தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் Aug 01, 2022 18:19PM IST கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் கலைஞருக்கு, நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கலைஞரின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய நினைவிடத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவ…
-
- 5 replies
- 644 views
-
-
தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER (இன்று 03/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.) கேரள மாநிலத்தில் தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு உயிரிழந்ததாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில், "கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபீக் - மரியம்மை தம்பதிகளின் மகள் அப்ரா (வயது 15). இவருக்கு சிறுவயதில் எஸ்…
-
- 1 reply
- 760 views
- 1 follower
-
-
ஆளுநர் ஆர். என். ரவி: தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த ஈரோடு சென்றது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RAJBHAVAN_TN/TWITTER தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை சென்று தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார். தீரன் சின்னமலையின் வாரிசுகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது நோக்கம் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் தற்போதைய திருப்பூர் மாவட்டப் பகுதியில் பிறந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான திப்பு சுல்தானின் போரில் துணை நின்றார். இதற்காக அந்தப…
-
- 2 replies
- 552 views
- 1 follower
-
-
75 ஆவது சுதந்திர தினம்: இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? போராட்டங்கள் வாயிலாக மாநிலத்தின் வரலாறு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 ஆகஸ்ட் 2022, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல போராட்டங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பாகவே துவங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், விடுதலைக்குப் பின் நடந்த குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், 1965ல் நட…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
இலங்கைக்கு... சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம். சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி பல பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு முக்கிய நிறுவனங்களிலும் போதுமான ஆட்களை அனுப்பவும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொர…
-
- 1 reply
- 294 views
-
-
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில்... வருமான வரித்துறையினர், சோதனை! திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலு…
-
- 0 replies
- 554 views
-
-
'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்காக பல உறக்கமில்லாத இரவுகளை கடந்தேன்: தெருக்குரல் அறிவு 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THERUKURAL/INSTAGRAM தான் எழுதி, உருவாக்கிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக 'தெருக்குரல்' அறிவு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் தெருக்குரல் அறிவு எழுதி, உருவாக்கிய Enjoy Enjaami பாடல், பல்வேறு இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது. விழாவில்…
-
- 38 replies
- 1.5k views
- 1 follower
-
-
சென்னை திருவொற்றியூரில் ரசாயன வாயுக் கசிவு: ஒரு மாத காலமாக மூச்சுத் திணறும் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நடுஇரவில் திடீரென உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் வாயு கசிவது போன்ற வாசனை வீசினால் எப்படி உணர்வீர்கள்? உடனே சமையலறையில் உள்ள சிலிண்டரை சரிபார்ப்பீர்கள், அது சரியாக இருந்தால், உங்கள் அண்டைவீட்டாரைபற்றி யோசிப்பீர்கள். இதுபோல, ஒரு நாள் அல்ல கடந்த ஒரு மாத காலமாக சென்னை திருவொற்றியூர் பகுதிவாசிகள் தினம் தினம் நடுஇரவில், மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு ரசாயன வாயுகசிவால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். …
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்: சதுரங்க மேடையில் அரங்கேறிய அரசியலுக்கு என்ன பொருள்? அ.தா. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 29 ஜூலை 2022, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக 'தூரத்' தொடங்கிவிட்டது. ஆனால், இந்தப் போட்டித் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்…
-
- 5 replies
- 487 views
- 1 follower
-
-
ஹைட்ரோகார்பன் திட்ட கூட்டம் ஏன்? தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப் படம் மன்னார்குடி தாலுகாவில் பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் இணைப்பு பணிகள் தொடர்பாக முத்தரப்புக் கூட்டத்திற்காக திருவாரூர் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் விடுத்திருந்த அழைப்பு இரண்டே நாட்களில் ரத்தாகியது. அந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் கூட்டம் பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்ற ஆட்சியரின் மறு அறிவிப்பு பரபரப்பை அதிகரித்துள்ளது. அறிவிக்கப்பட்ட …
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
மு.க.ஸ்டாலின்: ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் - முதல்வர் உரையின் 10 அம்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN மலையாள மனோரமா பத்திரிகையின் 'இந்தியா 75' நிகழ்வில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என் பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே என்று பேசத்தொடங்கி உரையாற்றினார். நான் கன்னூருக்கு வந்தபோது கேரள மக்கள் அளித்த வரவேற்பை என்னால் மறக்க முடியவில்லை என்று கேரள மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 2 நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசினார். இந்த பேச்சின்போது, இந்தியாவின் பன்மைத்தன்மை, திமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு, சிபிஎ…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... நால்வருக்கு, குரங்கம்மை நோய் ? தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை, மகன், மகள் மற்றும் மேலும் ஒருவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில், 4 பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள்…
-
- 0 replies
- 358 views
-
-
