Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்…

  2. முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நன்றி நக்கீரன் .

  3. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : புதிய நீதிபதி விசாரணை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வந்த போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் கும்ஹா விசாரணை நடத்தினார். இதுவரையிலான வழக்கு விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். இந்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜராகி நீதிபதிக்கு விளக்கம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil24news.com/news/archives/117847

  4. Thirumurugan Gandhi: நீண்ட நாட்களாக உழைத்து உண்மையை வெளியே கொண்டு வர பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் தோழர்கள்..நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் மற்றும் மரணதண்டனைக் குறித்து அறிவதற்கான மிக மிக முக்கிய ஆவணம். வெள்ளி மாலையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அவசியம் பார்க்கவும், பரப்பவும். இதற்கான கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை, 23-நவ, தி. நகர் - சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடக்கிறது. அனைவரும் அவசியம் வரவேண்டும்.. இது தமிழ்ச் சமூகத்தின் வலி. அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம். குறுஞ்செய்திகள், நேரடி அழைப்புகள், மின்னஞ்சல் மூலமாக அனைவரிடத்தில் பரப்புவது நம் கடமை... அடுத்த மாதத்தில் மூவ…

  5. பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியை நிலைநாட்டுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறினார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கேல் குன்ஹாவை கர்நாடக அரசு நியமித்தது. இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "எனக்கு புதிய வழக்கு என்பதால் ஆரம்பத்தி்ல் இருந்து …

  6. இலங்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. உலக தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ந்தேதி இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என கூறப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதனை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் போலீஸ் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக…

  7. இங்கை ஜனாதிபதிக்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இவ்வாறு தெரிவிக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... கனடா, பிரிட்டன், மொரீஷியஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது.அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார்.இந்தப் புகழும், பெருமையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும்…

  8. புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கோல் குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது. இந்நிலையில், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு சார்பில் இன்…

  9. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக பிரித்தானிய பிரதமர் குரல் கொடுத்தமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கமரூன் எடுத்துக் கொண்ட முனைப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…

  10. சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரடி தொலைபேசி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்மை தரக்குறைவாக பேசிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி போலீசில் புகார் அளித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்த…

  11. அண்ணா அறிவாலயத்தில், டெசோ மாநாடு தொடங்கியது. http://www.youtube.com/watch?v=9Ijc1JEowmA

  12. உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறார். "சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது " என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில் ஒரு சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்! 'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறத…

  13. அநீதிகளுக்கும் ,அடக்குமுறைகளுக்கும் ,இன படுகொலைக்கும் எதிராக நாளை புது டெல்லி யில் பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பு November 14, 2013 Venue: Press Club, New Delhi Time: 3 pm to 8 pm Program Schedule: 3.00 pm to 4.00 pm 1. Press Meet: "The Condition of Muslim Prisoners in India" Presided by Prof. S. A. R. Geelani and Mr. Umar Kayan Co-ordinator, Islamic Youth Movement Against Genocide, along with Hon. Simranjith Singh Mann, President, Shiromani Akali Dal (Amristar), Mr. Syed Akhlak Ahmad, Secretary, Delhi Chapter, Association for Protection of Civil Rights (APCR), Mr. Feroz Khan Ghazi, Secretary General, South Asian Minorities Lawyers Association (SAMLA), Mr. Thi…

  14. சென்னை: நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் கூட்டம், கருணாநிதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டொசோ அமைப்பு சார்பில் விடுத்துள்ள அறிவிப்பில், ''தமிழ் ஈழம் அதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் டெசோஅமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=21288

  15. சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு…

  16. சென்னை: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை இன்று (12ஆம் தேதி) மாலை 6 மணிக்கு கூடியது. அப்போது, பேரவைத் தலைவர் ''அரசினர் தீர்மானம் ஒன்றை முதல்வர் கொண்டு வருவார்'' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் உரைக்குப் பிறகு அரசினர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:- ''இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என்று இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மத்திய அரசு அதை ஏற்காதது தமிழர்களுக்கு ஆழ…

    • 3 replies
    • 554 views
  17. http://tamilepaper.blogspot.in/2013/11/blog-post_168.html http://tamilepaper.blogspot.in/2013/11/blog-post_12.html http://tamilepaper.blogspot.in/p/maalaimalar.html http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=12112013 ========================================================================

  18. நடிகர் சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் சிட்டிபாபு ( வயது49). திருமணமாகி, ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பல ஆண்டுகளாக, நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். சென்னை, முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் அடைப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பது …

  19. சென்னை: சென்னையில் கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் கடைகளை அடைக்கமாட்டோம் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி நாளை தமிழம் முழுவதும் கடையடைப்பு நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையில் எல்லோருக்கும் அக்கறை உண்டு. வியாபாரிகளும் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்காக கடைகளை அடைத்தால் ஒவ்வொரு கடைக்காரர்களும் தனிப்பட்ட முறையில் நஷ்டப்படுவார்கள். எனவே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல், பேரணி நடத்துங்கள். அதற்கு ஆதரவு அளிக்கிறோம். அதை விட்டுவிட்டு கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர…

  20. “நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி” உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோய…

  21. காஞ்சிபுரம்: இலங்கைப் பிரச்னை தீர்ந்தால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய் விடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறினார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசுகையில், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இங்குள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அங்கு தேர்தல் நடத்தி தமிழர் ஒருவரை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இலங்கைப் பிரச்னை தீர்ந்தால் இங்குள்ள சில அரசியல் கட்சி…

  22. ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம்கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்... • அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும். • நிலத்தடி நீர் உப்பானால் அங்கு வி…

  23. ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்வதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்கின்றனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எட…

  24. முழு அடைப்பு: ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வைகோ வேண்டுகோள்! சென்னை: ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கையை, காமன்வெல்த்திலிருந்து நீக்கக் கோரி வரும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி, ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.