தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
இந்தியா - இலங்கை இடையே மின்பாதை அமைக்கக் கூடாது! இந்தியா - இலங்கைக்கு இடையே கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது …
-
- 1 reply
- 597 views
-
-
லீலாவதி கொலை வழக்கு: '2k கிட்ஸ்' தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK / CPIM TAMILNADU படக்குறிப்பு, லீலாவதி தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அவ்வப்போது, லீலாவதி கொலை வழக்கு என்று இணையத்தில் பேசப்படும் இந்த வழக்கு என்ன? யார் இந்த லீலாவதி? ஏன் அவரது கொலை வழக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுகிறது? ஏப்ரல் 23, 1997. தன் கணவருடன் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்ற…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
சூழலியலாளர் சாந்தலா தேவி: "என்னை போலவே உடைந்திருந்த தடாகம் பள்ளத்தாக்கை மீட்க விரும்பினேன்" மோகன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMED FAZIL படக்குறிப்பு, சாந்தலா தேவி கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக 18 வயதான சாந்தலா தேவி ஆய்வு செய்து தயாரித்திருக்கும் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தலா தேவி. இவரின் தந்தை மருத்துவர் ரமேஷ். கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த இரு சக்கர சாலை விபத்து ஒன்றில் ச…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 21 ஏப்ரல் 2022, 09:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது? அமைச்சர் சொன்ன காரணம் கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மி…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
7 பேர் விடுதலை - ஜனாதிபதிக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டது எப்போது? மின்னம்பலம்2022-04-21 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27ஆம் தேதி ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே உள்ளார். இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்…
-
- 0 replies
- 329 views
-
-
கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் இத்திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள…
-
- 2 replies
- 434 views
- 1 follower
-
-
ரோஜா பேட்டி: "ஆந்திராவில் அமைச்சரானாலும் மாமியார் வீடு தமிழ்நாடுதான்!" 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் அமைச்சராகியிருப்பது ஆந்திர பிரதேசத்தில் என்றாலும் என்னுடைய மாமியார் வீடு தமிழ்நாடுதான். இதன் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா. சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சராக ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா தரி…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
சைபர் மோசடிக் குற்றங்கள் கோவையில் அதிகரிக்கின்றனவா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவ்யா என்பவர் சமீபத்தில் ரூ.1,28,000 பணத்தை இணைய வழி முறைகேட்டில் இழந்துள்ளார்.திவ்யாவின் வாட்சப் எண்ணுக்கு அவருடைய தலைமை செயல் அதிகாரி போல ஒரு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பேசிய நபர் அமேசான் பரிசு கூப்பன் வாங்கி தனக்கு அனுப்பி வைக்குமாறு திவ்யாவிடம் கேட்டுள்ளார். வாட்சப்பில் பேசியவர் தன்னுடைய தலைமை செயல் அதிகாரி என நம்பிய திவ்யா ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள ஐந்து அமேசான் பரிசு…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
ஏ. ஆர். ரஹ்மான்: தமிழ், தென் இந்தியர்கள் குறித்து பேசியது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஏ. ஆர். ரஹ்மான், இது நாம் இணைவதற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், 'தமிழுக்கும் அமுதென்றுபேர்!' என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் 'தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!' என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கான எதிர்வினை…
-
- 0 replies
- 798 views
- 1 follower
-
-
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு: இனி அவருக்குள்ள வாய்ப்புகள் என்ன? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TTV DINAKARAN படக்குறிப்பு, வி.கே. சசிகலா `அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ` அ.தி.மு.க மீது சசிகலாவுக்கு உரிமை இல்லை என்றாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தாலும் பயன் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
கொரோனோ தொற்றின்... புதிய உருமாற்றம், தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை- சுப்பிரமணியன் புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, நாட்டில் பரவும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/12760…
-
- 0 replies
- 156 views
-
-
இலங்கை போர்: தமிழ்நாடு இல்லனா செத்துருப்போம்-மனம் திறக்கும் நடிகர் போண்டா மணி(கேதீஸ்வரன்) தமிழ் மக்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என சிங்கள மக்களும் இப்போது உணர்கின்றார்கள். தமிழர் பிரதேசங்களில் விவசாயம் இருப்பதினால் அவர்கள் கஸ்ரப்பட மாட்டார்கள். இப்போது சிங்களவர் மட்டுமே பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள். புலம்பெயர்ந்த ஈழமக்கள் ஏழைமக்களல்ல.வசதியாக வாழ்ந்தவர்கள். பிரபாகரன் இருக்கும் வரைக்கும் இலங்கைக்குள் யாரும் வரமுடியவில்லை. தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பாய் இருந்தது. வெள்ளைக்கார நாட்டில் வாழும் தமிழ் அகதிகள் சகல உரிமைகளுடனும் வாழ்கின்றார்கள். தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகளுக்கு எவ்வித உரிமையுமில்லை.
