Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐரோப்பிய ஆணைய தலைவர்... இந்தியா, வந்தடைந்தார்! ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிக்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை …

  2. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்... இந்தியா வருகை! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1277438

  3. ஐரோப்பிய நாடுகளுக்கு... சுற்றுப்பயணம், மேற்கொள்ளும் மோடி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில் நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மாசு ஏற்படுத்தாக தொழிநுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்ப…

  4. ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு! ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் வ…

  5. ஒக்டோபர் 15 முதல் சுற்றலா பயணிகளின் வருகைக்கு இந்தியா அனுமதி எதிர்வரும் ஒக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தனது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது. கொவிட்-19 தொற்று நோய் பரவலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் கடந்த 2020 மார்ச் மாதம் பயணத் தடை உட்பட கடுமையான முடக்கல் உத்தரவுகளை பிறப்பித்தது. இந் நிலையில் புதிய அறிவிப்பின் மூலம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடங்கியுள்ள இந்திய சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெறுவதுடன், சர்வதேச சுற்றுலா பயணிகளும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். “பல்வேறு உள்ளீடுகளை பரிசீலித்த பின்னர், 2021 ஒக்டோபர் 15 முதல் பட்டய விமானங்கள் மூலம்…

  6. ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி- விரைவில் இந்தியாவிலும் பரிசோதனை by : Dhackshala ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்தவுள்ள புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அடார் பூனாவால்லா தெரிவித்துள்ளார். மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் இந்த தடுப்பூசி சாதகமான பலனை தந்துள்ளதுடன், நோய் எதிர்ப்புக்கான …

    • 2 replies
    • 358 views
  7. ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹதுல்லா பாபர் என்ற அரசியல் பிரமுகர் முஷரபின் பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானிற்கு வந்தவர்களை வரவேற்று, இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். மேலும், ஒசாமா பின்லேடன் மற்றும் ஜலாலுதின் ஹக்கானி ஆகியோர் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் எனவும் முஷரப் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். https://www.polimernews.com/dnews/88736/ஒசாமா-பின்லேடன்-போன்றோர்தான்-பாகிஸ்தானின்ஹீரோக்கள்-…

    • 0 replies
    • 237 views
  8. ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியை மணந்ததால் தலைகீழாக மாறிய விகே பாண்டியன் வாழ்க்கை.. புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணந்த தமிழனான விகே பாண்டியனை ஒடிசா அரசியலுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் எப்படி தேர்வு செய்தார் என்தை பார்ப்போம். அக்டோபர் மாதம் ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற விகே பண்டியன், திருகார்த்திகை நன்னாளில், நேரடியாக ஒடிசா முதல்வரின் வீட்டிற்கு சென்று, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "ஜெய் ஜகநாத்" என்று முழக்கமிட்டு, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் எனப்படும் விகே பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதி…

  9. ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோப்புப்படம் புதுடெல்லி உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின்…

  10. புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான டானா புயல் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்பு ஒடிசாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டானா புயல் பிதர்கனிகா …

  11. ஒடிசா ரயில் விபத்து; சவக்கிடங்கிலிருந்த மகனை உயிரோடு மீட்ட தந்தை! தந்தை ஒருவர் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததுடன்,900 ற்கு அதிகமானோர் காயமடைந்தனர். ரயில் விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் அறிந்த ஹெலராம் மாலிக் என்ற தந்தைக்கு தனது 24 வயதான பிஸ்வாஜித் மாலிக் என்பவரை ரயில் ஏற்றி விட்டது நினைவு வந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக மகனிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், மகன் உயிருடன் இர…

  12. ஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்!- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இடையே 149 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதுடன், இக்காலநிலை தொடர்ந்து மூன்று, நான்கு மணிநேரங்களுக்கு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒடிசா அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாக மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சரிந்து விழுந்து பாரிய சேதங்கள் பதிவாகியுள்ளதுடன், ஆந்திரா பிரதேசத்திலுள்ள கலிங்கப்பட்டிணம் முதல் கோபால்பூர் …

  13. ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம் 15 JUL, 2025 | 10:16 AM புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர். அப்போது அந்த ஜோடியை டிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம…

