Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…

  2. பா.ம.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பா.ம.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 19 வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பென்னாகரத்தில் ஜி.கே. மணி, ஆத்தூரில் திலகபாமா, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர் பாலு, சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதுதவிர கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் திருக்கச்சூர் ஆறுமுகம், ஆற்காட்டில் இளவழகன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் வெங்கடேஸ்வரன், செஞ்சியில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மயிலாடுதுறையில் பழனிசாமி, விருத்தாசலத்தில் கார்த்திகேயன், சேப்பாக்கத்தில் கஸ்ஸாலி, நெய…

  3. பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்ம…

  4. 'தலைவரே... மீன் செலவு என்னுடையது!' கூவத்தூர் ரிசார்ட் ருசிகரம் #VikatanExclusive ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மீன் செலவு என்னுடையது என்று பொறுப்பேற்றுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அதோடு எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி குடும்பம் சிறப்பாக கவனித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மன்னார்குடி குடும்பத்தினருட…

  5. சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்! சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47. சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்…

  6. "நீட்" தேர்வை... இரத்து செய்ய, சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜுலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை நிதிநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள பயன்படும். மேலும் நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்’ எனத் தெரிவித்தார். …

  7. சென்னை: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கி…

  8. சசிகலா கணவர் நடராஜனுடன் திருநாவுக்கரசர் ‘திடீர்’ சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு சசிகலா கணவர் நடராஜனுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதாரண்யம் வந்தார். அங்கு உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிக…

  9. கோவை: கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்கு…

  10. விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: சங்கர் ஜிவால் மின்னம்பலம்2021-09-05 சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று அரசின் அறிவிப்பை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். வருகிற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. ஆனால், தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி உண்டு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்…

  11. 00:50:31 Friday 2013-10-11 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மரைன் போலீசார் நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரிச்சல்முனை கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சிஸ்லி அம்மாள்(48), இவரது பேரன்கள் சியாக்கின்(6), லெட்சன்(2) என்பதும் அதிகாலையில் படகில் வந்திறங்கியதாகவும் தெரிவித்தனர். சிஸ்லி அம்மாள் போலீசாரிடம் கூறுகையில், ''மருமகன் பிரதீபன்(29) வாங்கிய கடனுக்காக கந்து வட்டி கும்பல் மிரட்டுகிறது. இதற்கு பயந்து வந்துள்ளேன்'' என்றார். 2 நாளுக்கு முன் பேரன்களுடன் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு மன்னார் வந்து பின்னர் நேற்று முன்தினம் இரவு த…

  12. சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 8 நவம்பர் 2021, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், `காலநிலை மாறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்குள் அதீத கனமழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில…

  13. 1st November 2013 சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவத…

  14. சஞ்சீப் பானர்ஜி: "ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியாமல் செல்கிறேன்" - ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார். கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அதே சமயம், அவர்…

  15. தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி செயற்படும் எனவும் அறிவிக்கப்பட…

  16. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 21 சுற்றுகள் கொண்ட இந்த வாக்கு எண்ணிக்கையில், 15 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 1,08,298 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக 51,232 வாக்குகள் பெற்றுள்ளது. நோட்டோவுக்கு 3,299 வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிமுக 57 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளது. செய்தி :nakkiiran.

  17. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிருத்தி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிகாந்த் கூறியதாக நிறைய விஷயங்களை தெரிவித்தார். அதில் பேசிய தமிழருவி மணியன், 'காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்று ரஜினி என்னிடம் கூறினார். ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்ட…

  18. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முன்னிலையாகியிருந்தார். இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் …

  19. "இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்", - உதவி பொருட்களை படகுகளில் அனுப்ப முன்வரும் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மே 1) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை அனுமதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து, தங்களின் படகுகளில் உதவி பொருட்களை அனுப்ப தயாராக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தலைவரான ஜேசு ராஜா தெரிவித்துள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி இணையதளம் தெ…

  20. என் செருப்பு எங்கே?: இடிபாடுகளில் இருந்து 72 மணிநேரம் கழித்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி! சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவ…

  21. தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது. குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே …

    • 0 replies
    • 382 views
  22. மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …

  23. பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை - 1970களில் மும்பையில் என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES “லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“ “ஸாலா மதாராஸி ஹட்டாவ்“ 1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும். பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புல…

  24. மிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ் ‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்... தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக…

  25. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு படத்தின் காப்புரிமை Thirumavalavan/fb எதிர்வரும் மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.