தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10264 topics in this forum
-
சென்னை: மறைந்த மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பா.ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் சுதீஷ், அவைத் தலைவர் ப…
-
- 0 replies
- 413 views
-
-
சிறிலங்கா தொடர்பாக இந்திய மத்திய அரசின் 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனம் - ஜெயலலிதா அதிருப்தி [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 07:43 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா கடற்படையால் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது 'சாதுவான, கோழைத்தனமான' கண்டனத்தை வெளியிடுவதானது தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு ஊக்கத்தை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா செவ்வாயன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அதிருப்தியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். "எமது மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினரால் மீண்டும் மீண்டும் மே…
-
- 0 replies
- 351 views
-
-
(facebook)
-
- 0 replies
- 1.1k views
-
-
திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் மோதல்: இலங்கை அகதி கைது 15 அக்டோபர் 2013 திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், இலங்கை அகதிகளை தடுத்துவைது கண்காணிக்க சிறப்பு முகாம் சிறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய நிர்மல் ஆனந்த், மற்றும் 32 வயதுடைய இலங்கநாதன், ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது. சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவலறிந்த சிறை பொலிஸார் நிர்மல்குமாரை மீட்டு, சிறை வளாகத…
-
- 0 replies
- 350 views
-
-
“தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” – தோழர் பெ.மணியரசன் உரை! “தமிழீழம் விடுதலையடைய நூறு காரணங்கள் இருக்கின்றன! தமிழ்நாடு விடுதலையடைய நூற்றிரண்டு காரணங்கள் இருக்கின்றன!” நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் உரை! தமிழின உணர்வாளர்களுக்கு நாமக்கல் பகுதியில் துணை நின்ற திரு. நா.ப.இராமசாமி அவர்கள் கடந்த 23.09.2013 அன்று நாமக்கலில் காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்வு 10.10.2013 அன்று நாமக்கல் – திருச்செங்கோடு சாலை – சுப்புலட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிலம்பொழி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் க…
-
- 0 replies
- 786 views
-
-
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா நாட்டின் பிரதமரானாலும் தமக்கு மகிழ்ச்சிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பேட்டியளித்துள்ளார். தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன? தேசிய அளவில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டிச் செயல்படுவோம். மாநில அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம். கேள்வி: மோடி அலை உண்மையா? எடுபடுமா? பதில்: மோடி ஒரு ரப்பர் பலூன். ஊடகங்கள்தான் அதைப் பறக்க விடுகின்றன. தேர்தலுக்குப் பின் காற்று இறங்கி, ரப்பர் கிழிசலாக அது கீழே விழுந்து கிடப்பதைப் பார்ப்பீர்கள். கேள்வி: ஜெயலலிதாவின் பிரதமர் கனவு? பதில்: 3வது அணியின் சார்பில்…
-
- 2 replies
- 609 views
-
-
தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் ஆற்றிய உரை:
-
- 0 replies
- 646 views
-
-
காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணி…
-
- 0 replies
- 843 views
-
-
ஒடிஷாவை பாய்லின் புயல் தாக்கியபோது கடலில் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் 12 மணிநேரம் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்பிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22-09-2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12-10-2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர். …
-
- 1 reply
- 503 views
-
-
சீமான் அவர்களின் திருமண வைபவம் http://youtu.be/a-f-XFM9O5o
-
- 0 replies
- 489 views
-
-
தள்ளாடும் வயது; தளராத உறுதி 110 வயது அண்ணன் 108 வயது தங்கை வேலை செய்து பிழைக்க ஆச்சரியம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன். இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது. மன…
-
- 0 replies
- 522 views
-
-
நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் விலகியதற்கான காரனத்தை விளக்கி அண்ணன் சீமான் அவர்களுக்கு கொடுத்த கடிதத்தை தமிழ் உறவுகளின் விவாததிற்கு வைக்கிறேன், தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் நன்றி வணக்கம். https://www.facebook.com/photo.php?fbid=349408305204865&set=pcb.349408331871529&type=1&theater
-
- 2 replies
- 838 views
-
-
00:50:31 Friday 2013-10-11 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மரைன் போலீசார் நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரிச்சல்முனை கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சிஸ்லி அம்மாள்(48), இவரது பேரன்கள் சியாக்கின்(6), லெட்சன்(2) என்பதும் அதிகாலையில் படகில் வந்திறங்கியதாகவும் தெரிவித்தனர். சிஸ்லி அம்மாள் போலீசாரிடம் கூறுகையில், ''மருமகன் பிரதீபன்(29) வாங்கிய கடனுக்காக கந்து வட்டி கும்பல் மிரட்டுகிறது. இதற்கு பயந்து வந்துள்ளேன்'' என்றார். 2 நாளுக்கு முன் பேரன்களுடன் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு மன்னார் வந்து பின்னர் நேற்று முன்தினம் இரவு த…
-
- 0 replies
- 572 views
-
-
இந்திய அரசே ! மன்மோகன் சிங்கே கொழும்பு உச்சி மாநாட்டிற்குச்செல்லாதே! காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்து!’என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச் சாவு…’ என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கிய தோழர் தியாகு, இன்றோடு, பத்து நாட்களை கடந்திருக்கிறார். முன்னதாக அக்டோபர் 7 ஆம் தேதி, தமிழக அரசு அவரை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து கைது செய்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொன்று சேர்த்தது. அங்குப் போன பிறகும் தனது பட்டினிப் போராட்டதை தொடர்ந்தார். தொடர்கிறார். 4 ஆம் தேதி அவரை நான் உண்ணாவிரத பந்தலில் சந்தித்தேன். இன்றும் (10.10.2013) மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அன்று இருந்த மன உறுதி இன்னும் கூடுதலாகி இருக்கிறது அவரிடம். ஆனால் அரசுக்கு…
