Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்? சென்னை, நவ. 4– காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2–வது நாளாக ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வருகிற 12 அல்லது 16 ஆகிய 2 தேதிகளில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த இதில் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவதில் காலதாமதம் ஆவதால் தே…

  2. தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனைக்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்தும், பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/TheVaiko/posts/777221039004511

  3. அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - கா…

  4. பொய் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இன்று 02-11-2014 சென்னையில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது ! ராஜபட்சே படம் எரிப்பு ! 100 க்கும் மேற்பட்டோர் கைது ! (Facebook)

  5. தமிழக மீனவர்கள் 5பேரின் தூக்கை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி நடத்தும் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் மே17 இயக்கத்தின் தோழர் அருள் முருகன் கண்டன உரை (facebook)

  6. பாலச்சந்திரனின் படுகொலை காட்சிக்கு(08.03.2013) பிறகு கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாட்டில் மாணவர்களின் இன எழுச்சி உலகமே அறிந்த ஒன்று. தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று போராடும் மாணவர்களையும் இளையோர்களையும் நள்ளிரவில் கைது செய்வதும் அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள்,கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவது போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகள் நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தமிழீழம் மலர இலங்கை புறக்கணிப்பை முன்னெடுத்த(லைகா எதிர்ப்பு ) மாணவர்களில் மூவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து வதைபடுத்தி வருகின்றனர் (நாளை பிணையில் வெளிவருகின்றனர்). இவற்றை பல்வேறு சனநாயக அமைப்புகளும் கண்டித்து வரும் சூழலிலும் , மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்தி வருகிறது.கடந்…

  7. இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர். இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது. htt…

  8. சேலம் மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் தீபாஜினி என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று நாம் முகநூல் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம். செய்தியை பார்த்த நண்பர்கள் சிலர் மாணவியின் கல்வித் தொகைக்கு உடனடியாக உதவி செய்து அவர் கட்ட வேண்டிய கட்டணத்தை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாணவி கல்லூரி கட்டணத்தை செலுத்தி இப்போது அதற்கான பற்றுச் சீட்டை நமக்கு அனுப்பி உள்ளார். நண்பர் சிவராம் Sivaram Vikraman ரூபாய் 10,000 அனுப்பினார், Ravi Kannan Arjun ரூபாய் 5000, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர் ரூபாய் 5000 அனுப்பினார். Sivaraj Velayutham ரூபாய் 1000 அனுப்பினார். பணம் அனுப்பி மாணவியின் கல்விக்கு உதவிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ! ம…

  9. தொண்டர்களுடன் ஜி.கே.வாசன் | படம்: கே.பிச்சுமணி தமிழக காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி உருவானது. தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புது இயக்கம் தொடங்கியதாக அறிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவருடன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் திருச்சி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். திருச்சி பொதுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என வாசன் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் …

  10. மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்? இன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் ஜி.கே. வாசன்! சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை உடைத்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டிருந்தார் ஜி.கே.வாசன். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கவும் காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. அத்துடன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்த வாசன், தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டார். அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபோட்டுப் பார்த்தார். பிரச்சனைக்கு…

  11. போட் கிளப் ரோடு போயஸ் கார்டன் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்ஜினி, போர்ஷா, ஜகுவார், ஆடி மிக விலை உயர்ந்த கார்களின் சக்கரங்கள் நடை பழகும் இடங்கள் எவை? இவைதான் கடந்த ஐந்து வருடங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு இரண்டு, மூன்று மடங்காக உயர்ந்துள்ள சென்னை நகரத்தின் மையப் பகுதிகள். இவைதான் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமாப் பிரபலங்கள் ஆகியோரின் வீடுகள் உள்ள இடங்கள். போயஸ் கார்டன், போட் கிளப், ரட்லேண்ட் கேட் ஆகிய இந்த மூன்று பகுதிகள்தான் சென்னையின் மதிப்புமிக்க அந்தப் பகுதிகள். சமீப காலத்தில் இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் இடம் வாங்க போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்க டாலர்களைச் செலவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அதிகம் விரும்பப்படும் இடங்களாக இவை உள்ளன. இந்தப் பகுதிகளில் ஒரு கி…

