அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
ஆடுகளைப் பலியெடுத்த புகையிரதத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் ஆடுகளைப் பலியெடுத்த ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த வந்தே பாரத் புகையிரதத்தின் மீது சொஹாவால் பகுதியில் வைத்து சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் புகையிரதத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக பொலிஸார் நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பொலிஸார் நடத்திய வி…
-
- 0 replies
- 439 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:05 AM இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
கிழக்கு லடாக் பகுதியில் வீரர்கள் போர் பயிற்சி - பீரங்கிகள், கவச வாகனங்கள் குவிப்பு 09 Jul, 2023 | 11:27 AM லடாக் எல்லையில் இந்தியா மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகின்றது கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்து மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை இந்திய வீர்ர்கள் முறியடித்தனர்.அதன் பிறகு அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பும் ராணுவத்தையும் போர் தளவாடங்களையும் குவித்தன. அதன் பிறகு இருதரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் இருதரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன. எனினும், வரும் காலத்தில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அவசரநிலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்…
-
- 3 replies
- 354 views
-
-
இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர், சிக்னல் பிரிவின் ஊழியர்களின் தவறை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி, மூவரின் செயல்கள் விபத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1338120
-
- 0 replies
- 573 views
-
-
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019-இல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் ம…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி தொகுதியின் பா.ஜ.க எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவரே குறித்த சிறுவனின் மீது சிறுநீர் கழித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், குறித்த நபர் அரசியல் பிரமுகர் என்பதால் அச்சத்தில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த வீடியோவ…
-
- 3 replies
- 678 views
-
-
50 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது. பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இரு…
-
- 1 reply
- 190 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கை முறையில் இல்லாமல் செயற்கை முறையில் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையே செயற்கை கருத்தரிப்பு என்றழைக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவுக்குப் பதிலாக வேறொருவரின் விந்தணுவைச் செலுத்தி ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததால் அது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தற்போது அது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. …
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,LAXMI PATEL படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த மங்கள்பாய் கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி படேல் பதவி,பிபிசி குஜராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நட்பு எவ்வளவு காலம் நீடித்தது என்பது முக்கியமில்லை. அந்த நட்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதே உறவின் வலிமையை தீர்மானிக்கும். என்னுடைய நட்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், 15 ஆண்டுகள் பழகிய உணர்வைத் தந்தது." 15 நாள் பழகிய நண்பர் உயிரிழந்ததால், அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டி லட்சக்கணக்கான ரூபாயை திரட்டிக் கொடுத்த 27 வயதேயான கான்ஜி தேசாயின் வார்த்தைகள் இவை. குஜராத் மாநில…
-
- 3 replies
- 366 views
- 1 follower
-
-
பயணிகள் முன்னிலையில் இயற்கை உபாதையைக் கழித்த நபரால் பரபரப்பு விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த எயார் இந்தியா விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் செயலைக் கண்டு சக பணிகள் புகார் அளித்துள்ள நிலையில் இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு , நியூயோர்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ப…
-
- 0 replies
- 126 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 20 ஜூன் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN ROWLAND படக்குறிப்பு, ஜப்பானின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்டின் உறுப்பினர்களுடன் ராபின் ரௌலாண்ட் வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரமான கோஹிமாவில் தமது ரெஜிமென்ட் நிலை நிறுத்தப்பட்ட போது கேப்டன் ராபின் ரௌலேண்டுக்கு வயது 22 மட்டுமே. 1944ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தினரின் ஒரு சிறு குழுவினர் ஜப்பானிய படைப்பிரிவு ஒன்றின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது முன்கள வீரர்களுக்கு உண்டான கடுமையான சேதங்களு…
-
- 2 replies
- 287 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BANKIM PATEL கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெய் சுக்லா பதவி,பிபிசி குஜராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர். ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி ஈரானில் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், குஜராத் அரசு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் காவல்துறையின் முயற்சியின் உதவியுடன், தம்பதியினர் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் ஈரானில் இருந்து துருக்க…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WILLIAM PINCH படக்குறிப்பு, ஏழ்மையான விதவை தாயால் ஒரு போர் வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுப்கிரி கோசைன் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 25 ஜூன் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது. துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை தளபதியாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார். நிர்வாண போர் வீரர்களை…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TWITTER/PRIMEVIDEO கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெய்தீப் வசந்த் பதவி,பிபிசி குஜராத்திக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் ஷக்ரே கலீலி… பெங்களூரில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த பெண். இவரின் தாத்தா சர் மிர்சா இஸ்மாயில், 1926- 41 வரை மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர். அவர் தனது பேத்திக்கு, இந்திய அயலக பணியில் (ஐஎஃப்எஸ்) உயரதிகாரியாக பணியாற்றி வந்த அக்பர் கலீலியை மணம் செய்து வைத்தார். அக்பர் -ஷக்ரே தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்த நிலையில், தனக்கு ஓர் மகன் பிறக்க வேண்டும் என்ற ஆவல் ஷக்ரே மனத்தில் மேலோங்கி இருந்தது. சுவாமியின் வருகை அந்த நேரத்…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் அதிகரிக்கும் கட்டாய கடத்தல்கள். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களின் அதிர்வெண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,அங்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க எந்த சட்டமும் இல்லை. சிந்து காசி அஹ்மதில் 14 வயது இந்துப் பெண் கடத்தப்பட்டாள், பின்னர் உடனடியாக ஒரு குறிப்பிடத்தக்க வயதான நபரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவரை அவர்களது வீட்டிலிருந்து கடத்திச் சென்று திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதற்கு எவ்வளவு தகுதி தேவை என்பதை கற்பனை செய்வது கடினம் அல்ல,கடத்தப்பட்ட இந்துப் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்வது வாடிக்கையானது. சிந்துப் பெண்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அவர்களது வீடுகள…
