தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நா…
-
- 0 replies
- 315 views
-
-
காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது. மன்னார்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
கச்சத்தீவு: 50 பேருக்கு மட்டும் அனுமதி - மீனவர்கள் எதிர்ப்பு! மின்னம்பலம்2022-02-25 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் கச்சத்தீவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். அதற்கு, தமிழக மீனவர்களும் கலந்துகொள்ளத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல இந்த வருடம், வருகிற மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை முதலில் அறிவித்தது. …
-
- 0 replies
- 314 views
-
-
தருமபுரியில் நவீன ஸ்கேன் மூலம் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு: 7 பேர் கைது - சிக்கியது எப்படி? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art
-
- 1 reply
- 314 views
-
-
இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 314 views
-
-
தமிழ்நாடு டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நீதிமன்றத்துடன் மோதுகிறதா நிர்வாகம்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATHAN G படக்குறிப்பு, குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டில்களை மதுவை காலி செய்த பின்னர் திரும்ப கொடுக்கும் விவகாரத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் 70 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சோதனையாக பாட்டில்களை திரும்பப் பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
பெற்றோர் பராமரிப்பு: வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAPEEPONG PUTTAKUMWONG / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (17/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) வயதான தந்தையை பராமரிக்கத் தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மகன் வைத்தியலிங்கம். மனைவியை இழ…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN CYBER CRIME DEPT நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதற்காக கீ லாகர் என்ற மென்பொருளை இவர்கள் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்ற…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் - காவல்துறையுடன் தள்ளு முள்ளு. [படங்கள்] http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13322:puthchery&catid=36:tamilnadu&Itemid=102 இந்திய பூரான்கள் இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு, கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செந்தமிழர் இயக்கம், உயிர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு இயக்கம், ஆகியவைகள் இணைந்து இன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், தபால் நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. புதுச்சேரி அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரி…
-
- 0 replies
- 314 views
-
-
மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை, திமுகவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதமரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது? அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் ப…
-
- 0 replies
- 314 views
-
-
ரஜினிகாந்தை முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் திகதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர். எனினும் ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. இந்த நிலையில், தம…
-
- 0 replies
- 314 views
-
-
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய…
-
- 0 replies
- 313 views
-
-
அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு! மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி பகுதிக்கு கள்ளத்தனமாக வந்தவர் அஜாய் (24). போலீஸாரால் பாஸ்போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிவுக்கு பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மண்டபத்தில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜாய் திடீரென முகாமில் இருந்து மாயமானார்…
-
- 0 replies
- 313 views
-
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் - அண்ணாமலை உள்ளிட்டோர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் By VISHNU 03 FEB, 2023 | 04:39 PM (நா.தனுஜா) இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்கள…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார். இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லட…
-
- 0 replies
- 313 views
-
-
கூடங்குளம் அணுவுலைக் கெதிரான போராட்டத்தில் போராட்டகாரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மாநில அரசை வலியுறுத்தியும், மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக மூடக்கோரியும் எஸ்.டி.பி .ஐ கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(03.08.2013) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொது செயலாளர் எ.கே.கரீம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாப்பு…
-
- 0 replies
- 313 views
-
-
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. 11 ஆகஸ்ட் 2023, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். வேலூ…
-
- 3 replies
- 313 views
- 1 follower
-
-
தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 21 ஏப்ரல் 2022, 09:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது? அமைச்சர் சொன்ன காரணம் கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மி…
-
- 1 reply
- 313 views
- 1 follower
-
-
ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கின்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதன் பட்டியல் இதோ:…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழகம்- கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட தாமதித்து வந்தது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்ததால் கண்காணிப்பு குழு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்தி…
-
- 0 replies
- 313 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், சுப கோமதி பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றிடும் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி கிராமத்தில் நடந்த சைபர் மோசடி தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் எபனேசர் என்பவருக்குச் சொந்தமான மரக்கடை உள்ளது. அங்குள்ள அறை ஒன்றில் மரக்கடைக்கு சம்பந்தம் இல்லாத தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதாகவும் …
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று January 17, 2025 11:36 am மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று. இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளால…
-
- 1 reply
- 313 views
-
-
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தர விட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி சித்திரை திருவிழா என்ற பெயரில் பா.ம.க. சார்பில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கலவரம் வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கலவரம் காரணமாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பா.ம.க.வினரால் சேதப்படுத்தப்பட்டன. சில பேருந்…
-
- 0 replies
- 313 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 11 ஏப்ரல் 2024 தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாகி வருகிறது, ஹைதராபாத்-இல் அடுத்த சில வாரங்களில் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை பார்க்கும் போது, சென்னையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெங்களூரூவுக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்று நீரை பெற்று வரும் நீர் நிலைகளில் 39…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-