தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
கோவையில் வணிக வளாகம் ஒன்றில் அமைந்துள்ள தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கோவை நகரின் மையத்தில் அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் அருகே இந்த வணிக வளாகம் அமைந்துள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இருப்பினும் கொழுந்து விட்டு எரிந்த தீயானது, அந்த வணிக வளாகம் முழுவதும் பற்றி கொண்டது. தீயில் சிக்கி இதுவரை நான்கு பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணிகளில் தீயணைப்புத்துறையினர் மற்றும…
-
- 7 replies
- 1k views
-
-
கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்க சொல்லி கேட்டாங்க...: கனிமொழி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொல்லி கேட்டதாகவும் ஆனால் தமிழ்நாட்டை விட்டு செல்ல விருப்பம் இல்லாத காரணத்தால் அதை ஏற்கவில்லை என்றும் அவரது மகளும் திமுக ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் வார இதழுக்கு கனிமொழி அளித்துள்ள பேட்டி விவரம்: கேள்வி: காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர் விலகலுக்குக் காரணமா?' பதில்: தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக மட்டுமே எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக இழப்புகளை வேண்டி விரும்பி ஏ…
-
- 2 replies
- 608 views
-
-
காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது. இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன. இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர். இளங்கோவன் மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130424_dmkcommenwealth.shtml
-
- 1 reply
- 471 views
-
-
தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) தர்மபுரி சாயாசிங் 'மிஸ் கூவாகம்' (படங்கள்) விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளின் மிஸ் கூவாகம் போட்டியில் சாயாசிங் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகத்தில் உள்ளது கூத்தாண்டவர் கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் அரவாணனை தங்கள் கணவராக நினைத்து, திருநங்கைகள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொள்வார்கள். இந்த சமயத்தில் விழுப்புரம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் ரூம்கள் வாடகைக…
-
- 1 reply
- 3.4k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று கூறினார். தன்னையும், தமது அரசையும் அவதூறாக பேசுவது மக்கள் மீதான நம்பிக்கையை …
-
- 1 reply
- 1k views
-
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 10 நாள்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும்வரை இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் வாரியத்தை உடனடியாக அமை…
-
- 0 replies
- 472 views
-
-
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை வளாகத்திற்குள் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., வினர், சிறைக்காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி கிடைக்காததால், விஜயகாந்த் சிறைக்கு, நடந்து சென்றார். அவருடன், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் மட்டும், அனுமதிக்கப்பட்டனர். வெயிலை சமாளிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழம் ஆகியவற்றை, சிறையில் இருக்கும் அருண் சுப்ரமணியத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து செ…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா,பல்கேரியா,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு …
-
- 0 replies
- 440 views
-
-
ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச…
-
- 0 replies
- 622 views
-
-
கூடங்குளம்: சோதனை ஓட்டத்திற்கே இத்தனை பஞ்சரு’ன்னா..? APR 20 Posted by ஆதன் கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற உதிரிபாகங்கள் தரப்பட்டதாக ரஷியாவில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து உள்ள அதே நேரத்தில் தொடர்ந்து பலமுறை கூடங்குளம் அணு உலை சோதனை ஓட்டத்தில் வால்வுகள் பழுதடைந்து மாற்றப்பட்டு வருவதாக செய்திகள்வருகின்றன. ************** அதிகாரப்பூர்வமான மின் உற்பத்திக்காக இயக்கத்தை தொடங்க வேண்டும் என போலீசை குவித்து மும்முரமாக வேலை செய்தும் இதுவரை கூடங்குளம் உலையிலிருந்து மின்சாரம் வர வைக்க முடியவில்லை. எதிர்ப்புகளை முறியடித்து இதனை இயக்கி காண்பிக்காவிடில் இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை கட்ட ஏற்கனவே போட்டு உள்ள திட்டத்திற்கு மே…
-
- 5 replies
- 865 views
-
-
கூடங்குளம் அணு உலையின் 4 வால்வுகளில் பழுது என்றும், எனவே மின் உற்பத்தி தாமதமாகும் என்றும், தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்றும், உடனடியாக அதை மூடியே ஆகவேண்டும் என்றும், கூடங்குளம் சுற்றியுள்ள அணு உலைக்கு எதிரான மக்கள் பல கட்ட போராட்டங்களை இன்று வரை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்து உள்ளனர். இது மர்மமான முறையில் மறைத்து வைக்கப்படுகிறது. இது போன்ற மர்மங்கள் நீடிப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின…
