Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “டயர் சைஸ் கூட இல்லை, உனக்கு பஸ் வேணுமான்னு கேப்பாங்க” - பேருந்து ஓட்டுநராக துடிக்கும் ஷர்மிளாவின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்டுள்ளார். பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அ…

  2. 109 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை: பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் அருகே கடலின் குறுக்கே அமைந்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்…

  3. ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். ஒவ்வொரு தேர்தலிலும், பிரதான கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் நடைமுறை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை மேடைதோறும் சாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் பெரும்ப…

  4. மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு Published By: RAJEEBAN 24 FEB, 2023 | 11:16 AM மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண், குமார், மாதவன் ,கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்ற…

  5. 'பட்டினி இல்லா தேசம்': பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர். No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும…

  6. கைமாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: திண்டுக்கல் நாராயணசாமி இப்போது எப்படி இருக்கிறார்? கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”இரண்டு கைகள் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்ந்துவிடப்போகிறான் என சுற்றி இருந்த அனைவரும் பேசத் துவங்கினர். அவர்கள் அனைவரின் முன்னால் வாழ்ந்து காட்டி விட வேண்டும் என்ற வைராக்கியமே என்னை நம்பிக்கையுடன் போராட வைத்தது. இப்போது நானும் அனைவரை போலவும் சராசரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி. கட்டட …

  7. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் முன் இருக்கும் அரசியல் வாய்ப்புகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்பு படம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுகவை தீர்மானகரமாக எடப்பாடி முகாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது பொதுவான பார்வையாக உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட…

  8. ‘உள்ளே வச்சுப் பாருங்க’ சீமான் சவாலும் நாம் தமிழர் - திமுக மோதலும் பட மூலாதாரம்,NAAM TAMILZHAR 4 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் மேனகா நவநீதன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கட்சிகளிடையே மோதல் போக்கு உருவாகியது. கட…

  9. தமிழ்நாட்டில் புலிகளை வேட்டையாடிய பவாரியா கும்பல் சிக்கியது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புலி வேட்டையில் ஈடுபட்ட வட இந்திய பவாரிய கும்பல் வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலுக்கு பின்னணியில் சர்வதேச வலைப்பின்னல் உள்ளதா என்பது தொடர்பாகவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அரசூர் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வனப்பகுதிய…

  10. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு? அதிமுக-வின் அடுத்த திட்டம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2023, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த, அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி, முடிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இரு தரப்பும் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? …

  11. ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்: மீண்டும் முற்றும் மோதல் - முன்னாள் கர்னல், ஆளுநரின் சர்ச்சை பேச்சு, பொங்கிய திமுக அமைச்சர் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 38 நிமிடங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது குறித்த கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வைத்துவிடாதீர்கள் என ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஒருவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும் பா.ஜ.கவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசா…

  12. சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:28 PM சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவ…

  13. அன்புஜோதி ஆசிரமம்: அன்பின் பெயரால் ஆதரவற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி அனுபவங்கள் படக்குறிப்பு, ஜுபின், மரியா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆதரவற்றோரையும் கைவிடப்பட்டோரையும் பராமரிப்பதற்காக நடத்தப்பட்ட அன்புஜோதி என்ற தொண்டு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கொடுமைகள், அத்தகைய இல்லங்கள் குறித்த கண்காணிப்புகள் மிக பலவீனமாக இருப்பதைக் காட்டியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது? ஒரு சாதாரணமான ஆட்கொணர்வு மனு இவ்வளவு பெரிய குற்றத்தை வெளியில் கொண்டு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த இல்லத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரங்கள், திரைப்படங்களில் காட்சிகள…

  14. ராஜீவ்காந்தி தனக்கு மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா? ராகுல்காந்தி தெரிவித்திருப்பது என்ன? Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 01:59 PM ராஜீவ்காந்தி தனது மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா என்பது தனக்கு தெரியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். என் பாட்டியைப் போலவே என் தந்தையும் தனது மரணம் சமீபமாக இருந்ததை உணர்ந்திருந்தார். அது விடுதலைப் புலிகளால் தான் ஏற்படும் என்று அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. ஆனால் ஏதோ சில சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவை தன் உயிருக்கு உலை வைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார்.என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் இந்த…

