக்குச் சென்று ஆடு மேய்த்துக் கொண்டு திரிந்துள்ளார். பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாமல் போலீஸார் காத்திருக்கின்றனர். …

  11. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த புகைப்படம் மூலம் போலீசார் துப்பு துலக்கி, நேற்று இரவு கொலையாளியை கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி மின்சார ரெயிலுக்கு காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழும்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பதிவ…

  12. தலைநகர் சென்னையை ஏன் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்த செய்தி சுவாதி கொலை சம்பவம். காலை நேரத்தில் பயணிகள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் அனைவரும் பார்க்கும்படி ஓர் இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞன் யார் என்ற செய்திதான் அனைத்து ஊடகங்களிலும் கடந்த 24-ம் தேதி முதல் செய்தியாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. கொலையாளி நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) எனத் தெரியவந்துள்ளது. சுவாதி வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகொலை ஏற்படுத்திய பேரதிர்ச்சி முதல் இதுவரை நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பு: 1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந…

    • 0 replies
    • 567 views
  13. திருநெல்வேலி : பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் என் காதலை சுவாதி உதாசீனப்படுத்தினார்.. இந்த ஆத்திரத்தில் சுவாதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமார், நெல்லையில் நேற்று இரவு சிக்கினார். அப்போது போலீசிடம் இருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிகிச்சையில் முன்னேற்றமடைந்த நிலையில் ராம்குமாரிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர். அதில் ராம்க…

  14. சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான். இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார். மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம் பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான், இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். http://news.lankasri.com/india/03/105131

    • 0 replies
    • 619 views
  15. சென்னை தரமணி அருகே இன்று அதிகாலை 4.40 மணி அளவில் குடிபோதையில் ஆடி காரை ஒட்டி வந்த மூன்று பெண்கள் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மீது பயங்கரமாக மோதினர். இந்த சம்பவத்தில் முனுசாமி (48) என்ற நபர் 15 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றொரு வாகனத்தில் விரட்டிச் சென்று ஆடி காரை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் குடி போதையில் தள்ளாடியபடி நின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த மூன்று பெண்களையும் உடனடியாக மீட்டுச் சென்றதாகவும், இறந்தவரின் உடல் சுமார் ஒரு மணி நேரம் அளவில் அதே இடத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். முனுசாமியின் உடல் தற்போது ராயப்பேட்டை மருத…

  16. 'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில் மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி…

  17. காளான் வளர்ப்பில் கல்லா கட்டும் இன்ஜினியர் பெரம்பலூர்: காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத்தாவர உயிரினம். பலநாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பலதரப்பட்ட சூழல்களி லும் வளரக்கூடியது. எப்போதாவது இடியிடித்து மழைபெய்தால் அபூர்வமாக முளைக் கும் காளான்களை சமைத்து உண்பதில் ஆர்வம்காட்டும் இந்தியர்களினவ் முக்கிய உணவுப் பொருளாக காளான்கள் அசைவ உணவுக்கு மாற்றாக மாறி வருகிறது. இதில் சிப்பிக்காளான், பால் காளான், பட்டன் காளான் என ஆயிரக்கணக்கான வகைகள் காளான்களில் இருந்தாலும், சிப்பிக் காளான்களுக்கும், பால் களான்களுக்கும் மட்டுமே மவுசு அதிகரித்துள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே ஆடம்பர உணவாகக் காணப்பட்ட காளான்கள் இப்போது நடுத்த…

    • 0 replies
    • 664 views
  18. வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி மொழியில் படமாக எடுக்க தன்னிடம் உரிமைகேட்டு கையெழுத்து வங்கியதாகவும். ஆனால், அதில் தமிழ் மொழிக்கான உரிமமும் அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது எனக்கு தெரியாது. அவர் என்னை ஏமாற்றி உரிமத்தை பெற்றுக் கொண்டார். மேலும், இந்தியில் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் படம் வெளியானது, நான் படத்தை…

  19. சுவாதியின் கொலையில் எந்தவித சாட்சியங்களும் முன்வராத நிலையில் தற்போது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் முக்கிய விடயங்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், சுவாதியை கொன்ற கொலையாளிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சுவாதியின் கன்னத்தில் அறைந்தவன் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்செல்வன். தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் தமிழ்செல்வன், சுவாதியை கொன்றவனை நேரில் பார்த்ததாகவும் சுவாதியை இதற்கு முன் ரயில் நிலையத்தில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வந்துவிடுவேன். அங்கிர…

    • 0 replies
    • 871 views
  20. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், சாந்தனை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி. இவர்களின் விடுதலைக்காக முதல்வரை சந்திக்க மனு கொடுக்க இருக்கிறேன் என்கிறார் திருச்சி வேலுச்சாமி. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர். பொதுவாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மட்டுமே, இவர்களைச் சந்தித்துப் பேசி வருவது வழக்கம். இவர்களின் விடுதலைக்காக மாபெரும் பேரணி ஒன்றும் கடந்த 11-ம் தேதியன்று நடந்தது. இந்நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் முருகனையும் சாந்தனையும் சந்தித்துப் பேசியிரு…

  21. தமிழக அரசியல் அம்மாவை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் ? மனப்பாடம் செய்யமுடியாமல் படித்து காட்டுகிறார் திருமாவேலன் . கருணாநிதி சட்டசபைக்கு வந்துவிட்டால் நிர்மலா பெரியசாமி சொன்னது போல நடந்தாலும் நடக்கும் . ஆனால் இந்த சட்டசபையில் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே ? தெரிந்துக்கொள்ள ..

  22. 64வது முறையாக உடைந்தது சென்னை விமான நிலைய கண்ணாடி சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி கதவு 64வது முறையாக உடைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமாகிவிட்டது. இதுவரை 21 முறை தடுப்பு கண்ணாடி மற்றும் மேற்கூரை தலா 21 முறையும், கதவுகள் 20 முறையும், 5 முறை சுவரின் பகுதிகள் இடிந்தும் விழுந்துள்ளன. இதுவரை இந்த சம்பவத்தால் மட்டும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த முறை நுழைவு பகுதியில் உள்ள பணப்பரிமாற்றம் செய்யும் இடத்தில் உள்ள 8 அடி கதவு உடைந்து விழுந்துள்ளது. 64வது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலைய ஊழியர்கள் மூலம் கண்ணாட…

  23. திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது: மாவட்ட செயலாளர்களிடம் மனம் திறந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் 11-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொழிற்சங்க பேரவை கொடியை ஏற்றிவைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர். ‘திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார். இது தொடர்பாக நிர்வா…

  24. என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ திருச்சி: எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தின…

    • 2 replies
    • 540 views
  25. ஃபேஸ்புக் சாட் நண்பர்தான் சுவாதி கொலையாளியா?- இறுகும் விசாரணை சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.