Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘தி.மு.கவைப் புதிதாகத்தான் தொடங்க வேண்டுமா?’ - மா.செக்களிடம் கடுகடுத்த ஸ்டாலின் #VikatanExclusive தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியின்போது, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் அதிர்ந்து போய்விட்டார் ஸ்டாலின். எனவே, கட்சியை சீரமைப்பது குறித்த ஆய்வுக்காக மாவட்டச் செயலாளர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். சென்னை, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரிடம் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டவர்கள் வாழ்த்து பெறும் படங்கள் மட்டுமே வெளியாயின. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏ…

  2. இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடவேண்டிய அ.தி.மு.க., இரண்டு, மூன்றாகப் பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலைச் சின்னத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை இழப்பது, இது இரண்டாவது முறை. முதல்முறை எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்பதில் ஏற்பட்ட மோதல், கட்சியில் பிளவை ஏற்படுத்த ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரியதால், 1989 பொதுத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜானகிக்கு இர…

  3. சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…

  4. அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம். தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422200

  5. கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து ட்வீட்டும் வந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி,…

  6. தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும். இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ச…

  7. பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி? தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, …

  8. சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது தீ விபத்தில் நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Image captionகோப்புப் படம் சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் என்ற மிகப் பெரிய துணிக் கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 100க்கணக்கான தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு நாட்களுக்கு மேலாக போராடி, இந்தத் தீயை அணைத்தனர். இதற்குப் பிறகு இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின. சுமார் 122 அடி உயரம் கொண்ட, ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் …

  9. அப்போலோ, போயஸ் கார்டன், அ.தி.மு.க. அலுவலகம்... இப்போது எப்படி இருக்கின்றன?! #3MinuteRead முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்து 30 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும்... அ.தி.மு.க வட்டாரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அடிமட்டத் தொண்டர்களின் மனங்களில்... ஜெயலலிதா மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம். சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா இறந்த பிறகு... அவர் உடலைக் கொண்டுசென்ற இடங்கள், அன்றும்... இன்றும் எப்படியிருக்கின்றன என்பதே இந்தத் தொகுப்பு... அப்போலோ அன்று: கடந்த டிசம்பர் 5-ம் தேதி மதியம் 2.30 மணிக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘அபாயக்கட்டத்தில் இருக்கிறார்’ என அப்போலோவி…

  10. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பியுள்ளது மோடி அரசு : அழகிரி குற்றச்சாட்டு! புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார். தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களை பல்வேறு உருவங்களில…

  11. 'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன? தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலம் அது. புதிய கட்சியைத் துவக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். அப்போது கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் தனியாக சந்தித்துப் பேச வைத்தால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைத்து அதற்கு தூதுவர்களாக சிலர் இயங்கினர். ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்கவில்லை. கட்சி உடைந்தது. அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை எம்.ஜி.ஆர். துவக்கினார். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. கட்சி பொறுப்பை கருணாநிதியும், ஆட்சிப் பொறுப்பை எம்.ஜி.ஆரும் கவனித்துக்கொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் இதையும் …

  12. சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…

  13. யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 30 மே 2022, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்தி…

  14. தமிழகத்தில்... அடுத்த இரண்டு வாரங்களில், கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை! தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக சூத்ரா மாதிரி எனப்படும் கணித மாதிரியை விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை கடந்த ஆண்டு உருவாக்கியது. இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மே மாதம்29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலும், புதுச்சேரியில் மே மாதம் 19 – 21 ஆம் திகதிகளிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல…

  15. ''மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கேன்...பழிவாங்கவும் பட்டிருக்கேன்''! - சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், சர்ச்சைகள் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும் அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி, சமீபத்தில் ஓய்வுபெற்றவர் சாந்த ஷீலா நாயர் ஐஏஎஸ். மதிக்கத்தக்க பெண்மணியாக அரசுப் பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணம். தன் 43 ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவத்தையும், தான் எதிர்கொண்ட பல சவாலான தருணங்களையும் கனிவான குரலில் பணிவாகப் பேசுகிறார். "நான் பிறந்தது கேரளாவின் திருவனந்தபுரத்தில். அப்பா மிலிட்டரியில இருந்ததால, இந்தியாவின் பல ஊர்களில் படிச்சு வளர்ந்தேன். ஆனா, அதிகமா வசிச்சது சென்னையிலதான். இங்க குயின் மேரிஸ் கல்லூரியி…

  16. ராஜீவ் காந்தி படுகொலையும் போலீஸ் தொப்பியும் - ஓய்வுபெறும் நாளில் கலங்கவைத்த பிரதீப் வி பிலிப் ஐ.பி.எஸ் ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியுடன் (வலது) ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெறும் நாளில் ஐ.பி.எஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் வைத்த கோரிக்கை சற்று வித்தியாசமானது. ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் தனது போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் அது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் ஓய்வுபெறும் நாளில் அந்தத் தொப்ப…

  17. சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து… January 21, 2019 குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக விடுக்கப்பட்டுள் எச்சரிக்கையினையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆயுதங்கள் ஏந்திய …

  18. தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்குமாறு முதலமைச்சரிடம் சீமான் கோரிக்கை! தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சீமான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மலேசியாவிலேயே தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, நடிகர் விஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது அனைவருக்கும் தெ…

  19. முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனி…

  20. தினகரனை வீழ்த்திய செங்கோட்டையன்! - எம்.எல்.ஏக்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணிக்குள் நடக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அணி. ‘தினகரனின் ஆதிக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டார்கள். சொத்துக் குவிப்பு வழக்கின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பும் சசிகலாவுக்குச் சாதகமாக வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் டெல்லி சென்றன. ‘எங்கள் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியச் சென்று ஆதரவு கொடுத்தனர். இதில், தன்னுடைய வலிமையைக் கா…

  21. தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்கள் பருவம் தப்பிப் பெய்த மழையால் சேதம் - அரசின் நிவாரணம் போதுமானதா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2023, 02:51 GMT இந்த மாதத் துவக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிப்பெய்த மழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இழப்பீடு அறிவித்திருந்தாலும் அது போதாது என்கிறார்கள் விவசாயிகள். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பதைபதைப்பில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக…

  22. கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும். கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் க…

  23. பெரியார் மண்ணில் பெருவெற்றி… ஈரோடு கிழக்கு வெற்றியை வர்ணித்த ஸ்டாலின் 8 Feb 2025, 9:55 PM ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகளை பெற்று அபார வெற்றியை பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் திமுகவின் வெற்றி குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 😎 அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல…

  24. சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு…

  25. “நான் இவரிடம்தான் பணம் கொடுத்தேன்...!” : விஜயபாஸ்கர் வாக்குமூலம் நேற்று (08.04.2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்த நாள்! பாவம், மனுஷன் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். விஜயபாஸ்கரின் வீடு, ஆபீஸ்... என்று ஆரம்பித்து அவரது நண்பர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் மற்றும் அவரது சொந்தக் கிராமத்து வீடு... என்று மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து, ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில டாக்குமெண்டுகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் செய்தது யார்? தொலைக்காட்சிகளில் வெளியான டாக்குமென்டுளில், 'ஆர்.கே நகர் தொகுதியில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.