தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென…
-
- 0 replies
- 315 views
-
-
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.மு., கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகியதன் எதிரொளியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செகஸ் குறியீட்டு எண் 201.13 புள்ளிகள் சரிந்து 19092.07 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 64.90 புள்ளிகள் சரிந்து 5770.35 புள்ளிகளோடும் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 633 views
-
-
கேட்டது ₹40,000 கோடி; கிடைத்தது ₹9,000 கோடி... பேரிடர் நிவாரணத்தில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! நமது நிருபர் vardah cyclone ( Photo: Vikatan / Nivedhan.M ) 2010-11 முதல் 2019-20 வரை தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்த பேரிடர் நிவாரண நிதி குறித்து விவரங்கள் அளிக்கும்படி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. வெள்ளம், புயல், கனமழை எனத் தமிழகம் தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது. ஜல், தானே, நீலம், நடா, வர்தா, ஒகி, கஜா என புயல்களும் மழையைப் போல இயல்பாக வந்துபோகத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு புயலும் ஏற்படுத்த…
-
- 0 replies
- 456 views
-
-
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்த ளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெய…
-
- 0 replies
- 303 views
-
-
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார். ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. …
-
- 0 replies
- 427 views
-
-
-
எல்லா அதிகாரிகளுமே யோக்கியமானவர்களா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! -சாவித்திரி கண்ணன் உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..? திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன. அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…! உண்மை தான்! மாற்ற…
-
- 0 replies
- 766 views
-
-
“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்! “சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைப்பற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும் அ.தி.மு.கவில் அடித்தளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார். சின்னத்தை மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொடநாடு... கொலை நாடு - முதல்வரைக் கை காட்டும் கனகராஜ் அண்ணன்! ஜூ.வி லென்ஸ் ஜெயலலிதா மரணத்தின் மர்மமே விலகாத நிலையில், கொள்ளை, கொலை, விபத்துகள் என கொடநாடு பங்களா மர்மம் கூடிக்கொண்டே போகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களா, உச்சபட்சப் பாதுகாப்பு கொண்டது. எஸ்டேட் உரிமையாளர் ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்கு உரிமை கொண்டாடிய இருவர் சிறைக்குப் போய்விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், கொடநாடு பங்களா காவலாளி கொல்லப்பட்டு கொள்ளையும் அரங்கேறியது. ஆனால், ‘கொள்ளை போனது என்ன?’ என்பது பற்றி விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையே கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இருவர் திடீரென அடுத்தடுத்து விபத்துகளில் சிக்குகிறார்கள். அதில் ஒருவர் ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜெ. சிகிச்சை பெற்றபோது எடுத்த படத்தை வெளியிட விரும்பவில்லை: ரத்த வாரிசுகளுக்கே போயஸ் இல்லம் சொந்தம் - டிடிவி தினகரன் திட்டவட்ட அறிவிப்பு டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை எந்த விதத்திலும் வெளியிட விரும்ப வில்லை என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லம், ஜெய லலிதாவின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்றும் அவர் கூறி யுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘வேதா நிலையம்’ அமைந்துள்ள போயஸ் த…
-
- 0 replies
- 186 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழகத்தில் அதிமுக 28. திமுக 5, காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி ஏராளமான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டரும் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன. அதில் பாரதிய ஜனதா கட்சி 131 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. தற்போது பாஜக மட்டும் 162 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள…
-
- 0 replies
- 820 views
-
-
திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம் எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார். இரட்டை இலை சின்…
-
- 0 replies
- 361 views
-
-
சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி.மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி…
-
- 0 replies
- 430 views
-
-
வேலூர்: திமுகவினரே உண்மையான சங்கி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமேடையில் காலணியை கழற்றி காண்பித்து எச்சரித்தார். திமுகவினரை காலணியால் அடிப்பேன் என்கிற வகையில் பேசியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், யூடியூபர் மாரிதாஸ் ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவினரே உண்மையான சங்கிக…
