Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 15 OCT, 2023 | 03:02 PM சென்னை: "ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின…

  2. படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. "அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக…

  3. மருதநாயகம் என்ற யூசுஃப் கானை வீழ்த்திய நண்பனின் துரோகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களையும் நவாபையும் ஒரு சேர எதிர்த்து, தூக்கிலிடப்பட்ட யூசுஃப் கானின் நினைவு தினம் இன்று. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தளபதியாகவும் ஆளுநராகவும் மாறிய யூசுஃப் கான் கொல்லப்பட்டது எப்படி? அது 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி. மாலை ஐந்து மணி. இருள் நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரைக் கோட்டையிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் இருந்த ஆற்காடு நவாபின் முகாம் பரபரப்பாக இ…

  4. திமுக குடும்பத்தின் கஜானாவா மார்டின்..? -சாவித்திரி கண்ணன் லாட்டரி தடை இருந்தும் தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிக்க திமுக அரசு செய்து தந்த சலுகை மட்டுமல்ல, தற்போது மார்ட்டின் குறிவைக்கப்பட்டதற்கு! அதையும் தாண்டி, திமுக தலைமை குடும்பத்திற்கும், மார்டின் குடும்பத்திற்குமான நெருக்கத்தின் பின்னணி! சான்டியாகோ மார்டின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லாட்டரி அதிபர். மியான்மரில் (பர்மா) 13 வயதில் குழந்தை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய மார்ட்டின் இந்தியா திரும்பி, மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற சிறிய லாட்டரி கடையை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.1991 ல் அதை பெரும் நிறுவனமாக்குகிறார். தற்போது அகில இ…

  5. எல்லை தாண்டிய கன்னியாகுமரி மீனவர்கள் 32 பேர் பிரிட்டன் கடற்படையால் கைது - வருந்தும் குடும்பத்தினர் பட மூலாதாரம்,JUSTIN ANTONY / JAIME JOSE கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் சென்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்கி மீன் பிடித்து கரைக்குத் திரும்பி வந்துவிடுவர். ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 30 நாள் முதல் 45 நாட்கள் வரை தேவையான பொருட்களை எடு…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 13 அக்டோபர் 2023, 02:05 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி பணம் திருடப்படும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில், அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை யாரும் தப்பவில்லை. சமீபத்தில் திமுக எம்பி தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து வைத்திருந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த 8 ஆம் தேதி ரூ 99,999 திருட்டு போனதாக அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த தயாநிதி மாறன், தான் எந்த ஓடிபியையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலேயே தனது வங…

  7. தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் ‘பினாமி’ சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சியினருக்கு எதிராக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி, பழிவாங்கல் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்திவருகின்றன. ஜெகத்ரட்சகன் …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 11 அக்டோபர் 2023, 02:19 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மருத்துவ இடங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி கிடையாது என தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்? இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், புதிதாக மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 10 அக்டோபர் 2023 வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான பதின்பருவ மாணவர் ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர், நான்கு நாட்கள் தொடர்ந்து விளையாடியதால், அந்த விளையாட்டில் உள்ள சக்தி பொருந்திய ஒரு நபராக தன்னை நினைத்து செயல்பட்ட போது, அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து, அவரது தாயார் அவரை மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக, அம்புலன்ஸஸில் சென்னை கொண்டுவரப்பட்ட நே…

  10. பட மூலாதாரம்,JAGATHRATCHAGAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமாந ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல், ஆழ்வார்கள் ஆய்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை, ஆவடி அருகே பட்…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பட்டாசுக்கடை உரிமையாளரும், பட்டாசு ஆலை உரிமம் உள்ள அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது இவ்விபத்தில்? படக்குறிப்பு, ஆலையின் பெட்டக அறையில் அமர்ந்து சில பணியாளர்கள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்கத் துவங்கின காலை உண…

  12. கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது. எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் ஐ.டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ஐ.ஏ.எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள்…

  13. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்! தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அண்மையில் பரிந்துரை செய்தது. எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ” கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஆரம்பிக்க…