-
- 1 reply
- 277 views
-
-
20 JUN, 2023 | 10:00 AM இந்தியாவின் உளவு அமைப்பான ரோவின் அடுத்த தலைவராக சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரோவின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில் ரோவின் அடுத்த தலைவராக 1 சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரவி சின்ஹா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்ரோ அமைப்பின் அடுத்த தலைவராக அவர் 2 ஆண்டுகள் பணியாற்ற மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் எழுதியவர்,வடிஷெட்டி சங்கர் பதவி,பிபிசி தெலுங்குவுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தில் 16 வயது சிறுவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்தச் சிறுவன் வீட்டைவிட்டுச் சென்று இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தினமும் காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக அவன் வீட்டை விட்டு கிளம்புவான். கடந்த வெள்ளியன்று காலையும் அவன் அப்படித்தான் கிளம்பினான். ஆனால் அதன்பின் அவன் வீடு திரும்பவேயில்லை. அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன…
-
- 2 replies
- 385 views
- 1 follower
-
-
டுவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ வை மிரட்டிய இந்திய அரசு? டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி( Jack Dorsey) அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய அரசினால் தான் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த செவ்வியில் ”இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை இந்திய அரசு மிரட்டியது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,ஜக் டோர்சியின் கருத்தை மறுத்துள்ளதோடு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ”டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உள…
-
- 0 replies
- 293 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி 13 ஜூன் 2023, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார். சமூக வலைதளமான யூடியூபில் செயல்படும் பிரேக்கிங் பாயின்ட் என்ற தனியார் சேன…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
08 JUN, 2023 | 04:42 PM அவர் கிரிக்கெட் ஆடுவார்; தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடம் செல்வார். சுறுசுறுப்பான வாழ்க்கையையே வாழ்ந்துவந்தார். இருப்பினும் 41 வயதில் அவருக்கு எப்படி மாரடைப்பு வந்து உயிரிழந்தார் என எல்லோரும் வருத்தத்துடன் பேசுகிறார்கள். குஜராத் மாநிலத்தின் பிரபல இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் ஜாம் நகரைச் சேர்ந்த கவுரவ் காந்தி. சுமார் 12 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் செய்துவரும் இவர் 16,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தவர். கடந்த திங்கள் கிழமை வழக்கம்போல் நோயாளிகளைப் பார்த்துவிட்டு இரவு வீடு திருப்பினார் கவுரவ் காந்தி. இரவு உணவுக்குப் பின் படுத்தவருக்கு இரவு ந…
-
- 9 replies
- 920 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்தது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம், இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததால் ஏற்படவில்லை. மாறாக இரண்டு நாடுகளின் ‘ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட்’ காரணமாக ஏற்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கூற்று இது. மோதி அரசின் ஒன்பது ஆண்டுகள் நிறைவையொட்டி வெளியுறவு அமைச்சகம் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜெய்சங்கர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா? கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ச…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியத்தால் எழுந்துள்ள சர்ச்சை இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ” பிரிக்கப்படாத இந்தியா”-வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தி வௌியிட்டுள்ளன. இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் “பிரிக்கப்படாத இந்தியாவை” காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்திய…
-
- 8 replies
- 837 views
-
-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான ரஹானா பாத்திமா அவ்வப்போது மேற்கொள்ளும் செயல்பாடுகள் பரபரப்பாகப் பேசப்படும். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில், அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் சென்று அவர் சாமி தரிசனம் செய்தபோது பரபரப்பானது. இவர், தன் அரை நிர்வாண உடம்பில் தன் மகனை ஓவியம் வரைய வைத்தார். பின்னர் அந்த வீடியோவை 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பினார். ’மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக அவர் வெளிப்பட்டது தவறு’ என அது சர்ச்சையானது. இதையடுத்து திருவல்லா, எர்ணாகுளம் சவுத் காவல் நிலையங்களில் பதிவான புக…
-
- 1 reply
- 392 views
-
-
ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை! தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததுடன்,900 ற்கு அதிகமானோர் காயமடைந்தனர். ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த ஹெலராம் மாலிக் என்ற தந்தைக்கு தனது 24 வயதான பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயில் ஏற்றி விட்டது நினைவு வந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் உயிருடன் இர…
-
- 5 replies
- 699 views
- 1 follower
-
-
பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.. அதுவும் 2ஆவது முறையாக... பீகார் மாநிலத்தில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடித்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க புதிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பல இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கனெக்டிவிட்டி அதிகரித்து கிராமங்களும் வேகமாக வளரும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. பீகார்: இது நல்ல செயல் தான் …
-
- 3 replies
- 637 views
-