Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இராமாயண கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த கேரளா.. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல திரைப்பட இயக்குனருமான ராஜீவ் அன்சலின் மனதில் உதித்த யோசனையே ஜடாயு சிலை. ஜடாயு இயற்கை பூங்கா என்று அறியப்படும் ஜடாயு எர்த் சென்டர் பெரும் வரவேட்பை பெற்று வருகிறது வருகிறது இந்தச் சிற்பத்தையும் அதனோடு சேர்ந்த வளாகத்தையும் மலை உச்சியில் அமைக்க ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகியுள்ளது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜடாயுவின் கதை அங்குள்ள பாறையில் ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும…

  2. இரு தீவிரவாத அமைப்புகளுக்கு தடைவிதித்தது பாகிஸ்தான்! மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத இயக்கம் மற்றும் பாலாஹ் ஏ இன்ஸானிட் அறக்கட்டளை (Falah-e-Insaniat Foundation) ஆகிய 2 அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், லஷ்கர் ஏ தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 68 தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளன. கடந்த மாதம் 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை …

  3. இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…

  4. இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு! வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அனாதை இல்லத்தின்…

  5. இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப…

  6. இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம் மேற்குவங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவர்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார். பதிவு: ஜூன் 13, 2020 08:34 AM கொல்கத்தா: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது. அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்…

  7. இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு by : Krushnamoorthy Dushanthini கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதிய கொள்கை முடிவுகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி இறந்த உடல்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குறி…

    • 0 replies
    • 420 views
  8. இறுதி ஆயுதத்தைக் கொண்டுவந்திருக்கும் காங்கிரஸ் பரந்த அளவில் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் அதிர்ச்சிக்குரிய ஒன்றல்ல.தாயார் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ரேபறேலி தொகுதியிலும் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைப்பதிலும் அண்மையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைக்கும் முயற்சிகளிலும் அவர் ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார். லோக் சபா தேர்தல்களுக்கு இன்னமும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கட்சி இப்போது அவரை பொதுச்செயலாளராக்கி உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியின் பொறுப்பை…

  9. இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்? vivekanandhanMay 31, 2024 19:42PM நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதி…

  10. இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! - திரிபுராவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம் சீனாவில், ஆண்டுதோறும் நாய்க்கறி திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதே கலாசாரம் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருகிறது. அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. PhotoCredits : china Associated Press …

  11. இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை General17 July 2025 இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்ச…

  12. இலங்கை – இந்தியா விமான சேவையை... குறைக்க, எயார் இந்தியா நடவடிக்கை! இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274707

  13. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். நேற்று (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதென…

    • 0 replies
    • 271 views
  14. இலங்கை இராணுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – வைகோ இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க இந்திய அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய 355 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அத்துமீறி தாக்கப்படு…

  15. இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ரூபாவில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியா முடிவு! இந்திய ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை (01) முன்மொழிந்தது. இதில் உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடிப்படை மாற்று விகிதங்களை நிர்ணயிப்பது ஆகியவை அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, புதன்கிழமை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை முடிவோடு இந்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் இந்தியாவின் நாணய விகித நிர்ணய குழு எதிர்பார்த்தபடி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட மாற்ற…

  16. இம்ரான் குரேஷி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட…

  17. இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி பிரச்சாரம்! தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.ராஜஸ்தானில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவி…

  18. இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…

  19. இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்! இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவது உள்ளிட்ட நீண்டகால வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் மனிதாபிமா…

  20. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANI இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை டெல்லியில் சந்தித்தனர். சந்தித்துள்ளா…

  21. இலங்கை தமிழ் அகதிகளுக்கு, குடியுரிமை கேட்டு.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மேற்கு வங்க எம்பி இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹசேன் வலியுறுத்தி பேசினார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் வாழ்விடத்தைவிட்டு வசிப்பிடமாக தமிழகம் நோக்கி அகதியாக வந்தார்கள் இலங்கை தமிழ் மக்கள். அவர்கள் தமிழகத்தின் செங்கல்பட்டு, மண்டபம், உள்பட பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.பல ஆண்டுகளாக இங்கேயே வசித்து வரும் அவர்களுக்கு இந்திய அரசு இதுவரை குடியுரிமை வழங்கியதில்லை. இந்நிலையில மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹூசைன் இலங்கை தமிழ் அகதிகளுக்காக குரல் எழுப்பி பே…

  22. இலங்கை தொடர்பான சர்வ கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு இலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. \ எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளிற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பிரதாயப்பூர்வமான அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா த…

    • 2 replies
    • 440 views
  23. இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்? 19 ஜூலை 2022 இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த…

  24. இலங்கை பொருளாதார நெருக்கடி! தேயிலை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்.! டெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பிற நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறை சார்ந்த வருமானங்கள் தான் அந்நாட்டுக்கு பிரதானமாக வருவாயாக உள்ளன. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கமால் சுற்றுலா வருமானம் முடங்கியது. இதனால் இலங்கை அதிகளவில் கடன் வாங்கியது. மேலும் கையிருப்பு அந்நிய செலாவணியும் கரைந்து போக தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்…

  25. இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் – இந்தியா எதிர்பார்ப்பு 6 Views இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.