Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தயாநிதி மாறன், கலாநிதி மாறன்| கோப்புப் படம் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பத்துள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குரூப் உயர் அதிகாரி அகஸ்டஸ் ரேல்ஃப் மார்ஷல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர சன் டைரக்ட் உள்பட 4 நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி …

  2. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 – 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து ‘ராமர் பெட்ரோல்’ என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு …

  3. ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது. பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார். கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரி…

  4. தமிழகத்தில்... நால்வருக்கு, குரங்கம்மை நோய் ? தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை, மகன், மகள் மற்றும் மேலும் ஒருவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில், 4 பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள்…

  5. ‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள்தான் முதல்வர்!’ - ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்னாரா ஆளுநர்? பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் …

  6. "தங்கமகன் மாரியப்பனுக்கு" தபால் முத்திரை வெளியிடப் பட்டது. சேலம்: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு தபால் துறை சிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மாரியப்பன், அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சி செய்வதாக கூறினார். சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி…

  7. படக்குறிப்பு, கடந்த மே - ஜூன் மாதத்தில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 23 நவம்பர் 2023, 03:10 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கு…

  8. தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ் சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். …

  9. தினகரன் கொடுத்தனுப்பிய, 'பென் டிரைவ்' விசாரணை கமிஷனில் ஒப்படைப்பு சென்னை : ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தினகரன் சார்பில், 'வீடியோ' பதிவுகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒப்படைக்கப்பட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறி, 20 வினாடி வீடியோ காட்சியை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த வீடியோவை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார். அதேபோல், தினகரன், சசிகலா ஆகியோருக்கும், சம…

  10. பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்: டிடிவி தினகரன் தகவல்! பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரன், வியாழன் அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவினை சந்திக்கச் சென்றார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சிறையில் உள்ள சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து மவுன விரதத்தில் இருக்கிறார். அடுத்து செ…

  11. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து சிறப்பு மருந்து சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதிவு: ஜூன் 19, 2020 08:16 AM சென்னை சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்…

  12. தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குத்தான் அதிகம் பேர் செல்கின்றனர். தமிழ்நாட்டில் 5 சதவீதக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் சென்டர் ஃபார் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ், லயோலா கல்லூரியின் சமூகவியல் பயிற்சி ஆய்வு மையம், ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இன்டர்நேஷனல் மைக்ரேஷன் ஃப்ரம் தமிழ்நாடு என்ற ஆய்வை மேற்கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, இப்படி வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மூலம் தமிழகத்திற்கு மட்டும் 2013ஆ…

    • 0 replies
    • 358 views
  13. பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்? அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., பன்னீர…

  14. படக்குறிப்பு, அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. 26 ஆகஸ்ட் 2023, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. …

  15. இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப் படம். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்…

  16. பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…

  17. சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…

  18. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்து நடத்தினர். கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்த…

  19. கட்டுரை தகவல் பெ.சிவசுப்பிரமணியன் பிபிசி தமிழுக்காக 18 அக்டோபர் 2025, 08:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 186. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு ஐஃஎப்எஸ் அதிகாரி, 2 மாநிலங்களைச் சேர்ந்த 10 வனத்துறை அலுவலர்…

  20. ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை, வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை - திமுகவின் தேர்தல் வாக்குறுதி.! சென்னை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும் ஈழத் த…

  21. திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம் எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார். இரட்டை இலை சின்…

  22. இந்திய மீனவர்களின் வலையில் சிக்கிய மர்ம படகு : பொலிஸார் தீவிர விசாரணை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகின் வலையில் சிக்கிய மர்ம படகு குறித்து இந்தியப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றனர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரொனால்ட் என்பவரது படகில் மின்பிடிக்கச் சென்ற முத்துராமலிங்கம், பாதாளம், சீனிவாசன், சேகர் முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேர் தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மீன்பிடி வலையில் ஏதோ ஒரு மர்மப்பொருள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் …

  23. தமிழகத்தில் திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக மாநிலம் முழுவதும் …

  24. தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு February 25, 2025 1:05 pm அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.