Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 20 ஜூன் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN ROWLAND படக்குறிப்பு, ஜப்பானின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்டின் உறுப்பினர்களுடன் ராபின் ரௌலாண்ட் வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரமான கோஹிமாவில் தமது ரெஜிமென்ட் நிலை நிறுத்தப்பட்ட போது கேப்டன் ராபின் ரௌலேண்டுக்கு வயது 22 மட்டுமே. 1944ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தினரின் ஒரு சிறு குழுவினர் ஜப்பானிய படைப்பிரிவு ஒன்றின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது முன்கள வீரர்களுக்கு உண்டான கடுமையான சேதங்களு…

  2. படத்தின் காப்புரிமை Getty Images ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரர் என பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை பகிர்ந்திருந்தார். அவர், "காங்கிரஸின் எலிசபத், பிரிட்டன் ராணியை விட பணக்காரர். காங்கிரஸின் சுல்தான் (இளவரசர்), ஓமன் சுல்தானைவிட வளமானவர். அவர்களின் நூறு சதவிகித முறைகேடான சொத்துகளை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என்று ட்விட் செய்திருந்தார். புகைப்பட காப்புரிமை @AshwiniBJP @AshwiniBJP …

  3. இரண்டு குழந்தைகள்... கொள்கை, குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்! இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பு…

  4. இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை! ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெறவுள்ளது. இதன்பிறகு…

  5. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்…

  6. இரண்டே நாட்களில் 718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி? - அசாம் ரைஃபில்ஸ் படையிடம் விளக்கம் கோரிய மாநில அரசு 25 Jul, 2023 | 10:21 AM மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது. ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொ…

  7. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை M Niyas Ahmed நினைவில் காட்டினை சுமந்து அதன் மகோன்னதத்தில் லயித்துருப்பவனுக்கு ஒரு பெருநகரம் என்னவாக இருக்கும்? அந்த நகரத்தை, அந்த நகரத்திற்கு ஏற்றவாரு தங்களை வடிவமைத்துக் கொண்ட மனிதர்களை அவன் எப்படி எதிர்கொள்வான்? தயங்குவான், தாழ்வு மனப்பான்மையில் உழல்வான், இது வேண்டாமென உதறி தள்ளி மீண்டும் கூடு திரும்புவான். இவைதானே நடக்கும். இதுதான் எனக்கும் நடந்தது. ச…

  8. 0 232 - + Subscribe to THE HINDU TAMIL YouTube இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட…

  9. கம்போடியாவில் இராஜேந்திர சோழனுக்கு சிலையொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் கடந்த வாரம் கம்போடியாவின் சியாம் ரீப் நகரில் ஒரு நடன நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் அங்கோர்வாட் தமிழ் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழர்களின் முதலாய பண்பாட்டு கலையம்சங்களில் ஒன்றாக கருதப்படும் பரத நடனம் இதன்போது அரங்கேற்றப்பட்டது. இதனை தொலைக்காட்சி வாயிலாக கண்டு மகிழ்ந்த அந்நாட்டு அரசி பரத நடனம் குறித்த பாரம்பரியத்தை தேடி அறிய முயற்சித்தார். தமிழகத்தின் நடனமான பரதத்தை பற்றியும் அதனுடன் தொடர்புடைய கலை, கலாச்சார அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்ததோடு, இது தொடர்பில் இன்னும் பல தகவல்களை அறி…

    • 0 replies
    • 544 views
  10. இராணுவ செலவீனங்கள் : உலகளவில்... மூன்றாவது இடத்தில், இந்தியா! இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றா…

  11. Published By: NANTHINI 29 APR, 2023 | 11:24 AM சீனாவின் சக்திவாய்ந்த இணைய உளவுத் திறன்கள் ஆபத்தை அதிகரித்துள்ளதால், இந்திய இராணுவம் 'சைபர்ஸ்பேஸ் டொமைனைக்' கையாள நாடு முழுவதும் ஆறு செயற்பாட்டு மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற இந்திய இராணுவ தளபதிகள் மாநாட்டின்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் நவீன தகவல் தொடர்பு அமைப்புகளின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகர மையத்தன்மையை நோக்கிய இராணுவத்தின் நகர்வுகள் காலத்தின் தேவையாகும். சீனா ஓர் எதிரியின் இராணுவ சொத்துக்கள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் உளவு நடவடிக்கைகள…

  12. இராணுவ தேவைகளுக்காக... இந்தியா, ரஷ்யாவை சேர்ந்திருக்கக்கூடாது – அமெரிக்கா இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவிக்கையில், ”இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தங்கள் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை சார்த்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். இந்த உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்” எனத் …

  13. இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா உட்பட முக்கிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இராணுவ தளவாடங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இந்த விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய பணியாக உள்ளது.கடந்த …

  14. படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…

  15. இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பம்! அயோத்தியில் இராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் தற்போதுள்ள இராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் திகதியில் இருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமா…

  16. இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…

  17. இராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த கேரளா.. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனையே ஜடாயு சிலை. ஜடாயு இயற்கை பூங்கா என்று அறியப்படும் ஜடாயு எர்த் சென்டர் பெரும் வரவேட்பை பெற்று வருகிறது வருகிறது இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும…

  18. இரு தீவிரவாத அமைப்புகளுக்கு தடைவிதித்தது பாகிஸ்தான்! மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத இயக்கம் மற்றும் பாலாஹ் ஏ இன்ஸானிட் அறக்கட்டளை (Falah-e-Insaniat Foundation) ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், லஷ்கர் ஏ தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 68 தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளன. கடந்த மாதம் 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை …

  19. இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…

  20. இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு! வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அனாதை இல்லத்தின்…

  21. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப…

  22. இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம் மேற்குவங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவர்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார். பதிவு: ஜூன் 13, 2020 08:34 AM கொல்கத்தா: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது. அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்…

  23. இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு by : Krushnamoorthy Dushanthini கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதிய கொள்கை முடிவுகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி இறந்த உடல்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குறி…

    • 0 replies
    • 424 views
  24. இறுதி ஆயுதத்தைக் கொண்டுவந்திருக்கும் காங்கிரஸ் பரந்த அளவில் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் அதிர்ச்சிக்குரிய ஒன்றல்ல.தாயார் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ரேபறேலி தொகுதியிலும் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைப்பதிலும் அண்மையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைக்கும் முயற்சிகளிலும் அவர் ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார். லோக் சபா தேர்தல்களுக்கு இன்னமும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கட்சி இப்போது அவரை பொதுச்செயலாளராக்கி உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியின் பொறுப்பை…

  25. இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்? vivekanandhanMay 31, 2024 19:42PM நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.