தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெ…
-
- 0 replies
- 632 views
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக கரூர் நகரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை ஆய்வு செய்த 'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு, அதனை ஆணவக்கொலை என தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த புதன்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில், கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோயில் முன்பு 23 வயது இளைஞர் ஹரிஹரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. பொதுமக்கள் முன்னிலையில், கற்களால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிக்கும் காணொளி தமிழகம் முழுவதும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், அதே …
-
- 0 replies
- 658 views
-
-
பட்டுக்கூடு... ஸ்வீட் பாக்ஸ்... நடமாடும் தடுப்பரண்... வீரப்பன் வீழ்த்தப்பட்டதை விவரிக்கும் விஜயகுமார் சொதப்பிய கேமரா... உதவிய மஞ்சள் விளக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்று 12 ஆண்டுகள் கழித்து, அந்த வேட்டையை நடத்திய அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதியிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த ரூபா பப்ளிகேஷன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட, ‘Veerappan: Chasing the Brigand’ என்ற இந்த ஆங்கிலப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிப்படையிலிருந்து எஸ்.ஐ. வெள்ளத்துரை, சரவணன் என இருவரை அனுப்பி, வீரப்பனை நம்பவைத்து, ஓர் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து வீழ்த்திய இறுதி நிமிடங்களை முதல்முறையாக விஜயகுமார் விவரித்திருக் கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து …
-
- 0 replies
- 2.3k views
-
-
தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து, அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் கலப்பு திருமண பிரச்சினைகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, சாலை மறியல்களோ, சாதி சங்க கூட்டங்களோ நடத்தக்கூடாது, சாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் இயக்குனர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று வந்தார். விழாவிற்கு புறப்பட்ட அவரை போலீச…
-
- 0 replies
- 443 views
-
-
அடுத்தது இவர்கள்தான்! அதிரவைக்கும் ஹெச்.ராஜா ஃபேஸ்புக் பதிவு டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து அ.தி.மு.க அமைச்சர்கள் என்று அதிரவைத்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள நிலையில், அதனை கைப்பற்றும் முயற்சியில் பன்னீர்செல்வம் அணியினரும், பழனிசாமி அணியினரும் இறங்கியுள்ளனர். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை பெறும் முயற்சியில் டி.டி.வி.தினகரன் இறங்கியுள்ளார். இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். முதல் கட்டமாக பத்து கோடி ரூபாய் கொடுத்துள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் அளித்த வாக்கும…
-
- 0 replies
- 381 views
-
-
சென்னை: அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த நில அபகரிப்பு சிக்கலில் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. சென்னை போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ர…
-
- 0 replies
- 345 views
-
-
மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற சென்னை ஐஐடி மாணவர் மீது சரமாரி தாக்குதல் சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். Image captionதாக்குதலுக்கு உள்ளான மாணவர் மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் இன்று பிற்பகலில் ஐ…
-
- 0 replies
- 364 views
-
-
ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என அரசியலுக்கு வரட்டும்;. ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள பாரதிராஜா அதற்காக நேற்று புதுச்சேரிக்கு சென்று சில இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.…
-
- 0 replies
- 627 views
-
-
சமூக ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் ரஜினி – காரணம் என்ன? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நடிகர் ரஜினிகாந்துக்கு சர்ச்சைகள் என்பது புதிதல்ல என்றாலும், சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் பல கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார். ஆன்மீக அரசியல், போலீஸாருக்கு ஆதரவாக பேசியது, தற்போது தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டது, செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியது என ரஜினியை பலரும், பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு எதிரான அலை உண்டாகி வருகிறதா? ஏன் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டிக் கொள்கிறார்? அவரது முழுமையான அரசியல் பிரவேசத்துக்கு முன் நெட்டி…
-
- 0 replies
- 521 views
-
-
விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை. நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் கு…
-
- 0 replies
- 433 views
-
-
இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) "வட இந்திய - தென்னிந்திய முஸ்லிம்களுக்கு இடையிலேயான கல்வி மற்றும் வியாபாரம் குறித்த ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பில் வட இந்திய பத்திரிக்க…
-
- 0 replies
- 751 views
-
-
பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் சமீபத்திய சர்ச்சையாக கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான 21.04.2023 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவை’ (Tamil …
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 11:12 PM சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று (28) காலை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக்க வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகஜன் லிட்டி (43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். …
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
பிற மாநிலங்களைப் போல அதிமுக ‘பெருந்தலைகள்’ கூண்டோடு அப்படியே பாஜகவில் ஐக்கியமாகின்றனவா ? தமிழகம் தவிர பிற மாநிலங்களில் கட்சிகளை காலி செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் பல கட்சிகள் கரைந்து பாஜகவின் கை ஓங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக கட்சிகளை கலைக்கும் விளையாட்டை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது. அதேநேரத்தில் அப்படி கலைத்து விளையாடும் போது படு உக்கிரமானதாகத்தான் இருக்கும் என்பதற்கான அடித்தளம் வலுவாக போடப்பட்டு வருகிறது.தற்போதைய நிலையில் அதிமுகவை தம் பிடியில் வைத்திருக்கிறது. முதல் கட்டமாக அதிமுகவின் 7 ராஜ்யசபா எம்.பிக்களை தம் பக்கம் வளைக்கப் போகிறது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்த நினைக்கிறது பாஜக.இதனைத் தொடர்ந்து கட்சிகளின் பெருந்தல…
-
- 0 replies
- 620 views
-
-
பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது! [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 01:11.36 AM GMT ] பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. 2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு,…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வெற்றிடம்! தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். திருவொற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி கடந்த 27ஆம் திகதியும், குடியாத்தம் தி.மு.க. உறுப்பினர் ஏ.காத்தவராயன் கடந்த 28ஆம் திகதியும் உடல் நலக்குறைவால் காலமாகிய நிலையில் இந்த 2 தொகுதிகளும் வெற்றிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் வெற்றிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி வெற்றிடமாக…
-
- 0 replies
- 363 views
-
-
`ரஜினியைத் திருப்திப்படுத்தத்தான் இந்த நியமனமா?’- செம்மொழித் தமிழாய்வுமைய விவகாரத்தில் சீமான் தினேஷ் ராமையா சீமான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்…
-
- 0 replies
- 735 views
-
-
பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ. இயற்கை ஆறுகள் …
-
- 0 replies
- 805 views
-
-
ஆன்லைன் வகுப்பு புரியாமல் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - நடந்தது என்ன..?
-
- 0 replies
- 489 views
-
-
ஈழ அரசியல் இனி தமிழக அரசியல் சந்திப்பு: அரவிந்தன், ச.கோபாலகிருஷ்ணன் நேர்காணல்: செ.ச.செந்தில்நாதன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அத்தீர்மானத்தை நிராகரித்து இந்தியா புதிய தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்துக் கிளம்பிய தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மாணவர்களைப் பின்தொடரும் மக்கள் எழுச்சி என்று ஈழத் தமிழர் பிரச்சினை தமிழக அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் இதுவரை இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் பின்னணியையும் விளைவுகளையும் பற்றிப் பேச ஊடகவியலாளரும் சர்வதேச அரசியல் குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவருமான செ.ச.செந்தில்நாதனைச் சந்தித்தோம். செந்தில்நாதன்,…
-
- 0 replies
- 615 views
-
-
-
- 0 replies
- 695 views
-
-
'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவி…
-
- 0 replies
- 377 views
-
-
ராகவா லோரன்ஸின் சுத்துமாத்து அம்பலம்
-
- 0 replies
- 450 views
-
-
எம்.ஜி.ஆருக்கு செருப்பு... கருணாநிதிக்கு கண்ணாடி... ஜெயலலிதாவுக்கு சேலை... பன்னீர்செல்வத்துக்கு அரிவாள்...! #OPSVsSasikala தமிழக வரலாற்றில் 2-12-1972-ம் தேதி மறக்கவியலாதது. ஆம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இரு சபைகள் நடந்ததோடு, முதன்முறையாக சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அன்றுதான். அதே நாளில்தான் எம்.ஜி.ஆர் முதல்வராவதற்கான அச்சாரமும் போடப்பட்டது. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தி.மு.க-வில் இருந்து பிரிந்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க நிர்வாகிகளின் சொத்துக்கணக்கை கேட்டதால், அவரைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டியது தி.மு.க.! இந்த நிலையில், தி.மு.க அரசில் சபாநாயகராக இருந்த மதியழகன் எம்.ஜி ஆருடன் நட்பு பாராட்டிவந்த…
-
- 0 replies
- 361 views
-