  14. ஒடிசாவில் வெற்றிகரமாக நிறைவடைந்த பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை By NANTHINI 04 NOV, 2022 | 04:47 PM நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் விமானங்களை நடுநிலையாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic) எனும் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணையான பாதுகாப்பு இடைமறிக்கும் ஏடி1 ஏவுகணையின் முதல் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது. வெவ்வேறு புவியியல் ந…

  15. ஒடிசாவில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் - 2 பேர் பலி 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்ட கார் ஒடிசாவில் வேதாந்தாவின் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்…

  16. ஒத்த அரிசியை வெச்சுகிட்டு, மொத்த உசுரையும் கையில பிடிச்சுகிட்டு, புயல் காத்துல மூவாயிரம் கிலோமீட்டர் கடல் வழியா தப்பினோம்: கன்னியாகுமரி மீனவர்களின் கண்ணீர் கதை.! இந்த நாட்டில் வெறும் நடிப்புக்காக கோடான கோடி சம்பாதிக்கிறார்கள் சினிமா நடிகர்கள். விடிந்தால், பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு இழுத்து மூடி தூங்கும் காஸ்ட்லி பெட்ஷீட் வரை அந்தந்த பட தயாரிப்பாளர்களின் பணத்திலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது. செலவே இல்லாமல் அப்படியே சுளையாக சேமிப்புக்கு போகும் கோடிகளில் அவர்களின் குடும்பம் செழித்து வளர்கிறது. இத்தனைக்கும் இந்த சினிமா என்று ஒன்று இல்லை என்றால் குடி மூழ்கி போயிடாது. ஆனால், கடல் உணவு என்ற ஒன்று இல்லையென்றால் பல கோடி மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறிய…

  17. ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயிரத்து 23 அதிவிரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப…

  18. இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது. கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழு…

  19. ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி Posted on December 12, 2021 by தென்னவள் 17 0 ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செ…

    • 0 replies
    • 191 views
  20. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் - ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், மக்களுக்கு சிகிச்சையளிக்க, 79 மருந்துகள், 29 நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மினி தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் 1088 ஆம்புலன்ஸ்களை ஆந்திர மக்களுக்காக அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒட்டு மொத்த ஆந்திரா முழுவதுமுள்ள 13 மாவட்டங்களில் இந்த ஆம்புலன்ஸ் வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் கிராமங்களில் அழைத்த இ…

  21. ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:25 AM புதுடெல்லி இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்த…

  22. கர்நாடகாவில் கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஜிபிஎஸ் இணைப்புடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என மாநில மருத்துவ கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். கோப்பு படம் பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், சிலர் ஊ…

  23. ஒரு மாணவி தேர்வு எழுத, 70 பேர் பயணிக்கும் தனிப்படகையே இயக்கிய கேரள அரசு கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். ஆனால் இவர் தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் செல்ல வேண்டும். தனிப்படகு எடுத்துச்சென்றால் அதிக செலவாகும் என்பதால் அரசின் உதவியை நாடினார் சந்திரா. கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறையை அணுகிய சந்திரா, தான் தேர்வு எழுத வேண்டுமென்பதால் உதவ முடியுமா? எனக் கேட்டுள்ளார். மாணவியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த கேரள அரசு, சந்திரா பாபாவுக்காக மட்டுமே 70 பேர் பயணிக்கக் கூடிய படகை இயக்கியது. காலை 11…

  24. ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு உத்தரப்பிரதேசததில் உள்ள ஒரு கிராமத்தில். ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அந்த கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 லட்சம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அந்த கிராம மக்கள் பாக்கி வைத்திருந்ததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது ஜகன்புரா என்ற கிராமம். இங்கு மொத்தம் 300 வீடுகள் காணப்படுகிறது. ஜகன்புரா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட கடந்த மாதம் தங்களது மின் கட்டணத்தை செலுத்தவில்லை. இதன் மூலம் அனைவரின் கட்டண பாக்கி என்பது ரூ.91.88லட்சம் ரூபாய் ஆகும். …

  25. ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பீகாரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16 ஆம் திகதி சிவான் மாவட்டத்தில் உள்ள பன்ஜ்வார் கிரமத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்ரல் 4 ஆம் திகதியே தெரிவந்தது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பு, சிவான் மாவட்டத்திலுள்ள உறவினர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று வந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.