அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…
-
- 0 replies
- 774 views
-
-
இந்தியாவை அறிவோம்: மகாராஷ்டிரம் வெ.சந்திரமோகன் இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம். தலைநகர் மும்பை. மெளரியப் பேரரசர்கள், சாதவாகனர்கள், வாகாடகப் பேரரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரி யாதவப் பேரரசர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலம். கி.பி.7-ம் நூற்றண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பில் மகாராஷ்டிரம் எனும் பெயர் முதலில் பதிவானது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி…
-
- 0 replies
- 616 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…
-
- 0 replies
- 533 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்தித்ததை ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்ட இந்திய மத்திய அமைச்சர். 1987 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ருவிற்றர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக கடமையாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hardeep Singh P…
-
- 0 replies
- 437 views
-
-
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.இந்நிலையில், நிரவ…
-
- 0 replies
- 405 views
-
-
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- அ.தி.மு.க., தி.மு.க. பங்கேற்பு by : Litharsan பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார். அதேபோல், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் …
-
- 0 replies
- 272 views
-
-
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…
-
- 0 replies
- 193 views
-
-
இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர். இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணயங்கள் சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் …
-
- 1 reply
- 831 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செபி தலைவர் மதாபி புச் (கோப்புப்படம்) 49 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பெர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர்…
-
- 1 reply
- 687 views
- 1 follower
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வௌ்ள நிவாரண நிதியாக 50 ஆயிரம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் தொடக்கம் பங்களாதேஷில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பங்களாதேஷுக்கு-நன்கொடை-வழங்க-நடவடிக்கை/175-237884
-
- 0 replies
- 490 views
-
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கங்கா அதிவேக நெடுஞ்சாலையில் ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமான…
-
-
- 11 replies
- 623 views
-
-
இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த இருவரே மேற்படி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் மிகப்பெரிய நெருக்கடி நிலையை இந்தியா எதிர்கொள்ளும் எனவும், இங்கு வைரஸ் தாக்கம் எளிதில் பரவும் சாத்தியம் காணப்படுவதாகவும் உலக சுகாதார மையம் அண்மையில் எச்சரித்திருந்தது. கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது…
-
- 2 replies
- 345 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல் Coronavirus News படத்தின் காப்புரிமை EPA மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா? ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது…
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்ய…
-
- 0 replies
- 169 views
-
-
மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரைத் தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும் என்றும், இதற்காக அவர்களது தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத…
-
- 0 replies
- 470 views
-
-
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது! by : Litharsan இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 553 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 547 பேர் குணமடை…
-
- 0 replies
- 293 views
-
-
அந்தமான் தீவுகள்: அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ் - விரிவான தகவல்கள் Getty Images கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது. அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பிபிசியிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொலைதூர தீவில் வசிக்கும் அவர்களில் நான்கு பேருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னதாக, நகர்ப்புற பகுதியில் வசித்த மேலும் 6 பேருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 374 views
-
-
இந்தியாவுக்கு உதவுவதாக, சேகரித்த நிதியை... பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்? கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போலி செய்திகளையும் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் டிஸின்போலாபின் அறிக்கையின்படி, பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன. கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்ற போலிக்காரணத்தில் அவர்கள் பெரும…
-
- 0 replies
- 222 views
-
-
பாகிஸ்தானில் மசூதியில்... நடத்தப் பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 30பேர் உயிரிழப்பு: 50பேர் காயம்! பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரித்தனர். மேலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே, பிரதான மண்டபத்தில் நிரம்பியிருந்த வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிய முடிகின்றது. எனினும், எந்த குழுவும் உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. மத்திய பெஷாவரில் உள்ள மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள…
-
- 2 replies
- 305 views
-
-
பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன? 21 மே 2022, 14:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வ…
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
அசாம் மாநிலத்தில், தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி... இதுவரை 62 பேர் உயிரிழப்பு இந்தியா – அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 இலட்ச…
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
சத்ரபதி சிவாஜி: ஔரங்கசீப்பின் சிறையில் இருந்து தப்பியவர், முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DR. KAMAL GOKHALE படக்குறிப்பு, சத்ரபதி சிவாஜி ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது. …
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
மத தலைவர்களை கொல்ல சதி செய்த மூவர் கைது January 19, 2019 தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர். குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு குழு சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விசாரணையில் அவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் எனவும் …
-
- 0 replies
- 334 views
-
-
பட மூலாதாரம்,MAPLE PRESS கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 1 செப்டெம்பர் 2024, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் …
-
- 0 replies
- 699 views
- 1 follower
-