Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை திருப்பிக் கொடுத்த ரூ.927 கோடி: ஒருவர் கூட பயனடையவில்லையா? மோகன் பிபிசி தமிழுக்காக 27 மார்ச் 2022, 05:35 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு தமிழ்நாடு அரசு ரூ.4281.76 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக (2016 - 2021 வரை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடி செலவிடப்படாமல் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆர…

  2. தமிழகம் வரும் இலங்கை அகதிகளுக்கு உதவ தீர்மானம்! இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு உதவ தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாா், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 16 போ் கடந்த 22 ஆம் திகதி அகதிகளாக தனுஷ்கோடி சென்றனா். அவா்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழா்கள், தமிழகம் வரத் தயாராக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்திருந்தனா். …

  3. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.. இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன்களைப் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்பலகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம்…

  4. வேலூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது - நடந்தது என்ன? 23 மார்ச் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில் ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது,…

  5. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முன்னிலையாகியிருந்தார். இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் …

  6. உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு சிட்டுக்களுடனான நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பட மூலாதாரம்,KOODUGAL வீட்டு வாசலில் அரிசி புடைக்கும்போது சிதறுவதைச் சாப்பிட வரும் அவற்றோடு குழந்தைப் பருவத்தில் விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. அத்தகைய சிட்டுக் குருவிகளுடனான அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு முன்பு இருந்த அளவுக்குக் கிட…

  7. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதையடுத்து இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை அதன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை கூடியதும் பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோரினார். அதிமுக அமளி, வெளிநடப்பு …

  8. தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா? - அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் 'காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடக்கின்றன. ஆனால், சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே உள்ளன' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப…

  9. ஹிஜாப் தீர்ப்பு: தமிழகத்தில் தொடரும் போராட்டம்! மின்னம்பலம்2022-03-16 ஹிஜாப் மீதான தடை தொடரும் என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என்றும் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை நியாயமான கட்டுப்பாடுதான், அதனால் அதன் மீதான தடை உத்தரவு செல்லும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று(மார்ச் 15) தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து நேற்றே, சென்னை புதுக் கல்லூரியைச்…

    • 3 replies
    • 499 views
  10. பேரறிவாளன்: ``விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட இன்னும் காலம் கைகூடவில்லை." - அற்புதம் அம்மாள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார். பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்திருப்பது 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயின் பாசப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனப் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். பேரறிவாளன் இன்று காலை புழல் மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரின் தாயார் அற்புதம் அம்மாள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அவரை வரவேற்றனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அவரின் தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``நீதிக்கான…

  11. காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது. மன்னார்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்…

  12. சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக மாற்றும் தி.மு.க - தமிழ்நாடு அரசின் மசோதாவால் என்ன பலன்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார உரிமைக்கான மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. `கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்பில் பணியாளர் பற்றாக்குறை உள்பட ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இவற்றைக் களையாமல் சுகாதார உரிமையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது வெறும் வாசகமாக மாறிவிடக் கூடாது' என்கின்றனர், மருத்துவ வல்லுநர்கள். தி.மு.க அரசின் முயற்சிகள், இந்தியாவுக்கு முன்னோடித் திட்டமாக மாறுமா? …

  13. கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில்... 3-ஆவது நாளாக, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ ! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த்யு காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் முயற்சிக்கு செய்துவரும் அதேவேளை காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுத்தீ காரணமாக தோகைவரை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறன. https://athavannews.com/2022/1271622

  14. மூன்று வழக்குகளில் இருந்து பிணை : சிறையிலிருந்து விடுதலையானார் ஜெயக்குமார்! நில அபகரிப்பு வழக்கு, தி.மு.க. பிரமுகர் மீதான தாக்குதல் மற்றும் வீதிமறியல் போராட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்தவர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜெயக்குமார் சார்பில் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையிலேயே நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது. ஏற்கெனவே தி.மு.க. பிரமுகர…

  15. 1991 இல் ராஜீவ் படுகொலை முதல் பேரறிவாளனுக்கு ஜாமீன் வரை.. நடந்தது என்ன? 32 ஆண்டு கால பின்னணி! tamil.oneindia சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் ஜாமீன் பெற்றது வரை கடந்து வந்த பாதை என்ன? 1991 மே 21- ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் 1991 ஜூன் 11- ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைது 1991 ஜூன் 14- நளினி ஸ்ரீகரன் என்கிற முருகனும் கைது செய்யப்பட்டார் 1991 ஜூலை 22- சுதேந்திரராஜா எனும் சாந்தன் கைது செய்யப்பட்டார். 1…

  16. பேரறிவாளனுக்கு ஜாமீன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளானுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட…

  17. கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டகாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்…

  18. ஜெயலலிதா மரண விசாரணை : 2 வருடங்களின் பின் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்தது! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் முன் அவருக்கு தலைசுற்று, மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்கக்கூட சிரமப்பட்டதாகவும், பாபு மனோகர் என்ற மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தனர். அவர்களிடம் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நடந்தவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.…

  19. கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்…

  20. இப்படி... நடக்கும், என்று எதிர்பார்க்கவில்லை 😢

    • 11 replies
    • 1.2k views
  21. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்றவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் – முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றது. முதலமைச்சரின் ஆணையை மீறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை இராஜினாமா செய்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாந…

    • 0 replies
    • 247 views
  22. நான் ஏன் தமிழன்? ஏனெனில் என் ரத்தம் தமிழக மண்ணுடன் கலந்திருக்கிறது”- ராகுல் காந்தி பேச்சு தான் தமிழன் என்று ஏன் சொன்னேன் என்பது குறித்து ராகுல்காந்தி உருக்கமாக உரையாற்றியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ராகுல்காந்தி பேசுகையில், ”ஒரு அருமையான புத்தகத்தை ஸ்டாலின் வழங்கியுள்ளார். அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். இது பல ஆண்டுக…

  23. கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி! கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திக் மற்றும் கடற்படை கடலோர காவல்படை மீன்துறை, சுங்கத்துறை, உளவுத்துறை, அதிகாரிகளும் மீனவர் ச…

  24. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்! மின்னம்பலம்2022-03-02 திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.