Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுவை: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக 6 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் 6 பேரும் சபாநாயகரை சந்தித்தும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக முதல்வராக பதவி வகித்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே ரங்கசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக ஆளுநர் கட்டாரியாவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரசிலேயே ரங்கசாமிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 எம்.எல்.ஏக்கள் இன்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். …

  2. கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று பிற்பகல் ஒரு தகவல் வந்தது. அதில் ‘‘அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேர் கோவையில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கோவை விமான நிலையத்தை தகர்க்க போகிறார்கள். இதனை நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு வந்த 2 பேர் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இ-மெயில் தகவல் விமான நிலைய அதிகாரிகளுக்கும், கோவை மாநகர போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. மறு நிமிடமே போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. விமான நிலைய தொழிற்பாதுகாப்பு படையினர் விமான நி…

  3. சென்னை: 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சமூக நீதி அமைப்பு சார்பில் பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 21 வயதுக்குட்பட்டோர், பள்ளி மாணவர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சட்டத்தை மீறி 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்கப்படுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/tamilnadu/liquor-sale-hc-…

  4. சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது, தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்கு…

  5. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…

  6. செங்கோட்டை: செங்கோட்டை சைவ பிள்ளையார் கோவிலில் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹரா நதியின் கரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றால விநாயகர் ஆலயம். இதை சைவ பிள்ளையார் கோவில் என்று இப்பகுதியினர் அழைப்பார்கள். இந்த ஆலயம் செங்கோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆலயத்தில் நேற்று இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கங்காதரன் கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் 7மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு மற்றும் மூலவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், கோவில் தங்க,வெள்ளி.பொருட்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் கண்டு திடுக்கிட்ட அ…

  7. பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. Image source:commons.wikimedia.org இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கண்டுணர்வீர்கள். இங்கு ஆண்டுதோற…

  8. சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம். சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் …

  9. கொன்று குவிக்கப்பட்ட ஈழஉறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம்சகோதரிகளுக்கும் நீதிகேட்டு தமிழக மாணவர்களினால் மிதிவண்டி பயண போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த மிதிவண்டி பயணத்தின்போது திருச்சி பகுதியினை சேர்ந்த ம.தி.மு.க கட்சியின்னர்,நாம்தமிழர் கட்சியினர் ,மனிதநேயமக்கள் கட்சியினர்,உள்ளிட்ட தமிழ்உணர்வு அமைப்புக்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று திரண்டு இந்த மாணவர்களின் மிதிவண்டி போராட்ட பயணத்தினை தொடக்கியுள்ளார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை வைகோ,சீமான்,எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். எதிர்வரும் 23 ஆம் நாள் இந்த மிதிவண்டி பயண போராட்டம் ச…

  10. எதிர்வரும் ஞாயிறு, 29.09.2013 அன்று சுவிஸ் Schaffhausen மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடபடவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறித்தருகின்றேன்.

  11. மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது. இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள…

  12. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…

  13. சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பெரியாரின் 135-ஆவது பிறந்த நாள், அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள், திமுகவின் 65-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. வேலூரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா, தொடர் மழை காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும் அண்ணாவ…

  14. தாது மணல் எடுக்கப்பட்ட கடற்கரை (ஆவணப்படம்) தமிழக அரசு மாநிலத்தில் கடற்கரை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியினை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட் டம் வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக அண்மையில் புகார்கள் எழ, தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தவென வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரண்டு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை தோண்டி எடுக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையினை இன்று (செவ்வாய்) அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்…

  15. சேது சமுத்திரம்: தடையை நீக்க மத்திய அரசு மனு… பழைய வழித்தடத்திலேயே திட்டத்தை தொடர முடிவு. டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அத் திட்டத்தை பழைய வழித்தடத்திலேயே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் பாலம் வழியாக சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை சேதப்…