-
- 0 replies
- 393 views
-
-
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…
-
- 0 replies
- 273 views
-
-
700 அரங்குகள், 2000 தலைப்புகள், 5 லட்சம் புத்தகங்கள் என வாசகர்களை அசத்த வருகிறது 37 வது சென்னை புத்தக காட்சி. 37 வது சென்னை புத்தக காட்சிக்கு வாசகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கொல்கத்தா புத்தக கண்காட்சி மிக பிரபலமானது. சமீப காலமாக இதை விஞ்சும் அளவுக்கு சென்னை புத்தக காட்சி வாசகர்களின் அமோக வரவேற்பில் வளர்ச்சி கண்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவுக்கு வெகு அருகாமையில் நடத்தப்படும் புத்தக காட்சிக்கு, வாசகர்களின் வருகை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தங்கள் அபிமான எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் மற்றும் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் மற்ற துறைகளின் புத்தகங்களை வாங்க அலைய…
-
- 0 replies
- 296 views
-
-
சூழலியலாளர் சாந்தலா தேவி: "என்னை போலவே உடைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கை மீட்க விரும்பினேன்" மோகன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMED FAZIL படக்குறிப்பு, சாந்தலா தேவி கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் ச…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களை விடுவிக்க கோரி திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை. தமிழ்நாடு :- திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி, மே17 உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் வருகின்ற 29ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மே 17 சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித…
-
- 0 replies
- 264 views
-
-
மன்னார்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்ப அஸ்திரத்தை தனதாக்குவாரா தினகரன்?! #VikatanExclusive ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து தமிழக அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியின் மூலம் கட்சி தன் வசம்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த தினகரன், தற்போது குடும்பமும் தன் வசம்தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்ல மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பொதுவாக புத்தாண்டை ஆதரவாளர்களுடன் அடையாறில் இருக்கும் தனது வீட்டில் கொண்டாடும் வழக்குமுடையவர் தினகரன். அன்று ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்று இருப்பார். ஆனால், ஆர்.கே.நகர் வெ…
-
- 0 replies
- 358 views
-
-
திருநெல்வேலி : நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி, குடிநீர் பாட்டில் தயாரிக்கும், 'பெப்சி' நிறுவன ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித் தான் ஆண்டுக்கு, இரண்டு போக நெல் சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. திறக்கப்படவில்லை: ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து பொய்த்து வரும் மழையினால், தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் தேதி, கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு, ஜூன் மாதம் முடிந்தும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்ப…
-
- 0 replies
- 476 views
-
-
இந்தியாவில் அகதிகளாக இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட ஒரு இலட்சத்து ஆயிரத்து 148 பேரும் உள்ளனர். அகதிகள் எனக் கூறப்படும் வெளிநாட்டினரைக் கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனிய…
-
- 0 replies
- 343 views
-
-
தன் மகளைவிட சிறப்பாக படித்த மாணவனை பெண் கொன்றதாக குற்றச்சாட்டு: பெற்றோர் போராட்டம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காரைக்கால் பகுதியில், தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலின் நகரப்பகுதியில் வீட்ட…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பா.ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 793 views
-
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு என்ன அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2023, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற…
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TREE FOUNDATION INDIA படக்குறிப்பு, கரைக்கு வெகு அருகில் இம்மீன்கள் தென்பட்டதாகச் சொல்கிறார் கடல் உயிர் ஆர்வலர் சுப்ரஜா தாரிணி 13 ஜூன் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சென்னையின் பெரிய நீலாங்கரைக்கு அருகில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய மீனவர் புகழரசனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது படகுக்கு சற்றுத்தொலைவில் சுமார் 20 பெரும் திமிங்கலச் சுறாக்கள் நீந்திக்கொண்டிருந்தன. 20 வருடங்களுக்கு மேலாக இதே பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புகழரசன், இதுவரை அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு திம…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-