தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பொதுமக்களுக்கு சேவை செய்வதுதான் ஸ்டாலின் தொழிலாம்.. வேட்புமனுவில் சுவாரசியம். சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தொழில் சேவை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தனது தொழில், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும், முறையே, கொளத்தூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். நேற்று இவர்கள் இருவரும், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஸ்டாலின், சமூக சேவை செய்வதை தன் தொழிலாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை தொழிலாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டாலின் தனது மனைவி தொழில் நிறுவன இயக்குனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 515 views
-
-
பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின…
-
- 1 reply
- 650 views
-
-
பொன்முடிக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது. தண்டனை விவரம்: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தல…
-
- 13 replies
- 1.6k views
-
-
கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி பட மூலாதாரம்,PONMUDI கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், 'இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஏன்? சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியது என்ன? திராவிடர் கழகத்தின் …
-
-
- 9 replies
- 658 views
- 1 follower
-
-
மூன்று மாணவர்கள் உட்பட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் ஒன்பது பேருக்கும் நிபந்தனை பிணை அளிப்பதாக எழும்பூர் செசன்சு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. சத்தியம் திரை அரங்கம் தாக்குதல் தொடர்பாக மாணவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் மவுன்ட் ரோடு காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீ.பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செம்பியன், மாற்றம் மாணவர்கள் இளையோர் அமைப்பின் பிரதீப் ஆகியோரை அக்டோபர் மாதம் 23 ம் திகதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இவர்களுடன் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த த.பெ.தி.க தோழர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு பிணை கோரி த.பெ.த…
-
- 1 reply
- 544 views
-
-
சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீ…
-
- 2 replies
- 813 views
-
-
பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்- தமிழிசை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடையிலான வார்த்தை மோதல் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தெரிவித்ததாவது, “தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும், கே. எஸ். அழகிரி சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை எதையும் பேசாமல், தெரிவு செய்யப்பட்ட பிறகு காங்கிரசை குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன. ஆக பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இ…
-
- 0 replies
- 600 views
-
-
பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை சீனுவாசன் இராமஇணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, உணவுப் பங்கீடு மற்றும் மானியம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தியதால் மனித வளர்ச்சி குறியீட்டின்படி இன்று இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. படத்தின் காப்புரிமைDAN KITWOOD/GETTY IMAGES விளம்பரம் ஆனால், இந்த காலத்தின் பெரும் பகுதியில் தமிழக பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியைவிட குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தேசிய பொருளாதாரத்த…
-
- 0 replies
- 495 views
-
-
பொறுக்கி கூட செய்யாத வேலையை போலீசார் செய்கிறார்கள்: மகஇகவினர் கண்டனம். http://www.nakkheeran.in/
-
- 0 replies
- 526 views
-
-
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் அரசு மீது இருந்த வெறுப்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி வளர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தர்மத்தை சமக முறையாக கடைபிடிக்கிறது. அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற நாங்கள் நிச்சயம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதிமுக ஆதரவால் வெற்றி பெற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற…
-
- 0 replies
- 381 views
-
-
பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Image captionஅமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் தமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வ…
-
- 0 replies
- 324 views
-
-
சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது.நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்லாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது. குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 428 views
-
-
பொலிஸார்... தங்கள் அதிகாரத்துக்கு உட் பட்டே, செயற்பட வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்து பொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததால் பொலிஸார் அடித்து துன்புறுத்தியதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. பொலிஸார் உங்கள் நண்பன் எ…
-
- 0 replies
- 179 views
-
-
மிஸ்டர் கழுகு: பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! - சசி குடும்ப சொத்து வில்லங்கம் கழுகார் உள்ளே வரும்போதே சிந்தனைவயப்பட்டவராக இருந்தார். கண்களை மூடியபடி, ‘‘பெரிய இடத்து மனிதர்களிடம் நெருங்கவும்கூடாது; விலகவும்கூடாது. ‘தாமரை இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாமல் இருக்க வேண்டும்’ என்பார்கள். பேச்சுக்கு வேண்டுமானால் இதைச் சொல்லலாம். அது, நிஜத்தில் அத்தனை சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் நெருங்கியே ஆகவேண்டிய கட்டாயம் வரும். அதனால் கிடைக்கும் லாபங்கள் அதிகம். ஆனால், இப்படி நெருங்கிச் சென்றதன் காரணமாக பிரச்னைகளுக்கு ஆளாகி, பதுங்கிப் பதுங்கி வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதே... அப்பப்பா!’’ என்றார். ‘‘என்ன கழுகாரே, பீடிகை ரொம்ப நீள்கிறது?’’ என்றோம். ‘‘வேறொன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள் படக்குறிப்பு, பொள்ளாச்சி அருகே வேட்டையாடப்பட்ட காகங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூரில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்த சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தன. இறந்த காகங்களின் சடலங்களை மர்ம நபர்கள் எடுத்துச் செல்வதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே பெரியாகவுண்டனூரில் நாகராஜ் என்பவரது தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். விவசாயி நாகராஜைக் கண்டதும் அந்த நபர் தப்ப முயற…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பில் யூடியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் March 30, 2019 பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு அதனை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய குழுவொன்றினை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அது தொடர்பில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் முகப்புத்தகம் , வட்ஸ்-அப், யு-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தநிலையில் அவ்…
-
- 0 replies
- 627 views
-
-
பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்! சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு …
-
- 0 replies
- 607 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்கா…
-
- 1 reply
- 923 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AFP கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. உண்மை நிலை என்ன? பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி…
-
- 0 replies
- 739 views
-
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் 6 ஜனவரி 2021, 04:17 GMT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் வி…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். ''பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே - ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே'' உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர். …
-
- 0 replies
- 478 views
-
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்குத் தூண்டியதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை எஸ்.பி உட்பட போலீஸார் அடித்து வேனில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை ம…
-
- 0 replies
- 927 views
-
-
பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், 'யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…
-
- 1 reply
- 668 views
-