  16. திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ரூ 200 கோடி அளவு முறைகேடு என்ற புகாரில் முகாந்திரம் இருப்பின் அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக தலைவர் மு கருணாநிதி கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்தது. வழக்கறிஞர் ரமேஷ்குமார் தான் அம் மாநாட்டுச் செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அக்கௌண்டட் ஜெனரல் அலுவலகம் ரூ 151.22 கோடி செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது, ஆனால் அம்மூன்றுநாள் மாநாட்டிற்காக 350 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக அன்றைய முதல்வர் மு கருணாநிதி சட்ட…

  17. விருதுநகர்: தன் குடும்பத்திற்காக, அண்ணாதுரையின் கொள்கைகளை கருணாநிதி குழிதோண்டி புதைத்துவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், திமுக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாவின் பிறந்நாளை ஒட்டி விருதுநகரில் மதிமுகவின் மாநாடு நேற்று நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் முக்கியத் தலைவர் பேசினார்கள். மாலையில் சிறப்புரையாற்றிய வைகோ கூறியதாவது: விருதுநகர் மண், திராவிட இயக்கத்தை வளர்த்தது. கடந்த 20 ஆண்டாக நாங்கள், பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வருகிறோம். 2014 லோக்சபா தேர்தல், கதவை தட்டுகிறது; நாம் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், லோக்சபா தேர்தலில் போ…

  18. விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்! விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம் : * காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9½ ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறி திளைத்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே வருகிற 201…

  19. சென்னை: மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் மத வெறி ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானவர் அவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் அவரை அத்வானி போன்ற தலைவர்கள…

  20. பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்திருந்தும் செல்போன்களை மாணவர்கள் கொண்டுதான் செல்கிறார்கள். செல்போன்கள் மூலம் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது. வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். இதனால் பாடத்தில் கவனம் சிதறுவதோடு, தேர்வில் தோல்வி அ…

  21. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடத்தப்படுகின்ற இந்த கருத்துக் கணிப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு கருத்துக் கணிப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைய சர்வதேச ரீதியாக வாழ்கிற தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டி…

  22. தனித்தமிழீழம் அமையும் வரைக்கும் மாணவர்களாகிய நாங்கள் அண்ணான் செந்தில்குமரனின் உடல்மீது உறுதிகொண்டு நாங்கள் பயணம் செய்கிறோம் எட்டுத்திக்கும் பரவுவோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் ஜோ.பிரிட்டோ தெரிவித்துள்ளார்(காணொளி) பாலச்சந்திரன் படுகொலையினை பார்த்து மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்களோ அதைபோன் ஆதங்கத்தையும் கோபத்தையும் நெருப்பையும் எங்கள் மனதிற்குள் செந்தில்குமரன் ஏற்றியிருக்கின்றார். எங்களின் விடியல் வெகு தொலைவில் இல்லை செந்தில் குமரன் அண்ணாவின் மீது உறுதிகூறி சொல்லுகின்றோம் திருச்சியில் இருந்து சென்னை வரை சையிக்கில் பயணமா செல்லவுள்ளோம். இனப்படுகொலைக்கு நீதிகேட்டு வீதிவீதியாக செல்லவுள்ளோம் தமிழ் தங்கைகளுக்கு தாய்க்கு முன்னால் எதுநடந்ததே தந்தைக்கு முன…

  23. தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ…

  24. இலங்கை அகதி வி.எம்.பி.நேரு என்ற ஈழ நேரு திருச்சி அகதிகள் முகாமில் உள்ளார். அவரது விருப்பத்துக்கு மாறாக அரசு அவரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரித்து, ஈழ நேருவின் விவகாரத்தில் தற்போதய நிலையே நீடிக்க வேண்டும், அவரை நாடு கடத்த கூடாது. வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இலங்கை அகதி செந்தூரானை நாடு கடத்த தடை கோரி வக்கீல் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து, செந்தூரானை நாடு கடத்த தடை விதித்தது. இதை தொட…

  25. சென்னை நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவதாக நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு காத்திருக்கும் மக்கள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் 330 கோடி ரூபாய்கள் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு டி எம் சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று அரச தரப்பு கூறுகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படும் எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. உபரி நீரைத் தேக்க உதவும் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஒரு தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.