Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு தனியார் பல்கலைக்கழகமொன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் மேற்கு வங்காளம் மற்றும் கோவையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டுச் சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளதாகவும், இதன்போது திடீரென பழைய சுவர், தொழிலாளர்களின் மீது இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ப…

  2. 05 JUL, 2023 | 11:35 AM செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தொடர்ச்சியான கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நடந்த ஆய்வு ஒன்றில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுர மர்த்தினி நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சந்திரசேகர் கூறியதாவது: தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகைகல் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் உருவம் துர்க்கை அம்மன் ஆகும். இது சங்க காலத்தில் இருந்து, பல்லவர் கால…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி- கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் 100 அடிக்கு மேல் இருந்தால், ஜூன் 12ஆம் தேதியன்று அணை விவசாயத்திற்காகத் திறக்கப்படும். அதன்படி இந்…

  4. பட மூலாதாரம்,TAMIL NADU TOURISM DEVELOPMENT CORPORATION) கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூலை 2023, 07:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டாலே நம்மை அறியாமல் எட்டப்பன் என்ற பெயரும் நினைவுக்கு வந்துவிடுகிறது. எட்டப்பன் என்றாலே துரோகம் என்ற ஒரு பிம்பம் நிலை பெற்று விட்டது. யூதாஸ், புரூட்டஸ், வரிசையில் எட்டப்பன் என்ற சொல்லும் காட்டிக் கொடுப்பவர்களுக்கான பட்டமாக மாறிவிட்டது. எட்டப்பன் என்றால் யார்? அந்த பெயர் எப்படி வந்தது? கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தது எட்டப்பன்…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 1 ஜூலை 2023 கணவன் தன் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்துகளில் அவரது மனைவிக்கும் சம உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து தான் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் தன் மனைவி ஐந்து விதமான சொத்துகளை வாங்கி உள்ளதாகவும், அந்த சொத்துகளுக்கு முழு உரிமை கொண்டாடுவது தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு…

  6. படக்குறிப்பு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை பிபிசி தமிழ் குழுவினர் நேரில் சந்தித்தனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 30 ஜூன் 2023, 14:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 11ஆம் தேதி இரவு. அன்றைய இரவு சுதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான சராசரி இரவாக அமையவில்லை. அன்றிரவு திடீரென அவரது குடியிருப்புப் பகுதியில் சரசரவென காவல்துறை வாகனங்கள் வருவதைப் பார்த்து சுதா பதற்றமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சுதா குறவர் இனத்தைச் சேர்ந்தவர். ''எங்களிடம் போலீசார் எதுவும் க…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கழிப்பறைகளில் கைகளால் மலம் அள்ளும் நிலை உள்ளதாக ஒப்பந்த தூய்மை பணியாளர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 29 ஜூன் 2023, 04:19 GMT மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளுவதாக தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மது…

  8. கறுப்பு நிற ஆடை அணியத் தடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆளுநரின் வருகையைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, மாநகர காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப…

  9. Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 06:47 AM 2009 ம் ஆண்டு ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என குறிப்பிட்டள்ள அவர் இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 2009 மே மாதம் பத்தாம் திகதி குஜராத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்திய அரசாங்கம் என்ன செய்கின்றது என …

  10. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம் 1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இரண்டு பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இதனை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், இலங்கை கடற்படையினர் செயற்படுவதாகவும் ஆகவ…

  11. 24 JUN, 2023 | 02:07 PM இந்திய கிரிக்கெட் அணி வீரரான தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் அமைத்துள்ள 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது. நடராஜனின் பெற்றோர் முன்னிலையில் இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் திறந்துவைத்ததுடன், இந்திய கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அத்தோடு, நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோரும் இந்த மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சித் தடங்கள், ஜிம், சிற்றுண்டிச்ச…

