Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் அறிஞர்.. நெல்லை கண்ணன், காலமானார்! பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதி…

  2. மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த 'அந்த' பெட்டியில் இருந்தது என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ் மரபு விதைகள் அடங்கிய பேழையை பரிசாக அளிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மு…

  3. அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு 17 ஆகஸ்ட் 2022, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில…

  4. பெற்றோர் பராமரிப்பு: வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAPEEPONG PUTTAKUMWONG / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (17/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) வயதான தந்தையை பராமரிக்கத் தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மகன் வைத்தியலிங்கம். மனைவியை இழ…

  5. இந்திய துணைக் கண்டத்திலேயே... விடுதலைக்காக, முதலில் குரல் கொடுத்தது... தமிழ்நாடு தான்- மு.க.ஸ்டாலின். இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 1600ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ‘ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது’ என்று 1755ஆம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன் மண்டியிடாத மானப் போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. …

  6. சென்னை வங்கி நகை கொள்ளையில் முக்கிய சந்தேக நபர் கைது - 18 கிலோ நகை மீட்பு 14 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் கிளையில் சனிக்கிழமை 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபரான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டதால், 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் கூறுக…

  7. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 14 ஆகஸ்ட் 2022 "குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஏரிகளு…

  8. சென்னை விமான நிலையத்தில்... சுங்க அதிகாரிகளாக நடித்து, இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளையடித்த.. இரு இலங்கை பிரஜைகள் ! சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை சென்றிருந்த 47 வயதுடைய பெண் ஒருவரிடம் கடந்த திங்கட்கிழமை சந்தேகநபர்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். 31 மற்றும் 40 வயதுடைய இருவர், குறித்த பெண்ணை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, அதிக நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த குறித்த பெண், சுங்க அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்கியதை அடுத்து மேற்க…

  9. திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செ…

  10. நேதாஜி படையின் சிவகாமி அம்மாள்: 'குண்டுவெடிப்புகளுக்கு நடுவே குழந்தையைக் காப்பாற்றினோம்' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நேதாஜியின் பாலசேனா படைப் பிரிவில் இருந்தவர் சிவகாமி அம்மாள் இந்திய சுதந்திரத்திற்காக சிங்கப்பூரில் நேதாஜியின் ராணுவப்படையின் அணிவகுப்பில் பாலசேனா படைக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான சிவகாமி அம்மாள். பிபிசி தமிழுக்காக தன்னுடைய சுதந்திர போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சிவகாமி அம்மாளுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அன்னசாகரம். ஊரில் …

  11. யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் …

  12. கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது. கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன …

  13. உலக யானைகள் தினம்: காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM ரிவால்டோ. தும்பிக்கையின் நுனி வெட்டுப்பட்ட அந்த யானை, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது அதன் இல்லமான முதுமலை காப்புக்காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு பல்லுயிர்ச்சூழல் வாரியத்தின் தலைவராக இருக்கும் முனைவர் ஷேகர் குமார் நீரஜ், இந்தியாவில் தனக்குத் தெரிந்து, வனத்துறையால் பிடிக்கப்பட்டு முகாமில் வைக்கப்பட்ட காட்டு யானை மீண்டும் காட்டிற்குள் ச…

  14. சுவாமிமலை சோதனையில் ஆயிரம் ஆண்டு பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டது எப்படி? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IDOL WING தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து சிலைகள் உட்பட 8 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கிடைத்தது எப்படி? ஏற்கனவே சில சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மாசிலாமணி என்பவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக பல பழங்காலச் சிலைகளை வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. …

  15. கோவை நிதி மோசடி: ஆசையைத் தூண்டி மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? பணம் திரும்பக் கிடைக்குமா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வரலாம் என கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இவை எந்தெந்த நிறுவனங்கள்? இவை எப்படி மோசடியில் ஈடுபட்டன? இதுபோன்ற மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி? கோவையில் இராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட், சாய்பாபா காலனியில் இயங்கி வந்…

  16. மோதி சர்ச்சை - பார்த்திபன் விளக்கம்: “மோடிஜீக்கு ஜே என்றால் தேசிய விருதா?” நபில் அஹமது பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் மோதிக்கு ஆதரவாகப் பேசினால் தேசிய விருது கிடைக்குமா? என்ற பொருள்படும் வகையில் நடிகரும் இயக்குநரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சைக்குள்ளானது. இது பற்றி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கமளித்துள்ளார். அந்தப் பேட்டியின் உரை வடிவம். கேள்வி: 75ஆவது சுதந்திர தினத்திற்காக நீங்கள் அனுப்பிய ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன…

  17. சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்நாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை நீக்க வேண்டும் என இந்து மதம் சார்ந்த கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகிவருகிறது. ராஜாவின் தலையில் சிலுவைக் குறி வைப்பது எப்போது துவங்கியது? சமீபத்தில் வீடியோ நேர்காணல் ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை மாற்ற வேண்டுமெனக் கூற…

  18. மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள் 9 ஆகஸ்ட் 2022, 08:25 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சுசிசந்திரிகா தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது கவனக்குறைவாக கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சையால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, பெண்ணின் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், மருத்துவரின்றி செவிலியரே தனியாக பிரசவம் பார்த்ததாகவும், குழந்தையை பிரசவித்த பின்னர் தாயின் மலக்குடலை செவிலியர் கத்தரித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்த கூற்றை தலைமை மருத்த…

  19. டாஸ்மாக் மூலம் வெள்ளை பணமாக மாறிய ரூ. 64 கோடி கருப்புப் பணம் - ஆர்டிஐ தகவல் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிப்பு படம் தமிழகத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலில் இரு்நத காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ. 64 கோடி ரூபாய்க்கும் மேலான கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் மோதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். அதன்படி, பிரதமர் உரையாற்றிய அன்று நள்ளிரவில் இருந்தே ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாத …

  20. கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 7 ஆகஸ்ட் 2022 (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர…

  21. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா? முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதிக்கு தமிழக கிராமம் ஒன்றில் கோவில் கட்டப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. உடல்நல குறைவால் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே ஒரு ஊரில் கோவிலே கட்டப்பட்டு வருகிறது. நாமக்கல்…

  22. 2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய 2ஜி வழக்கில் தினசரி விசாரணை நடத்த சிபிஐ புதிய மனு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு குறித்து தினசரி விசாரணை நடத்தக் கோரியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்…

  23. விடுதலைப் புலிகளுக்கு... புத்துயிர் அளிக்க முயன்ற, 14 இலங்கையர்களிடம்... விசாரணை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயன்ற 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பலிடம் இருந்து 60 செல்போன்கள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்திய போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில…

  24. தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் - கள நிலவரம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 …

  25. ஆளுநர் ஆர். என். ரவி: தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஈரோடு சென்றது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RAJBHAVAN_TN/TWITTER தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். தீரன் சின்னமலையின் வாரிசுகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது நோக்கம் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தற்போதைய திருப்பூர் மாவட்டப் பகுதியில் பிறந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான திப்பு சுல்தானின் போரில் துணை நின்றார். இதற்காக அந்தப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.