  15. "பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து பட மூலாதாரம்,SEEMAN 31 ஜனவரி 2023, 09:54 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்,” என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ந…

  16. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு 10 பிப்ரவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய அனுமதியை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்திய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றத்திடம் நாங்கள் வழிகாட்டுதலைக் கோருகிறோம் என்று தெரிவித்தார். "இதுபோன்ற அணிவகுப்பை அனுமதிப்பது சட்டம் - ஒழுங்கு பிரச்ன…

  17. கடலூரில் குழந்தைகளை வாங்கி விற்கும் கும்பல் கைது - நான்கு பேரிடம் போலீஸ் விசாரணை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றெடுத்த குழந்தையை தேவையற்றது (Unwanted Babies) என்று கருதுபவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி, அதை குழந்தை இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் கும்பலை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எங்கு நடந்தது இந்த சம்பவம்? கடலூர் மாவட்டம் வடலூரில் சித்த மருத்துவ சிகிச்சையகம் நடத்தி வருபவர் மெஹர்னிசா (வயது 67). இவர் தன்னை சித்த மருத்துவர் என்று காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களி…

  18. தமிழ்நாட்டு திருவிழாவில் பிரபாகரன் படம் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கோயில் திருவிழா மின் காணொளி பதாகையில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை காண்பித்து மக்கள் திருவிழாவை கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை கண்டு வணங்கி மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வெளிபடுத்திய நிகழ்வு அங்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. https://vanakkamlondon.com/world/india/2023/02/185753/

  19. வானதி அக்காவுக்கு வந்த 20 ஆயிரம் ஓட்டு அவங்க போட்டது” - சீமான் அட்டாக்

  20. டெல்லி ஜே.என்.யூ மோதலில் தமிழக மாணவர் மீது தாக்குதல் - என்ன நடந்தது? 20 பிப்ரவரி 2023, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காயமடைந்தார். 100 மலர்கள் (100 Flowers) என்ற மாணவர் குழுவிற்கும், வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கும் (ஏ.பி.வி.பி) இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர், சேதப்படுத்தப்பட்ட மாணவர் சங்க அலுவகலம், சுவற்றில் எழுதப்பட்ட வலதுசாரி அரசியல் வாசகங்கள் ஆகிய படங்களும் காணொளிப் பதிவுகளும்…

  21. வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது புகார்! KalaiFeb 18, 2023 15:39PM வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சீமானும் சாட்டை …

  22. வடஇந்தியத் தொழிலாளர்களை வெளியேறச் சொல்வது நியாயமா? - காளிங்கன் பிழைப்பதற்காக வந்திறங்கும் வட இந்திய ஏழைத் தொழிலாளர்கள் வெளியேறச் சொல்வது நியாயமாகுமா? பாவம் இல்லையா அவர்கள்? தமிழகம் போன்ற அந்நிய மண்ணுக்குச் செல்லாமல் தங்களது சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற்று கண்ணியம்மிக்க - கெளரவமான வாழ்வை உறுதிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்ற எந்தக் கோரிக்கையும் போராட்டமும் வட இந்திய மாநிலங்களில் நடப்பதாகத் தெரியவில்லை. தொழிலாளர்கள் நலன் பற்றி ஓயாமல் பேசும் வட இந்திய - தமிழக இடதுசாரிகள் கூட அந்தந்த மாநில அரசுகள் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் எனக்கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக தாய் மண்ணை விட்டு வெளியேறி தமிழகத்தில் குறைந்த கூலிக்கு சுரண்…

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்த நிலையில், இலங்கை ராணுவம் அந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களில் சீமான், வைகோ ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்துவிட்டனர். நெடுமாறனைப் பொறுத்தவரை இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் முடிவடைந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்ததிலிருந்தே, அதை மறுத்துவருகிறார். இதுவரை நான்குக்கும் மேற்பட்ட முறை `பிரபாகரன் திரும்ப வருவார்' என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார் நெடுமாறன். இந்த அறிக்கைக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துவரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன…

  24. கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 03:31 PM கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர். வேட்டை கும்பலை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.