அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
நாடு தழுவிய போராட்டம்: மோடி பதவியேற்ற கறுப்பு தினம்! மின்னம்பலம் நாடு முழுவதும் நாளை (மே 26) போராட்டம் நடத்த விவசாயிகள் விடுத்த அழைப்புக்கு திமுக உட்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாளை பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம் என்று போராட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்…
-
- 1 reply
- 688 views
-
-
குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது! இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது. By பிரவீன் குஜராத் தேர்தலில் யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற போகிறார்கள் என்பதை நாடே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலால் இந்தியாவிற்கு முன்மாதிரிய…
-
- 0 replies
- 274 views
-
-
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார். இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் …
-
- 0 replies
- 138 views
-
-
40 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை! இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் பெற மாநிலங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அது மியான்மருக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 ரோஹிங்யா இஸ்லாமியர்களை மியான்மருக்கு இந்தியா அரசாங்கம் நாடு கடத்துகிறது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து 7 பேரும் மனிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு அ…
-
- 0 replies
- 459 views
-
-
5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடி…
-
- 3 replies
- 733 views
-
-
அபுதாபியில் இந்துக் கோயில். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை இன்று திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலானது பல்வேறு வசதிகளுடன் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடதத்க்கது. https://athavannews.com/2024/1369685
-
- 8 replies
- 764 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் அதிக் அகமதின் நெருங்கிய நண்பரின் வீட்டில் 'புல்டோசர் நடவடிக்கை' (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடு மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவைய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மாநில அரசுகளின் புல்டோசர் நடவடிக்கை குறித்து அந்த அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மே…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control - LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை TOLGA AKMEN இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நேற்று (வியாழக்கிழமை) இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் பரவலாக வாழும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, லண்டனில் கொண்டாட்டம் மட்டுமின்றி, போராட்டமும் நடைபெற்றது. லண்டன் நகரின் இந்தியா பிளேஸ் பகுதியிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் முன்புறம் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் காலை முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதே வீதியின் மறுபுறம் காஷ்மீரை சேர்ந்தவர்கள், காஷ்மீர் மற்றும் மற்ற பகுதிகளை பூர்விகமாக கொண்டவர்கள், பாகிஸ்தானியர்கள் என பல்வே…
-
- 0 replies
- 340 views
-
-
பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் பாக்.,கிற்கு உதவும் வகையில் அந்நாட்டிற்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் பொது நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதாகவும், அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பல்வேறு முதலீட்டாளர்களின் பொருளாதார சீர்திருத்த திட்டம் மூலமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஆசிய வளர்ச்சி…
-
- 0 replies
- 388 views
-
-
05 MAY, 2025 | 02:18 PM இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு ம…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
டெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு! இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப்புடனான விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விருந்தில் பங்கேற்க எடப்பாடி பழநிசாமியும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் 25ஆம் திகதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் நாளைய தினம் டெல்லிக்கு பயணிப்பார் என தகவல் வெளி…
-
- 0 replies
- 220 views
-
-
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடியை கடனாகப் பெறும் மத்திய அரசு இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெறவுள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளதால் வருடாந்த நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதேவேளை, 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தைகளில் இருந்து கடனாக இத்தொகையை மத்திய அரசு பெறுவது வழக்கம். தற்போது இந்தக் கடன்தொகை 12 இலட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது. இதனால…
-
- 1 reply
- 455 views
-
-
பிகார்: மகாகத்பந்தன் முன்னிலை! நிதிஷ்குமாருக்கு பின்னடைவு மின்னம்பலம் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (நவம்பர் 10) வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஒருபக்கமும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி ஒருபக்கமும், ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஒரு பக்கமும் என மூன்று முனைப் போட்டியாக இந்த தேர்தல் நடந்தது.எனினும் முக்கியப் போட்டி தேஜகூவுக்கும் மகாகத்பந்தனுக்கும்தான் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன. இன்று காலை 9.30 மணி …
-
- 8 replies
- 835 views
-
-
எதுவுமே என் கையில் இல்லை; மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்: பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் கிண்டல் பிரதமர் மோடி | கோப்புப் படம். புதுடெல்லி எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. …
-
- 4 replies
- 744 views
-
-
கொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோரில் 3 சதவீதமானோருக்கு மாத்திரமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளில் இருந்து …
-
- 1 reply
- 393 views
-
-
இந்திய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 03.45 (10:15 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தீப் பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர். தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் தீ விபத்துக்கான உறுதி…
-
- 0 replies
- 186 views
-
-
பசி பட்டியலில்... இந்தியாவிற்கு 101 ஆவது இடம்! உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து பப்புவா நியூகினி, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245096
-
- 0 replies
- 413 views
-
-
டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டோக்கனைசேஷன்' எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் 'கார்டு-ஆன்-ஃபைல்' எனும் டோக…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
க. ஜோதி சிவஞானம் பொருளாதார பேராசிரியர் (இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8-ம் தேதி) இரண்டாண்டுகளாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் க…
-
- 0 replies
- 578 views
-
-
இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்.புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ ! சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள்.கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.அந்த வகையில் இன்று மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப இருக்கிறது.இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவும். என்ன செயற்கைகோள் 3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவ கூடியது. உயர்நுணுக்கமான தகவல்…
-
- 0 replies
- 367 views
-
-
மகாத்மா காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி March 5, 2019 மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான பங்கஜ் பட்னிஸ் என்பவர் உச்சநீதிமன்றில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து தாக்கல் செய்ய்யப்பட்டிருந்த மனு 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றில் அவர் மறுஆய்வுமனு தாக்கல் செய்திருந்தார். புதிய ஆதாரங்கள் இருப்பதால் காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக மவுண…
-
- 0 replies
- 288 views
-
-
நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..! -ஹரி பரந்தாமன் அக்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன். ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தி உள்ளார். ம…
-
- 1 reply
- 280 views
-
-
ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை! ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரியைப் படுகொலை செய்த 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாகத் தேடிவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1395697
-
- 0 replies
- 132 views
-
-
டிப்தீரியா எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது. இந்தக் கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இது தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் வயதானவர்களையும் இது பாதிக்கும். டிப்தீரியாவை குணப்படுத்த ‘டிப்தீரியா ஆன்ட்டி-டாக்சின்’ எனும் உயிர்காக்கும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது. இதனை சிந்து மாகாண சுகாதார அதிகா…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-