தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன. பசியாற்றுபவர், கேமரா சேகர். அவரிடம் பேசியதில் இருந்து... *உங்களை பற்றி? நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார். 2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா, சட்டத்துறை செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். http://news.vikatan.com/ar…
-
- 4 replies
- 727 views
-
-
டெல்லி: பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்! இந்தி பேசுவோர் 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேரைக் கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர். ஐந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசுவோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர். மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய…
-
- 1 reply
- 450 views
-
-
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது. சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கத்தரி வெயில்: கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர். ஆண்டுதோறும், 'கத்தரி வெயில்' எனப்படும், அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய…
-
- 2 replies
- 606 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7 ஆம் திகதியன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுவை மூவரும் கொடுத்தனர். ஆனால் 11 ஆண்டுகாலம் கழித்து இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி தாமதமாக கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த …
-
- 0 replies
- 443 views
-
-
ராசிபுரம்: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சரமாரியாக புகார்கள் கூறி கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து தி.மு.க. தலைமை சஸ்பெண்ட் செய்தது. மேலும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தது. இந்நிலையில், தி.மு.க. …
-
- 3 replies
- 772 views
-
-
சென்னை: தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை இல்லாததால் கலந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995ல் தமிழகத்திலுள்ள முகாமில் பி…
-
- 0 replies
- 561 views
-
-
மதுரை: மதுரை அருகே டாஸ்மாக்கில் விற்ற மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்துள்ள காரியாப்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தவர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி. இவர்கள் இருவரும் இன்று (23ஆம் தேதி) அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் 'குவார்ட்டர்' ஒன்று வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்து ஓய்வுக் கூடத்திற்கு சென்று ஆளுக்கு பாதியாக குடித்து இருக்கிறார்கள். இந்நிலையில், பாதி குவார்ட்டரை குடித்து முடிப்பதற்குள் குருசாமி சம்பவ இடத்திலேயே தொண்டையை பிடித்துக் கொண்டு இறந்து விட்டார். இதையடுத்து, உயிருக்கு போராடிய மலைச்சாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவரு…
-
- 1 reply
- 476 views
-
-
கோவை: கோவை பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தாயம்மாள். இவரது வயது 117. இவரது கணவர் சின்னப்பசெட்டியார். இவரது 83வது வயதில் காலமானார். தாயம்மாளுக்கு 7 ஆண், 3 பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது, இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாயம்மாளின் முதல் 3 மகன்கள் காலமாகி னர். தற்போது, தாயம்மாளுக்கு 175 பேரக் குழந்தைகள் உள்ளனர். தாயம்மாள் நேற்று முன்தினம் காலமானார். தாயம்மாளின் உடல் ஆத்துப்பாலம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=97496
-
- 3 replies
- 450 views
-
-
ஈரோடு மகளிர் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் நடிகர் வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை 2012-ம் ஆண்டு குமரவேல், தனது மகள்கள் ஈரோடு லட்சுமிநகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கவுசல்யா, வித்யா, ரம்யா ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார். இந்த நிலத்தில், 38 சென்ட் நிலத்தை 2…
-
- 0 replies
- 858 views
-
-
வைகோ | கோப்புப் படம் இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்றும், தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் …
-
- 1 reply
- 728 views
-
-
சென்னை: கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும் படி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர…
-
- 1 reply
- 574 views
-
-
பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இறுதி வாதம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கில் கூடுதல் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களின் இயக்குநர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, 5 …
-
- 0 replies
- 488 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம் தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலை…
-
- 0 replies
- 486 views
-
-
குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் என்று அனைவரும் தெரிந்த விடயம்.தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வீட்டில் குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆய்வு நடத்திய போது 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த சிறுமிகளின் பெற்றோரின் அனுமதியுடன் தான் அவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்த குழந்தைகள் நல அமைப்பாளர்கள் மீண்டும் கங்கை அமரன் வீட்டிற்கு செல்லவுள்ளனர். http://virakesari.lk/articles/2014/06/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%…
