தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்புஇ அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடுஇ மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்…
-
- 0 replies
- 435 views
-
-
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.
-
- 4 replies
- 651 views
-
-
தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…
-
- 1 reply
- 599 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தங்க பத்தகம் வாங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். அவர் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவி…
-
- 7 replies
- 766 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…
-
- 3 replies
- 989 views
-
-
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இலங்கைக்கு சொந்தமான சரக்கு கப்பல் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது. அந்த கப்பலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்குள் அனுமதித்த இந்திய அரசையும், துறைமுக நிர்வாகத்தையும் கண்டித்து துறைமுக வாயிலில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் எம்.நைனாமுஹம்மது தலைமை யேற்க, மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மாவட்ட த.மு.மு.க செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்ப…
-
- 0 replies
- 571 views
-
-
தி.மு.க.வுக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி! தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ஐம்பது லட்சத்தை வாரி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மாநிலம் முழுவதும் முழு வீச்சில் தேர்தல் நிதி திரட்டி வருகிறது தி.மு.க. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூணை சந்தித்த தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, அவரிடம் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கேட்டாராம். கட்டாயம் அதை தருவதாக சொல்லி அவரை வழியனுப்பிய ஆரூண், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. செயலாளர்களை அழைத்து ஆளுக்கு மூன்று லட்சம் வீதம் தேர்தல் நிதி வழங்கி ரசீதை போட்டு வாங்கி இருக்கி…
-
- 1 reply
- 498 views
-
-
உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை. இதனிடையே, பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்…
-
- 3 replies
- 409 views
-
-
பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை [படங்கள்] திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திருச்சி-புதுகை சாலையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். மாணவிகளே பெரும்பான்மையாக பங்கேற்று உள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13346:barathithasan&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 361 views
-
-
தனித்தமிழீழ வாக்கெடுப்பு நடத்தகோரியும்,சிறீலங்கா அரசினை கண்டித்தும் கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி 40 மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் ஜான்பீட்டர் இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். கண் பார்வையற்ற நிலையிலும் தமது இன உணர்வு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27965/64/40/d,fullart.aspx
-
- 1 reply
- 576 views
-
-
மதுரையை குலுக்கியது மாணவர்கள் பேரணி [படங்கள்] ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட பேரணி மதுரையை குலுக்கியது, சமிபகாலங்களில் மதுரையில் நடந்த மிக பெரிய தன் எழுச்சி பேரணி இது மட்டுமே. கோரிக்கைகள் : 1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே 2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 3. சர்வதேசவிசாரண…
-
- 0 replies
- 363 views
-
-
விடுதலை புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம்-மாணவர்களை மிரட்டிய காவல்துறை. 'இலங்கையில் நடந்தது இன படுகொலையே....ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா இங்க எதுக்கு போராடுறீங்க 'என இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ 'இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும் வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம். அதனால் இந்த போராட்டம் செய்கிறோம். மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்' என பதிலடி தந்து கல்லூரி உள்ளேயே பாய் படுக்கை…
-
- 10 replies
- 827 views
-
-
திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா…
-
- 1 reply
- 465 views
-
-
கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று (14) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளாயனந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யூ. அருளானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று (13) இரவு 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினரால் 79 மீனவர்க…
-
- 0 replies
- 476 views
-
-
இன்றும் திருச்சியில் மாணவர்களால் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.இன்று காலை திருச்சி கயாமலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புறப்பட்டு திருச்சி தபால் நிலைய சந்தியில் மறியல் போராட்டம் நடத்தினர். பின் அங்கிருந்து பேரணியாக சென்று திருச்சி தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து திருச்சியில் இருந்து பாலைக்காடி நோக்கி செல்லவிருந்த தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் சற்றுமுன் எமக்கு தெரிவித்துள்ளார். இதே போன்றே திருச்சியில் வேறு பல முக்கிய பகுதிகளிலும் மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றது.இது தொடர்பான செய்திகள் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். http://www.eeladhesam.com/index.php?…
-
- 0 replies
- 386 views
-
-
