தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவு படுத்திய மலையாள பெண்மணி மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் அமைப்புகள் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாயே என்று கூறிய மலையாள பெண்மணிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க சின்னத் திரை கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவியும் காவல் துறையால் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற செய்தியும், மலையாளிகள் எப்படி உயர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்தனர். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் அவ…
-
- 1 reply
- 958 views
-
-
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள பட்டினிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது இந்திய– இலங்கை கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று கூறி, நமது நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் வலைகளை அறுத்தெறிவதும், அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களை கவர்ந்து செல்வதும், அவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்துவதும், பிறகு அவர்களை இலங்கைக்கு கடத்திச் சென்று சிறையில் அடைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தமிழக மீனவர்கள் இந்தியர்கள்…
-
- 2 replies
- 385 views
-
-
உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான்- குஷ்பு தஞ்சாவூர்: ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தக் கூடிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தஞ்சாவூரில் நேற்று ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு குஷ்பு தலைமை தாங்கினார். பின்னர் ஒரு குட்டி மேடையில் நின்றபடி குஷ்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குடிபெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். அவரது முயற்சியால் தான் ஐ.நா.சபையில் ஈழதமிழர்களுக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை தோன்றியது …
-
- 12 replies
- 3.1k views
-
-
ஜெயலலிதா கூறியதுபோல் இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா! இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் த…
-
- 3 replies
- 363 views
-
-
ஜான் ஆபிரஹாம் தயாரித்து நடித்திருக்கும் மெட்ராஸ் கஃபே படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி படத்தை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்த நிலையில், ராமதாஸும் படத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஹிந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் 'மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எத…
-
- 10 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான் இந்த அமைப்பு உருவாகவே காரணம். அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய கருணாநிதி மேலும் தெரிவிக்கையில், இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்திற்காக அல்ல இது ஒரு கட்சியினுடைய குறிப்பிட்ட கொள்கை அல்ல. இது தமிழர்களுடைய குரலை எதிரொலிக்கின்ற நிகழ்ச்சி. 'டெசோ" இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்…
-
- 7 replies
- 2.8k views
-
-
சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீ…
-
- 2 replies
- 809 views
-
-
இன்று நடைபெற்ற தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் பயிற்று மொழியாக்கும் கோரிக்கை பேரணி மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது. எல்லா கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் சார்பிலும் பெரும்திரளான தோழர்கள் இந்த பேரணியில் பங்கேற்று கைதானார்கள். கைக்குழந்தையுடன் ஒரு தாயும் மற்றொரு தந்தையும் கொளுத்தும் வெயிலில் கலந்து கொண்டதை பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்ச்சியுற்றது. அன்னைத் தமிழை காக்க எத்தனை தியாகங்களும் செய்ய இவர்கள் அணியமாக உள்ளனர் என்பது மட்டும் தெரிந்தது. சாதி மதம் கடந்து அனைத்து கட்சிகளும் பேதங்கள் இன்றி இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மதம் சார்ந்த கட்சிகளில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியது. தமிழ் மொழியை காக்க அணி அணியாக இளையோர்கள், வயதானோர், அற…
-
- 3 replies
- 692 views
-
-
தமிழ்நாடு இழந்த பகுதிகள் முத்தமிழ் வேந்தன் இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது ‘முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பே…
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இலங்கையில் நடைபெற உள்ள ''காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும் டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று ப…
-
- 3 replies
- 580 views
-
-
திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு பசும்பொன்ராஜா திருத்தணி நகர எல்லையில் சித்தூர் சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் அவரது மோட்டார்சைக்கிளும், செல்போனும் கிடந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பசும்பொன் ராஜா உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மதியம் பசும் பொன்ராஜா உடல் பரி…
-
- 4 replies
- 647 views
-
-
நாகப்பட்டிணம்: இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் சார்பில் 10ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது. நாகை மாவட்ட மீனவர்கள் 5 விசைப்படகுகளிலும், காரைக்கால் மீனவர்கள் 4 விசைப்படகுகளிலும் என மொத்தம் 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க தென்கிழக்கு பகுதி நடுகடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் 9 விசைப்படகுகளையும், 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கூட்டி சென்றனர். இதில் 41 பேர் நாகையை சேர்ந்தவர்கள், 24 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 34 பேர் யாழ்பாணம் சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மீனவர்க…