  14. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கொம்பு சுற்றுலா தளம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நாவல்பட்டி காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர், ரோந்துப் பணியில் இருந்த முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன, ஜீயபுரம் போக்குவரத்துக் காவல் நிலைய காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் பணியில் இருந்த போது, உயர் அதிகாரிகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் முக்கொம்பு பகுதிக்குச் சென்று காவிரி ஆற்றின் கரையில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்…

  15. பட மூலாதாரம்,SSTA கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 6 அக்டோபர் 2023 தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பலர், ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி, சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், எட்டாவது நாளன்று (அக்டோபர் 5) நகரத்தில் உள்ள பல்வேறு சமுதாயக் கூடங்களுக்கு காவல்துறையால் குழுவாகப் பிரித்து அனுப்பப்பட்டார்கள். போராட்டத்தில் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், அவர்கள் கலைந்து செல்ல முற்பட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி சென…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன? செவ்வாய்க் கிழமையன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பே…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 2 அக்டோபர் 2023 அன்று 1942 ஆகஸ் 26ஆம் தேதி. நள்ளிரவில் கோவையை அடுத்த சூலூரில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சிறுமி கருப்பாத்தாள். திடீர் வெளிச்சமும், கூச்சல் சத்தமும் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்த கருப்பாத்தாள் என்ன நடக்கிறது என அறிய ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது, அவரது கருவிழிகளில் நெருப்புப் பிழம்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி பிரதிபலித்தது. மிரண்டு போனார். அவரது வீட்டுக்கு அருகே உள்ள சூலூர் ராணுவ விமான நிலையம்தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அச்சத்தில் அம்மாவுக்க…

  18. பட மூலாதாரம்,NITHYA RAMRAJ படக்குறிப்பு, கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், 39 ஆண்டுகளுக்குப் பின்னர் பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 2 அக்டோபர் 2023 இந்தியாவின் ‘தங்க மங்கை’ என அழைக்கப்படும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவின் 400 மீட்டர் தடை தாண்டுதல் தேசிய சாதனையை, 39 ஆண்டுகளுக்குப் பின் கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது. இருவரும் இணைந்து…

  19. 02 OCT, 2023 | 11:41 AM புதுச்சேரியைச் சோ்ந்த சித்தாா்த்தன், மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்காக 2017-ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதி அதில் தோ்ச்சி பெற்றாா். பின்னா், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும், கட்டாயப் பணி உத்தரவாதம் புரிவதாக உறுதி அளிக்கவில்லை போன்ற காரணங்களைக் கூறியும் சித்தாா்த்தனுக்கு மாணவா் சோ்க்கை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்ரமணியன் – ஆா்.கலைமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வே…

  20. பட மூலாதாரம்,TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கும் தொழில்துறை வளர்ச்சிக்கும் அளித்த முக்கியத்துவத்திற்காக எப்போதும் நினைவுகூரப்படுகிறார். இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அவர் காலமானார். அவரது கடைசி நாளில் என்ன நடந்தது? இந்தியாவில் 1975 ஜூன் 25ஆம் தேதி நெருக்கடி நிலை அமலுக்கு வருவதாக பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். 1966இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபோது, மொரார்ஜி தேசாய்க்கு பதிலாக இந்திரா காந்தி பிரதமராவதில் முக்கியப…

  21. ஊட்டி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 9 பேர் பலி - விபத்து நடந்தது எப்படி? படக்குறிப்பு, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து 57 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், பி.சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக 53 நிமிடங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 54 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர். இதில், படுகாயமடைந்த இருவர் கோவை அரச மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 42 பேர் குன்னூர் அரசு மருத்து…

  22. கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான மதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)30 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கிறார். 1992, ஜூன் மாதம் 20ம்தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவர்தான் மதி. சென்னையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்து…

  23. 23 SEP, 2023 | 12:24 PM இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும்இ அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்…

  24. `ஓரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பா.ஜ.க, ஒரே நாட்டுக்குள் இருக்கும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்?' - சீமான் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம், "தினமும் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்" என கடந்த 21-ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 25 செப்டெம்பர் 2023 குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது? ‘எனக்கு 17 வயது, என் குழந்தைக்கு 2 வயது’ வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயதான ரம்யா 8-ஆம் வகுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.