"செஸ் ஒலிம்பியாட்" விளம்பரத்தில், பிரதமரின்... படத்தை சேர்க்க வேண்டும்- நீதிமன்றத்தில் மனு. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆரம்பித்து வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் இந்து முன்னணியினர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர். சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த பெரியார் …
-
- 10 replies
- 868 views
-
-
காவல் நிலையத்தில் சக போலீசின் செல்போனை திருடிய 2 போலீசார் இடைநீக்கம் 29 ஜூலை 2022, 07:09 GMT படக்குறிப்பு, கேணிக்கரை காவல் நிலையம் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்புடைய செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, போலீசார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்தார். ராமநாதபுரம் ஆயுதப் படையில் பணிபுரிந்த காவலரான அசோக்குமார் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவலர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறிய அசோக் குமார் உறவினர்கள் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டு…
-
- 3 replies
- 465 views
- 1 follower
-
-
இலங்கைக்கு உதவிட கமலஹாசன் விருப்பம் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவும் விருப்பத்தை தென்னிந்தியத் திரைப்பட நடிகர், உலகநாயகன் கமலஹாசன், சென்னையிலுள்ள இலங்கையின் துணைத்தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். கமலஹாசன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு கடந்த 24ஆம் திகதி பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமாத் துறை குறித்து கலந்துரையாடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கையின் சுற்றுலாத…
-
- 0 replies
- 409 views
-
-
அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு Posted on July 28, 2022 by தென்னவள் 12 0 செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிலை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. செம்பியன் மகாதேவி உலோக சிலையை இந்தியா கொண்டு வரு…
-
- 0 replies
- 837 views
-
-
மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி: தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 28 ஜூலை 2022, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுவர் அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம் எடுத்தபோது என்ன செய்தார்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD RAJYA SABHA படக்குறிப்பு, எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிறகு ஆவணத்தில் கையெழுத்திட வரும் இளையராஜா இளையராஜா எனும் நான் என்று தொடங்கி கடவுளின் பெயரால் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறேன் என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர…
-
- 3 replies
- 517 views
- 1 follower
-
-
தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா: ஆளுநர் போட்ட கிடுக்கிப்பிடி - மற்ற முக்கிய மசோதாக்கள் நிலை என்ன? பரணிதரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (ஜூன், 2, 2022) தமிழ்நாட்டில் சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டபோதும், அது தொடர்பாக சில கேள்விகளை அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுப்பியிருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் ச…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் கேரளா போல அனைத்துப் பள்ளிகளும் கோ-எட் ஆகவேண்டுமா? பெண்கள் பள்ளியில் படித்த மாணவி என்ன சொல்கிறார்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் "பெண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு ஆண்- பெண் சேர்ந்து படிக்கும் கோ-எட் கல்லூரியில் சேர்ந்தபோது, ஆண்கள் இருந்த இடத்தில் பேசுவதற்கே எனக்கு தன்னம்பிக்கை வரவில்லை. நான் நன்றாகவே பேசினாலும் அவர்கள் கேலிதான் செய்வார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டிருந்தேன். அது வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளவிடாமல் என்னைத் தடுத்தது," என்கிறார் பெண்கள்…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்தனர், பைப்பால் தாக்கினர், விடிய, விடிய சித்ரவதை` மோகன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் `நாங்க எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்த வேலையைப் பார்த்துட்டு பிழைச்சிட்டிருந்தோம். எங்களை திருடங்க மாதிரி பிடிச்சுட்டு போயி அடைச்சு வச்சு மொட்டை அடிச்சது மட்டுமில்லாம பைப்பால அடிச்சு சித்ரவதை பண்ணிட்டாங்க` என்று குமுறுகிறார் கோவையில் தெருவோரம் வசித்து வரும் முகமது ஹூசைன். கோவையில் தனியார் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுள் முகமது ஹூசைனும் ஒருவர். இவரைப் போல தெருவோரம் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்…
-
- 1 reply
- 452 views
- 1 follower
-
-
திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் கூறியதைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்ய பிரியா தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கிராமங்…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக படிக்க முடியாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த தம்பதி கோபி மற்றும் இளவரசி. விருத்தாசலத்தில் உள்ள செல் சர்வீஸ் சென்டரில் கோபி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகள், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
ரஜினிகாந்த்: "அறிவில் அடங்கியது ஜாதி" - சர்ச்சையாகும் ஆன்மிக பேச்சு 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'அறிவு' என்பது 'புத்தி', 'சிந்தனை', 'நீ யார்?' 'எங்கிருந்து வந்தாய்?', 'ஜாதி' என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவர் பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோஷமோ இல்லை. ஏனென்றால் சந்தோஷமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல," என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது பேச்சு ஆன்மிக ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தபோதும், சமூக ஊடகங்களில் பலரும் அவரது உரைக்கு எதிர்வினையாற்றியுள்ளனர். ரஜினி …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் பிள்ளையைப் போல 40 ஆண்டுகளாக இந்த தென்னை மரங்களை வளர்த்தேன். ஆனால் இன்று உரிய விலை கிடைக்காததால் அனைத்து மரங்களையும் வெட்டிவிட்டேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம். தென்னை விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான 143 தென்னை மரங்களை தானே வெட்டி சாய்த்துள்ளார் ராமலிங்கம். ஆனால் இது ராமலிங்கத்தின் பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தென்னை சார்பு பொருட்களுக்கு உரிய விலை கிட…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-