-
- 0 replies
- 368 views
-
-
திருவள்ளூர்: திருத்தணியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் ராஜா(32). நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை செயலாளர். அவர் அகூர் பகுதியில் கோணிப்பை தைத்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி சரண்யா. அவர்களின் மகன் மருதப்பாண்டியன்(4). நேற்று மதியம் கடைக்கு சென்ற ராஜா இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கவலை அடைந்த சரண்யா அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை தெரிவித்து அவர்கள் உதவியுடன் தனது கணவரை தேடினார். இந்நிலையில் சித்தூர்-திருத்தணி சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நள்ளிரவு 1 மணி அளவில் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…
-
- 0 replies
- 363 views
-
-
சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெ…
-
- 0 replies
- 329 views
-
-
சென்னை: தூய்மையான எண்ணத்துடன் எளிமையாக வாழுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா இப்தார் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்பாட்டின்படி, அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியினை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் கடுமையாக நோன்பு இர…
-
- 1 reply
- 250 views
-
-
சித்தூர்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானாவை உருவாக்கினால் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரி, நாகலாபுரம், விஜயபுரம் பகுதிகளை தமிழ்நாட்டின் இணைக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். நகரி, நாகலா புரம், விஜயபுரம் போன்ற பகுதிகளில் 60% தமிழர்கள் உள்ளனர். ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆந்திரா பிரிவது உறுதியானால் எங்கள் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்து நகரி தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆ…
-
- 2 replies
- 529 views
-
-
விருதுநகர்: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் கட்சிகளுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக ம.தி.மு.க. திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. விருதுநகர் மாநாடு மாநாட்டு பந்தலுக்கான பந்தக்கால் நடும்விழா இன்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. அப்போது, நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்பட தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விருதுநகரில் நடக்…
-
- 1 reply
- 434 views
-
-
விருதுநகரில் செப்டம்பர் 15–ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாநாடு நடைபெறும் இடமான விருதுநகர்–சாத்தூர் சாலையில் மாநாடு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடை பெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15–ந்தேதி காமராஜர் பிறந்த பூமியில் ம.தி.மு.க. மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நடைபெறும் மாநாட்டுக்கு உயர்நிலைக் குழு ஜெபராஜ் தலைமை தாங்குகிறார். சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சண்முகசுந்தரம் வரவேற்று பேசுகிறார். இந்த மாநாடு மாற்று அர…
-
- 0 replies
- 341 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன். இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி ராமேசுவரத்தில் மீன் ப…
-
- 1 reply
- 401 views
-
-
"தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." சரவணை மைந்தன் NEWS தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல். தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த…
-
- 5 replies
- 915 views
-
-
இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது ஈழ உணர்வாளர் காளிமுத்து கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து …
-
- 135 replies
- 11.5k views
-
-
சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/05/tamilnadu-chennai-metro-rail-trial-run-10-days-180537.html பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன. இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ…
-
- 13 replies
- 1.8k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு தெரியாது, எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn…
-
- 6 replies
- 624 views
-
-
டெல்லி: இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிந்த பிறகு முறையே தேர்தல் நடத்தி திமுகவின் கனிமொழி உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கனிமொழியை தவிர மற்ற 5 பேரும் கடந்த மாதம் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அப்போது ஆடி போர்க்காலம் நடந்ததால் தான் கனிமொழி பதவி ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்காலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அப்போது கனிமொழி …
-
- 2 replies
- 304 views
-
-
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது : ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் , என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு "இரட்டை நாக்கு", "இரட்டை வேடம்", "கபட நாடகம்", "முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது", "அந்தர்பல்டி அடிப்பது", "குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார். அந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்ப…
-
- 5 replies
- 578 views
-