-
- 0 replies
- 686 views
-
-
ஒற்றை மொழி... ஒற்றுமைக்கு, உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இவ்வாறான தவறுகளையே பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்தும் செய்கின்றது என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இவ்வாறான முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெறமாட்டார்கள் என்றும் கூறினார். https://athavannews.com/2022/1275967
-
- 0 replies
- 312 views
-
-
திருச்சி அகதிகள் முகாமில் விதைகள் சேகரித்து, மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 7 ஏப்ரல் 2022, 13:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHENDRAN சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் மரக்கன்றுகள் வளர்த்தும் விதைகளை சேகரித்தும் அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க …
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... கொரோனா கட்டுப்பாடுகள், நீக்கம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், முகக் கவசங்களை அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 553 views
-
-
திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். சென்னை: திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக, அங்குள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில், ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். 2ஆவது நாளாக நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
"தினமும் 3 குடம் தண்ணியே வருது" - சென்னையில் பிபிசி தமிழ் கள ஆய்வு ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 ஏப்ரல் 2022, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES `கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு வருமோ?' என்ற அச்சத்தில் சென்னை மாநகர மக்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர். 'ஒவ்வோர் ஆண்டும் பெய்யக்கூடிய மழையில் 95 சதவீத நீர் கடலை நோக்கித்தான் செல்கிறது. மழை நீர் சேமிப்பு தொடர்பான எந்தக் கணக்குகளும் அரசிடம் இருப்பதில்லை. அதனால்தான் மிகையான மழை இருந்தும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றிப் பேசுகிறோம்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். கோ…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
செந்தில்குமரன்: உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரை தமிழர் பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SENTHIL KUMARAN நீங்கள் பார்க்கும் இந்தப் படம்தான் இந்த ஆண்டின் (2022) மிகச்சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை பெற்றுக் கொடுத்த தொகுப்பின் ஒரு படம். விருதைப் பெற்றுக் கொடுத்தது இந்தப் படம் என்றால், பெற்றுக் கொண்டவர், ஒரு மதுரைத் தமிழன். சொல்லப்போனால், இந்த விருதைப் பெறும் முதல் தென்னிந்தியரும் இவர்தான். பட மூலாதாரம்,SENTHIL KUMARAN ப…
-
- 1 reply
- 580 views
- 1 follower
-
-
கோவை அருகே 2 மாதங்களில் 9 யானைகளின் உயிரிழப்பு - காரணம் என்ன? பதறவைக்கும் படங்கள் மோகன் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,COIMBATORE FOREST DEPARTMENT கோவை அருகே கடந்த இரண்டு மாதங்களில் யானைகளின் உயிரிழப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் டாப் ஸ்லிப் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. 06.02.2022 அன்று 30 வயது பெண் யானை ஒன்று காரமடை வனச்சரகம் மானார் பிரிவுக்கு உட்பட்ட பரளிக்காடு பழங்குடியினர் கிராமம் அருகில் இறந்தது. …
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
தமிழகத்தில்... சுங்கச் சாவடிகளின் கட்டணம், அதிகரிப்பு! தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274211
-
- 0 replies
- 385 views
-
-
பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…
-
- 1 reply
- 328 views
-
-
14 வயதுடைய சினேகன் சாதனை! தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன். அவரது மனைவி அனுசர. இவர்களது மகன் சினேகன் (வயது 14). சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் முதல் இலங்கை தல…
-
- 0 replies
- 432 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து, விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்க இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்த…
-
- 0 replies
- 185 views
-
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த.. கிருமி நாசினி பொலிஸாரினால் பறிமுதல்! தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸார் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர ரோ…
-
- 0 replies
- 193 views
-
-
தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் March 24, 2022 இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமெரிக்கு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தோடு அரசுக்கு எதிரான போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு மீண்டும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணம் மூலம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கியுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நில…
-
- 1 reply
- 360 views
-