தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 10:02 AM மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது அடிப்படை வசதிகள் ஏதுமற…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 28 மே 2023 இன்று சுமார் ஒரு மணிநேரம் நடந்த பூஜைக்குப் பிறகு செங்கோல் முன்பாக விழுந்து கும்பிட்ட பிரதமர், புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றியபோது, “இங்கு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம்,” என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஆதீனங்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது, பிரதமர் உரை என்று பல்வேறு விதங்களில் தமிழ்நாட்டின் தொடர்பு இருந்துகொண்டே இருந்ததாகவும் இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அ…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மணக் கோலத்தில் சுமதி - சேகர் தம்பதி கட்டுரை தகவல் எழுதியவர்,மாயகிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வேகமாக மாறி வரும் இன்றைய சமூகச் சூழலில் திருமணம் என்பது ஆண், பெண் இரு பாலருக்குமே பெரும் சவாலான ஒன்றாக மாறி வருகிறது. சாதி, மதம், கல்வி, சமூக அந்தஸ்து, வேலை, ஊதியம் எனப் பல தடைகளைக் கடந்தால்தான் ஆணோ, பெண்ணோ ஒரு திருமண பந்தத்திற்குள் நுழைய முடிகிறது. அதுவே, மாற்றுத்திறனாளிகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களது உடலில் உள்ள குறைகளே திருமணத்திற்குத் தடையாக நிற்கும். கள்ளக்குறிச்சியில் அத்தகைய மாற்றுத்திறனாளிகளான ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழை…
-
- 1 reply
- 486 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் 26 மே 2023, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சென்னை, கரூர், கோவை என சுமார் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற…
-
- 8 replies
- 545 views
- 1 follower
-
-
தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம். தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார். இந்த நிலையில் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அந்த நாட்டின் முன்னணி தொழில் வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் சிங்கப்பூர் பயணத்தை தொடர்ந்து நாளை மறுதினம் ஜப்பான் பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2023/1332617 @Kapithan ஆதவன் நியூஸ் தலைப்பு... இப்படி இருந்தது //தழிழக …
-
- 3 replies
- 742 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலி! kugenMay 23, 2023 தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்த…
-
- 0 replies
- 527 views
-
-
22 மே 2023 தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார். பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க ம…
-
- 0 replies
- 742 views
- 1 follower
-
-
22 MAY, 2023 | 11:23 AM தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த போது கூட்ட நெருக்கடியால் மு.க.ஸ்டாலின், டி.ராஜா, சரத் பவார்,தொல்.திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் பெ…
-
- 4 replies
- 687 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 51 நிமிடங்களுக்கு முன்னர் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இப்போதிருந்து 2017ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் இளங்கோ எச்சரிக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் நில…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 மே 2023 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குற…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2023 | 01:08 PM புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்க…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 15 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி முருகன் கோவிலில் புலிப்பாணி சித்தர்கள் போகர் ஜெயந்தி நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கோவில் நடைமுறையில் இல்லாத விழாவை நடத்த முற்படுகின்றனர் என கோவில் நிர்வாகம் கூறும் நிலையில் தங்களின் நடைமுறையில் கோவில் நிர்வாகம் தலையிடுவதாக புலிப்பாணி சித்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிப்பாணி சித்தர்கள் யார்? திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் முருகனின் அறுப…
-
- 0 replies
- 576 views
- 1 follower
-
-
14 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து …
-
- 11 replies
- 785 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN LABOUR DEPARTMENT படக்குறிப்பு, சிறுவர்கள் தங்கியிருந்த இடத்தின் சமையல் கூடம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 13 மே 2023 ஏழு வயது கூட நிரம்பாத விக்னேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். குக்கிராமமான ரூபாலி கிராமத்தில் இருந்து விக்னேஷ் இதுவரை ரயில் நிலையத்திற்கு வந்ததும் இல்லை. ரயிலைப் பார்த்ததும் இல்லை. அவனது முதல் ரயில் பயணம் அவனைச் சென்னையில் ஒரு பட்டறையில் கொத்தடிமை வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பயணமாக இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. …
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,INC படக்குறிப்பு, ராகுல் காந்தி 13 மே 2023, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெற…
-
- 4 replies
- 485 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மாநிலகல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன், முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். எனினும் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டை மாநில கல்விக் கொள்கை குழு மறுத்துள்ளது. இதேபோல் பிபிசியிடம் பேசிய உதயசந்திரன் ஐஏஎஸ் இந்த க…
-
- 0 replies
- 712 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TNDIPR 10 மே 2023, 02:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போதைய விவாதப் பொருளாக இருப்பது அமைச்சரவை மாற்றம்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் யார் மாற்றப்படுவார், யாருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விடையளிக்கும் விதமாக தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கி, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. …
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…
-
- 2 replies
- 543 views
- 1 follower
-
-
மூன்றாம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின்: திமுக ஆட்சியில் செய்தது என்ன? christopherMay 07, 2023 06:00AM தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக, பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வராக 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல்நாளே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். முதல் நாளில் 5 கையெழுத்து அதன்படி, ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைக்கப்படும் என்று உத்தரவு. தமிழ்நாட்டில் சாதாரண கட்டண …
-
- 2 replies
- 461 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மழலையின் சிரிப்பொலியைக் கேட்பதற்குத்தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கதீஜா பீவிக்கு, பிறந்த சிசுவின் முதல் அழுகுரலைக் கேட்பதில்தான் அதீத ஆர்வம். கடந்த 33 ஆண்டுகளாக விழுப்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு செவிலியராக பணியாற்றி வரும் கதீஜா பீவி, தனது பணிக்காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை வெற்றிகரமாகக் கையாண்டவர். அவரது 33 ஆண்டு காலப் பணிவாழ்வில், தன்னிடம் வந்த தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை அளித்த கதீஜா, ஒ…
-
- 1 reply
- 744 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திமுகவின் அரசியலில் ஒரு மாத இடைவெளியில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டப் போவதாக சூளுரைத்த அந்தக்கட்சி, இப்போது சொந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் பிசியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அப்படி இந்த ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்தது? தேசிய அளவில் செயல்படப் புறப்பட்ட திமுக மீண்டும் சொந்த மாநிலமான தமிழ்நாட்டு அரசியலிலேயே ஒட்டுமொத்த கவ…
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
5 மே 2023 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தமிழக அரசைப் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் …
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சல்மான் ரவி பதவி,பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் மே 10ஆம் தேதி வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கடும் வெப்பம் இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மே மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். வெப்ப அலை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஏப்ரல் முதல் மே மற்றும் ஜூன் வரை, சூரியன் முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை வெப்ப அலை ஏப்ரல் 11 முதல் 20 வரை மட்டுமே இருந்துள்ள…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 49 நிமிடங்களுக்கு முன்னர் ”இந்திய அரசமைப்பு சட்டம் சொல்லக்கூடிய சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தும், நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையிலேயே அத்தகைய சமமான வாய்ப்பு இருக்கிறதா?” தனியார் பள்ளிகளுக்கு இணையாக வரும் புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 0 replies
- 624 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) த…
-
- 1 reply
- 781 views
- 1 follower
-