  12. சீமான் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை.. ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி! மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மதுரை மாஜிஸ்திரேட் கூறி விட்டார். மேலும், சீமான் மீது புகார் கொடுத்தவரும், தன்னிடம் போலீஸார் 2 தாள்களில் எதையோ எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறவே, சீமானை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சீமான் விடுவிக்கப்பட்டார். அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் சீமான் மீது ஏன் போலீஸார் பொய் வழக்குப் போட முனைந்தனர் என்பது புதிராக உள்ளது. சோதனைச் சாவடி கலாட்டா. கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை …

  13. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துளார். காங்கேயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார். மேலும், "கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்திகள் வெளியானது. ஸ்டாலின் உடனான சந்திப்பு அரசியல் நாகரீகம் கொண்டது மட்டுமே" என்றார் வைகோ. முன்னதாக, வரும் 2016 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையவுள்ளதாகவும், அதில் மதிமுக, பாமக சேரும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தொடக்கமாக பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத் திருமண நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கட…

  14. தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: 01 - 11 - 1956 கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணைந்து 58 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்று 59-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைப்புக்காக நடைபெற்ற திருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்ற தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா (80), அந்த நாள் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த போது நிலவிய சூழ்நிலை என்ன? அப்போது உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. குடியானவர்களுக்கு 2 இடங்குழி அரிசி (3 கிலோ) கன்ட்ரோல் துணி (மலிவான துணி) 2 ராத்தல் மரவள்ளி கிழங்கு (3 கிலோ) இவைதான் வாழ்க்கை. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அரிசியும…

  15. மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். கருணாநிதி கூறும்போது, " ஸ்டாலின் - வைகோ சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.நானும் வைகோவும் பகைவர்கள் அல்ல நீண்ட கால நண்பர்கள். புதிய கூட்டணி உருவானல் திமுக பொதுக் குழு,செயற் குழு கூடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பா.ம.க. தலைவரின் முன்னிலையில…

  16. சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஞானதேசிகன் ராஜினாமாவை வரவேற்ற ஜி.கே. வாசன், லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையை அவர…

  17. 5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சேசு ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மீனவர்கள் தூக்கை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தாரும், அவர்களுடன் மீனவ சமுதாயத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என 3000 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். திமுகவின் சுப.தங்கவேலம், காங்கிரஸ் கட்சியின் ராமன் உன…

  18. தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவராக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம்! சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை காலை அறிவித்தார். 65 வயதாகும் இளங்கோவன் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். நன்றி தற்ஸ் தமிழ். எல்லாம், நன்மைக்கே..... இவரின் தலைமைப் பதவியுடன், தமிழ் நாட்டிலிருந்து காங்கிரஸ் அடியோடு காணாமல் போய…

  19. ‘‘இளம் வயதில் என் ஆசையெல்லாம் ஏதாவது ஒரு அலுவலகத்தின் மூலையில் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் வரைந்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு உயரத்தைத் தொட்ட பிறகு, புதிய சவால்களுக்கு தயாராவதுதானே சரி... வாய்ப்பு வரும்போது அதை உதாசீனப்படுத்தவும் கூடாது இல்லையா?! அப்படித்தான் எனக்கு எழுத்து, சினிமா விமர்சனம் என்று பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் ஆசையோடு எடுத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுக்க ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்" என்று தனது நீண்ட விரல்களைக் காற்றில் அசைத்துப் பேசத் தொடங்குகிறார் கார்ட்டூனிஸ்ட் மதன். கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை, தியாகராஜ பாகவதர் முதல் விஜய் - அஜித…

  20. தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்த சிங்கள இனவெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக, தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (Facebook)

  21. சென்னை, அக்.31 இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர். போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 5 பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம்…

  22. 5 மீனவர்கள் மீதான தீர்ப்பை கண்டித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் முற்றுகை. தமிழ்நாடு மாணவர் இயக்கம் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் (Facebook)

  23. தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் இன்று (30.10.2014) வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. 2011, நவம்பர் 28-ஆம் தேதி இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது. மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக …

  24. ஈரோடு: திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என அக்கட்சியுடன்,ஆயுட்கால கால ஒப்பந்தம் போடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில், அக்கட்சியின் சார்பில் சேலம் மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன்," கொள்முதல் உயர்வைக் காரணம் காட்டி பால் விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. நிபந்தனையின்றி தமிழக அரசு பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் வடஇந்தியாவில் குறிப்பாக டெல்லியில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு…

  25. கோவை/சென்னை: ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கமும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் இன்று விலகியுள்ளார். இது அக்கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், மூப்பனார் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.