தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
"சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை" சசிகலா விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது, சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் உணவுகளை சமைக்க அனுமதி…
-
- 0 replies
- 765 views
-
-
ஆழ்கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக 60 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் சென்னை நீலாங்கரை முதல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வரையிலான விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீன் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே இத்தடைக்காலத்தை கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்ற நடைமுறையை அரசு பின்பற…
-
- 0 replies
- 585 views
-
-
மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 331 views
-
-
1 இட்டலி 1 லட்சத்துக்கு விற்றுமா ரூ. 3000 கோடி கடன்..? ஊரை அடித்து உலையில் போட்ட அப்பல்லோவுக்கு வந்த நிலைமை பாருங்க..! அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சொந்தமான சொத்துகளை விற்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க 13 செவிலியர் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் மத்தியில் மதிக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) இந்தப் பேரணி இடம்பெற்றது. இந்த அமைதிப் பேரணி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் …
-
- 0 replies
- 388 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 25 ஜூன் 2025, 08:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காடு…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினியின் மனு தள்ளுபடியானது! March 11, 2020 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ரொபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் சிறை வைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர…
-
- 0 replies
- 382 views
-
-
-
சென்னையில் உள்ள மத்திய வருமானவரி அலுவலகம் முற்றுகை - மாணவர்கள் கைது.[படங்கள்] இன்று கலை சென்னையில் உள்ள மத்திய அரசு வருமான வரி அலுவலகம் தமிழ்நாடு மாணவர் இயக்கதினால் முற்றுகையிடப்பட்டது . இதனை அடுத்து அப் பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 200 பேரை கைது செய்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13317:chennai-nungapakkam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 675 views
-
-
போயஸ் கார்டனுக்குள் அதிகாரிகளுக்கு நோ என்ட்ரி! - கோட்டையில் கோலோச்சும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. அதே சமயம், 'முதல்வர் மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சை எழுப்புவதால், மிகப் பொறுமையாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 'அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். 'இதற்காக அ.தி.மு.கவின் உட்கட்சி விதிகளையும் தளர்த்துவோம்' என நேற்று பேட்டி அளித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். "ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், இப்போது சசிகலா…
-
- 0 replies
- 432 views
-
-
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 750 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ராமதாஸ் மீது சட்ட விரோதமாக கூடுதல், கூட்டு சதி செய்தல், அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்ய கேட்டு அவர் தரப்பில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று காலை மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது போலீஸ் தரப்பில் கருத்துக்கள் கேட்கப்படும்.…
-
- 0 replies
- 378 views
-
-
கூட்டம்! முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி? தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க., சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால்…
-
- 0 replies
- 325 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை (10-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. இதன் அடிப்படையில் பார்த்தால் 5 எம்.பி. பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் 4 எம்.பி.க்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 5-வது எம்.பி.யை அ.தி.மு.க.வே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா என்று தெரிய வில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5-வது எம்.பி. பதவியை கேட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை மீண்டும் எம்.பி. ஆக தேர்வு செய்வதற்காக அந்த கட…
-
- 0 replies
- 463 views
-
-
கவர்னரை சந்திக்கிறார் ஐகோர்ட் தலைமை நீதிபதி சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில், இருவரது சந்திப்பு நிடைபெற உள்ளது. முன்னதாக காலையில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளை கவர்னர் சந்தித்து பேசியிருந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1708170
-
- 0 replies
- 425 views
-
-
எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் கொந்தளிப்பு வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு சட்டசபையில், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூவத்துார் விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி, தொகுதி மக்கள், சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர். மக்கள் கருத்தை மதித்து, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம், மேட்டுப் பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் மனம் மாறினர்.தொகுதி மக்கள…
-
- 0 replies
- 328 views
-
-
திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்! “இருபத்தி ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமலேயே அதிகாரம் செலுத்த முடிந்த நம்மால், அதிகாரம் நேரடியாக கைக்கு வந்தபின் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத துரதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதே” என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த சசிகலா உறவினர்கள். இதனால் திக்..திக்..என்ற நிலையில் தினகரன் இருந்து வருகிறார். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க என்ற இயக்கத்தையும், நான்கரை ஆண்டுகால தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தையும் சசிகலா குடும்பம் இனி முழுமையாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துமா, செலுத்தாதா? என்ற குழப்பத்துக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைத்துவிடப் போகிறது. ஆம்! ஐந்து மாநில சட்டமன்றத் த…
-
- 0 replies
- 776 views
-
-
விரைவில் தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு: அதிகாரிகள் குறித்த கெடு! மின்னம்பலம் தமிழகத்தில் முதல் கட்ட கொரோனா பரவலை விட, இரண்டாம் கட்ட கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தொடர்ந்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் 2020 கொரோனா பரவல் வேகத்தையும், இப்போதைய 2021 கொரோனா பரவல் வேகத்தையும் ஒப்பிட்டு அதற்கேற்ற மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பற்றியும் விவாதித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முதன் முதலாக கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு முன் மார்ச் 22 ஆம…
-
- 0 replies
- 447 views
-
-
அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, …
-
- 0 replies
- 1.1k views
-
-
தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள் புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தினகரன் சிக்கியது எப்படி என்பது குறித்து, டில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ெஷகாவாத் பதிவு செய்துள்ள எப்.ஐஆர்., ரில் கூறப்பட்டுள்ள முக்கிய, 10 அம்சங்கள் வருமாறு: 1.புதுடில்லி, சாணக்கியாபுரியில் உள்ள என் அலுவலகத்தில் 15.4.17 அன்று இரவு, 11:30 மணிக்கு நான் இருந்த போது, ரகசிய தகவல் வந்தது. பெங்களுரை சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் சந்திர…
-
- 0 replies
- 337 views
-
-
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத…
-
- 0 replies
- 735 views
-
-
பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி மற்றும் கட்டாயப் பாடமாக மாற்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தின் நிலையோ இதற்கு நேர் எத…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் இதுவரை 10 இலட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துற…
-
- 0 replies
- 187 views
-
-
தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர். இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். மிக விரைவில் அந்த ஏற்பாடுகள் நடக்குமென தெரிகிறது. இந்த கட்சிகளிற்கு மேலதிக, தமிழ் தரப்பில் இன்னொரு முயற்சியும் நடப்பதாக நேற்று தெரிவித்திருந்தோம். புலம்பெயர் தமிழரான கோடீஸ்வரர் ஒருவரின் பின்னணியில் இந்த முயற்சி நடக்கிறது. புலம்பெயர் தேசத்திலும், இலங்கையிலும் ஊடகங்களை இயக்கும் அந்த வர்த்தகரின் பின்னணியில், இந்த முயற்சி நடக…
-
- 0 replies
- 412 views
-
-
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்! மின்னம்பலம்2022-03-02 திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக…
-
- 0 replies
- 287 views
-
-
ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக் பரபரப்பு பேட்டி Share Tweet அ-அ+ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 305 views
-