-
- 0 replies
- 510 views
-
-
எம் கோரிக்கைகள்தாம் எமது உயிர் - தோழர் தியாகு நேர்காணல் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடக்க இருக்கிறது. அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்தொழித்த சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமரோ இந்திய அரசின் வேறொரு பிரதிநிதியோ கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் தமிழகக் கிளையும் அடக்கம். இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாட்டைப…
-
- 0 replies
- 396 views
-
-
யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்! அதிக பணக்காரர்களும் மிக அதிக ஏழைகளும் வாழும் நாடாக இந்தியா மாறும். ராக்கெட் விட்டாலும் வல்லரசாகாது சுயமா ராக்கெட் விடாதவரை. எவனோ செய்த ராக்கெட்டை விடுவதில் என்ன பெருமை? cryogenic engine நம்மளால செய்ய முடியுமா? cryogenic technology -ம் காசு கொடுத்து வாங்கனும். சுயமா என்ன கண்டுபிடிச்சு இருக்கோம்? சொல்லுங்கள் நண்பர்களே! எப்படி இதே இந்தியர்கள் மேலை நாடுகளுக்கு வந்தால் பிராகாசிக்கிறார்கள்? அதுவும் இங்கு பிறக்கும் [இந்தியருக்கு பிறந்த] குழந்தைகள் நிறைய கண்டு பிடிப்பார்கள் வரும் காலங்களில். இளம் விஞ்ஞானிகளில் நிறைய நம்ம குழந்தைகள் இருக்கிறார்கள். நமது கலவி முறை மாறாத வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்--உருப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி. எனவ…
-
- 1 reply
- 458 views
-
-
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்:- பொது நல வழக்கு 09 அக்டோபர் 2013 இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கும் வழக்கு - 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மேல் நீதிமன்றில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்ற சட்டத்தரணி பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்தச் சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை…
-
- 0 replies
- 512 views
-
-
சிவகங்கை மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க ரூ.49 லட்சத்து 32 ஆயிரம் நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டிடம் கட்டுவதற்கும்…
-
- 0 replies
- 484 views
-
-
Fast-unto-death activist demands New Delhi to respect TN Assembly, boycott CHOGM [TamilNet, Monday, 07 October 2013, 05:03 GMT] Putting forward 9 concrete demands, Thoazhar (Comrade) Thiyagu, a veteran Tamil activist from Tamil Nadu, has been on a fast-unto-death campaign since October 01st at Va'l'luvar-koaddam in Chennai in Tamil Nadu. As his campaign entered 6th day on Monday, Thoazhar Thiyagu is determined to take forward the struggle, despite doctors warn him about deteriorating health. The genocidal Sri Lankan State should be suspended from the Commonwealth, the venue for the upcoming CHOGM meet should be shifted away from Sri Lanka and the Indian leaders sh…
-
- 11 replies
- 2.6k views
-
-
(07-10-13) » தோழர் தியாகுவின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் – திரு முருகன் விளக்க http://irruppu.com/?p=37535
-
- 0 replies
- 399 views
-
-
காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்கள். காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி யினரும் ஒன் றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பழ.நெடு மாறன் நல்லக்கண்ணு வலியுறுத்தி யுள்ளனர். பொதுக்கூட்டம் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்…
-
- 0 replies
- 478 views
-
-
சி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றத்தில் ஒரு பயனும் இல்லை! : வைகோ TUESDAY, 08 OCTOBER 2013 08:41 இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்றிருப்பதால் ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றதில் துளியளவும் மகிழ்ச்சி இல்லை. விக்னேஸ்வரன் முதல்வரானாலும் தமிழருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை!. காரணம், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? இலங்கை வடக்கு மாகாண தேர்தல் உலக…
-
- 0 replies
- 403 views
-
-
வெற்றியா அல்லது வீரச்சாவா? வா. மணிகண்டன் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊர் வழியாக ஒரு நடைப்பயணம் நடைபெற்றது. தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி சில போராளிகள் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அது தாய்த்தமிழ் பள்ளி கட்டுவதற்கான நிதி வசூல் என்று நினைக்கிறேன். ‘வீட்டிற்கு ஒரு செங்கல்’ என்கிற கோஷத்துடன் தங்களின் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்கள். தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கும் குடும்பங்கள் இந்தப் பள்ளி துவங்குவதற்காக ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்களின் வேண்டுகோள்களில் ஒன்று. தோழர் தியாகுதான் நடைப்பயணத்திற்கு தலைமை தாங்கினார். பிரச்சாரக் குழுவில் வந்தவர்களுக்கு அன்றைய தினத்தின் மதிய உணவு எங்கள் ஊரில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நான் ட்ரவுசர் போட்டுத் தி…
-
- 1 reply
- 459 views
-
-
நாளை (03.04.2013) நடக்கும் அணு உலை போராட்டத்தை ஒடுக்க இன்றே காவல்துறை அராஜகம் Tuesday 2nd April 2013 , 21:51:01 நாளை கூட்டப்புளி அருகில் உள்ள அணுமின் நகரியை முற்றுகையிடுவதாக அணு உலை போராட்டக் குழு முன்னதாக அறிவித்தது . அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்றே தமிழக காவ துறை ஏராளமான பேர் கூட்டப் புளி கிராமத்தை முற்றுகையிட்டனர் . அத்தோடு நின்று விடாமல் , அத்துமீறி ஊருக்குள் நுழைந்த போது, ஊர்மக்கள் அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளனர் . இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை , மக்களை கலைக்கும் நோக்கில் முதலில் தடியடி நடத்தி உள்ளனர் . பின்பு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் . இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் காலாவதியான குண்டுகள் என்பது…
-
- 31 replies
- 2k views
-