-
- 0 replies
- 550 views
-
-
தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்களும் சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர் போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு, கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத் த…
-
- 0 replies
- 594 views
-
-
-
"தினத்தந்தி" நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையு…
-
- 2 replies
- 1.6k views
-
-
அதிமுகவுடன் உறவை முறித்துக்கொண்ட விஜயகாந்த், அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்று திடீரென கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார். கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.இருவரும் ஒருவருக்கொருவர் நலம் வி…
-
- 0 replies
- 610 views
-
-
தனி ஈழம் கோரிக்கையை முன் வைத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம்…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.'' ''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுமா? ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாது’ என்று, இலங்கை சம்பந்தமான தீர்மானம் பற்றி மத்திய அரசு நினைக்கிறது. 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக் கூடாது’ என்று, தமிழக சட்டம…
-
- 1 reply
- 757 views
-
-
2ஜி ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த …
-
- 1 reply
- 410 views
-
-
புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல் சென்னை வரை நடக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் திரைமறைவு பேரங்களை யாரும் வெளிப்படையாக அவிழ்க்கத் தயாராக இல்லை. அந்தக் காட்சிகளின் முன்னோட்ட நிலவரம் இது... முடிவுக்கு வந்த அ.தி.மு.க.! 'நாளை நமதே... நாற்பதும் நமதே!’ என்ற குருட்டு தைரியத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் கடைசி நாளில் அறிவித்தார் ஜெயலலிதா. என்ன சூழ்நிலையில், யார் கொடுத்த தைரியத்த…
-
- 0 replies
- 576 views
-
-
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்தவர் சைலேந்தர். இவரும் இவருடைய தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்கள். அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டில் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு …
-
- 0 replies
- 507 views
-
-
2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி…
-
- 0 replies
- 422 views
-
-
ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என வடக்கிலும்... கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி எனத் தெற்கிலும் 'விக்கிலீக்ஸ்’ ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்த காலத்தைப் பெயர்த்தெடுத்துக் கிடுகிடுக்கவைக்கிறது. இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்கள் வாங்குவதில் ஸ்வீடன் நிறுவனம் ஒன்றுக்கு ராஜீவ் காந்தி இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதில் தொடங்கி, இலங்கைக்கு அமைதிப் படை சென்ற சமயத்தில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது என்பது வரையிலும் விக்கி கசிவுகள் வரலாற்றின் இன்னொரு முகத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றன. நமது அரசியல் தலைவர்களின் இரட்டை வேடத்தைத் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன. ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதியின் பலவீனமான நாடகம், ஜெயலலித…
-
- 0 replies
- 927 views
-
-
நெல்முடிகரை கிராம மக்கள் வைகை ஆற்றை காணவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்முடிகரை கிராம மக்கள், தங்களது கிராமத்திலுள்ள வைகை ஆற்றைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறது. மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடிய அவர்கள், வைகை ஆற்றின் சுமார் 7 ஏக்கர் பகுதியை தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்திருப்பதை கண்டறிந்தனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் வைகை ஆ…
-
- 2 replies
- 703 views
-
-
2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மே மாதம் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்க உள்ளார். 2ஜி ஊழல் வழக்கி கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் உள்ளிட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சில வாரங்களாக அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், சி.பி.ஐ தரப்பு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ கடந்த 16ஆம் தேதி அளித்தது. அதில், தயாளுவின் பெயர் இடம்ப…
-
- 2 replies
- 443 views
-
-
அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. நெல்லையில் கடந்த 6.8.2012 அன்று நடந்த தே.மு.தி.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக கடந்த 6.8.2012 அன்று நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் முத்துகருப்பன் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 10, பிப்ரவரி 28, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும்…
-
- 0 replies
- 386 views
-