அழியும் விவசாயிகளை காப்பீர் - வைகோ உண்ணாவிரதம். சென்ற பனிரெண்டாம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்து இருந்த மதிமுகவினர் அன்றைய தினம் டெசோ குழுவினரின் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதால் தேதியை மாற்றி பின்னர் அறிவிக்க இருந்தார்கள். இன்றைக்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் நிகழ்வாக , வைகோ மற்றும் ஐநூறு பேர் உண்ணாவிரத்ததை துவக்கி உள்ளார்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் இன்று அமைக்கப்பட்ட திடலில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கட்சியினரும் இப்போது அந்த மைதானத்திற்கு வர ஆரம்பித்து உள்ளார்கள் இன்று மாலை உண்ணாவிரதம் முடிக்கையில் குறைந்தது பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று முன் கணக்கு யூகமிடபட்டுள்ளது. கோரிக்கை…
-
- 0 replies
- 466 views
-
-
அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை. ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையா…
-
- 0 replies
- 609 views
-
-
இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்பதை வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபச்சேவை போர்க்குற்றவாளி என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கனகராஜ், செந்தில், மாதேசா, யுவராஜ், அகிலன், பழனிகுமார், பாண்டி, சந்திரசேகர், இளவரசன், பழனிவேல், அமிர்தலிங்கம் என 11 பேர் கடந்த 12.03.2013 முதல் சென்னை புரசைவாக்கத்தில் விடுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். படங்கள்: ஸ்டாலின்
-
- 0 replies
- 364 views
-
-
கடலூரில் உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கைது .கலையில் சுமார் 6 மணிக்கு நெய்வேலி மாறன் தலைமையில் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் , அங்குள்ள தபால் அலுவலகத்திற்கு எதிரில் ஒரு தனியார் இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் ஆதரவு அளித்தார்கள். இந்நிலையில் இந்த உண்ணாவிரத நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்தனர் . அவர்கள் காவல்துறை க்கு அதிக அழுத்தம் கொடுத்து உள்ளனர். அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் மாணவர்கள் அங்கு உண்ணா விரதம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து எதிர்ப்பை காட்டி உள்ளனர் . உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. கைது செய்ய வந்த காவல்துறைய…
-
- 0 replies
- 356 views
-
-
சென்ற பனிரெண்டாம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்து இருந்த மதிமுகவினர் அன்றைய தினம் டெசோ குழுவினரின் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதால் தேதியை மாற்றி பின்னர் அறிவிக்க இருந்தார்கள். இன்றைக்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் நிகழ்வாக , வைகோ மற்றும் ஐநூறு பேர் உண்ணாவிரத்ததை துவக்கி உள்ளார்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் இன்று அமைக்கப்பட்ட திடலில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கட்சியினரும் இப்போது அந்த மைதானத்திற்கு வர ஆரம்பித்து உள்ளார்கள் இன்று மாலை உண்ணாவிரதம் முடிக்கையில் குறைந்தது பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று முன் கணக்கு யூகமிடபட்டுள்ளது. கோரிக்கைகள் : வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிக…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் எவ்வளவு முறை எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும் இன்னமும் அடங்காத அமைப்பாகவே இலங்கை அரசு உள்ளது. (ஒரு வேலை இந்திய மத்திய அரசு இந்த விடயத்தை கண்டு கொள்ளவில்லையோ?) ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று பிடித்துச் சென்ற நிலையில், இன்றும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 652 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் , தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன்பிடித்து விட்டு, இன்று அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். ஆதாம்பாலம் அருகே வந்த போது, 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்களையும் இலங…
-
- 0 replies
- 663 views
-
-
கேட்டது ரெண்டு கொடுத்தது நாலு ! 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு Crime and Criminal Tracking Network and Systems என்ற ஒரு அமைப்பை அனைத்து காவல்துறையிலும் உருவாக்க வேண்டுமென்று திட்டம் இட்டது . அந்த திட்டத்தை 2012 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் இருந்து முழுமையாக் செயல்படுத்த கால உறுதி அளித்தது ஆனால் இப்போது 2013 ஆகியும் அது மாநிலங்களை கேட்டது என்ன தெரியுமா ? குறைந்த பட்சம் இரண்டு மாவட்டங்களையாவது இந்த மின் ஆளுமை திட்டத்திற்கு உட்படுத்துங்கள் என்பதுதான் , அது என்ன கணக்கு என்று தெரியவில்லை , ஒரு திட்டம் எப்படி முழுமையடையும் என்றும் தெரியவில்லை. இருந்தாலும் மத்திய அரசு கேட்டது இரண்டு நேற்றைக்கு மாநில அரசு நான்கு மாவட்டங்களை இந்த திட்டத்திற்கு உட்…
-
- 0 replies
- 583 views
-
-
மற்றும் போன்ற மத்திய அரசு பணிகளிற்கான தேர்வாணையம் சமீபத்தில் நான்கு பெரிய மாற்றங்களை தேர்வு முறையில் மாற்றம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது இது ஹிந்தி பேசாத மக்களை வெகுவாக பதித்து உள்ளது. இது குறித்து முதல்வர் , ஜெயலலிதா நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளதாவது:- 2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றமானது பாரபட்சமாகவும் அநீதியாகவும் உள்ளது. தேர்வு முறையில் பெரிய அளவில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். அதுவம்…
-
- 0 replies
- 520 views
-
-
when you deal with the Romans, deal as the Romans would deal அருண் ஜெட்லி யின் காட்டம். தேர்தலுக்கு வாக்கு அளித்து விட்டு இந்தியா திரும்பி விடுவார்கள் என்று , இத்தாலி சார்பாக உறுதி அளித்த இந்தியாவிற்கான இத்தாலி தூதர் , Daniele Mancini., இந்தியாவிற்கு திருப்பி வராத குற்றம் செய்த கப்பல் மாலுமிகள் இருவருக்கு பொறுப்பானவர் என்று பா ஜ க மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறி உள்ளார் இத்தாலி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அவர் இது மூன்றாவது முறை இத்தாலி அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றுவது என்பதையும் சொல்லி உள்ளார் . ஜேம்ஸ் பாண்ட் இன் திரைபடமான Goldfinger இல் சொன்னதை போல முதல் முறை என்றால் அதை சூழ்நிலை எனலாம் , இரண்டாம் முறை என்றால் அதை திட்டமிட்ட சம்பவம் எனலாம் , மூன்றா…
-
- 0 replies
- 494 views
-