Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? சீமான் கேள்வி சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். ந…

  2. "கரன்ட் பில் கட்டச்சொல்லி ஆன்லைன் மோசடி" - புதிய திருட்டு, என்ன தீர்வு? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்புக்குப் பிறகு சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களை இலக்கு வைத்து ஆன்லைனில் நூதன மோசடியில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகரிக்கும் ஆன்லைன் நூதன மோசடி வாடிக்கையாளர் சேவை வழங்கும் நிறுவனங்கள் வங்கிகள், வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்பேசி வ…

  3. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY/MANJUNATH KIRAN காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர…

  4. தமிழ்நாட்டில் தொடரும் லாக் - அப் மரணங்கள்: சென்னையில் ஒருவர் பலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், பிறகு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). கடந்த 20ஆம் தேதியன்று ரயில்வே ஊழியரான பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை கல்லால் அடித்து ஆகாஷ் உடைத்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆகாஷை ஓட்டேரி காவல் நிலைய காவல்துறையினர் கடந்த 21ஆம் தேதி பிடித்தனர். அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த…

  5. ஆந்திர கிராமத்தில் ராஜநாகங்கள் - கொல்லாமல் பாதுகாக்கும் ஊர் மக்கள் லாக்கோஜு ஸ்ரீனிவாஸ் பிபிசி தெலுங்கு சேவைக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EGWS ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், சீடிகாடா மண்டலில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் வனவிலங்கு சங்க அலுவலகத்தைத் தொலைபேசியில் அழைக்கும் பொதுமக்கள் பதற்றத்தோடு, வாய் குழறிப் பேசுவார்கள். அப்படியான அழைப்பு வந்தால், அழைத்தவர் அதிக நச்சு கொண்ட ராஜநாகத்தை பார்த்திருக்கிறார் என்று புரிந்துகொண்டு இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஊழியர்களோடு, குறிப்பிட்ட இடத்துக்கு செல்வார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இந்தப…

  6. கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முறையே கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பு கொண்ட இருவர், தமிழத்துக்கு தப்பி ஓடி அகதியாக ராமநாதபுரம் முகாமில் இருந்த நிலையில் இலங்கை போலீசாரின் வேண்டுகோளின் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். https://www.dailymirror.lk/latest_news/Tamil-Nadu-Police-arrests-2-criminals-wanted-by-Sri-Lankan-govt/342-245711

  7. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அவசர சட்டம் - 7 தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FANATIC STUDIO VIA GETTY IMAGES இணைய வழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திங்கட்கிழமை (செப்டம்பர் 26) நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விளையாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமாக இந்தச் சட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஏழு தகவல்களை இங்கே …

  8. இலங்கைக்கு, எதிராக... வாக்களிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து. இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்க வேண்டும் என்பதை வலியறுத்த மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்ப…

  9. தமிழகத்தில்... 14 லட்சம் பேருக்கு, நகைக்கடன் தள்ளுபடி! தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் …

  10. இந்தியாவின் முதல் 'ஆன்டி வைரல்' புடவை - அசத்தும் தமிழ் நெசவாளர் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த இயற்கை நெசவாளர் சேகர் என்பவர் இந்தியாவின் முதல் ஆன்டி வைரல் புடவையை இயற்கை முறையில் நெய்து சாதனை படைத்திருக்கிறார். பிபிசி தமிழுக்காக சேகர் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இயற்கை பொருட்களை கொண்டு புடவைகள் மற்றும் துணிகளை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வாழைநார், கற்றாலை நார், அன்னாசி நார், சணல், கோரைப்புல், வெட்டிவேர் போன்றவற்றில் இவர் நெய்யும் புடவைகளுக்கு த…

  11. கேரளா லாட்டரி: பரிசு வென்றும் நிம்மதி இல்லை - ஆட்டோ ஓட்டுநர் 26 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், பொதுமக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க வீடு மாற வேண்டியிருக்கும் என்கிறார். இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு செ…

  12. திமுக அமைச்சர் மீது தீண்டாமை குற்றச்சாட்டு - அடுத்தடுத்து எழும் சர்ச்சைகள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் காணொளி தம்மைச் சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல இலவச பேருந்து சேவை குறித்தும், பட்டியலின உள்ளாட்சி பிரதிநிதி ஒருவரை திமுக துணை பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான க. பொன்முடி பேசிய காணொளிகளும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. …

  13. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது புதுவை சிறுவன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ள…

  14. கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை - பதற்றத்தில் மாவட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த மாவட்டங்களில் மத்திய அதிரடிப்படை குவிக்கப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர…

  15. மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN POLICE மதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் …

  16. தமிழகத்தில்... தேச பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தல் – உள்துறை அமைச்சருக்கு... அண்ணாமலை கடிதம். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். சென்னை, கோவை, பொள்ளாட்சி உள்ளிட்ட பல இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மீது தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக…

  17. சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAVUKKU SHANKAR நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் இட்ட பதிவை மேற்கோள்காட்டி ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஒரு யுடியூப் சேனலில் பேசிய சங்கர், மேல் மட்ட நீதித்துறை முழ…

  18. பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ கோரிக்கை By RAJEEBAN 23 SEP, 2022 | 03:06 PM பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்…

  19. ஆந்திரப்பிரதேசத்தில் கருவுறாத பெண்ணுக்கு கர்ப்பம் என்று சொல்லி 9 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவமனை ஷங்கர் வடிசெட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, வட்டி மகாலட்சுமி ஆந்திரப்பிரதேசத்தில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கடந்த 9 மாதங்களாக ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்துவந்த நிலையில், அரசு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை எனத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் ரம்யா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. …

  20. வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்த சம்பவம் - முழு பின்னணி தகவல்கள் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி ஒருவருக்கு வீடியோ கால் மூலமாக செவிலியரும் உதவியாளரும் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதால் விவகாரம் சர்ச்சையானது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததும், வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததுமே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி அந்தப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில்…

  21. மன்னார் வளைகுடா: கடல் நீர் பச்சை நிறமாக மாறியது எப்படி? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் கடல் நீரின் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் பெரியபட்டிணம் வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்…

  22. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் நடப்பது எப்படி? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுப்படகில் கஞ்சா கடத்திச் சென்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, விவசாய உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்ற…

  23. கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது: 'ஆ. ராசா, திமுகவுக்கு மிரட்டல்' விடுத்ததாக புகார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@BALAJI_UTHAM TWITTER படக்குறிப்பு, தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையுடன் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி. (இடது) கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கும் திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி மற்ற…

  24. தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேறினாலும் சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கல்வி, மருத்துவம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட பெரும்பாலான சமூக - பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் இந்திய மாநிலங்களைப் பட்டியலிட்டால் அவற்றில் முதல் சில இடங்களுக்குள் தமிழ்நாடு இடம்பிடிக்கத் தொடங்கி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளாகவும் சுடுகாட்டுக்கு செல்வதற்கு ஆதிக்க சாதியினரால் பாதை மறுக்கப்பட்ட பட்டியல் சாதியினர், ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது நாற்காலியில் அமரவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியல் ச…

  25. திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ``மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்திருக்கும் கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், `திமுக தலைமையே ஆதரவு தெரிவிக்காத நேரத்தில் எங்கள் அண்ணன் எப்படி துணிச்சலாகப் பேசியுள்ளார்' என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.