-
- 0 replies
- 1.4k views
-
-
எளிய மனிதர்கள் வாழ்வைத் திரைமொழிக்கு இடம்பெயர்ப்பதில் தனித்தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான். கவர்ச்சிகரமான மேடைப்பேச்சுக்குரிய எந்த உத்தியையும் கையாளாமலேயே, தமிழர்கள் இழந்துவரும் மொழி, வாழ்முறை பற்றிய கருத்துகளை அதிர்வூட்டும் விதமாக எடுத்து வைப்பதில் தெளிந்த சிந்தனைக்காரர். இவரின் சமீபத்திய இலக்கு இளைஞர்கள். தேடித்தேடிப் போய் பேசுகிறார். குறிப்பிட வேண்டிய விஷயம் தன்னுடைய பேச்சில் சாதியத்துக்கு எதிரான போருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதரிடம் பேசவா விஷயம் இல்லை? பேசினேன். நடந்து முடிந்த தேர்தலைச் சிறப்பாக நடத்தியற்காகத் தேர்தல் ஆணையத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பாராட்டுகிறார்களே? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருடன் கையிலேயே கொடுக்…
-
- 12 replies
- 1.9k views
-
-
நடிகை குஷ்பு | கோப்புப் படம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக…
-
- 8 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்னுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக அதிக இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர ஒரே தேசியக் கட்சி 10 சதவிகித இடங்களைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அந்த அந்தஸ்தையும் இழந்துள்ள நிலையில், இந்தக் கடிதத்தை சோனியாகாந்தி, சுமித்ரா மகாஜன்னுக்கு எழுதியுள்ளார். கடிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும், 10 சதவிகிதம் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் இல்லை என்றும் குறி…
-
- 6 replies
- 712 views
-
-
ஜவஹர்லால் நேருவை ஆசியாவின் ஒளி என்று அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். ஆனால் நீண்ட காலம் ஆசியாவின் ஒளியாக திகழ்ந்த நேருவின் குடும்பம், நாட்டின் எதரி்காலத்தை, காங்கிரஸ் கட்சியை தற்போது இருளில் தள்ளியுள்ளது. 2014, மே 16 அன்று பிற்பகலில் காங்கிரசின் மிக நீண்ட வெற்றிப் பயணம், இருள் சூழ்ந்த பாதையாக மாற்றப்பட்டது. தேசிய அரசியலில் தனிப்பெரும் பலத்துடன் அசைக்க முடியாத கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அது தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், மத்திய அரசுடன் முரட்டுத்தனமான போக்கை கடைபிடிக்குமா அல்லது நீரில் கரையும் உப்பைப் போன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்ட…
-
- 0 replies
- 584 views
-
-
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் வைகோ. உண்ணாவிரதப் பந்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் வைகோ. சீமாந்திரா முதல்வராக பதவி யேற்றுக்கொண்ட விழாவில் தனது நீண்டகால நண்பரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து கவுரவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சீமாந்திரா முதல்வராக சந்திர பாபு நாயுடு கடந்த 8-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களோடு தனது நண்பர் வைகோவையும் சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். இதை ஏற்று, பதவியேற்பு விழாவில் வைகோவும் கலந்துகொண்டார். போராட்டத்திலும் கைகோத்தவர் இவர்கள் இருவரும் நீண்ட கா…
-
- 0 replies
- 599 views
-
-
நடிகர் அஜீத்குமார் தன்னிடம் வேலை செய்யும் 12 பணியாளர் களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். நடிகர் அஜீத் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் தன்னிடம் பணிபுரியும் வீட்டுக் காவலாளி, சமையல்காரர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கி அவரவர்களின் பெயரில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். கடந்த 8 மாதங்களாக நடந்து வந்த இந்த புதிய வீடுகள் கட்டுமானப்பணி தற்போது முழு வேலைகளும் முடிந்து கிரகப் பிரவேசத்திற்கு தயாராய் உள்ளது. அஜீத் வீட்டில் பணிபுரியும் 12 பணியாளர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் விரைவில் குடியேறவுள்ளனர். http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B5…
-
- 0 replies
- 968 views
-
-
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர். இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோத…
-
- 1 reply
- 662 views
-
-
சென்னை: தமிழகத்தில் இயங்கும் 20 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து வருவது குறித்த புகார்களின் அடிப்படையில், சுமார் 40 கல்லூரிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என இந்த கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த கல்லூரிகள் அங்கீகரிக்கப்படாத பாடத் திட்டங்களை நடத்தி வந்ததும் சோதனையில் கண்டுப…
-
- 0 replies
- 356 views
-
-
இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது, எப்படி வாங்குவது என்று 'பசுமை அங்காடி' பகுதி வழிகாட்டும். தொடர்புக்கு: uyirmoochu@thehindutamil.co.in ஆர்கானிக் பொருட்களைத் தொலைபேசி, இணையதளம் வழியாக வாங்க வழி செய்கிறது, சென்னை தி.நகரில் இருக்கும் எஃப் 5 ஸ்டோர் (F5 store). “பஞ்சப் பூதங்களின் எண்ணிக்கை, புத்துணர்ச்சி (F5- Refresh) ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிக்கும் வகையில்தான் எஃப் 5 (F 5) என்ற பெயரை வைத்தோம். ஒரு தொலைபேசி அழைப்பில் வீட்டுக்கே …
-
- 1 reply
- 601 views
-