Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு , உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றினை அமைத்துள்ளது. தி 1991-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததுடன் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறித்த …

  2. அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை – பழி வாங்கலா? இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார். இந்த ந…

  3. 24 APR, 2025 | 05:17 PM இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர…

  4. கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் 2 பகுதியிலானோர் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 7900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் இதுவரை 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் கடந்த பிப்.,27ம் முதல் மார்ச் 1 வரையிலான 4 நாள் தொழுகை நடைபெற்றது. இதில் கனடா, நைஜீரியா, இந்தியா, ஆஸ்திரேலியா உ…

    • 2 replies
    • 343 views
  5. இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டட பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி பட மூலாதாரம், OM BIRLA OFFICIAL TWITER PAGE இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டட திட்ட வடிவமைப்பின், அமலாக்கத்தில் விதி மீறல்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜனவரி 5) வழங்கியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற புதிய கட்டடம் மற்றும் அதையொட்டிய…

  6. மனித மிருகம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து, ஒக்சியன் வழக்கப்பட்ட நிலையில் icu ல் இருந்த நிலையில், கணவர், இரவு தங்க முடியாது என்று சொல்லப்பட்டதால் வீடு சென்ற நிலையில், அங்கிருந்த வார்டு பாய் அந்த பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாருக்காவது சொன்னால், அனைத்தையுமே பிடுங்கி எறிந்து, கொலை செய்து விடுவேன் என்று வேறு சொல்லி இருக்கிறான். இரவு முழுவதும் அழுத படியே இருந்த பெண், காலையில் வந்த கணவருக்கு, தனக்கு நிகழ்ந்ததை சொல்ல, அந்த கயவன், கைதாகி உள்ளான். Source: thatstamil.com

  7. ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி மின்னம்பலம் வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் தடுப்பூசியை ஒன்றிய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று ஜூன் 7 மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்....." நாட்டில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி முகாம் களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய தொற்று நோய் உலகத்தையே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நாம் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம்.…

    • 6 replies
    • 443 views
  8. கேரளாவில் தொலைத்த குழந்தையை மீட்ட தாயின் நீண்ட போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VIVEK NAIR படக்குறிப்பு, தனது அனுமதியின்றி தன் தந்தை தனது குழந்தையை எடுத்துச்சென்றுவிட்டதாக அனுபமா எஸ் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் காணாமல் போன தனது குழந்தையைத் தேடும் ஒரு தாயின் ஒராண்டு கால தேடல் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. நீதிமன்றம் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தது. மக்களிடையே கோபத்தையும், அரசியல் புயலையும் கிளப்பிய இந்த சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்பாக சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரப் படானாவும் வெளியிட்ட விவரங்கள் இதோ. காணாமல் போன தங்கள் க…

  9. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்... இந்தியா வருகை! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1277438

  10. குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அற…

  11. இந்தியாவை எதிர்க்க பிலாவல் பூட்டோ பின்பற்றும் 'தாத்தா வழி அரசியல்' கட்டுரை தகவல் எழுதியவர்,இக்பால் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் அறிக்கை ஒன்று சமீப நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. 2022 டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்குப் பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோதியை 'குஜராத்தின் கசாப்புக்காரர்’ என்று அழைத்தார். முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானை 'பயங்கரவாதத்தின் மையம்' என்று குறிப்பிட்டி…

  12. கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று அந்நாட்டுத் தூதர் அகமது அல்பானா விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக மத்திய அரசு மீது கேரளா குற்றம்சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் தூதர் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்த மழை காரணமாக அம்மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.600 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடியை அறிவித்துள்ளதாக அம்மாநில மு…

    • 0 replies
    • 385 views
  13. 19 AUG, 2023 | 10:46 AM இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் சீலிங் மின்விசிறிகளில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. இந்நிலையில் நேற்றிரவு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவ…

  14. மேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார் ! டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டு போராடப் போகிறார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் தினமும் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள்.இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரே முடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர…

  15. February 25, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜம…

  16. இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளை முறித்துக்கொள்ள அமெரிக்கா உத்தேசம் இந்தியா மற்றும் துருக்கி உடனுடனான வரி தீர்வை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பொது உடன்பாட்டை முறித்துக் கொள்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. அதன்படி குறித்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. அதன் சந்தைகளுக்கு நியாயமான அணுகலை வழங்குவது தொடர்பாக இந்தியா அமெரிக்காவிற்கு உறுதியளிக்க தவறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த உடன்பாட்டில நீடிப்பதற்கு துருக்கி தகுதியற்றது என்ற அடிப்படையில் அதனுடனான செயற்பாடுகளையும் முறித்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு…

  17. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான அரசியலமைப்பின் 370வது பிரிவின் விதிகளை இந்தியா ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட குரேஷி, கூட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளி…

    • 0 replies
    • 391 views
  18. அயோத்தி தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குறித்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டிக்கொள்ளலா…

  19. நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் …

  20. கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 15:01 PM புதுடெல்லி, கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன. இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் நேற்று உயர்ந்து உள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொர…

  21. சுரேஷ் அங்காடி மரணம் - இந்திய ரயில்வே இணை அமைச்சருக்கு என்ன நடந்தது? இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது. சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அவரது மறைவுக…

  22. ``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம் சிந்து ஆர்ரா.ராம்குமார் பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன் ( படம்: விகடன் / ரா.ராம்குமார் ) திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் மிகவும் வயது குறைந்த மேயர், சி.பி.எம் கட்சியின் சாதாரண தொண்டனின் மகள் எனப் பல பெருமைகளோடு மதிப்புமிக்க மேய…

  23. கோரோனோ :: உதவ முன்வந்த ஐ.நா - இந்தியா நிராகரிப்பு.! டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு கொத்து கொத்தாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டிய ஐ.நா.வின் யோசனையை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. முதலிடம் .. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கின்றனர். உதவ முன்வரும் உலகம் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் பல மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பின்னர் குவியல் குவியலாக எரியூட்டப்பட்டு வருகின்றன…

  24. ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது? அனந்த் பிரகாஷ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA படக்குறிப்பு, காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும்…

  25. டெல்லியில்... பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை! டெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. மேலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241802

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.