Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய ராணுவ வீரரின் ஒரே அடியில் வெலவெலத்துப்போன மசூத் அசார்.. அதிகாரி வெளியிட்ட பரபர தகவல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்திய ராணுவ வீரரிடம் கன்னத்தில் அறை வாங்கி வெலவெலத்துப்போன ஒரு சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஏற்றுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் பெயர் மசூத் அசார். 1968ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் என்ற ஏரியாவில் பிறந்தவன். ஹர்குத்-அல்-அன்சார் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டு படிப்படியாக அந்த தீவிரவாத அமைப்பில் பெரிய பதவிக்கு வந்தான். இந்த தீவிரவ…

    • 2 replies
    • 1.4k views
  2. புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் …

  3. படத்தின் காப்புரிமை Getty Images முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?" 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "'வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்த…

  4. படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சௌதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சௌதி அரேபியா கைக்க…

  5. படத்தின் காப்புரிமை NARINDER NANU Image caption (கோப்புப்படம்) இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்க்லானா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த தீவிரவாதிகள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், வியாழனன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று ராணுவ தகவல்கள் கருதுகின்றன. …

  6. ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வமா பகுதியில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இப்பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக குறித்த பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆராயும் வகையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 44 படை வீரர்களின் உயிரை காவுகொண்ட குறித்த பயங்கரவாதத் தாக்குதலை ஜெய்ஷ், முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இக்கொடூரத் தாக்குதலுக…

  7. பிரியங்கா காந்தியின் கணவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. February 16, 2019 பிரியங்கா காந்தி கணவர் ரொபர்ட் வதேராவின் 4.62 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மேற்கொண்டதாக , காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், கிழக்கு உபி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ரொபர்ட் வதேரா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ரொபர்ட் வதேரா விசாரணைக்காக அமுலாக்கத் துறையில் முன்னிலையாகிவருகின்ற நிலையில் அவர் மீது, ராஜஸ்தானில்; குறைவான விலையில் நிலங்களை வாங்கி அவற்றினை போலியான ஆவணங்கள் மூலம் …

  8. குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019 இந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா வீதியில், நேற்று முன்தினம், துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பொன்றின் இச் செயற்பாட்டுக்கு இந்தியாவிலிருந…

  9. காஷ்மீர் தாக்குதல் – கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு February 16, 2019 காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாதி நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக…

  10. அனுராதா பேசின் ஜம்வால் நிர்வாக ஆசிரியர், காஷ்மீர் டைம்ஸ் படத்தின் காப்புரிமை Reuters (இந்தக் கட்டுரையில…

  11. ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை – பாகிஸ்தான் : February 15, 2019 ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் தங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விடுமுறைக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வேகமாக வந்து மோதியதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த nநிலையில் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்…

  12. ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்தும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர். …

  13. ரியாஸ் மஸ்தூர் பிபிசி, ஸ்ரீநகர் படத்தின் காப்புரிமை Gns ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைய…

  14. சோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை! நில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதேராவிடம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ரொபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹொஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேற்று ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை இடம்பெறுகிறது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சோனியாவின்-மருமகனிடம்-இர/

  15. அமெரிக்காவிடமிருந்து நவீன துப்பாக்கிகளை இறக்குமதி செய்யும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலேயே இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளமையால் எதிர்வரும் 12 மாதத்திற்குள் குறித்த துப்பாக்கிகளை அமெரிக்கா, இந்தியாவிற்கு வழங்குமென பாதுகாப்புத்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து 700 கோடி இந்திய ரூபாய் செலவில குறித்த துப்பாக்கிகளை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

  16. டெல்லி ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் கருகி பலி.. மீட்பு பணி தீவிரம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இன்று விடிகாலையில் ஓட்டலில் ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.இந்நிலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 26 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்…

  17. காதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி! காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 இலட்சம் ரோஜாப்பூக்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் விற்பனையாகவுள்ள ரோஜாவொன்றின் விலை 16 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேவேளை கடந்த ஆண்டு ஒரு ரோஜாப்பூ 10 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/காதலர்-தினத்துக்காக-45-லட…

  18. ஒமர் ஃபாரூக் பிபிசி இந்தி சேவை படத்தின் காப்புரிமை Hindustan Times ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடுத்த தனிப்பட்ட தாக்குதலையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கும், அதன் முன்னாள் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது. …

  19. படத்தின் காப்புரிமை Getty Images ஃபிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது. தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டுள்ளது. தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் இந்தக் கட்டுரைகளை எழுதியவருமான என். ராமிடம் இந்த விவகாரம் குறித்து விரிவா…

  20. உத்தரகண்ட் விஷச் சாராய பலி எண்ணிக்கை 116ஆக உயர்வு.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு 100க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட உத்தரப் பிரதேசம், உத்தர கண்ட் விஷச் சாராய சாவுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் விஷச்சாராயம் அருந்திய 116 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.போலி மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்ப…

  21. மக்கள் இறைச்சி உண்வதை குறைத்தோ அல்லது முற்றிலும் தவிர்ப்பது அதிகமாகி வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலத்திற்காக, அல்லது இயற்கையை பாதுகாக்க அல்லது விலங்கினங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இறைச்சியை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும், பால் பொருட்களைக் கூடத் தவிர்க்கும் வீகனாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன? அதிகரிக்கும் வருவாய் உலகளவில் இறைச்சி உண்பது கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக உயர்ந்திருப்பது தெரிய வந்…

  22. பிரதமர் மோடியின் அருணாச்சல் விசிட்டுக்கு சீனா கடும் கண்டனம்! அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1962-ல் சீனாவுடன் யுத்தம் முடிந்த பிறகும் அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் இன்னும் சச்சரவு நீடிக்கிறது. 2017-ல் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுவ இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது. அப்போது சீனாவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்தியா எந்த புதிய திட்டங்களையும் துவங்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தியிருந்து. இந்நிலையில் இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வை…

  23. தீப்தி பத்தினி பிபிசி தெலுங்கு படத்தின் காப்புரிமை Getty Images "என் பெற்றோர் விவசாயிகள். நான் ஏன் அமெர…

    • 1 reply
    • 735 views
  24. ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்த 'தி இந்து’... சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு..! இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு தி இந்து நாளேடு அழைத்து உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிங்களர் நுழைய இன்னமும் தடை இருக்கிறது. இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளேடு மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்துள்ளது. பெங்களூருவில் நாளை மறுநாள் இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் #StopGenociderRajaPakshe என்ற ஹேஷ்டேக்குடன் கடு…

  25. படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.