Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு! இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது. இதனிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் லிப…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. 16 செப்டெம்பர் 2023, 10:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. அவை அந்நாட்டின் முக்கிய இராணுவ தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்தால், 2025-ம் ஆண்டுக்குள் அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும். செப்டம்பர் 11 ஆம் தேதியன்ற…

  3. இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்க்கும் சீனக் கப்பல்! இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி…

  4. 22 JUL, 2024 | 10:45 PM மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விப…

  5. இந்திய கடற்படையின் ட்ரோபெக்ஸ் பயிற்சியில் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு Published By: VISHNU 13 MAR, 2023 | 12:41 PM இந்தியக் கடற்படையின் மிகப் பெரிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சியான 'ட்ரோபெக்ஸில்' சுமார் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்த பயிற்சிக்கு 21 மில்லியன் சதுர கடல் மைல்களை உள்ளடக்கியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கடற்படையின் கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கிய சிக்கலான பயிற்சிகள் மற்றும் சூழ்ச்சிகளின் தொடர் 'தியேட்டர் லெவல் ஆப்பரேஷனல் ரெட…

  6. அந்தமானின் போர்ட் பிளேர் அருகே இந்திய கடற்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீன கப்பலை இந்திய கடற்படை கப்பல் விரட்டியடித்தது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் அருகே, சீனாவின் ஷி யான் 1 என்ற சீன ஆராய்ச்சி கப்பல், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனை, அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த , இந்திய கடலோர பாதுகாப்பு கண்காணிப்பு விமானம் கண்டுபிடித்தது இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில், கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா கண்காணித்து வருகிறது. இந்த பகுதிகளில், இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து சீன கப்பல் ஆய்வு செய்து கொண்டிருந்தது. இதனை கண்டுபிடித்த இந்திய அதிகாரிகள், இந்தியன் …

  7. இந்திய கடல் எல்லை பகுதியில்... 80இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 வங்கதேச படகுகளை ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் கைப்பற்றிய நிலையில், படகில் இருந்த சுமார் 360 கிலோகிராம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 88 வங்கதேச மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267406 ########## ######### ######### அந்த …

  8. டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்ச…

    • 0 replies
    • 509 views
  9. இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் சுமார் 40 இந்திய பராமிலிட்டரியினர் கொல்லப்பட்டதும், அதற்குப் பழிவாங்கலாக இந்தியா விமானப்படைமூலம் தாக்குதல் நடத்தியதும் நினைவிருக்கலாம். இத்தாக்குதலில் ஈடுபட்ட விமானத்தை ஓட்டிச் சென்ற மலையாளியான வர்தாமனை பாக்கிஸ்த்தான் ராணுவம் கைதுசெய்து, விசாரணைக்கு உற்படுத்தி பின்னர் நல்லெண்ண நோக்கத்தில் விடுதலை செய்ததும் அறிந்ததே. கைதுசெய்யப்பட்டிருந்தபொழுது இந்திய விமானியிடம் விசாரணை நடைபெறும் வேளையில் எடுக்கப்பட்ட பேட்டி பரவலாக எல்லோரும் பார்த்ததுதான். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்துவரும் இவ்வேளையில், இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் இந்திய - பாக்கிஸ்த்தானிய அணிகளுக்கிடையிலான …

  10. இந்திய குடியரசு தினமான இன்று அசாமில் குண்டு வெடிப்பு ! இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ள…

  11. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் 5 ஜனவரி 2021 பட மூலாதாரம், GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொட…

  12. இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ…

  13. இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 26 ஜூலை 2022, 01:51 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்ற…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் ந…

  15. இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…

  16. இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தி…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 9 மே 2025 ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார். மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி. இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மச…

  18. படத்தின் காப்புரிமை TOLGA AKMEN இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் பரவலாக வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, லண்டனில் கொண்டாட்டம் மட்டுமின்றி, போராட்டமும் நடைபெற்றது. லண்டன் நகரின் இந்தியா பிளேஸ் பகுதியிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்புறம் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் காலை முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதே வீதியின் மறுபுறம் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வே…

  19. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங் “நான் இறந்தால், என் உடலை வாங்காதே… அப்படி வாங்கினால், நீ அழுவாய்… அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடமே கூறியவர் இந்திய விடுதலையின் புரட்சி நாயகன் பகத்சிங்! “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் அவர். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டார். இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளைய…

  20. இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்! ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்…

  21. இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு! இந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் ‘ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு’ என்ற சவாலில் பங்கேற்குமாறு பிரதமர் இளைஞர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “உங்களிடம் செயலி போன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நிபுணத்துவம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்பட…

  22. இந்திய ஜனநாயகத்தின் ’காணொளி அரசியல்’ எம். காசிநாதன் / 2020 ஜூன் 01 கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், தினமும் சென்னையில் உச்சநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில், இந்திய ஜனநாயகத்தின் செயற்பாடுகள், டிஜிட்டல் மயமாகி வருகின்றன. வழக்கமான பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்ற விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் போன்றவற்றைத் தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டே, இவ்வாறு டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும், இந்த நவீன களத்துக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள, கொரோனா வைரஸ் பேரிடர், ஒரு வழியில் உதவியிருக்கிறது என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசார யுக்திகளில், வரலாறு காணாத மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து மாநி…

  23. இந்திய ஜனாதிபதி முர்முவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் 12 SEP, 2022 | 12:10 PM சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய தலைமைத்துவத்தில் ஜி-20 மன்றம் பலதரப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இதன் போது நம்பிக்கை தெரிவித்தார். ஜார்ஜிவாவை ராஷ்டிரபதி பவனுக்கு வரவேற்ற இந்திய ஜனாதிபதி முர்மு, உலகம் கொவிட் தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டைக் கடந்து செல்கிறது என்று கூறினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் பல குறைந்த வருமானம் கொண்…

  24. இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:32 PM எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 45,000- கடந்துள்ளது. தொடர்ந்து இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்…

  25. புதுடில்லி சிறுமியின் மரணத்திற்கு பொறுப்புக்கூறல் கோரும் அடையாளங்களை வைத்தே போராட்டக்காரர்கள் அணிவகுத்தனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர், அதில் "இந்தியாவின் மகளுக்கு நீதி" என்று எழுதப்பட்டிருந்தது. 9 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் கிராமத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் தற்காலிக மேடையில் அமர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். சிறுமியின் தாயார் கதறி அழுதார், சில சமயங்களில் தனது மகள் "திரும்பி வா" என்று அழைத்தார். அதிகாலையில், சுமார் 80 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் மதிப்பிட்டனர். எவ்வாறாயினும், கூட்டம் விரைவில் பெருகியது, சிஎன்என் குழு தரையில் மதிப்பீட்டை 300 க்கு அருகில் வைத்தது. போராட்ட இடத்திற்கு 200 பாதுகாப்புப் படையினர் நியமிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.