  12. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள…

    • 19 replies
    • 1.5k views
  13. கட்டுரை தகவல் எழுதியவர்,மகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி வழங்கப்படுவது போலவே, சுமார் 1,200 வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இந்தியாவின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரியில், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அரசியல் நடைமுறை கல்வி கற்பிக்க ஓர் உறைவிடப் பள்ளி செயல்பட்டுள்ளது. இங்கு, அரசாங்கத்தை நடத்துவதற்கான அடிப்படை சமூக சட்டங்கள் தொடர்பான கல்வி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 40 கி.மீ., தொலைவில் உள்ள விளவங்கோடு வட்டத்தில், கேரள எல்லைக்கு அருகில் அமைந்துள்ளத…

  14. பட மூலாதாரம்,HRCE படக்குறிப்பு, நெல்லையப்பர் கோயிலில் கிடைத்த செப்புப் பட்டயங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பல பழங்கால செப்புப் பட்டயங்களும் செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன. இந்தச் செப்பேடுகளை எழுதிய மன்னர்கள் யார், இந்தச் செப்பேடுகள் சொல்லும் செய்திகள் என்ன? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுமார் 46,000 கோவில்களிலும் இருக்கக்கூடிய ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் ஆகியவற்றைத் தேடி எடுத்து, அவற்றைப் படித்து நூலாக்கம் …

  15. படக்குறிப்பு, மோசடிப் புகாரில் சிக்கியுள்ள கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 ஜூன் 2023, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி எட்டாயிரம் பேரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பணத்தை வசூலித்த 5 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகிவிட்டது. அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களும் 5 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ஏமாந்து போன பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வழக்கமான கிரிப்டோ கரன்சி முறைகேடுக…

  16. பட மூலாதாரம்,N.MUTHAMILSELVI கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 17 ஜூன் 2023, 07:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் “பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும் வரவில்லை.” இது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுத் திரும்பியுள்ள முதல் தமிழ்நாட்டுப் பெண் முத்தமிழ்செல்வியின் வார்த்தைகள். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது மலையேற்ற வீரர்களில் பலருக்கும் ஒரு கனவு. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியு…

  17. பட மூலாதாரம்,THALAPATHY VIJAY MAKKAL IYAKKHAM கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளது, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12…

  18. Published By: RAJEEBAN 17 JUN, 2023 | 06:58 AM விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது. இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதம் பணம் போதைப்பொருள் ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கிவைத்தல்போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என இந்தியாவின் என்ஐஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப…

  19. பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,மாயகிருஷ்ணன்.க பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. இந்த உத்தரவு வெளியான சற்று நேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் இருந்தபோது, அவருடன் பணியிலிருந்த சக பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து ராஜேஷ்தாஸ் பணியிடை நீ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கேள்விகளை எழுப்பியிருப்பதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. மீண்டும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நெஞ்சு வலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை…

  21. நீட் தேர்வில் 720/ 720: தமிழக மாணவன் சாதனை பல்கலைக் கழகங்களில் மருத்துவத்துறையில் மாணவர்களை இணைப்பதற்கான நீட் பரீட்சையானது, இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றது. இப்பரீட்சையில் தோற்றுவதற்காக நாடு முழுவதும் 20 ,87 ,445 பேர் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 1, 47 ,581 பேர் விண்ணப்பித்திருந்தனர். https://athavannews.com/2023/1334917

    • 2 replies
    • 353 views
  22. 15 JUN, 2023 | 05:43 AM சென்னை: சிலவகை வழக்குகளுக்கென சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV of 1946) ன் பிரிவு 6ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1…

  23. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த குற்றச்சாட்டின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு பெண்களிடம் பழகி வந்த காசி, அவர்களிடம் பாலியல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இதனை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் பதிவு செய்து வந்துள்ளார். இவர…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜூன் 2023, 10:23 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த வியாழனன்று உறுதி செய்துள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தேசிய அலுவலகத்தின் (NOAA) நிபுணர்களின் அறிக்கையின்படி , பசிபிக் பெருங்கடலில் நடைபெறும் இந்த கால…

  25. பட மூலாதாரம்,STALIN TWITTER 14 ஜூன் 2023, 00:56 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சுவலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.